Unnamed: 0
int64 0
1.34k
| Book
stringclasses 75
values | Chapter
stringlengths 25
48
| Content
stringlengths 252
17.1k
⌀ | Url
stringlengths 47
62
|
---|---|---|---|---|
400 | 2 குறிப்பேடு | 2 குறிப்பேடு அதிகாரம் – 34 – திருவிவிலியம் | யூதாவின் அரசர் யோசியா
(2 அர 22:1-2)
1 யோசியா அரசரானபோது அவருக்கு வயது எட்டு; அவர் எருசலேமில் முப்பத்தோர் ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
2 அவர் ஆண்டவர் திருமுன் நேரியன செய்து, தம் மூதாதை தாவீதின் வழியிலேயே நின்று, நெறிமுறை வழுவாது ஒழுகினார்.
யோசியாவின் சீர்திருத்தங்கள்
3 அவரது ஆட்சியின் எட்டாம் ஆண்டில், அவர் இன்னும் இளைஞராக இருந்தபோது, அவர் மூதாதை தாவீதின் கடவுளை நாடிச்செல்லலானார்; தமது ஆட்சியின் பன்னிரண்டாம் ஆண்டில், தொழுகை மேடுகள், அசேராக் கம்பங்கள், செதுக்கப்பட்ட சிலைகள், வார்க்கப்பட்ட சிலைகள் ஆகியவற்றை அகற்றி, யூதாவையும் எருசலேமையும் தூய்மையாக்கத் தொடங்கினார்.
4 அவர் தம் மேற்பார்வையில் பாகாலின் பலிபீடங்களை உடைத்தெறிந்தனர்; அதற்கு மேலிருந்த சிலைகளை அவர் உடைத்தார். மேலும், அசேராக் கம்பங்களையும், செதுக்கப்பட்டனவும் வார்க்கப்பட்டனவுமாகிய சிலைகளையும் தூள்தூளாக்கி, அவற்றிற்குப் பலியிட்டவர்களின் கல்லறைகளிலேயே வீசியெறிந்தார்.
5 அவர் அர்ச்சகர்களின் எலும்புகளை அவர்களின் பலிபீடங்களிலேயே சுட்டெரித்து, யூதாவையும் எருசலேமையும் தூய்மைப்படுத்தினார்.
6 மேலும், மனாசே, எப்ராயிம், சிமியோன், நப்தலி வரையிலுள்ள எல்லா நகர்களிலும் அவ்வாறே செய்தார்.
7 பலிபீடங்களையும் அசேராக் கம்பங்களையும் உடைத்தெறிந்தார்; செதுக்கப்பட்ட சிலைகளைத் தூள்தூளாக்கினார். இஸ்ரயேல் நாட்டிலிருந்த எல்லாத் தூபப் பீடங்களையும் நொறுக்கியபின், அவர் எருசலேமுக்குத் திரும்பினார்.
சட்ட நூல் கண்டுபிடிக்கப்படல்
(2 அர 22:3-20)
8 இவ்வாறு, நாட்டைத் தூய்மையாக்கிய அவர்தம் ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில் அவர்தம் கடவுளாம் ஆண்டவரின் இல்லத்தைச் செப்பனிட அட்லியா மகன் சாப்பான், நகரின் ஆளுநர் மாசேயா, பதிவாளர் யோவாகு ஆகியோரை அனுப்பினார்.
9 மனாசே, எப்ராயிம், எஞ்சியிருந்த இஸ்ரயேல் ஆகியோரிடமும் மற்றும் யூதா, பென்யமின், எருசலேம் வாழ் மக்கள் அனைவரிடமிருந்தும் வாயிற் காவலராகிய லேவியர் சேகரித்த பணத்தை அவர்கள் கோவிலுக்குக் கொண்டு வந்தனர்; அவற்றைத் தலைமைக் குரு இல்க்கியாவிடம் ஒப்படைத்தனர்.
10 அவர்கள் அதை ஆண்டவரின் இல்ல மேற்பார்வையாளரிடம் அளித்தனர். அவர்களோ அதை பணிசெய்வோரிடம் கோவிலைச் செப்பனிட்டுச் செம்மைப்படுத்துமாறு கொடுத்தனர்.
11 அவர்களே தச்சருக்கும் கொத்தருக்கும் பணம் கொடுத்தனர்; யூதாவின் அரசர்கள் அழித்து விட்ட வீடுகளுக்காக வாங்கப்பட்ட செங்கற்கள், இணைப்பு மரங்கள் ஆகியவற்றுக்காகவும் பணம் கொடுத்தனர்.
12 வேலையாள்கள் நேர்மையோடு வேலை செய்தனர்; இப்பணியை மேற்பார்வை செய்ய மெராரியின் புதல்வர்களான யாகத்து, ஒபதியா என்ற லேவியரும், கோகாத்தியரான செக்கரியாவும் மெசுல்லாமும் நியமிக்கப்பட்டிருந்தனர். இசைக்கருவிகளை மீட்டுவதில் திறமைமிக்க லேவியர் எல்லாரும்,
13 கூலியாள்களுக்குப் பொறுப்பாளராகவும், தனித்தனிப் பணி செய்யவும் அனைவருக்கும் மேற்பார்வையாளராகவும் இருந்தனர்; லேவியர் சிலர் எழுத்தரும் அலுவலரும் வாயிற்காப்பாளருமாகவும் இருந்தனர்.
14 ஆண்டவரின் இல்லத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தை வெளியே எடுத்தபோது, மோசே வழியாக அளிக்கப்பட்ட ஆண்டவரின் திருச்சட்டநூலை குரு இல்க்கியா கண்டு பிடித்தார்.
15 அப்பொழுது இல்க்கியா எழுத்தராகிய சாப்பானைப் பார்த்து, “இதோ, நான் ஆண்டவரின் இல்லத்தில் திருச்சட்ட நூலைக் கண்டெடுத்தேன்” என்று கூறி அவர் அந்த நூலைச் சாப்பானிடம் ஒப்படைத்தார்.
16 சாப்பான் அந்நூலை அரசரிடம் கொண்டுவந்து, அவரை நோக்கி, “உம் அலுவலர்களுக்கு நீர் கட்டளையிட்டவை அனைத்தையும் அவர்கள் செய்கிறார்கள்;
17 ஆண்டவரின் கோவிலில் சேர்ந்த பணத்தை அவர்கள் எடுத்து அதிகாரிகள் கையிலும் பணியாளர்கள் கையிலும் ஒப்படைத்தனர்” என்றார்.
18 எழுத்தர் சாப்பான் மீண்டும் அரசரைப் பார்த்து, “குரு இல்க்கியா என்னிடம் ஒரு நூலைக் கொடுத்தார்” என்று கூறி, அதனை அரசருக்குப் படித்துக் காட்டினார்.
19 அரசர் திருச்சட்ட நூலைப் படிக்கக் கேட்டபோது தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டார்.
20 பின்னர், இல்க்கியா, சாப்பான் மகன் அகீக்காம், மீக்காவின் மகன் அப்தோன், எழுத்தர் சாப்பான், அரச அலுவலர் அசாயா ஆகியோரைப் பார்த்து அரசர்,
21 “கண்டெடுக்கப்பட்ட இந்நூலில் எழுதியுள்ளவாறு, நீங்கள் சென்று எனக்காகவும் இஸ்ரயேல் யூதாவில் எஞ்சியுள்ளோருக்காகவும் ஆண்டவரை மன்றாடுங்கள்; ஏனெனில், இந்நூலில் எழுதியுள்ளவாறு நம் மூதாதையர் ஆண்டவரின் வாக்கிற்கிணங்க நடக்காததனால் நம்மேல் ஆண்டவர் கடும்சினம் கொண்டுள்ளார்” என்று கூறினார்.
22 இல்க்கியாவும், அரசரைச் சார்ந்த மற்றவர்களும், அசுராவின் பேரனும் தோக்காத்தின் மகனும் ஆடையக மேற்பார்வையாளனுமான சல்லூம் என்பவனின் மனைவி குல்தா என்ற இறைவாக்கினரிடம் சென்றனர்; எருசலேமின் இரண்டாம் தொகுதியில் குடியிருந்த அவரிடம் இதுபற்றிப் பேசினர்.
23 அவர் அவர்களை நோக்கி, “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; என்னிடம் உங்களை அனுப்பியவரிடம் நீங்கள் சொல்லுங்கள்;
24 ஆண்டவர் கூறுவது இதுவே: இந்த இடத்தின்மீதும், இதில் வாழ்வோர்மீதும் தீங்குகளை யூதாவின் அரசர் முன் படிக்கப்பட்ட நூலின் வார்த்தைகளில் கண்ட அனைத்துச் சாபங்களையும் வரச் செய்வேன்.
25 ஏனெனில், அவர்கள் என்னைப் புறக்கணித்துவிட்டு, தங்கள் கைவினையான அனைத்துச் சிலைகளாலும் எனக்குச் சினமூட்டினர்; வேற்றுத் தெய்வங்களுக்குக் தூபம் காட்டினர். எனவே, இவ்விடத்தின்மேல் நான் கொண்ட சினம் கனன்று எரியும்; அதைத் தணிக்க இயலாது.
26 ஆண்டவரின் திருவுளம் தெரிந்து வருமாறு உங்களை அனுப்பிய யூதாவின் அரசனிடம் நீங்கள் இவ்வாறு கூறுங்கள்: நீ கேட்ட வார்த்தைகளைப் பற்றி இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
27 இந்த இடத்திற்கும் இதில் வாழ்வோருக்கும் எதிரான அவர்தம் வார்த்தைகளை நீ கேட்டு, மனம்நைந்து, கடவுளுக்குமுன் உன்னைத் தாழ்த்திக் கொண்டாய்; தாழ்ந்து நின்ற நீ உன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு என் திருமுன் அழுததனால், உன் வேண்டுதலுக்கு நான் செவிகொடுத்துள்ளேன்.
28 ஆதலால், இவ்விடத்தின் மீதும் இதில் வாழ்வோர் மீதும் நான் வரச் செய்யவிருக்கும் அனைத்துத் தீமைகளையும் உன் கண்கள் காணாதபடி உன்னை உன் மூதாதையர் இருக்கும் இடத்தில் கொண்டு சேர்ப்பேன்; நீயும் மன அமைதியுடன் உன் கல்லறைக்குச் செவ்வாய்” என்றாள். அவர்கள் திரும்பிச் சென்று அரசருக்கு இச்செய்தியைத் தெரிவித்தனர்.
திருச்சட்டத்திற்குக் கட்டுப்பட யோசியாவின் உடன்படிக்கை
(2 அர 23:1-20)
29 யூதா, எருசலேம் வாழ் பெரியோர்கள் எல்லாரையும் அரசர் ஒன்று திரட்டினார்.
30 பின்னர், அரசர் ஆண்டவரின் இல்லத்திற்குச் சென்றார், அவருடன் யூதா, எருசலேம் மக்கள் யாவரும், அனைத்து குருக்களும் லேவியரும், பெரியோர்முதல் சிறியோர்வரை எல்லா மக்களும் சென்றனர். அரசரும், ஆண்டவரின் இல்லத்தில் கண்டெடுத்த உடன்படிக்கை நூல் முழுவதையும் அவர்கள் எல்லாரும் கேட்கும்படி வாசித்தார்.
31 பின்பு, அரசர் தம் இடத்தில் நின்றுகொண்டு, ஆண்டவரின் கட்டளையையும் சான்றுகளையும் ஒழுங்குமுறைகளையும் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் கடைப்பிடிப்பதாகவும், அந்நூலில் எழுதப்பட்டிருந்த உடன்படிக்கையின் சொற்களை நிறைவேற்றுவதாகவும் ஆண்டவர் திருமுன் உடன்படிக்கை செய்துகொண்டார்.
32 அவர் எருசலேமிலும் பென்யமினிலும் வாழ்ந்த மக்கள் அனைவரும் அவ்வாறே செய்யுமாறு பணித்தார்; எருசலேம் வாழ் மக்கள் யாவரும் தங்கள் மூதாதையரின் கடவுளாம் இந்தக் கடவுளின் உடன்படிக்கையின்படியே வாழ்ந்தனர்.
33 பின்னர், யோசியா இஸ்ரயேலரின் எல்லா அருவருப்புகளையும் அவர்களுக்குரிய நாடு முழுவதிலுமிருந்தும் அகற்றினார்; இஸ்ரயேலில் இருந்தவர் அனைவரும் அவர்களின் கடவுளாகியஆண்டவரை மட்டுமே வழிபடச் செய்தார். அவரது வாழ்நாள் முழுவதும் அவர்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவரைப் பின்பற்றி நடக்கத் தவறவேயில்லை.
34:1 எரே 3:6.
34:4 2 அர 21:3; 2 குறி 33:3.
34:5 1 அர 13:2. | https://bible.catholicgallery.org/tamil/etb-2-chronicles-34 |
401 | 2 குறிப்பேடு | 2 குறிப்பேடு அதிகாரம் – 35 – திருவிவிலியம் | யோசியா பாஸ்காவைக் கொண்டாடல்
(2 அர 23:21-23)
1 பின்னர், யோசியா எருசலேமில் ஆண்டவருக்காகப் பாஸ்கா விழாவைக் கொண்டாடினார்; முதல் மாதத்தின் பதினான்காம் நாளில் அவர்கள் பாஸ்காப்பலி செலுத்தினர்.
2 அவர் குருக்களுக்கு அவர்களது பணிமுறையை வகுத்துக்கொடுத்து, ஆண்டவரின் இல்லப் பணியில் அவர்களை ஊக்குவித்தார்.
3 அடுத்து, அவர் இஸ்ரயேலர் அனைவருக்கும் போதனை செய்தவர்களும் ஆண்டவருக்காகத் தங்களையே தூய்மையாக்கிக் கொண்டவர்களுமான லேவியரை நோக்கி, “இஸ்ரயேல் அரசர் தாவீதின் மகன் சாலமோன் கட்டியெழுப்பிய திருக்கோவிலில் புனிதப் பேழையை வையுங்கள்; உங்கள் தோள்களில் அது ஒரு சுமையாக இருத்தலாகாது! இப்பொழுது, உங்கள் கடவுளாம் ஆண்டவருக்கும், அவர்தம் மக்கள் இஸ்ரயேலுக்கும் பணிபுரியுங்கள்!
4 இஸ்ரயேல் அரசர் தாவீதும், அவர்தம் மகன் சாலமோனும் எழுதியுள்ளவாறு குடும்பவாரியாகவும், பகுதிவாரியாகவும் உங்களையே தயார்ப்படுத்திக்கொண்டு,
5 நீங்கள் உங்கள் சகோதரராகிய மற்ற மக்களின் பிரிவிற்கேற்பப் பகுதி பகுதியாகத் திருத்தலத்தில் நில்லுங்கள்.
6 அங்கே பாஸ்காப்பலி செலுத்தி உங்களையே தூய்மையாக்கிக் கொள்ளுங்கள்; மேலும், உங்கள் சகோதரர் மோசேமூலம் வந்துள்ள ஆண்டவரின் வாக்கிற்கேற்ப வாழுமாறு அவர்களையும் தயார்ப்படுத்துங்கள்” என்று கூறினார்.
7 அங்கிருந்த மக்கள் பாஸ்காப் பலிக்கென அவர்களின் எண்ணிக்கைப்படி, செம்மறி ஆட்டுக் குட்டிகளும் வெள்ளாட்டுக் குட்டிகளுமாக மொத்தம் முப்பதாயிரமும், காளைகள் மூவாயிரமும் அரசர் யோசியா தம் உடைமையிலிருந்து அளித்தார்.
8 அவருடைய தலைமை அலுவலர் மக்களுக்கும் குருக்களுக்கும் லேவியருக்குமாக, தன்னார்வக் காணிக்கை அளித்தனர். ஆண்டவரின் இல்லத் தலைமை அதிகாரிகளான இல்க்கியா, செக்கரியா, எகியேல் ஆகியோரும் பாஸ்காப் பலிக்காக இரண்டாயிரத்து அறுநூறு ஆட்டுக்குட்டிகளையும், முந்நூறு காளைகளையும் அளித்தனர்.
9 மேலும், கொனானியா, அவன் சகோதரரான செமாயா, நெத்தனியேல், லேவியர் தலைவர்களான அசபியா, எயியேல், யோசபாத்து ஆகியோரும் லேவியருக்குப் பாஸ்காப் பலிக்கென ஐயாயிரம் ஆட்டுக்குட்டிகளையும், ஐந்நூறு காளைகளையும் அளித்தனர்.
10 அரசரின் கட்டளைப்படி குருக்கள் அவர்களுக்குரிய இடத்தில் நிற்க, லேவியர் தங்கள் பிரிவின்படி காத்திருக்க, பாஸ்காப்பலி தயாரிக்கப்பட்டது.
11 அவர்கள் பாஸ்காப் பலிக்குரிய ஆட்டுக்குட்டிகளை வெட்டினர்; குருக்கள் அவற்றின் குருதியைத் தங்கள் கைகளில் பிடித்துத் தெளிக்க, லேவியர் தோலுரித்தனர்.
12 மேலும், மோசேயின் நூலில் எழுதியுள்ளவாறு மக்கள் ஆண்டவருக்கு எரிபலி செலுத்தும்படி அவர்கள் மூதாதையர் குடும்ப முறைமைப்படி, ஆடுகளையும் காளைகளையும் பிரித்துக் கொடுத்தனர்.
13 பின்னர், அவர்கள் பாஸ்கா ஆட்டுக்குட்டியை திருச்சட்ட முறைமைப்படி தீயில் வாட்டினர்; புனித காணிக்கைகளைப் பானைகள், சட்டிகள், கொப்பரைகள் ஆகியவற்றில் சமைத்து மக்கள் எல்லாருக்கும் விரைவாகப் பகிர்ந்தளித்தனர்.
14 இவ்வாறே, தங்களுக்காகவும், குருக்களுக்காகவும், பாஸ்காவை ஆயத்தம் செய்தனர். ஆரோனின் மக்களான குருக்கள் எரிபலியையும், கொழுப்பானவற்றையும் இரவுவரை செலுத்தியதால், லேவியர் தங்களுக்காகவும் ஆரோனின் புதல்வர்களான குருக்களுக்காகவும் ஆயத்தம் செய்தனர்.
15 மேலும், ஆசாபின் வழிமரபினரான பாடகர், தாவீது, ஆசாபு, ஏமான், அரசரின் திருக்காட்சியாளர் எதுத்தூன் ஆகியோரின் கட்டளைக்கேற்ப தமக்குக் குறிக்கப்பட்ட இடத்தில் நின்றனர். வாயிற்காப்போர் ஒவ்வொரு வாயிலிலும் நின்றிருந்தனர், அவர்கள் தங்கள் பணிமுறையிலிருந்து வழுவவில்லை. ஏனெனில், அவர்கள் சகோதரர்களான லேவியர் அவர்களுக்காகப் பாஸ்காவை ஆயத்தம் செய்தனர்.
16 பாஸ்காவைக் கொண்டாடுதல், ஆண்டவரின் பலிபீடத்தில் எரிபலிகளைச் செலுத்துதல் ஆகிய அவரது வழிபாட்டுமுறை அனைத்தும் அரசர் யோசியாவின் கட்டளைப்படி அந்த நாளில் ஆயத்தம் செய்யப்பட்டன.
17 அங்கிருந்த இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் அப்பொழுது பாஸ்காத் திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்; அன்றுமுதல் புளியாத அப்பத் திருவிழாவையும், ஏழு நாள்கள் கொண்டாடினர்.
18 இறைவாக்கினர் சாமுவேல் காலம் தொட்டு இன்றுவரை இஸ்ரயேலில் இதுபோன்று பாஸ்காத் திருவிழா நடைபெற்றதில்லை; யோசியாவும், குருக்களும், லேவியரும், அங்கிருந்த யூதா, இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் எருசலேம் வாழ் மக்களும் பாஸ்கா விழாவைக் கொண்டாடியது போல் இஸ்ரயேல் அரசர்களில் எவரும் கொண்டாடியதில்லை.
19 யோசியா ஆட்சியேற்ற பதினெட்டாம் ஆண்டில் இப்பாஸ்கா விழா கொண்டாடப்பட்டது.
யோசியாவின் இறப்பு
(2 அர 23:28-30)
20 இவையாவும் முடிந்தபின், அதாவது, யோசியா திருக்கோவிலை ஒழுங்குபடுத்தியபின், எகிப்திய மன்னன் நெக்கோ யூப்பரத்தீசு ஆற்றின் பகுதியிலிருந்த கர்க்கமிசு என்ற இடத்திற்குப் படையெடுத்து வந்தான். யோசியாவும் அவனை எதிர்கொண்டு சென்றார்.
21 ஆனால், எகிப்திய மன்னன் அவரிடம் தூதரை அனுப்பி, “யூதாவின் அரசே! உமக்கும் எனக்கும் என்ன? இன்று நான் உமக்கெதிராகப் படையெடுத்துவரவில்லை. மாறாக, வேறொருவனுடன் போரிடவே நான் செல்கிறேன். நான் இதனை விரைவாகச் செய்ய வேண்டுமென்று கடவுள் கூறியுள்ளார். என்னோடு இருக்கும் கடவுளை எதிர்ப்பதை நீர் நிறுத்துவீர்! இல்லையெனில், அவர் உம்மை அழித்துவிடுவார்” என்றார்.
22 ஆயினும், யோசியா தம் எண்ணத்தை மாற்றிக்கொள்ளாமல், மாறுவேடத்தில் அவனோடு போரிடச் சென்றார்; நெக்கோ மூலம் வந்த கடவுளின் வாய்மொழியைக் கேளாமல், மெகிதோ பள்ளத்தாக்கில் அவனோடு போரிடச் சென்றார்.
23 அரசர் யோசியாவின் மேல் வில்வீரர் அம்பெய்ய, அவர் தம் அலுவலர்களைப் பார்த்து, “என்னை உடனே அப்புறப்படுத்துங்கள், ஏனெனில், நான் பெரிதும் காயமடைந்துள்ளேன்” என்றார்.
24 அவருடைய அலுவலர்கள் அவரைத் தேரிலிருந்து இறக்கி, அவரது இரண்டாம் தேரில் ஏற்றி, எருசலேமுக்குக் கொண்டு வந்தனர். அவர் அங்கே இறக்க, தம் மூதாதையரின் கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டார். யோசியாவுக்காக யூதா, எருசலேம் முழுவதும் துக்கம் கொண்டாடின.
25 யோசியாவுக்காக எரேமியாவும் ஓர் இரங்கற்பா இயற்றினார். அது எல்லாப் பாடகர், பாடகியராலும், அவருக்காகப் புலம்பும் பொழுது இன்றுவரை பாடப்படுகிறது. இது, இஸ்ரயேலில் நிலையான நியமமாகி, புலம்பல் பற்றிய நூலில் காணக்கிடக்கிறது.
26 யோசியா ஆட்சியின் மற்ற நிகழ்ச்சிகளும், ஆண்டவரின் சட்டத்திற்கேற்ப அவர் செய்த அவருடைய பக்திச் செயல்களும்,
27 தொடக்க முதல் இறுதிவரை எல்லாமே இஸ்ரயேல், யூதா அரசர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன.
35:4 2 குறி 8:14.
35:13 விப 12:8-9.
35:15 1 குறி 25:1.
35:17 விப 12:1-20. | https://bible.catholicgallery.org/tamil/etb-2-chronicles-35 |
402 | 2 குறிப்பேடு | 2 குறிப்பேடு அதிகாரம் – 36 – திருவிவிலியம் | யூதாவின் அரசன் யோவகாசு
(2 அர 23:30-35)
1 பின்னர், நாட்டுமக்கள் யோசியாவின் மகனான யோவகாசை அவருக்குப் பதிலாக எருசலேமில் அரசனாக்கினர்.
2 யோவகாசு அரசனானபோது அவனுக்கு வயது இருபத்து மூன்று; அவன் எருசலேமில் மூன்றே மாதங்கள் ஆட்சி செய்தான்.
3 எகிப்திய மன்னன் அவனை எருசலேமில் பதவியிலிருந்து நீக்கியபின், நாலாயிரம் கிலோகிராம் வெள்ளியும், நாற்பது கிலோகிராம் பொன்னும் கப்பமாகச் செலுத்துமாறு மக்களுக்கு ஆணையிட்டான்.
4 எகிப்திய மன்னன் யோவகாசின் சகோதரன் எலியாக்கிமிற்கு, யோயாக்கிம் என்று பெயர்மாற்றம் செய்து, அவனை யூதாவுக்கும் எருசலேமுக்கும் அரசனாக்கினான்; பின்பு நெக்கோ, யோவகாசை எகிப்துக்கு இட்டுச் சென்றான்.
யூதாவின் அரசன் யோயாக்கிம்
(2 அர 23:36-24:7)
5 யோயாக்கிம் அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் எருசலேமில் பதினோர் ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவன் கடவுளாம் ஆண்டவரின் பார்வையில் தீயனவே செய்தான்.
6 பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் அவனுக்கு எதிராகப் படையெடுத்து வந்து, அவனை வெண்கலச் சங்கிலிகளால் கட்டி, பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் சென்றான்.
7 அத்துடன், ஆண்டவரின் இல்லத்துப் பாத்திரங்கள் சிலவற்றை நெபுகத்னேசர் பாபிலோனுக்கு எடுத்துச் சென்று, அங்கேயுள்ள தனது அரண்மனையில் வைத்துக் கொண்டான்.
8 யோயாக்கீமின் பிற செயல்களும், அவன் செய்த அருவருப்பானவையும், அவனுக்கு எதிராய்க் காணப்பட்டவை யாவும் இஸ்ரயேல், யூதா அரசர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன. அவனுக்குப்பின் அவன் மகன் யோயாக்கின் அரசனானான்.
யூதாவின் அரசர் யோயாக்கின்
(2 அர 24:8-17)
9 யோயாக்கின் அரசனானபோது அவனுக்கு வயது எட்டு; எருசலேமில் அவன் மூன்று மாதம் பத்து நாள்களே ஆட்சி செய்து, ஆண்டவரின் பார்வையில் தீயனவே செய்தான்.
10 ஆதலால், அவ்வாண்டின் இறுதியில் மன்னன் நெபுகத்னேசர் தனதுபடையை அனுப்பி, கைதியான அவனையும் அவனுடன் ஆண்டவரின் இல்லத்தில் இருந்த விலையுயர்ந்த பாத்திரங்களையும் கொண்டுவரச் செய்தான்; பின்பு, அவன் சிற்றப்பன் செதேக்கியாவை அவனுக்குப்பதில் யூதா, எருசலேமுக்கு அரசனாக்கினான்.
யூதாவின் அரசன் செதேக்கியா
11 செதேக்கியா அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தொன்று. அவன் எருசலேமில் பதினோர் ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
12 அவன் கடவுளாம் ஆண்டவரின் பார்வையில் தீயனவே செய்தான்; ஆண்டவர் பெயரால் பேசிய இறைவாக்கினர் எரேமியா முன் தன்னையே தாழ்த்திக் கொள்ளவில்லை.
எருசலேமின் வீழ்ச்சி
(2 அர 25:1-21; எரே 52:3-11)
13 கட்டுப்பட்டிருப்பதாகக் கடவுளின் பெயரால் தன்னை ஆணையிடச் செய்த மக்கள் நெபுகத்னேசருக்கு எதிராக இவன் கலகம் செய்து, இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவரைப் பின்பற்றாமல் இறுமாப்புற்று, தனது இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டான்.
14 அதுபோல், குருக்களின் தலைவர்களும், மக்களும் வேற்றினத்தாரின் அனைத்து அருவருப்புகளையும் தொடர்ந்து செய்து, உண்மையற்றவர்களாய், ஆண்டவர் தமக்காக எருசலேமில் தூய்மையாக்கியிருந்த திருக்கோவிலை மேலும் தீட்டுப்படுத்தினர்.
15 அவர்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவர் தம் மக்களின் மீதும், தம் உறைவிடத்தின் மீதும் இரக்கம் கொண்டு, தம் தூதர்களை மீண்டும் மீண்டும் அவர்களிடம் அனுப்பினார்.
16 ஆனால், அவர்கள் கடவுளின் தூதர்களை ஏளனம் செய்து, அவர்தம் வார்த்தைகளைப் புறக்கணித்து, அவர்தம் இறைவாக்கினர்களை இழித்துரைத்தனர். ஆதலால், அவர்கள் தப்பமுடியாத அளவுக்கு ஆண்டவரது சினம் அவர்கள்மேல் கனன்றெழுந்தது.
17 ஆதலால், அவர் அவர்களுக்கு எதிராக கல்தேயரின் மன்னனைப் படையெடுத்து வரச் செய்தார். அவன் அவர்களின் திருஉறைவிடமாகிய ஆண்டவரின் இல்லத்தில் அவர்களின் இளம் வீரர்களை வாளால் வெட்டி வீழ்த்தினான்; இளைஞர் கன்னியர் என்றோ, முதியோர் இளைஞர் என்றோ, எவர்மேலும் இரக்கம் காட்டாமல், எல்லாரையும் அவன் கையில் ஆண்டவர் ஒப்புவித்தார்.
18 கடவுளின் இல்லத்து எல்லாச் சிறிய, பெரிய பாத்திரங்களையும், அதன் கருவூலங்களையும் அரசனிடமும் அவன் அதிகாரிகளிடமும் இருந்த செல்வங்கள் அனைத்தையும் பாபிலோனுக்குக் கொண்டு சென்றான்.
19 கடவுளின் இல்லத்தை அவர்கள் எரித்து, எருசலேமின் மதில்களைத் தகர்த்தனர்; அங்கிருந்த அனைத்து அரண்மனைகளையும் தீக்கிரையாக்கி, விலையுயர்ந்த பொருள்கள் அனைத்தையும் அழித்தனர்.
20 மேலும், அவன் வாளுக்குத் தப்பியவர்களைப் பாபிலோனுக்கு நாடு கடத்தினான்; பாரசீக அரசு எழும்பும்வரை அங்கே, அவர்கள் அவனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் அடிமைகளாக இருந்தனர்.
21 “நாடு ஓய்வு நாள்களைக் கடைப்பிடிக்காததால், எழுபது ஆண்டுகள் பாழாய்க் கிடக்கும்” என்று எரேமியா உரைத்த ஆண்டவரின் வாய்மொழிகள் இவ்வாறு நிறைவேறின.
யூதர்கள் எருசலேமிற்குத் திரும்புமாறு சைரசு கட்டளையிடல்
(எஸ்ரா 1:1-4)
22 பாரசீக மன்னன் சைரசு ஆட்சியின் முதல் ஆண்டில், எரேமியா உரைத்த ஆண்டவரின் வாய்மொழிகள் நிறைவேறும் வண்ணம், ஆண்டவர் அவனது மனத்தைத் தூண்டி எழுப்பினார். எனவே, அவன் தனது நாடு முழுவதற்கும் மடல் வரைந்து அறிவித்தது யாதெனில்:
23 “பாரசீக மன்னராகிய சைரசு என்னும் யாம் கூறுவது இதுவே: விண்ணகக் கடவுளாம் ஆண்டவர் மண்ணக அரசுகள் எல்லாவற்றையும் எனக்கு அளித்துள்ளார். மேலும், யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்குத் திருக்கோவில் எழுப்புமாறு எனக்குப் பணித்துள்ளார். எனவே, அவருடைய மக்களாக இருப்பவர் அங்கு செல்லட்டும்! கடவுளாம் ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!”
36:4 எரே 22:11-12.
36:5 எரே 22:18-19; 26:1-6; 35:1-19.
36:6 எரே 25:1-38; 36:1-32; 45:1-5; தானி 1:1-2.
36:10 எரே 22:24-30; 24:1-10; 29:1-2; 37:1; எசே 17:12,13.
36:11 எரே 27:1-22; 28:1-17.
36:13 எசே 17:15.
36:17 எரே 21:1-10; 34:1-5. | https://bible.catholicgallery.org/tamil/etb-2-chronicles-36 |
403 | எஸ்ரா | எஸ்ரா அதிகாரம் – 1 – திருவிவிலியம் | யூதர்கள் நாடு திரும்பச் சைரசு மன்னனின் ஆணை
1 எரேமியா வழியாக வெளிப்படுத்தப்பட்ட இறைவாக்கு நிறைவேறும்படி பாரசீக மன்னர் சைரசின் முதல் ஆண்டில் அவரது உள்ளுணர்வை ஆண்டவர் தூண்டினார். எனவே சைரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்து, அதைத் தம் நாடெங்கும் எழுத்துமூலம் வெளியிட்டார்.
2 “பாரசீக மன்னர் சைரசு கூறுவது; விண்ணகக் கடவுளான ஆண்டவர் மண்ணகத்திலுள்ள எல்லா அரசுகளையும் என்னிடம் ஒப்படைத்துள்ளார். மேலும் யூதாவிலுள்ள எருசலேமில் தமக்கென ஒரு கோவிலைக் கட்டும்படி அவர் என்னை நியமித்துள்ளார்.
3 அவருடைய எல்லா மக்களிலும் யார் யார் அவரைச் சார்ந்துள்ளனரோ — கடவுள் அவர்களோடு இருப்பாராக! — அவர்கள், யூதாவிலுள்ள எருசலேமுக்குச் சென்று, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு ஒரு கோவிலைக் கட்டுவார்களாக! எருசலேமில் இருக்கும் அவரே கடவுள்!
4 எஞ்சியுள்ளவன் ஒவ்வொருவனும் எங்குத் தங்கியிருந்தாலும் அங்கு வாழும் மக்கள், எருசலேமிலுள்ள கடவுளின் கோவிலுக்குத் தன்னார்வக் காணிக்கை அனுப்புவதோடு, அவனுக்கும் வெள்ளி, பொன், மற்றப்பொருள்கள், கால்நடைகள் ஆகியவற்றைக் கொடுத்து உதவுவார்களாக!”
5 அப்போது யூதா, பென்யமினுடைய குலத்தலைவர்களும், குருக்களும் லேவியரும், எருசலேமில் ஆண்டவரின் கோவிலைக் கட்டச் செல்லுமாறு ஆண்டவரால் தூண்டப்பெற்ற அனைவரும் புறப்பட்டார்கள்.
6 அவர்களைச் சூழ்ந்து வாழ்ந்த மக்கள் தன்னார்வக் காணிக்கை அனைத்தும் கொடுத்ததுமல்லாமல் அவர்களுக்கு வெள்ளிப் பாத்திரங்களையும், பொன்னையும் மற்றப் பொருள்களையும், கால்நடைகளையும், விலையுயர்ந்த பொருள்களையும் கொடுத்து உதவினார்கள்.
7 நெபுகத்னேசர் எருசலேமில் இருந்த ஆண்டவரின் கோவிலுக்கு உரிமையான பாத்திரங்களை எடுத்து வந்து தன் தெய்வங்களின் கோவிலில் வைத்திருந்தான். அவற்றைச் சைரசு மன்னர் திரும்பிக் கொடுத்தார்.
8 பாரசீக மன்னரான சைரசின் பொருளாளரான மித்ரதாத்தின் கையில் அவற்றை ஒப்படைத்தார். அவர் அவற்றை யூதாவின் தலைவரான சேஸ்பட்சரிடம் எண்ணிக் கொடுத்தார்.
9 அவற்றின் எண்ணிக்கை பின் வருமாறு; பொற்பாத்திரங்கள் முப்பது, வெள்ளிப் பாத்திரங்கள் ஆயிரம், கத்திகள் இருபத்தொன்பது.
10 பொற் கிண்ணங்கள் முப்பது, வேறு வகையான வெள்ளிக் கிண்ணங்கள் நானூற்றுப் பத்து, மற்றப் பாத்திரங்கள் ஆயிரம்.
11 பொன், வெள்ளியாலான பாத்திரங்கள் அனைத்தும் ஐயாயிரத்து நானூறு. அவற்றையெல்லாம் சேஸ்பட்சரும், பாபிலோன் அடிமைத்தனத்திலிருந்து எருசலேமுக்குத் திரும்பி வந்தவர்களும் கொண்டு வந்தார்கள்.
1:1 எரே 25:11; 29:10.
1:2 எசா 44:28; 2 குறி 36:23. | https://bible.catholicgallery.org/tamil/etb-ezra-1 |
404 | எஸ்ரா | எஸ்ரா அதிகாரம் – 2 – திருவிவிலியம் | சிறையிருப்பினின்று திரும்பி வந்தோரின் பட்டியல்
(நெகே 7:4-73)
1 அடிமைத்தனத்திலிருந்தும் நாடு கடத்தப்பட்ட இடத்தினின்றும் திரும்பி வந்த அம் மாநில மக்கள் இவர்களே. அவர்களைப் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர், பாபிலோனுக்கு அடிமைகளாக இட்டுச் சென்றிருந்தான். இவர்களே எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தம் நகர்களுக்கும் திரும்பிச் சென்றவர்கள்.
2 செருபாபேலோடு வந்தவர்கள்; ஏசுவா, நெகேமியா, செராயா, இரகேலயா, மொர்தக்காய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், இரகூம், பானா. இஸ்ரயேல் மக்களுள் ஆண்களின் எண்ணிக்கை;
3 பரோசின் மக்கள் இரண்டாயிரத்து நூற்று எழுப்பத்திரண்டு பேர்.
4 செபத்தியாவின் மக்கள் முந்நூற்று எழுபத்திரண்டு பேர்.
5 ஆரகின் மக்கள் எழுநூற்று எழுபத்தைந்து பேர்.
6 ஏசுவா, யோவாபு இவர்களின் வழிவந்த பகத்து, மோவாபு மக்கள் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டு பேர்.
7 ஏலாமின் மக்கள் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு பேர்.
8 சத்தூவின் மக்கள் தொள்ளாயிரத்து நாற்பத்தைந்து பேர்.
9 சக்காயின் மக்கள் எழுநூற்று அறுபது பேர்.
10 பானியின் மக்கள் அறுநூற்று நாற்பத்திரண்டு பேர்.
11 பேபாயின் மக்கள் அறுநூற்று இருபத்து மூன்று பேர்.
12 அசகாதின் மக்கள் ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டு பேர்.
13 அதோனிக்காமின் மக்கள் அறுநூற்று அறுபத்தாறு பேர்.
14 பிக்வாயின் மக்கள் இரண்டாயிரத்து ஐம்பத்தாறு பேர்.
15 அதீனின் மக்கள் நானூற்று ஐம்பத்து நான்கு பேர்.
16 எசேக்கியாவின் வழிவந்த ஆற்றேரின் மக்கள் தொண்ணூற்றெட்டுப் பேர்.
17 பேசாயின் மக்கள் முந்நூற்று இருபத்து மூன்று பேர்.
18 யோராவின் மக்கள் நூற்றுப் பன்னிரண்டு பேர்.
19 ஆசுமின் மக்கள் இருநூற்று இருபத்து மூன்று பேர்.
20 கிப்பாரின் மக்கள் தொண்ணூற்றைந்து பேர்.
21 பெத்லகேமின் மக்கள் நூற்று இருபத்து மூன்று பேர்.
22 நெற்றோபாவின் ஆண்கள் ஐம்பத்தாறு பேர்.
23 அனாதோதின் ஆண்கள் நூற்று இருபத்தெட்டுப் பேர்.
24 அஸ்மாவேத்தின் மக்கள் நாற்பத்திரண்டு பேர்.
25 கிரியத்து ஆரிம், கெபீரா, பெயரோத்து மக்கள் எழுநூற்று நாற்பத்து மூன்று பேர்.
26 இராமா, கேபா மக்கள் அறுநூற்று இருபத்தொருபேர்.
27 மிக்மாசின் ஆண்கள் நூற்றுஇருபத்திரண்டு பேர்.
28 பெத்தேலிலும், ஆயிலும் உள்ள ஆண்கள் இருநூற்று இருபத்து மூன்று பேர்.
29 நெபோவின் மக்கள் ஐம்பத்திரண்டு பேர்.
30 மக்பீசின் மக்கள் நூற்றைம்பத்தாறு பேர்.
31 மற்றொரு ஏலாமின் மக்கள் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு பேர்.
32 ஆரிமின் மக்கள் முந்நூற்றிருபது பேர்.
33 லோது, ஆதிது, ஒனோ ஆகியோரின் மக்கள் எழுநூற்றிருபத்தைந்து பேர்.
34 எரிகோவின் மக்கள் முந்நூற்று நாற்பதைந்து பேர்.
35 செனா மக்கள் மூவாயிரத்து அறுநூற்று முப்பது பேர்.
36 குருக்கள்: யோசுவாவின் வீட்டாரான எதாயாவின் மக்கள் தொள்ளாயிரத்து எழுபத்து மூன்று பேர்.
37 இம்மேரின் மக்கள் ஆயிரத்து ஐம்பத்திரண்டு பேர்.
38 பஸ்கூரின் மக்கள் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழு பேர்.
39 ஆரிமின் மக்கள் ஆயிரத்துப் பதினேழு பேர்.
40 லேவியர்கள்: ஓதவியாவின் வழிவந்த யேசுவா கத்மியேலின் மக்கள் எழுபத்து நான்கு பேர்.
41 பாடகர்கள்: ஆசாபு மக்கள் நூற்று இருபத்தெட்டுப் பேர்.
42 வாயிற்காவலரின் வழிவந்த சல்லூம், ஆற்றேர், தல்மோன், அக்கூபு, அத்தித்தா, சோபாய் ஆகியவரின் மக்களனைவரும் நூற்று முப்பத்தொன்பது பேர்.
43 கோவில் ஊழியர்கள்: சிகாபின் மக்கள், அசுபாவின் மக்கள், தபாயோத்தின் மக்கள்.
44 கேரோசின் மக்கள், சீயகாவின் மக்கள், பாதோனின் மக்கள்,
45 இலபனாவின் மக்கள், அகாபாவின் மக்கள், அக்கூபின் மக்கள்,
46 காகாபின் மக்கள், சம்லாயின் மக்கள், அனானின் மக்கள்,
47 கிதேலின் மக்கள், ககாரின் மக்கள், இரயாயாவின் மக்கள்,
48 இரத்சீனின் மக்கள், நெக்கோதாவின் மக்கள், கசாம் மக்கள்,
49 ஊசாவின் மக்கள், பர்சயாகின் மக்கள், பேசாயின் மக்கள்,
50 அஸ்னாவின் மக்கள், மெய்யோனிம் மக்கள், நெபிசிம் மக்கள்,
51 பக்பூக்கின் மக்கள், அகுப்பாவின் மக்கள், அர்கூரின் மக்கள்,
52 பட்கலூத்தின் மக்கள், மெகிதாவின் மக்கள், அர்சாவின் மக்கள்,
53 பர்கோசின் மக்கள், சீசராவின் மக்கள், தேமாவின் மக்கள்,
54 நெட்சியாகின் மக்கள், அத்திபாவின் மக்களுமே!
55 சாலமோன் ஊழியரின் மக்கள்:
56 சோற்றாயின் மக்கள், அசோபரேத்தின் மக்கள், பெருதாவின் மக்கள், யாலாவின் மக்கள், தர்கோனின் மக்கள், கிதேலின் மக்கள்,
57 செபற்றியாவின் மக்கள், அற்றலின் மக்கள், சபாயிம் வழிவந்த போக்கரேத்தின் மக்கள், ஆமியின் மக்கள்.
58 கோவில் ஊழியர்களும் சாலமோன் ஊழியரின் மக்களுமாக மொத்தம் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டு பேர்.
59 மற்றும், தெல்மெலகு, தெல்லர்சா, கெருபு, அதான், இம்மேர் என்ற ஊர்களிலிருந்து புறப்பட்டு வந்தவர்களும், தங்கள் மூதாதையரின் குடும்பத்தையும், வழிமரபையும், தாங்கள் இஸ்ரயேலைச் சார்ந்தவர்களா என்பதையும் நிருபிக்க அறியாதவர்கள் இவர்களே;
60 தெலாயாவின் மக்களும், தோபியாவின் மக்களும், நெக்கோதாவின் மக்களும் சேர்ந்து அறுநூற்று ஐம்பத்திரண்டு பேர்.
61 மற்றும், குருக்களின் புதல்வர்கள்; அபய்யாவின் மக்கள், அக்கோசின் மக்கள், கிலயாதைச் சார்ந்த பர்சில்லாயின் புதல்வியருள் ஒருத்தியை மனைவியாகக் கொண்டதால் அவர்தம் பெயரைத் தாங்கிய பர்சில்லாயின் மக்கள்.
62 இவர்கள் தங்கள் பெயர்ப் பதிவைத் தலைமுறை அட்டவணையில் தேடியும் காணாததால் தீட்டுப்பட்டவர்கள் எனக் கருதப்பட்டு குருத்துவப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்கள்.
63 அவர்கள் தூய்மையிலும் தூய்மையான பொருள்களை ஊரிம், தும்மிமைக் காட்டுவதற்கு ஒரு குரு வரும்வரை உண்ணக்கூடாது என்று ஆளுநர் அவர்களிடம் கூறினார்.
64 மக்கள் சபையின் மொத்த எண்ணிக்கை நாற்பத்து இரண்டாயிரத்து முந்நூற்று அறுபது.
65 அவர்களைத் தவிர அவர்களின் ஆண், பெண், ஊழியர்களின் எண்ணிக்கை, ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழு. மேலும் அவர்களுடன் இருநூறு பாடகர்களும், பாடகிகளும் இருந்தனர்.
66 அவர்களின் குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு; கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து.
67 ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து; கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.
68 குலத் தலைவர்களில் சிலர் எருசலேமில் உள்ள ஆண்டவரின் இல்லத்திற்கு வந்து, கடவுளின் கோவிலை அதே இடத்தில் கட்டி எழுப்பத் தன்னார்வக் காணிக்கை ஒப்புக் கொடுத்தனர்.
69 அவர்கள் ஒவ்வொருவரும் தம் வசதிக்கேற்ப, ஐநூறு கிலோகிராம் பொன்னும், மூவாயிரத்து நானூற்று இருபத்தைந்து கிலோகிராம்* வெள்ளியும், நூறு குருத்துவ ஆடைகளும் கொடுத்தார்கள்.
70 குருக்கள், லேவியர், வேறு சிலர், பாடகர், வாயிற்காப்பாளர், கோவில் ஊழியர் ஆகியோர் தம் நகர்களிலும், எல்லா இஸ்ரயேலருள் ஏனையோரும் தம் நகர்களிலும் குடியேறியிருந்தார்கள்.
2:63 எண் 27:21.
2:70 1 குறி 9:2; நெகே 11:3.
2:69 ‘அறுபத்தோராயிரம் திராக்மா’ என்பது எபிரேய பாடம்.
2:69 ‘ஐயாயிரம் மினா’ என்பது எபிரேய பாடம். | https://bible.catholicgallery.org/tamil/etb-ezra-2 |
405 | எஸ்ரா | எஸ்ரா அதிகாரம் – 3 – திருவிவிலியம் | வழிபாடு மீண்டும் நடைபெறல்
1 தம் நகரில் வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் ஏழாம் மாதம் வந்த போது எருசலேமில் ஒருசேரக் கூடினர்.
2 அப்பொழுது யோசதாக்கின் மகன் ஏசுவாவும் அவருடைய சகோதர குருக்களும், செயல்தியேல் மகனான செருபாபேலும், அவருடைய சகோதரர்களும், கடவுளின் மனிதரான மோசே திருச்சட்டநூலில் எழுதியுள்ளபடி எரிபலிகள் ஒப்புக்கொடுக்க இஸ்ரயேலின் கடவுளுக்கு ஒரு பலிபீடம் கட்டியெழுப்பினர்.
3 வேற்று நாட்டு மக்களால் அச்சம் தோன்றினும் பலிபீடத்தை அதற்குரிய இடத்திலே அமைத்தார்கள். காலையிலும், மாலையிலும் ஆண்டவருக்கு எரிபலிகள் ஒப்புக்கொடுத்தனர்.
4 திருச்சட்ட நூலில் உள்ளபடி கூடாரத்திருவிழாவைக் கொண்டாடினர். ஒவ்வொரு நாளும் முறைமைப்படி அந்நாளுக்குரிய எரிபலிகளைச் செலுத்தினர்.
5 அதன்பிறகு ஒவ்வொரு அமாவாசையின்போதும், ஆண்டவரின் எல்லாத் திருவிழாக்களிலும் எரிபலி செலுத்தினர். ஆண்டவருக்குத் தன்னார்வக் காணிக்கை ஒப்புக்கொடுக்க விரும்பியவர்கள் ஒப்புக்கொடுத்தார்கள்.
6 ஏழாவது மாதத்தில் முதல் நாளிலிருந்து ஆண்டவருக்கு எரிபலிகள் செலுத்தத் தொடங்கினார்கள். ஆனால், ஆண்டவருடைய கோவிலுக்கு இன்னும் அடிக்கல் நாட்டப்படவில்லை.
எருசலேம் கோவில் மீண்டும் கட்டப்படல்
7 பாரசீக மன்னர் சைரசு அவர்களுக்குக் கொடுத்திருந்த அனுமதியின்படி, கொத்தர்களுக்கும் தச்சர்களுக்கும் பணம் கொடுத்தார்கள். கேதுரு மரங்களை லெபனோனிலிருந்து யோப்பா கடலுக்குக் கொண்டுவரச் சீதோன், தீர் நகரத்தினருக்கு உணவு, பணம், எண்ணெய் ஆகியன கொடுத்தார்கள்.
8 அவர்கள் எருசலேமில் உள்ள கடவுளின் கோவில் தளத்திற்கு வந்தடைந்த இரண்டாம் ஆண்டின் இரண்டாம் மாதத்தில், செயல்தியேலின் மகன் செருபாபேல், யோசதாக்கின் மகன் ஏசுவா, அவருடைய சகோதர குருக்கள், லேவியர்கள், மற்றும் அடிமைத்தனத்திலிருந்து எருசலேமுக்குத் திரும்பி வந்தவர்கள் அனைவரும் கோவில் வேலையைத் தொடங்கினர். ஆண்டவரின் இல்ல வேலையைக் கண்காணிக்க இருபதும், அதற்கு மேற்பட்ட வயதுமுடைய லேவியர்களை நியமித்தனர்.
9 ஏசுவா, அவருடைய புதல்வர், உறவினர், கத்மியேல், அவருடைய புதல்வர், யூதாவின் புதல்வர், லேவியரான ஏனிதாதின் புதல்வர், அவர்களுடைய புதல்வர், உறவினர் ஆகியோர் கோவில் வேலையைக் கண்காணிக்க ஒருசேர நின்றனர்.
10 கட்டுபவர்கள் ஆண்டவரின் கோவிலுக்கு அடித்தளம் இட்டபோது இஸ்ரயேலின் அரசர் தாவீது உரைத்தபடி குருக்கள் தங்களுக்குரிய ஆடை அணிந்துகொண்டு, எக்காளத்தோடும், ஆசாபின் புதல்வரான லேவியர் கைத்தாளங்களோடும் ஆண்டவரைப் புகழ்ந்தனர்.
11 அவர்கள் ஆண்டவரைப் புகழ்ந்து நன்றி கூறி, “அவர் நல்லவர், ஏனெனில் அவர் இரக்கம் இஸ்ரயேல்மீது என்றென்றும் உள்ளது” என்று பாடினர். ஆண்டவரின் இல்லம் அடித்தளம் இடப்பட்டதைக் குறித்து எல்லா மக்களும் ஆண்டவரைப் புகழ்ந்து மகிழ்ச்சியினால் ஆரவாரம் செய்தனர்.
12 முதல் கோவிலைக் கண்டிருந்த குருக்கள், லேவியர், குலத்தலைவர்கள், மூப்பர்கள் பலர் இந்தப் புதிய கோவிலின் அடித்தளத்தைக் கண்டபோது, உரத்த குரலில் அழுதனர். வேறு பலர் மகிழ்ச்சியாலும் ஆர்ப்பரிப்பாலும் குரல் எழுப்பினர்.
13 நெடுந்தொலைவு கேட்குமளவுக்கும் மக்கள் பெருங்கூக்குரல் எழுப்பியதால், மகிழ்ச்சிக் குரலொலியை அவர்களின் அழுகைக் குரலிலிருந்து பிரித்துணர எவராலும் இயலவில்லை.
3:2 விப 27:1.
3:3 எண் 28:1-8.
3:4 எண் 29:12-38.
3:5 எண் 28:11-29:39.
3:10 1 குறி 25:1.
3:11 1 குறி 16:34; 2 குறி 5:13; 7:3; திபா 100:5; 106:1; 107:1; 118:1; 136:1; எரே 33:11. | https://bible.catholicgallery.org/tamil/etb-ezra-3 |
406 | எஸ்ரா | எஸ்ரா அதிகாரம் – 4 – திருவிவிலியம் | கோவில் கட்டும் வேலை தடைபடல்
1 அடிமைத்தனத்திலிருந்து திரும்பியிருந்த மக்கள் இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவருக்குக் கோவில் கட்டுவதை யூதா, பென்யமின் குலங்களின் பகைவர் அறிந்தனர்.
2 அவர்கள் செருபாபேலையும் குலத்தலைவர்களையும் அணுகி, “நாங்களும் உங்களோடு சேர்ந்து கட்டுகின்றோம். ஏனெனில் உங்கள் கடவுளையே நாங்களும் உங்களைப்போல் வழிபடுகின்றோம். அசீரிய மன்னன் ஏசர்கத்தோன் எங்களை இங்கு கொண்டுவந்த நாளிலிருந்து அவருக்கே பலி செலுத்தி வருகின்றோம்.”
3 ஆனால், செருபாபேலும் ஏசுவாவும் இஸ்ரயேலின் எஞ்சிய குலத்தலைவர்களும் அவர்களிடம், “நீங்களும் நாங்களும் சேர்ந்து எங்கள் கடவுளுக்கு கோவில் கட்ட வேண்டியதில்லை. மாறாகப் பாரசீக மன்னரான சைரசு எங்களுக்குக் கட்டளையிட்டபடி, நாங்கள் மட்டுமே, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குக் கோவில் கட்டுவோம்” என்றனர்.
4 ஆதலால், அந்நாட்டு மக்கள், யூதாவின் மக்களது கோவில் கட்டும் பணியைத் தடுத்தனர்; அவர்களை அச்சுறுத்தவும் செய்தனர்.
5 பாரசீக மன்னரான சைரசு ஆட்சிக்காலம் தொடங்கிப் பாரசீக மன்னரான தாரியு ஆட்சிக்காலம்வரை அரசு அலுவலர்களுக்குக் கையூட்டுக் கொடுத்து, அவர்களின் திட்டங்களைச் சீர்குலைக்கத் தூண்டினர்.
எருசலேம் புதிப்பிப்பு தடைபடல்
6 அகஸ்வேர் ஆட்சியின்போது, அவரது ஆட்சியின் தொடக்கத்திலேயே யூதாவிலும் எருசலேமிலும் குடியிருந்தவர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டு ஒன்று எழுதினர்.
7 அர்த்தக்சஸ்தாவின் காலத்தில் பிஸ்லாம், மித்ரதாத்து, தாபேல், அவர்களைச் சார்ந்த மற்றவர்களும், பாரசீக மன்னனான அர்த்தக்சஸ்தாவிற்கு ஒரு மடல் எழுதினர். அம்மடல் அரமேயத்தில் எழுதப்பட்டிருந்ததால், மொழிபெயர்க்கப்பட வேண்டியிருந்தது.
8 ஆளுநர் இரகூமும் எழுத்தாளரான சிம்சாயும் எருசலேமுக்கு எதிராக அர்த்தக்சஸ்தா மன்னருக்குக் கீழ்க் கண்டவாறு ஒரு மடல் எழுதினர்;
9 ஆளுநர் இரகூம், எழுத்தர் சிம்சாய், அவர்களைச் சார்ந்து நீதிபதிகள், தூதர், ஆலோசகர், அதிகாரிகள் மேலும் எரேக்கியர், பாபிலோனியர், எலாமித்தியரான சூசா நகரின் மக்கள்,
10 மாட்சியும், மேன்மையும் பொருந்திய ஒஸ்னப்பர் அடிமைதனத்திற்கு இட்டுச் சென்ற மக்களைச் சமாரியா நதியின் அக்கரைப் பகுதியின் ஊர்களிலும் குடியேற்றிய பிற மக்கள் ஆகியோர் எழுதும் மடல்;
11 மன்னர் அர்த்தக்சஸ்தாவுக்கு அனுப்பிய கடிதத்தின் உட்பொருள் இதுவே: நதியின் அக்கரையில் வாழும் உம் பணியாளராகிய மக்கள் அறிவிப்பது;
12 உம்மிடமிருந்து எங்களிடம் வந்த யூதர்கள் எருசலேமுக்குச் சென்று கலகம் மிகுந்த, தீங்கு நிறைந்த அந்நகரைக் கட்டுகின்றார்கள்; மதில் சுவர்களைக் கட்டி முடிக்கின்றார்கள், அடித்தளங்களைப் பழுதுபார்க்கின்றார்கள்.
13 மேலும் மன்னர் அறிய வேண்டியது; அந்நகர் கட்டப்படுமானால், அதன் மதில்கள் கட்டி முடிக்கப்படுமானால், அவர்கள் வரியும், தீர்வையும் தரவோ, கட்டாய வேலை செய்யவோ மாட்டார்கள். எனவே மன்னருக்குரிய வருமானம் குறையும்.
14 நாங்களோ அரண்மனை உப்பைத் தின்பதாலும், மன்னரின் இழிவைப் பார்ப்பது முறையற்றது என்பதாலும், நாங்கள் மன்னருக்கு இதை அனுப்பித் தெரிவித்துக்கொள்கின்றோம்.
15 எனவே, உம்முடைய முன்னோரின் வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் அதில் அந்நகர் கலகம் மிகுந்த அரசர்களுக்கும், மாநிலங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதைக் கண்டுணர்வீர். அதில் தொன்றுதொட்டுக் கலகங்கள் எழுந்துள்ளன. அதன் பொருட்டே அந்நகர் அழிக்கப்பட்டது.
16 ஆகையால் அந்நகர் கட்டப்படுமானால், அதன் மதிற் சுவர்கள் கட்டுதல் நிறைவேறுமானால் பேராற்றுக்கு அக்கரைப் பகுதி உமக்குச் சொந்தமாகாது என்பதை மன்னருக்குத் தெரிவிக்கின்றோம்.
17 ஆட்சியாளரான இரகூம், எழுத்தாளரான சிம்சாய், அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் சமாரியாவில் வாழ்ந்தவர்களுக்கும், நதிக்கு அக்கரையில் வாழும் மற்றவர்களுக்கும் சமாதானம் கூறி மன்னர் அனுப்பிய செய்தி பின்வருமாறு;
18 “நீங்கள் எங்களுக்கு அனுப்பிய மடல் என்முன் தெளிவாக வாசிக்கப்பட்டது.
19 எனவே என்னிடமிருந்து ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டு தொன்றுதொட்டு அந்நகர் மன்னருக்கு எதிராக எழுந்தது என்றும், குழப்பமும் கிளர்ச்சியும் அதில் இருந்து வந்தது என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
20 மேலும் எருசலேமில் ஆற்றல்மிக்க அரசர்கள் இருந்திருக்கின்றனர்; அவர்கள் பேராற்றுக்கு அக்கரைப் பகுதிகளையெல்லாம் ஆட்சி செய்துள்ளனர்; வரி மற்றும் ஆயம் வசூலித்தனர் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
21 எனவே நான் மறுஆணை பிறப்பிக்கும் வரை அந்நகரைக் கட்டியெழுப்பாமல் இந்த ஆள்கள் வேலையை நிறுத்துமாறு கட்டளை கொடுங்கள்.
22 இதைச் செய்வதில் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். மன்னருக்குத் தீங்கு வரும் அளவிற்குத் தீமை ஏன் பெருகவேண்டும்?”
23 மன்னர் அர்த்தக்சஸ்தாவின் மடலின் நகல் இரகூம், எழுத்தாளரான சிம்சாய், அவர்களைச் சார்ந்தவர்கள் ஆகியோர்முன் வாசிக்கப்பட்டது. உடனே அவர்கள் எருசலேமில் வாழ்ந்த யூதர்களிடம் சென்று ஆற்றலையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி வேலையை நிறுத்தும்படி செய்தனர்.
கோவில் வேலை தொடர்தல்
24 எருசலேமில் உள்ள கடவுளின் கோவில் வேலை தடைபட்டு, பாரசீக மன்னர் தாரியு ஆட்சியின் இரண்டாம் ஆண்டுவரை நிறுத்தப்பட்டிருந்தது.
4:2 2 அர 17:24-41.
4:6 எஸ் 1:1.
4:24-5:1 ஆகா 1:1; செக் 1:1. | https://bible.catholicgallery.org/tamil/etb-ezra-4 |
407 | எஸ்ரா | எஸ்ரா அதிகாரம் – 5 – திருவிவிலியம் | 1 அப்பொழுது, இறைவாக்கினர் ஆகாயும், இத்தோ மகன் செக்கரியாவும் — யூதாவிலும் எருசலேமிலும் வாழ்ந்த யூதருக்கு இஸ்ரயேலின் கடவுள் பெயரால் இறைவாக்கு உரைத்தனர்.
2 அப்போது செயல்தியேல் மகன் செருபாபேலும், யோசதாக்கின் மகன் ஏசுவாவும் முன்வந்து, எருசலேமிலுள்ள கடவுளின் கோவிலை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கினர். கடவுளின் இறைவாக்கினர் அவர்களோடு இருந்து உதவி செய்தனர்.
3 அக்காலத்தில், பேராற்றின் அக்கரைப்பகுதிக்கு ஆளுநராக இருந்த தத்னாயும், செத்தர்போசனாயும் அவர்களைச் சார்ந்தவர்களும், அவர்களிடம் வந்து, “இக்கோவிலைக் கட்டியெழுப்பவும் இம்மதில்களைக் கட்டி முடிக்கவும் உங்களுக்கு உத்தரவு கொடுத்தது யார்?” என்று வினவினர்.
4 மேலும் அவர்கள், “இக்கட்டடத்தைக் கட்டுவோர் யார், யார்?” என்று வினவினர்.
5 கடவுளின் கருணைக் கண் யூத மூப்பர்கள் மேல் இருந்ததால் இச்செய்தி தாரியுவைச் சென்றடையும்வரை அவர்களால் தடுத்து நிறுத்த இயலவில்லை. எனவே அவர்கள் தாரியுவுக்கு இதைப்பற்றி ஒரு மடல் அனுப்பினார்கள்.
6 பேராற்றின் அக்கரைப் பகுதிக்கு ஆளுநனாக இருந்த தத்னாயும் செத்தர்போசனாயும் அவனைச் சார்ந்தவர்களும் பேராற்றின் அக்கரைப் பகுதிக்கு அதிகாரியானவர்களும் மடலின் நகல் ஒன்றை மன்னர் தாரியுவுக்கு அனுப்பினர்.
7 அவருக்கு அனுப்பிய கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது பின்வருமாறு: “மன்னர் தாரியுவுக்கு எல்லா நலமும் உரித்தாகுக!
8 மன்னர் அறியவேண்டியது; யூதா மாநிலத்திலுள்ள மாபெரும் கடவுளின் கோவிலுக்குச் சென்றிருந்தோம்; பெரும் கற்களால் அது கட்டப்பட்டு வருகிறது. சுவரில் மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவ்வேலை நுணுக்கமாகவும் விரைவாகவும் செய்யப்பட்டு வருகின்றது.
9 எனவே அம் மூப்பர்களை நோக்கி, ‘இக்கோவிலைக் கட்டவும், இச்சுவர்களைக் கட்டி முடிக்கவும் உத்தரவு கொடுத்தது யார்?’ என்றோம்.
10 அவர்கள் தலைவர்கள் யார், யார் என்பதை உமக்கு எழுதி அறிவிக்க அவர்களின் பெயர்களைக் கேட்டோம்.
11 அவர்கள் எங்களுக்குச் சொன்ன மறுமொழியாவது; ‘விண்ணுக்கும் மண்ணுக்கும் கடவுளானவரின் ஊழியர்கள் நாங்கள். பல ஆண்டுகளுக்குமுன் இஸ்ரயேலின் பேரரசர் ஒருவர் கட்டிய கோவிலைத் தான் மீண்டும் கட்டியெழுப்புகிறோம்.
12 எம் முன்னோர் விண்ணகக் கடவுளுக்குச் சினமூட்டியதால், அவர் பாபிலோனின் மன்னனும் கல்தேயனுமான நெபுகத்னேசரின் கையில் அவர்களையும், இக்கோவிலையும் ஒப்புவித்தார். அவன் இக்கோவிலை அழித்தான். மக்களை பாபிலோனுக்கு நாடு கடத்தினான்.
13 ஆனால் பாபிலோன் மன்னர் சைரசு தம் முதலாம் ஆட்சி ஆண்டில் கடவுளின் இக்கோவிலைக் கட்ட ஆணையிட்டார்.
14 மேலும் நெபுகத்னேசர் எருசலேமிலுள்ள கோவிலிருந்து பாபிலோன் கோவிலுக்குக் கொண்டு வந்த திருக்கோவில் பொன், வெள்ளிப் பாத்திரங்களை மன்னர் சைரசு பாபிலோன் கோவிலிருந்து எடுத்தார். ஆளுநராகத் தாம் நியமித்த சேஸ்பட்சர் என்பவரிடம் ஒப்படைத்தார்.
15 மன்னர் அவரிடம் “இப்பாத்திரங்களை எடுத்துக்கொண்டு போய் எருசலேம் கோவிலில் வை. கடவுளின் கோவில் அது இருந்த இடத்திலேயே கட்டப்படட்டும்” என்றார்.
16 எனவே சேஸ்பட்சர் திரும்பி வந்து எருசலேமில் கடவுளின் கோவிலுக்கு அடித்தளம் இட்டார். அதனால் அன்று முதல் இன்று வரை இது கட்டப்பட்டு வருகின்றது. ஆனால் அது முடிவு பெறவில்லை.
17 ஆகவே, இப்பொழுது மன்னர் விரும்பினால், பாபிலோனில் உள்ள தமது கருவூலத்தில் தேடிப்பார்க்கட்டும். எருசலேமில் கடவுளுக்குக் கோவில் கட்டச் சைரசு மன்னர் கட்டளை கொடுத்திருக்கின்றாரா என்பதை அறியட்டும். இதைக் குறித்து மன்னர் தம் விருப்பத்தை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டுகின்றோம்’.”
4:24-5:1 ஆகா 1:1; செக் 1:1.
5:2 ஆகா 1:12; செக் 4:6-9.
5:12 2 அர 25:8-12; 2 குறி 36:17-20; எரே 52:12-15.
5:13 எஸ்ரா 1:2-11. | https://bible.catholicgallery.org/tamil/etb-ezra-5 |
408 | எஸ்ரா | எஸ்ரா அதிகாரம் – 6 – திருவிவிலியம் | சைரசு மன்னரின் கட்டளை ஏடு கண்டுபிடிக்கப்படல்
1 பின்பு மன்னர் தாரியு கட்டளையிடவே, பாபிலோனிலுள்ள கருவூலத்தைக் கொண்ட ஏட்டுச் சுருள்கள் வைக்கப்படும் அறையைச் சோதனையிட்டார்கள்.
2 மேதிய மாநிலத்தில் இருந்த எக்பத்தான அரண்மனையில் ஏட்டுச் சுருள் ஒன்று அகப்பட்டது. அது ஒரு பத்திரம். அதில் எழுதியிருந்ததாவது:
3 ‘சைரசு மன்னர் அரியணை ஏறிய முதலாம் ஆண்டு, சைரசு மன்னர், எருசலேமிலுள்ள கடவுளின் கோவிலைப் பற்றி ஆணையொன்று பிறப்பித்தார். எங்கே பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டனவோ அங்கேயே கோவில் கட்டப்படட்டும். அடித்தளம் உறுதியாக்கப்படட்டும். அதன் உயரம் அறுபது முழம், அதன் அகலம் அறுபது முழம் இருக்கட்டும்.
4 மூன்று வரிசை பெரிய கற்களாலும், மூன்று வரிசை புது மரங்களாலும் அமையட்டும். அதற்குத் தேவையான செலவை அரசு கருவூலத்திலிருந்து கொடுக்கட்டும்.
5 நெபுகத்னேசர் எருசலேம் கோவிலிலிருந்து பாபிலோனுக்குக் கொண்டுவந்த கோவிலுக்குரிய பொன், வெள்ளிப் பாத்திரங்கள் எருசலேம் கோவிலுக்குத் திரும்பிக் கொடுக்கப்படட்டும். அவை கடவுளின் கோவிலில் முன்பு இருந்த இடத்திலேயே வைக்கப்படட்டும்.’
கோவில் வேலை தொடரத் தாரியு மன்னரின் கட்டளை
6 எனவே, பேராற்றின் அக்கரைப் பகுதிக்கு ஆளுநராக இருக்கும் தத்னாய்! செத்தர்போசனாய்! நீங்களும் பேராற்றின் அக்கரைப் பகுதியிலுள்ள உங்களைச் சார்ந்த அதிகாரிகளும், அவ்விடத்தைவிட்டு விலகுங்கள்!
7 கடவுளின் கோவிலைக் கட்டும் பணியைத் தடைசெய்யாதிருங்கள். யூதர்களின் ஆளுநரும், யூதர்களின் மூப்பர்களும் கடவுளின் கோவிலை, அது முன்பு இருந்த இடத்தில், மீண்டும் எழுப்பட்டும்.
8 யூதர்களின் மூப்பர் கடவுளின் கோவிலைக் கட்டுவதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பது பற்றி ஆணை பிறப்பிக்கின்றேன். அவர்கள் வேலை தடைப்படாதபடி, அதற்கான முழுச் செலவைப் பேராற்றின் அக்கரைப் பகுதியிலிருந்து வரும் வரியாகிய அரச வருவாயினின்று கொடுக்கவேண்டும்.
9 மேலும் விண்ணகக் கடவுளுக்கு எரிபலி ஒப்புக் கொடுக்கத் தேவையான இளங்காளைகள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள் ஆகியவையும் எருசலேமின் குருக்கள் தேவையென்று கேட்கும் கோதுமை, உப்பு, திராட்சை இரசம், எண்ணெய் முதலியவையும் நாள்தோறும் தவறாது கொடுக்கப்படட்டும்.
10 இதனால் குருக்கள் விண்ணகக் கடவுளுக்கு நறுமணப் பலி செலுத்தி, மன்னரும் அவர் தம் மைந்தரும் நீடூழி வாழ வேண்டுமென மன்றாடுவார்களாக!
11 எவராவது இக்கட்டளையை மாற்றினால், அவருடைய வீட்டிலுள்ள உத்திரத்தைப் பிடுங்கி அவரை அதில் கழுவேற்றித் தொங்கிவிட வேண்டும். இதனால் அவருடைய வீடு குப்பை மேடாகக்கடவது. இது எனது ஆணை.
12 எந்த மன்னராவது, மக்களாவது இவ்வாணையை மாற்றவோ எருசலேமிலுள்ள கடவுளின் கோவிலை அழிக்கவோ முற்பட்டால், தமது பெயரை அங்கு விளங்கும்படி நிலைநாட்டிய கடவுள் அவர்களை அழிப்பாராக! தாரியு என்னும் நானே இக்கட்டளையைப் பிறப்பித்தேன். இது சரிவர நிறைவேற்றப்படட்டும்.
கோவில் அர்ப்பணிக்கப்படல்
13 பின்பு, பேராற்றின் அக்கரைப் பகுதிக்கு ஆளுநராக இருந்த தத்னாயும் செத்தர்போசனாயும் அவர்களைச் சார்ந்தவர்களும் மன்னர் தாரியு அனுப்பிய ஆணைப்படியே எல்லாவற்றையும் சரிவரச் செய்து முடித்தனர்.
14 இறைவாக்கினர் ஆகாயும் இத்தோவின் மகன் செக்கரியாவும் இறைவாக்கு உரைத்ததன் விளைவாக யூத மூப்பர்கள் கோவிலைக் கட்டினர்; வேலையும் முன்னேறிக்கொண்டிருந்தது. இஸ்ரயேலின் கடவுளது ஆணையாலும், பாரசீக மன்னர்களான சைரசு, தாரியு, அர்த்தக்சஸ்தா ஆகியோரின் கட்டளையாலும் அவர்கள் கட்டடப்பணியை முடித்தனர்.
15 மன்னர் தாரியு ஆட்சியின் ஆறாம் ஆண்டிலே, அதார் திங்கள் மூன்றாம் நாளிலே, கோவில் வேலை நிறைவுற்றது.
16 இஸ்ரயேல் மக்கள், குருக்கள், லேவியர், அடிமைத் தனத்திலிருந்து திரும்பிவந்த ஏனையோர், கடவுளின் கோவில் அர்ப்பண விழாவை அக்களிப்புடன் கொண்டாடினார்கள்;
17 கடவுளின் கோவில் அர்ப்பண விழாவில் நூறு காளைகளையும், இருநூறு செம்மறிக்கிடாய்களையும், நானூறு செம்மறிக்குட்டிகளையும் ஒப்புக் கொடுத்தார்கள்; இஸ்ரயேல் குலக்கணக்கின்படி பன்னிரண்டு வெள்ளாட்டுக் கிடாய்களை இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பாவம் போக்கும் பலியாகச் செலுத்தினார்கள்.
18 மோசேயின் நூலில் எழுதியுள்ளபடி எருசலேமில் கடவுளின் பணிக்காகக் குருக்களை அவர்களின் பிரிவின்படியும் லேவியரை அவர்களின் துறைகளின்படியும் அவர்கள் நியமித்தனர்.
பாஸ்காத் திருவிழா
19 மேலும் அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்த மக்கள் பாஸ்கா விழாவை முதல் மாதத்தின் பதினான்காம் நாள் கொண்டாடினர்.
20 குருக்களும் லேவியரும் ஒன்றிணைந்து தங்களைத் தூய்மைப்படுத்திகொண்டனர். அவர்கள் தூய்மையானார்கள். அடிமைத் தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த எல்லா மக்களுக்காகவும், சகோதரக் குருக்களுக்காகவும், தங்களுக்காகவும் அவர்கள் பாஸ்கா ஆட்டுக்குட்டியைக் கொன்றனர்.
21 அடிமைத்தனத்திலிருந்து திரும்பிவந்திருந்த இஸ்ரயேல் மக்களும், மேலும், இஸ்ரயேல் கடவுளை வழிபட வேற்றினத் தீட்டிலிருந்து ஒதுங்கி இவர்களோடு சேர்ந்து கொண்டவர்களும் பாஸ்கா உணவை உண்டனர்.
22 புளிப்பற்ற அப்ப விழாவை ஏழு நாள்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடினர். ஏனெனில் ஆண்டவர் அவர்களை மகிழ்வுபடுத்தினார். இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவரின் இல்லப் பணியில் அவர்களுக்குத் துணைபுரியமாறு ஆண்டவர் அசீரிய மன்னரின் மனத்தை மாற்றியிருந்தார்.
6:14 ஆகா 1:1; செக் 1:1.
6:19 விப 12:1-20. | https://bible.catholicgallery.org/tamil/etb-ezra-6 |
409 | எஸ்ரா | எஸ்ரா அதிகாரம் – 7 – திருவிவிலியம் | எஸ்ரா எருசலேமுக்கு வருதல்
1 இதன்பின், பாரசீக மன்னரான அர்த்தக்சஸ்தாவின் ஆட்சிக் காலத்தில் எஸ்ரா பாபிலோனிலிருந்து புறப்பட்டார்.
2 இந்த எஸ்ரா செராயாவின் மகன்; இவர் அசாரியாவின் மகன்; இவர் இல்கியாவின் மகன்; இவர் சல்லூமின் மகன்; இவர் சாதோக்கின் மகன்; இவர் அகித்தோப்பின் மகன்;
3 இவர் அமாரியாவின் மகன்; இவர் அசரியாவின் மகன்; இவர் மெரயோத்தின் மகன்;
4 இவர் செரகியாவின் மகன்; இவர் உசீயின் மகன்; இவர் புக்கீயின் மகன்;
5 இவர் அபிசுவாவன் மகன்; இவர் பினகாசின் மகன்; இவர் எலயாசரின் மகன்; இவர் தலைமைக் குருவான ஆரோனின் மகன்.
6 எஸ்ரா இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் மோசேக்கு அளித்திருந்த திருச்சட்டநூலில் வல்லுநர். அவருடைய கடவுளான ஆண்டவரின் அருட்கரம் அவரோடு இருந்ததால், அவருக்குத் தேவையான அனைத்தையும் மன்னர் அவருக்குக் கொடுத்தார்.
7 அவரோடு இஸ்ரயேல் மக்களில் சிலரும், குருக்கள், லேவியர், பாடகர், வாயிற்காப்போர், கோவில் ஊழியர் ஆகியோரில் சிலரும், மன்னரான அர்த்தக்சஸ்தாவின் ஏழாம் ஆட்சி ஆண்டில் எருசலேமிற்குப் புறப்பட்டனர்.
8 அவர்கள் மன்னரின் ஏழாம் ஆட்சியாண்டில் ஐந்தாம் திங்கள் எருசலேமை அடைந்தார்கள்.
9 ஆண்டவரின் அருட்கரம் எஸ்ராவோடு இருந்ததால், முதலாம் திங்களின் முதல் நாள் பாபிலோனிலிருந்து புறப்பட்ட அவர் ஐந்தாம் திங்கள் முதல் நாள் எருசலேமை வந்தடைந்தார்.
10 எஸ்ரா ஆண்டவரின் திருச்சட்டத்தைக் கற்று அதன்படி நடப்பதிலும், சட்டத்தையும், முறைமையையும் இஸ்ரயேல் மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார்.
அர்த்தக்சஸ்தா எஸ்ராவுக்கு வழங்கிய ஆவணம்
11 ஆண்டவரின் கட்டளைகளைச் சார்ந்த காரியங்களிலும், இஸ்ரயேலரின் சட்டங்களிலும் வல்லுநரான குரு எஸ்ராவிடம் மன்னர் அர்த்தக்சஸ்தா வழங்கிய ஆவணத்தின் நகல் பின்வருமாறு;
12 “மன்னர்களின் மன்னரான அர்த்தக்சஸ்தா என்னும் நான் விண்ணகக் கடவுளின் சட்டத்தில் வல்லுநரான குரு எஸ்ராவிற்கு வாழ்த்துக்கூறி எழுதுவது;
13 என் ஆட்சிக்குட்பட்ட இஸ்ரயேல் மக்களினத்திலும், குருக்களிலும், லேவியர்களிலும் விருப்பமுள்ளவர்கள் உம்மோடு எருசலேமிற்குச் செல்ல நான் அனுமதி வழங்குகிறேன்.
14 ஏனெனில், உமது கையிலிருக்கிற உம் கடவுளின் திருச்சட்டத்தின்படி, யூதாவிலும் எருசலேமிலும் விசாரணை செய்யும்படி மன்னராகிய நானும் என் ஆலோசகர் எழுவரும் உம்மை அனுப்புகிறோம்.
15 மேலும் மன்னராகிய நானும் என் ஆலோசகர்களும் எருசலேமில் வாழும் இஸ்ரயேலின் கடவுளுக்கு நாங்கள் மனமுவந்து ஒப்புக்கொடுத்த பொன்னையும், வெள்ளியையும் எடுத்துச் செல்லவும்,
16 மற்றும், பாபிலோன் நாடெங்கும் உமக்குக் கிடைக்கும் பொன்னையும் வெள்ளியையும், அவற்றோடு எருசலேமில் உள்ள தங்கள் கடவுளின் இல்லத்திற்காக ஒப்புக் கொடுக்கும் காணிக்கைகளையும் எடுத்துச் செல்லவும் நாங்கள் அனுமதி அளிக்கிறோம்.
17 இப்பணத்தைகொண்டு காளைகளையும், ஆட்டுக்கிடாய்களையும், செம்மறிக் குட்டிகளையும், தானிய, நீர்மப் படையல்களையும் கவனத்துடன் வாங்கி, எருசலேமில் உள்ள உங்கள் கடவுளின் இல்லப்பீடத்தில் காணிக்கையாக்கும்.
18 எஞ்சிய வெள்ளியையும், பொன்னையும், உமக்கும் உம் சகோதரர்களுக்கும் நலமெனப்பட்டதை உங்கள் கடவுளின் திருவுளப்படி செய்யும்.
19 உம் கடவுளின் இல்ல வழிபாட்டுக்காக உம்மிடம் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை எருசலேமில் உள்ள உம் கடவுளின் திருமுன் வையும்.
20 மேலும், உம் கடவுளின் இல்லதிற்கு இதற்குமேல் தேவையானவற்றை மன்னரின் கருவூலத்திலிருந்து நீர் பெற்றுக் கொள்ளலாம்.
21 மன்னர் அர்த்தக்சஸ்தா என்னும் நான் யூப்ரத்தீசின் அக்கரைப் பகுதியில் உள்ள பொருளாளர்களுக்குக் கட்டளையிடுவது; விண்ணகக் கடவுளின் திருச்சட்ட வல்லுநரும் குருவுமாகிய எஸ்ரா உங்களிடம் கேட்பதையெல்லாம் உடனடியாகக் கொடுக்கவும்.
22 அவருக்கு நூறு தாலந்து வெள்ளி, நூறு படி கோதுமை, நூறு குடம் திராட்சை இரசம், நூறு குடம் எண்ணெய் ஆகியவற்றைத் தேவையான அளவு கொடுக்கலாம்.
23 நாட்டை ஆளும் மன்னர்மீதும், அவர் மக்கள் மீதும், விண்ணகக் கடவுள் சினம் கொள்ளாதபடி, அவரின் இல்லத்திற்கு, அவர் கட்டளையிட்ட அனைத்தும் கொடுக்கப்படவேண்டும்.
24 மேலும், நான் அறிவிப்பது; குருக்கள், லேவியர், பாடகர், வாயிற்காவலர், கோவிற் பணியாளர், கடவுளது இந்த இல்லத்தின் மற்ற ஊழியர் எவர் மீதும் திறையோ, வரியோ, தீர்வையோ சுமத்துவது முறையன்று.
25 எஸ்ரா, கடவுள் உமக்குக் கொடுத்துள்ள ஞானத்தின்படி யூப்பிரத்தீசின் அக்கரைப் பகுதியில் வாழும் எல்லா மக்களுக்கும் நீதி வழங்க, உம் கடவுளின் திருச்சட்டத்தை அறிந்தவரான நீதிபதிகளையும், ஆளுநர்களையும் ஏற்படுத்தும்; திருச்சட்டம் அறியாதவர்களுக்கு அதைக் கற்பியும்.
26 மேலும் திருச்சட்டத்திற்கும், மன்னரின் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாதவருக்குக் கண்டிப்பாய் தண்டனை கொடுக்கப்படவேண்டும்; மரண தண்டனையோ நாடு கடத்தபடுதலோ சொத்துப் பறிமுதலோ சிறைத் தணடனையோ கொடுக்கப்படட்டும்”.
எஸ்ரா இறைவனைப் புகழ்தல்
27 எருசலேமிலுள்ள ஆண்டவரின் இல்லத்தை அழகுபடுத்தும்படி மன்னரைத் தூண்டிய நம் முன்னோரின் கடவுளான ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக!
28 மன்னர், அவர்தம் ஆலோசகர், ஆற்றல்மிகு அரச அதிகாரிகள் ஆகியோரின் பார்வையில் தயவுகிடைக்கும்படி செய்தவர் அவரே! என் கடவுளான ஆண்டவரின் அருள்கரம் என்னோடு இருந்ததால், நான் திடம் கொண்டு, இஸ்ரயேலின் தலைவர்களை ஒன்று சேர்த்து, அவர்களை என்னோடு அழைத்துவந்தேன். | https://bible.catholicgallery.org/tamil/etb-ezra-7 |
410 | எஸ்ரா | எஸ்ரா அதிகாரம் – 8 – திருவிவிலியம் | சிறையிருப்பினின்று திரும்பியோரின் இரண்டாம் பட்டியல்
1 மன்னர் அர்த்தக்சஸ்தாவின் ஆட்சிக்காலத்தில் எஸ்ராவோடு பாபிலோனியாவிலிருந்து வந்தவர்களின் குடும்பத் தலைவர்களது தலைமுறை அட்டவணை அவர்களின் மூதாதையர் மரபின்படி பின்வருமாறு:
2 பினகாசின் வழிமரபில் கெர்சோம்; இத்தாமர் வழிமரபில் தானியேல்; தாவீதின் வழிமரபில் ஆற்றூசு;
3 பாரோசு வழிமரபில் செக்கனியாவின் மகன் செக்கரியா; மற்றும் அவரோடு நூற்றைம்பது ஆண்கள்;
4 பாகாத்மோவாபு வழிமரபில் செரெகியாவின் மகன் எல்யகோவனாய்; மற்றும் அவரோடு இருநூறு ஆண்கள்;
5 சாத்து* வழிமரபில் எகசியேலின் மகன் செக்கனியா; மற்றும் அவரோடு முந்நூறு ஆண்கள்;
6 ஆதின் வழிமரபில் யோனத்தானின் மகன் எபேது; அவரோடு ஐம்பது ஆண்கள்;
7 ஏலாமி வழிமரபில் அத்தலியாவின் மகன் ஏசாயா; மற்றும் அவரோடு எழுபது ஆண்கள்;
8 செபத்தியா வழிமரபில் மிக்கேலின் மகன் செபதியா; மற்றும் அவரோடு எண்பது ஆண்கள்;
9 யோவாபு வழிமரபில் எகியேலின் மகன் ஒபதியா; மற்றும் அவரோடு இருநூற்றுப் பதினெட்டு ஆண்கள்;
10 பானி வழிமரபில் யோசிப்பியாவின் மகன் செலோமித்து; மற்றும் அவரோடு நூற்றிருபது ஆண்கள்;
11 பேபாய் வழிமரபில் பேபாயின் மகன் செக்கரியா; மற்றும் அவரோடு இருபத்தெட்டு ஆண்கள்;
12 அஸ்காது வழிமரபில் அக்காற்றானின் மகன் யோகனான்; மற்றும் அவரோடு நூற்றுப்பத்து ஆண்கள்;
13 அதோனிக்காம் வழிமரபில் பிற்காலத்தவர்களான எலிப்பலேற்று எவேல், செமாயா;
14 மற்றும் அவர்களோடு அறுபது ஆண்கள்; பிக்வாயின் வழிமரபில் உத்தாய், சக்கூர்; மற்றும் அவர்களோடு எழுபது ஆண்கள்.
கோவில் பொறுப்புக்கு லேவியரை எஸ்ரா நியமித்தல்
15 அகவா செல்லும் ஆற்றருகில் அவர்களை நான் ஒன்று சேர்த்தேன். அங்கே மூன்று நாள்கள் தங்கியிருந்தோம். மக்களையும் குருக்களையும் பற்றிக் கேட்டறிந்தபோது, அங்கே அவர்களுள் எவரும் லேவியர் இல்லை என்று கண்டேன்.
16 ஆகையால், எலியேசர், அரியேல், செமாயா, எல்நாத்தான், யாரிபு, எல்நாத்தான், நாத்தான், செக்கரியா, மெசுல்லாம் ஆகிய தலைவர்களையும் யோயாரிபு, எல்நாத்தான் ஆகிய ஞானியரையும் என்னிடம் அழைத்தேன்.
17 அவர்களைக் கசிப்பியாவில் இருந்த மக்கள் தலைவரான இத்தோவிடம் அனுப்பி வைத்தேன். கசிப்பியாவில் இருந்த இத்தோவிடம் அவருடைய சகோதரர்களான கோவில் பணியாளர்களிடமும், ‘நம் கடவுளின் இல்லத்திற்குப் பணியாளரை அனுப்புங்கள்’ என்று சொல்லும்படி கூறினேன்.
18 எங்கள் கடவுளின் அருட்கரம் எங்களோடு இருந்ததால், இஸ்ரயேல் இனத்தவரும் லேவியருமான, மக்லியின் புதல்வருள் புத்திக்கூர்மையுடைய செரேபியாவையும், அவருடைய புதல்வர்களும் உறவினர்களுமாகப் பதினெட்டுப் பேரையும்,
19 அசபியாவையும், அவரோடு மெராரியின் புதல்வர்களில் ஒருவரான ஏசாயாவையும் அவருடைய சகோதரர்களும், அவர்களின் புதல்வர்களுமான இருபது பேரையும்,
20 மற்றும் தாவீதும் அவரின் அலுவலர்களும் லேவியர்களுக்கு உதவி செய்யப் பிரித்து வைத்திருந்த இருநூற்று இருபது கோவில் பணியாளரையும் அவர்கள் எங்களிடம் அழைத்து வந்தார்கள். இவர்கள் அனைவரும் தம் பெயர்களைப் பதிவு செய்து கொண்டனர்.
நோன்பிருந்து மன்றாடுமாறு எஸ்ரா மக்களை அழைத்தல்
21 இதன்பின் எங்கள் கடவுள்முன் எங்களையே நாங்கள் தாழ்த்திக் கொண்டு, எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும், எங்கள் எல்லா உடைமைகளுக்கும் பயணம் நலமாக அமையவேண்டுமென்று மன்றாடுமாறு, அகவா ஆற்றருகே நோன்பு ஒன்று அறிவித்தேன்.
22 ஏனெனில், வழியில் எதிரிகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றும்படி காலாட்படையினரையும், குதிரைப்படையினரையும் எங்களோடு அனுப்பி வைக்குமாறு மன்னனைக் கேட்க எனக்கு வெட்கமாக இருந்தது. இதற்குக் காரணம் நாங்கள் மன்னரை நோக்கி, “எங்கள் கடவுளின் அருட்கரம் அவரை நேர்மையுடன் தேடுகிற அனைவர்மீதும் இருக்கின்றது என்றும், அவரைப் புறக்கணிப்பவர்கள் அவரது வலிமைக்கும், சினத்துக்கும் ஆளாவர்கள்” என்றும் சொல்லியிருந்தோம்.
23 எனவே நாங்கள் நோன்பிருந்து, இதற்காக எங்கள் கடவுளிடம், வேண்டிக் கொண்டோம். அவரும் எங்கள் மன்றாட்டைக் கேட்டருளினார்.
கோவில் காணிக்கைகள்
24 பின்னர் குருக்களின் தலைவர்கள் பன்னிருவராகிய செரேபியா, அசபியா மற்றும் அவர்களின் உறவினர் பத்துப் பேரைப் பிரித்து, அவர்களிடம்
25 அரசரும் அவருடைய ஆலோசகர்களும் அவருடைய அலுவலர்களும் அங்கிருந்த மக்களும் எங்கள் கடவுளின் இல்லத்திற்குக் காணிக்கையாக அளித்திருந்த வெள்ளி, தங்கம், பாத்திரங்கள் யாவற்றையும் நிறுத்துக் கொடுத்தேன்.
26 அவர்களிடம் நிறுத்துக் கொடுத்தவை: இருபத்தாறு ‘டன்’* நிறைவுள்ள வெள்ளி; நாலாயிரம் கிலோகிராம் நிறைவுள்ள வெள்ளிப் பாத்திரங்கள்; ஆயிரம் பொற்காசு மதிப்புள்ள இருபது பொற் கிண்ணங்கள்;
27 பொன்போன்று மெருகேற்றப்பட்ட இரு வெண்கலப் பாத்திரங்கள்.
28 பின்பு, அவர்களைப் பார்த்து, ‘நீங்கள் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்கள்; இந்தப் பாத்திரங்களும் அர்ப்பணிப்பட்டவையே. இந்த வெள்ளியும் பொன்னும் உங்கள் மூதாதையரின் கடவுளுக்கு அளிக்கப்பட்ட தன்னார்வக் காணிக்கைகள்.
29 நீங்கள் எருசலேமிலுள்ள குருக்களின் தலைவர்கள், லேவியர், இஸ்ரயேல் குலத்தலைவர்கள் ஆகியோர் முன்னிலையில், ஆண்டவரின் இல்லக் கருவூலத்தில் ஒப்படைக்கும்வரை இவற்றைப் பாதுகாத்து வாருங்கள்’ என்று சொன்னேன்.
30 எனவே குருக்களும், வேலியரும் நிறுக்கப்பட்ட வெள்ளி, பொன்பாத்திரங்கள் ஆகியவற்றை எருசலேமிலுள்ள நம் கடவுளின் இல்லதிற்குக் கொண்டுபோகும்படி பெற்றுக் கொண்டனர்.
எருசலேமுக்குத் திரும்புதல்
31 பிறகு முதல் திங்கள் பன்னிரண்டாம் நாள், அகவா ஆற்றைவிட்டு எருசலேமுக்குப் புறப்பட்டோம். எங்கள் கடவுளின் அருட்கரம் எங்களோடு இருந்ததால் போகும் வழியில் நாங்கள் எங்கள் பகைவர் கையினின்றும் திருடர் கையினின்றும் பாதுகாக்கப்பட்டோம்.
32 நாங்கள் எருசலேமை அடைந்து அங்கு மூன்று நாள்கள் தங்கினோம்.
33 நான்காம் நாள், நம் கடவுளின் இல்லத்தில் உரியாவின் மகனும் குருவுமாகிய மெரமோத்தின் கையில் வெள்ளியும் பொன்னும் பாத்திரங்களும் நிறுக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டன. அப்போது அவரோடு பினகாசின் மகன் எலயாசரும், லேவியரான ஏசுவாவின் மகன், யோசபாத்தும் பின்னூயின் மகன் நோவதியாவும் இருந்தனர்.
34 அவற்றின் எண்ணிக்கையும், எடையையும் அன்று அவர்கள் குறித்து வைத்துக் கொண்டார்கள்.
35 அப்பொழுது அடிமைத்தனத்திலிருந்து விடுதலையடைந்து, திரும்பி வந்தவர்கள், இஸ்ரயேலின் கடவுளுக்கு எரிபலிகள் செலுத்தினர்; இஸ்ரயேலின் எல்லா மக்களுக்காகவும் பன்னிரு இளங் காளைகளையும் தொண்ணூற்றாறு செம்மறிக் கிடாய்களையும், எழுபத்தேழு ஆட்டுக் குட்டிகளையும் பாவம் போக்கும் பலியான பன்னிரு வெள்ளாட்டுக் கிடாய்களையும் ஆண்டவருக்கு எரிபலியாக ஒப்புக் கொடுத்தனர்.
36 மேலும் அவர்கள் மன்னரின் ஆவண மடல்களைச் சிற்றரசர்களிடமும், யூப்பிரத்தீசின் அக்கரையில் இருந்த ஆளுநர்களிடமும் கொடுத்தனர். இவர்கள் மக்களுக்கும் கடவுளின் இல்லத்திற்கும் உறுதுணையாய் இருந்தனர்.
8:5 கிரேக்க பாடம்.
8:10 கிரேக்க பாடம்.
8:26 ‘அறுநூற்று ஐம்பது தாலந்து’ என்பது எபிரேய பாடம்.
8:26 ‘ஆயிரம் திராக்மா’ என்பது எபிரேய பாடம். | https://bible.catholicgallery.org/tamil/etb-ezra-8 |
411 | எஸ்ரா | எஸ்ரா அதிகாரம் – 9 – திருவிவிலியம் | வேற்றினத்தாரோடு கலப்புமணம் செய்தல் கண்டிக்கப்படல்
1 இவைகளுக்குப் பின்னர், அதிகாரிகள் என்னிடம் வந்து, ‘இஸ்ரயேல் மக்களும் குருக்களும் லேவியரும், கானானியர், இத்தியர், பெரிசியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், எமோரியர் ஆகிய நாட்டினரின் வெறுக்கத்தக்க செயல்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவில்லை.
2 ஏனெனில், அவர்கள் தங்களுக்கும் தங்கள் புதல்வர்களுக்கும் அவர்களுடைய புதல்வியரை மனைவியராக எடுத்துக்கொண்டனர். எனவே புனித இனம் வேற்று நாட்டு மக்களோடு கலக்கப்பட்டது. இந்தப் பற்றுறுதியின்மைக்கு அதிகாரிகளும், ஆளுநர்களுமே முதற்காரணம் ஆவர்’ என்று கூறினார்கள்.
3 இதைக் கேட்டவுடன், நான் என் ஆடையையும், மேலுடையையும் கிழித்தேன்; மேலும் தலைமுடியையும் தாடியையும் பிய்த்துக் கொண்டு திகைப்புற்று உட்கார்ந்தேன்.
4 இஸ்ரயேலின் கடவுளின் வார்த்தைகளுக்கு அஞ்சிய யாவரும், அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்தவர்களின் குற்றத்திற்காக என்னைச் சூழ்ந்து நின்றனர். நானோ மாலைப்பலி நேரம்வரை செயலற்று அமர்ந்திருந்தேன்.
5 மாலைப்பலி நேரத்தில் நோன்பை முடித்துக் கிழிந்த ஆடையோடும் மேலுடையோடும் முழந்தாளிட்டு என் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி கைகளை விரித்து நான் கூறியது:
6 “கடவுளே; உம்மை நோக்கி என் முகத்தைத் திருப்ப வெட்கி நாணுகிறேன். ஏனெனில், எங்கள் பாவங்கள் எங்கள் தலைக்கு மேல் பெருகிவிட்டன. எங்கள் குற்றங்கள் விண்ணைத் தொட்டு விட்டன.
7 எம் முன்னோர் காலமுதல் இதுவரை நாங்கள் பெரும் பாவம் செய்துள்ளோம். எங்கள் பாவங்களினால், நாங்களும் எங்கள் அரசர்களும், குருக்களும் வேற்று நாட்டு மன்னர்களின் கைக்கும், வாளுக்கும் அடிமைத்தனத்திற்கும் கொள்ளைக்கும் வெட்கக் கேட்டுக்கும் இதுவரை ஒப்பவிக்கப்பட்டோம்.
8 ஆனால், தற்பொழுது சிறிது காலமாய் எம் கடவுளும் ஆண்டவருமாகிய உமது கருணை துலங்கியுள்ளது; எங்களுள் சிலரை எஞ்சியோராக விட்டுவைத்தீர்; உமது புனித இடத்தில் எங்களுக்குச் சிறிது இடம் தந்தீர்; எம் கடவுளாகிய நீர் என் கண்களுக்கு ஒளி தந்தீர்; எமது அடிமைத் தனத்திலிருந்து சற்று விடுதலை அளித்தீர்.
9 நாங்கள் அடிமைகளாக இருந்தும், எம் கடவுளாகிய நீர் எங்களை அடிமைத்தனத்திற்குக் கையளிக்கவில்லை. மாறாக நாங்கள் உயிர் பிழைக்கவும், எங்கள் கடவுளின் கோவிலை எழுப்பவும், பாழடைந்ததைப் பழுதுபார்க்கவும் யூதேயாவிலும் எருசலேமிலும் பாதுகாப்பு அளிக்கவும் பாரசீக மன்னர்களின் முன் எமக்கு உமது தயை கிடைக்கவும் செய்தருளினீர்!
10 ஆயினும், எம் கடவுளே! இவையெல்லாம் நிகழ்ந்த பின்னும் நாங்கள் இப்பொழுது என்ன சொல்லமுடியும்? நாங்கள் உம் கட்டளைகளைப் புறக்கணித்துவிட்டோமே!
11 நீர் உம் அடியார்களாகிய இறைவாக்கினர் மூலம், ‘நீங்கள் குடியேறவிருக்கிற நாடு வேற்றினத்தாரின் தீட்டினாலும், பிற நாடுகளின் தீட்டினாலும் அந்நாட்டை ஒருமுனை தொடங்கி மறுமுனை வரை மாசுபடுத்தியுள்ள மக்களின் அருவருப்புகளாலும் தூய்மை இழந்திருக்கின்றது.
12 எனவே நீங்கள் வலிமை பெறவும் நாட்டின் நலன்களை அனுபவிக்கவும், அந்நாட்டை என்றென்றும் உங்கள் மக்களுக்கு உரிமையாக்கிக் கொள்ளவும் வேண்டுமாயின் வேற்றினத்தாருடன் பெண் கொள்வதும் கொடுப்பதும் இருத்தலாகாது. மேலும் அவர்களின் நல்லலுறவையும் நலத்தையும் என்றுமே நாடாலாகாது’ என்று நீர் கட்டளையிட்டிருப்பதைப் புறக்கணித்தோம்.
13 எம் தீச்செயல்களினாலும் எமது பெரும் பாவத்தினாலுமே இவையெல்லாம் எங்கள்மீது வந்தன. ஆனால் எங்கள் கடவுளாகிய நீர் எங்கள் குற்றத்திற்கு ஈடாக தண்டியாமல் எங்களை எஞ்சியிருக்கச் செய்தீர்.
14 நாங்கள் மீண்டும் உமது கட்டளைகளை மீறுவோமா? இவ்வாறு வெறுப்பானவைகளைச் செய்கின்ற மக்களோடு இனி கலப்பு மணம் செய்து கொள்வோமா? அப்படிச் செய்தால், எஞ்சியுள்ள எங்களுள் எவரும் இல்லாதபடி, யாரும் தப்பாதபடி, நீர் எம்மை அழிக்கும்வரை எம்மீது சினம் கொள்வீர் அன்றோ?
15 இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவரே! நீர் நீதியுள்ளவர். ஏனெனில், இன்று நாங்களே எஞ்சியுள்ளோராய் விடப்பட்டிருக்கிறோம். இதோ நாங்கள் உம்முன் குற்றவாளிகளாய் இருக்கிறோம். இதனால் எங்களில் யாரும் உம்முன் நிற்க இயலாது.”
9:12 விப 34:11-16; இச 7:1-5. | https://bible.catholicgallery.org/tamil/etb-ezra-9 |
412 | எஸ்ரா | எஸ்ரா அதிகாரம் – 10 – திருவிவிலியம் | கலப்புத் திருமணத்தை நிறுத்தத் திட்டம்
1 இவ்வாறு, எஸ்ரா கடவுளின் இல்லத்தின்முன் விழுந்து மன்றாடி விண்ணப்பித்துக்கொண்டு இருந்தார். அப்பொழுது ஆண், பெண், குழந்தைகள் உள்பட இஸ்ரயேல் மக்களின் பெருங்கூட்டம் அவரைச் சூழ்ந்து கொண்டு கூக்குரலிட்டு அழுதனர்.
2 அப்பொழுது ஏலாமியருள் ஒருவரான எகியேல் மகன் செக்கனியா எஸ்ராவை நோக்கி, “நாங்கள் கடவுளுக்கு எதிராக நேர்மையற்றவர்களாய் நடந்து கொண்டோம். ஏனெனில் இந்நாட்டின் மக்களான வேற்றினப் பெண்களை மணந்தோம். ஆயினும், இஸ்ரயேலுக்கு இன்னும் நம்பிக்கை உண்டு.
3 ஆகவே, என் தலைவரின் அறிவுரைக்கும் கடவுளின் கட்டளைகளுக்கும் அஞ்சி நடப்போரின் விருப்பத்திற்கும் ஏற்ப, அப்பெண்கள் அனைவரையும் அவர்களின் பிள்ளைகளையும் அகற்றி விடுவோம் என்று நம் கடவுளோடு உடன்படிக்கை செய்வோம். திருச்சட்டத்திற்கு ஏற்ப இது செய்யப்படட்டும்.
4 எழுந்திரும்! இது உம் கடமை. நாங்கள் உம்மோடு இருக்கின்றோம். இதை மனஉறுதியுடன் செய்யும்” என்றார்.
5 “எஸ்ரா எழுந்து, குருக்களின் தலைவர்களையும், லேவியர்களையும், எல்லா இஸ்ரயேல் மக்களையும் இவ்வாறு வாக்குறுதி அளிக்கச் செய்தார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.
6 பின்பு, எஸ்ரா கடவுளது இல்லத்தின் முகப்பினின்று எழுந்தார்; எலியாசிபின் மகனான யோகனானின் அறையினுள் சென்றார். அங்கே உணவு உண்ணாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருந்தார். ஏனெனில் அடிமைத்தனத்திலிருந்து திரும்பிவந்தவர்களின் நேர்மையின்மையின் பொருட்டுப் புலம்பி அழுது கொண்டிருந்தார்.
7 அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த மக்கள் அனைவரும் எருசலேமில் கூடவேண்டுமென்றும்,
8 அவர்களுள் எவராவது மூன்று நாள்களுக்குள் வராமல் இருந்தால், மக்கள் தலைவர்கள் பெரியோர் ஆகியோரின் அறிவரைப்படி, அவனுடைய உடைமைகள் பறிமுதல் செய்யப்படவேண்டும் என்றும் அடிமைத்தனத்திலிருந்து வந்தவர்களின் கூட்டத்திலிருந்து அவர்கள் விலக்கி வைக்கப்படவேண்டும் என்றும் யூதாவிலும் எருசலேமிலும் அறிவிக்கப்பட்டது.
9 எனவே, யூதா, பென்யமின் குலத்தார் அனைவரும் எருசலேமில் மூன்று நாள்களுக்குள் அதாவது, ஒன்பதாம் மாதம், இருபதாம் நாளன்று ஒன்று கூட்டப்பட்டனர். மக்கள் அனைவரும் மேற்குறிப்பிட்டதன் காரணமாகவும், மழையின் காரணமாகவும் கடவுளது இல்லத்தின் வளாகத்தில் நடுங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தனர்.
10 குரு எஸ்ரா எழுந்து அவர்களைப் பார்த்துக் கூறியது: “நீங்கள் வேற்றினப் பெண்களை மணந்ததால் நேர்மையற்றவர்களாகி, இஸ்ரயேலின் பாவத்தைப் பெருகச் செய்துள்ளீர்கள்.
11 எனவே, இப்பொழுது உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரின் திருமுன் மன்றாடுங்கள்; அவர் திருவுளப்படி நடங்கள்; இந்நாட்டில் வாழும் மக்களிடமிருந்தும், வேற்றினப் பெண்களிடமிருந்தும் விலகி இருங்கள்”.
12 அப்பொழுது குழுமியிருந்த அனைவரும் உரத்த குரலில் கூறியது: “நீர் சொல்வதே சரி! உமது வார்த்தையின்படியே நாங்கள் செய்வோம்.
13 ஆயினும் இதனை ஓரிரு நாள்களில் செய்ய இயலாது; ஏனெனில் மக்கள் மிகுதியாக உள்ளனர். இது மாரிக்காலமாக இருப்பதால், வெளியே நிற்க முடியவில்லை. மேலும், இக்காரியத்தில் எங்களுள் பாவம் செய்தோர் பலர்.
14 எனவே, எல்லா மக்களின் சார்பில் தலைவர்கள் இதன் காரணமாக மூண்ட நம் கடவுளின் கோபக்கனல் நம்மைவிட்டு விலகும்வரை தங்கியிருக்கட்டும், நம் நகர்களில் வாழும் வேற்றினப் பெண்களை மணந்தவர்கள் அனைவரும் குறித்த காலத்தில் வரட்டும்; அவர்களோடு ஒவ்வொரு நகரத்தின் பெரியோர்களும், அதன் நீதிபதிகளும் வரட்டும்.”
15 அசாவேலின் மகனான யோனத்தானும், திக்வாவின் மகன் யாகிசியாவுமே இதை எதிர்த்து நின்றனர். மெசுல்லாமும் லேவியரான சபத்தாயும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தனர்.
16 அடிமைத்தனத்தலிருந்து திரும்பி வந்திருந்தோர் அவ்வாறே செய்தனர். குரு எஸ்ராவும் மக்கள் தலைவர்களும் அவர்களின் மூதாதையரின் வழிமரபின்படியும், ஒவ்வொருவரின் பெயர் வரிசைப்படியும், பத்தாம் மாதம் முதல் நாள் இதைப்பற்றி விசாரணை செய்ய அமர்ந்தனர்.
17 முதல் மாதம் முதல் நாளிலே வேற்றினப் பெண்களை மணந்தவர்கள் அனைவரையும் விசாரித்து முடித்தனர்.
வேற்றினப் பெண்களை மணந்தோர்
18 குருக்களின் மரபில் வேற்றினப் பெண்களை மணந்தவர்களாகக் கண்டு பிடிக்கப்பட்டவர்கள்: ஏசுவா வழிமரபில் யோசதாக்கின் மகனான ஏசுவா, அவர் சகோதரரின் வழிமரபில், மாசேயா, எலியேசர், யாரிபு, கெதலியா ஆகியோர்.
19 அவர்கள் தம் மனைவியரை அனுப்பி விட வாக்களித்தனர்; தங்கள் குற்றநீக்கப் பலியாக ஒரு கிடாயைச் செலுத்தினர்.
20 இம்மேயின் வழிமரபில், அனானி, செபதியா ஆகியோர்.
21 ஆரிம் வழிமரபில் மாசேயா, எலியா, செமாயா, எகியேல், உசியா ஆகியோர்.
22 பஸ்கூர் வழிமரபில் எலியேனாய், மாசேயா, இஸ்மயேல், நத்தனியேல், யோசபாது, எலாசா ஆகியோர்.
23 லேவியரில், யோசபாது, சிமயி, கெலித்தா என்ற கேலாயா, பெத்தகியா, யூதா, எலியேசர் ஆகியோர்.
24 பாடகரில் எலியாகிபு; வாயிற்காவலரில், சல்லூம், தேலம், ஊரி, ஆகியோர்.
25 மற்ற இஸ்ரயேலருள் பாரோகின் வழிமரபில் இரமியா, இசியா, மல்கியா, மிய்யாமின், எலியாசர், மல்கியா, பெனாயா ஆகியோர்.
26 ஏலாம் வழிமரபில், மத்தானியா, செக்கரியா, எகியேல், அப்தி, ஏரேமோத்து, எலியா ஆகியோர்.
27 சத்தூ வழிமரபில், எலியேனாய், எலியாகிபு, மத்தனியா, எலிமோது, சாபாது, அசிசா ஆகியோர்.
28 பேபாய் வழிமரபில் யோகனான், அனனியா, சபாய், அத்லாய் ஆகியோர்.
29 பானி வழிமரபில், மெசுல்லாம், மல்லூக்கு, அதாயா, யாசூபு, செயால், எரேமேத்து ஆகியோர்.
30 பாகாத்மோவாபு வழிமரபில், அத்னா, கெலால், பெனாயா, மாசேயா, மத்தனியா, பெசலேல், பின்னூய், மனாசே ஆகியோர்.
31 ஆரிம் வழிமரபில், எலியேசர், இசிய்யா, மல்கியா, செமாயா, சிமியோன்,
32 பென்யமின், மல்லூக்கு, செமரியா ஆகியோர்.
33 ஆசூம் வழிமரபில், மத்தனாய், மத்தாத்தா, சாபது, எலிப்பலேற்று, எரேமாய், மனாசே, சிமயி ஆகியோர்.
34 பானி வழிமரபில், மாகதாய், அம்ராம், ஊவேல்,
35 பெனாயா, பேதயா, கெலூகி,
36 வானியா, மெரேமோத்து, எலியாசிபு,
37 மத்தனியா, மத்தனாய், யகசு ஆகியோர்.
38 பின்னூய் வழிமரபில், சிமயி,
39 செலேமியா, நாத்தான், அதாயா,
40 மாக்னதபாய், சசாய், சாராய்,
41 அசரியேல், செலேமியா, செமரியா,
42 சல்லூம், அமரியா, யோசேப்பு ஆகியோர்.
43 நெபோ வழிமரபில், எயியேல், மத்தித்தியா, சாபது, செபினா, யாதாய், யோவேல், பெனாயா ஆகியோர்.
44 வேற்றினப் பெண்களை மணந்திருந்த இவர்கள் அனைவரும் இப்பெண்களையும் அவர்களிடமிருந்து பிறந்த பிள்ளைகளையும் விலக்கிவிட்டனர். | https://bible.catholicgallery.org/tamil/etb-ezra-10 |
413 | நெகேமியா | நெகேமியா அதிகாரம் – 1 – திருவிவிலியம் | எருசலேம் குறித்து நெகேமியா கவலைப்படல்
1 அக்கல்யா மகனான நெகேமியா கூறியது: இருபதாம் ஆண்டின் கிசிலேவு மாதத்தில், நான் தலைநகரான சூசாவில் இருந்தேன்.
2 அப்பொழுது, என் சகோதரர்களில் ஒருவரான அனானியும் சில ஆண்களும் யூதாவிலிருந்து வந்தார்கள். அடிமைத்தனத்திற்குத் தப்பித்துக்கொண்டு உயிரோடிருக்கும் யூதர்களைப்பற்றியும் எருசலேமைப் பற்றியும் அவர்களிடம் விசாரித்தேன்.
3 அதற்கு அவர்கள், “அடிமைத்தனத்திற்குத் தப்பித்துக் கொண்டு அம்மாநிலத்தில் உயிரோடிருப்பவர்கள் பெருந் துயரும் சிறுமையும் அடைகிறார்கள். எருசலேமின் மதில்கள் தகர்த்தெறியப்பட்டுள்ளன; அதன் வாயிற்கதவுகள் தீக்கு இரையாகிவிட்டன” என்று கூறினர்.
4 இவற்றைப் பற்றிக் கேள்விபட்டதும் நான் உட்கார்ந்து அழ ஆரம்பித்தேன்; பல நாள்கள் துக்கம் கொண்டாடினேன்; மேலும் நான் நோன்பிருந்து விண்ணகக் கடவுளின்முன் மன்றாடினேன்:
5 “விண்ணகக் கடவுளாகிய ஆண்டவரே! பெரியவரும் அஞ்சுதற்கு உரியவரும் ஆனவரே! தமக்கு அன்பு காட்டுபவர்களிடமும் தம் கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களிடமும் உடன்படிக்கையையும் இரக்கத்தையும் காப்பவரே!
6 உம் ஊழியர்களாகிய இஸ்ரயேல் மக்களுக்காக இரவும் பகலும் இன்று உம்முன் மன்றாடினேன்; இஸ்ரயேல் மக்களாகிய நாங்கள் உமக்கு எதிராகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிறேன். அடியேனுடைய மன்றாட்டைக் கேட்பதற்கு உம் செவிகள் திறந்திருப்பதாக! உன் கண்கள் விழித்திருப்பதாக! நானும் என் தந்தை வீட்டாரும் பாவம் செய்தோம்.
7 நாங்கள் உமக்கு எதிராக முறைகேடாக நடந்து கொண்டோம். உமது ஊழியரான மோசேக்குத் தந்த கட்டளைகளையும், சட்டங்களையும், நீதி முறைமைகளையும் கடைப்பிடிக்கவில்லை.
8 உம் ஊழியரான மோசேக்கு நீர் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்ந்தருளும். ‘நீங்கள் நேர்மையற்றவர்களாக இருப்பீர்களேயாகில் உங்களை மக்களினங்களிடையே சிதறடிப்பேன்;
9 இருப்பினும், நீங்கள் என்னிடம் திரும்பிவந்து, என் கட்டளைகளைப் பின்பற்றி நடப்பீர்களாகில், நீங்கள் உலகின் கடை எல்லைக்கு ஒதுக்கித் தள்ளப்பட்டிருப்பினும், அங்கிருந்து உங்களை ஒன்று சேர்த்து எனது பெயர் விளங்கும் பொருட்டு நான் தேர்ந்துகொண்ட இடத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன்’.
10 உமது பேராற்றலாலும் கைவன்மையாலும் நீர் மீட்ட உம் மக்களும் ஊழியர்களும் இவர்களே.
11 ஆண்டவரே, உம் ஊழியனான அடியேனின் மன்றாட்டையும், உமது பெயருக்கு அஞ்சி நடக்க விரும்பும் உம் ஊழியர்களின் மன்றாட்டையும் கேட்டருளும். உம் ஊழியனாகிய எனக்கு இன்று வெற்றியை அருளும். இம்மனிதர் எனக்கு இரக்கம் காட்டச் செய்தருளும்”. அப்பொழுது, நான் மன்னருக்குப் பானம் பரிமாறுவோனாக இருந்தேன்.
1:8 லேவி 26:33.
1:9 இச 30:1-5. | https://bible.catholicgallery.org/tamil/etb-nehemiah-1 |
414 | நெகேமியா | நெகேமியா அதிகாரம் – 2 – திருவிவிலியம் | நெகேமியா எருசலேமுக்கு வருதல்
1 மன்னர் அர்த்தக்சஸ்தாவின் இருபதாம் ஆட்சி ஆண்டில், நீசான் மாதத்தில் அவரது முன்னிலையில் திராட்சை இரசம் வைக்கப்பட்டிருந்தது. நான் திராட்சை இரசத்தை எடுத்து மன்னருக்குக் கொடுத்தேன். அப்பொழுது அவர் முன்னிலையில் நான் துயருற்றவனாய் இருந்தேன்.
2 மன்னர் என்னைப் பார்த்து, “ஏன் உன் முகம் வாடியுள்ளது? நீ நோயுற்றவனாகத் தெரியவில்லையே! இது மனவேதனையே அன்றி வேறொன்றுமில்லை” என்றார். நானோ மிகவும் அஞ்சினேன்.
3 நான் மன்னரை நோக்கி, “மன்னரே! நீர் நீடூழி வாழ்க! என் மூதாதையரின் கல்லறைகள் இருக்கும் நகர் பாழ்பட்டுக் கிடக்கும்போது, அதன் வாயில்கள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கும் போது, என் முகம் எப்படி வாடாமல் இருக்கும்?” என்றேன்.
4 அதற்கு மன்னர் என்னை நோக்கி, “உனக்கு என்ன வேண்டும்?” என்றார். அப்பொழுது நான் விண்ணகக் கடவுளிடம் வேண்டினேன்.
5 நான் மன்னரைப் பார்த்து, “நீர் மனம் வைத்தால், உமது பார்வையில் தயவு கிடைத்தால் என் மூதாதையரின் கல்லறைகளைக் கொண்டுள்ள யூதாவின் நகரைக் கட்டி எழுப்ப என்னை அனுப்பும்” என்று கூறினேன்.
6 அப்பொழுது மன்னரும் அவர் அருகில் அமர்ந்திருந்த அரசியும் என்னைப் பார்த்து, “உன் பயணத்திற்கு எத்தனை நாள்கள் ஆகும்? எப்பொழுது நீ திரும்பி வருவாய்?” என்று கேட்டனர். மன்னர் என்னை அனுப்ப விரும்பியதால் திரும்பிவரும் காலத்தை அவரிடம் குறிப்பிட்டேன்.
7 மீண்டும் மன்னரைப் பார்த்து, “உமக்கு மனமிருந்தால், நான் யூதாவை அடையும்வரை யூப்பிரத்தீசின் அக்கரைப் பகுதியிலுள்ள ஆளுநர்கள் எனக்கு வழிவிட வேண்டுமென மடல்கள் கொடுத்தருளும்.
8 கோவிலின் கொத்தளக் கதவுகளுக்கும் நகர் மதிலின் கதவுகளுக்கும், நான் தங்கவிருக்கும் வீட்டின் கதவுகளுக்கும் குறுக்குச் சட்டங்கள் அமைக்கத் தேவையான மரங்களை எனக்குக் கொடுக்கும்படி மன்னரின் காடுகளுக்குக் காவலரான ஆசாபுக்கு மடல் கொடுத்தருளும்” என்றேன். கடவுளின் அருட்கரம் என்னோடு இருந்ததால், மன்னரும் அவ்வாறே கொடுத்தார்.
9 யூப்பிரத்தீசின் அக்கரைப்பகுதியின் ஆளுநர்களிடம் வந்து, மன்னரின் மடல்களை அவர்களிடம் தந்தேன். மன்னரோ என்னோடு படைத்தலைவர்களையும் குதிரை வீரர்களையும் அனுப்பி வைத்திருந்தார்.
10 ஓரோனியனான சன்பலாற்றும், அரச அலுவலனும் அம்மோனியனுமான தோபியாவும் அதைக் கேள்வியுற்றபோது, இஸ்ரயேல் மக்களுக்கு நன்மை செய்ய ஒருவன் வந்துவிட்டானே என்று எரிச்சலுற்றனர்.
11 நான் எருசலேமுக்கு வந்து அங்கே மூன்றுநாள் தங்கி இருந்தேன்.
12 நான் எருசலேமுக்குச் செய்யுமாறு கடவுள் என் உள்ளத்தில் தூண்டியிருந்த எதையும் நான் ஒருவருக்கும் சொல்லவில்லை. ஓரிரவு நான் எழுந்து சில ஆள்களுடன் புறப்பட்டுச் சென்றேன். நான் ஏறிச்சென்ற விலங்கைத் தவிர வேறொரு கால்நடையும் என்னிடமில்லை.
13 நான் இரவில் பள்ளத்தாக்கு வாயில் வழியாக வெளியே சென்று ‘நரி’ நீருற்றைக் கடந்து, ‘குப்பைமேட்டு’ வாயிலுக்கு வந்தேன். அங்கிருந்து, இடிந்து கிடந்த எருசலேமின் மதில்களையும், தீக்கிரையாகியிருந்த அதன் கதவுகளையும் பார்வையிட்டேன்.
14 அங்கிருந்து ‘ஊருணி வாயிலுக்கும்’, ‘அரசனின் குளத்திற்கும்’ சென்றேன். ஆனால் நான் சவாரி செய்த விலங்கு செல்லப் பாதை இல்லை.
15 எனவே இரவிலே நான் ஆற்றோரமாக நடந்து சென்று மதில்களைப் பார்வையிட்ட பின், ‘பள்ளத்தாக்கு வாயில்’ வழியாகத் திரும்பி வந்தேன்.
16 நான் எங்குச் சென்றேன் என்றும் என்ன செய்தேன் என்றும் அலுவலர் ஒருவருக்கும் தெரியாது. ஏனெனில் யூதர்களுக்கும், குருக்களுக்கும், உயர்குடி மக்களுக்கும், அலுவலர்களுக்கும், வேலையில் ஈடுபடவிருக்கும் ஏனையோருக்கும் அதுவரை ஒன்றையும் நான் சொல்லவில்லை.
17 பின்னர் நான் அவர்களைப் பார்த்து, “எவ்வித இழிநிலையில் நாம் இருக்கிறோம் என்பதையும், எருசலேம் பாழடைந்து கிடப்பதையும், அதன் வாயிற் கதவுகள் தீக்கிரையாக்கப்பட்டிருப்பதையும் நீங்களே பாருங்கள்! எனவே, இனியும் நமக்குச் சிறுமை வராதபடி, எருசலேமின் மதில்களைக் கட்டியெழுப்புவோம், வாருங்கள்” என்று சொன்னேன்.
18 என் கடவுளின் அருட்கரம் என்னோடு இருக்கிறதையும், மன்னர் எனக்கு உரைத்ததையும் அவர்களுக்குச் சொன்னேன். அவர்களும் “வாரும் கட்டுவோம்” என்றனர்; நற்பணி செய்யத் தங்களைத் தயார் செய்து கொண்டனர்.
19 ஓரோனியனான சன்பலாற்றும் அரச அலுவலனும் அம்மோனியனுமான தோபியாவும், அரபியனான கெசேமும் கேள்வியுற்று எங்களை எள்ளி நகையாடினர். “நீங்கள் என்ன காரியம் செய்கிறீர்கள்? நீங்கள் மன்னருக்கு எதிராகக் கலகம் செய்யப் போகிறீர்களா?” என்று கேட்டனர்.
20 நானோ அவர்களுக்கு மறுமொழியாக, “விண்ணகக் கடவுள்தாமே எங்களுக்கு வெற்றி அளிப்பார்! அவருடைய ஊழியர்களாகிய நாங்கள் கட்டட வேலையைத் தொடங்கப் போகிறோம். உங்களுக்கு எருசலேமில் பங்கில்லை, உரிமையில்லை, நினைவுச் சின்னமும் இல்லை” என்றேன்.
2:3 2 அர 25:8-10; 2 குறி 36:19; எரே 52:12-14. | https://bible.catholicgallery.org/tamil/etb-nehemiah-2 |
415 | நெகேமியா | நெகேமியா அதிகாரம் – 3 – திருவிவிலியம் | எருசலேமின் மதில்கள் புதுப்பிக்கப்படல்
1 அப்பொழுது, பெரிய குரு எலியாசிபும், அவருடைய சகோதரக் குருக்களும் முன்வந்து ‘ஆட்டு வாயிலைக்’ கட்டி அர்ப்பணம் செய்தனர்; அதற்குக் கதவுகளைப் பொருத்தினர்; ‘மேயா காவல்மாடம்’ வரையும் ‘அன்னியேல் காவல்மாடம்’ வரையும் அர்ப்பணம் செய்தனர்.
2 அவர்களுக்குப்பின் எரிகோ மக்களும், அவர்களுக்குப்பின் இம்ரியின் மகனான சக்கூரும் கட்டினர்.
3 பின் அசனாவாவின் வழிமரபினர் ‘மீன் வாயிலைக்’ கட்டினர்; நிலைகளை அமைத்து, கதவுகளைப் பொருத்தி, பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தனர்.
4 அக்கோசு மகனான உரியாவின் மகன் மெரேமோத்து அடுத்த பகுதியைப் பழுதுபார்த்தார். மெசசபேலின் மைந்தரான பெராக்கியாவின் மகன் மெசுல்லாம் அடுத்த பகுதியைப் பழுது பார்த்ததார். பானாவின் மகன் சாதோக்கு அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார்.
5 தெக்கோவாவினர் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தனர். ஆனால் அவர்களின் உயர்குடி மக்கள் ஆண்டவரின் பணியில் பங்கெடுக்கவில்லை.
6 பாசயாகின் மகனான யோயாதாவும், பெசோதியாவின் மகனான மெசல்லாமும் ‘பழைய வாயிலைப்’ பழுது பார்த்தனர்; நிலைகளை அமைத்து, கதவுகளைப் பொருத்தி, பூட்டுக்களையும், தாழ்ப்பாள்களையும் அமைத்தனர்.
7 யூப்பிரத்தீசின் அக்கரைப்பகுதியில் வாழ்ந்த ஆளுநரின் ஆட்சிக்குட்பட்ட கிபயோனியனான மெலற்றியாவும், மெரோனியரான யாதோனும், கிபயோன் – மிஸ்பாவைச் சார்ந்தவர்களும் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தனர்.
8 பொற்கொல்லரில் ஒருவரான அர்காயாவின் மகன் உசியேல் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார். நறுமண வணிகரில் ஒருவரான அனனியா அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார். இவர்கள் எருசலேமின் ‘பெரிய மதில்’ வரை புதுப்பித்தார்கள்.
9 எருசலேம் மாவட்டத்தின் ஒரு பாதிக்கு ஆளுநரும், ஊரின் மகனுமான இரபாயா அடுத்த பகுதியைப் பழுதுபார்த்தார்.
10 இவர்களுக்கு அடுத்து, அருமப்பின் மகனான எதாயா தம் வீட்டிற்கு எதிரே இருந்த பகுதியைப் பழுதுபார்த்தார். அசாபினியாவின் மகனான அற்றூசு அதற்கு அடுத்து பகுதியைப் பழுதுபார்த்தார்.
11 ஆரிமின் மகனான மல்கியாவும், பகத்மோவாபின் மகனான அசுபும் மற்றொரு பகுதியையும், ‘சூளைக்காவல் மாடத்தையும்’ பழுது பார்த்தனர்.
12 எருசலேம் மாவட்டத்தின் மறு பாதிக்கு ஆளுநரும், அல்லோகேசின் மகனுமான சல்லூமும் அவருடைய புதல்வியரும் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தனர்.
13 ஆனூனும், சானோவாகில் வாழ்ந்தவர்களும், ‘பள்ளத்தாக்கு வாயிலைப்’ பழுதுபார்த்தனர்; அதற்குத் கதவுகளையும், பூட்டுகளையும், தாழ்ப்பாள்களையும் அமைத்தனர். ‘குப்பைமேட்டு வாயில்’ வரை ஆயிரம் முழம் மதிலைப் பழுதுபார்த்தார்கள்.
14 பெத்தக் கரேம் மாவட்டத்தின் ஆளுநரும், இரேக்காபின் மகனுமான மல்கியா, ‘குப்பைமேட்டு வாயிலைப்’ பழுது பார்த்தார்; அதைப் புதுப்பித்துக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் அமைத்தார்.
15 மிஸ்பா மாவட்டத்தின் ஆளுநரும், கொல்கோசேயின் மகனுமான சல்லூம், ‘ஊருணிவாயிலைப்’ பழுது பார்த்தார்; அதைப் புதுப்பித்து முகடு கட்டுக் கதவுகளையும், பூட்டுகளையும், தாழ்ப்பாள்களையும் அமைத்தார். மேலும் அவர் அரச பூங்காவிலிருந்த ‘சேலா குளத்துச்’ சுவர்களைத் தாவீதின் ஊரிலிருந்து கீழே செல்லும் படிகள் வரை பழுது பார்த்தார்.
16 அவருக்குப் பிறகு, பெட்சூர் மாவட்டத்தின் ஒரு பாதிக்கு ஆளுநராய் இருந்த அசபூக்கின் மகனாகிய நெகேமியா தாவீதின் கல்லறைக்கு எதிரே, வெட்டப்பட்டிருந்த குளமும், படைவீரரின் பாசறையும் இருந்த பகுதிவரை பழுதுபார்த்தார்.
மதில் பழுதுபார்ப்பில் உதவிய லேவியர்
17 அவருக்குப் பிறகு, லேவியர் பழுதுபார்த்தனர். பானியின் மகனான இரகூம் அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார். கெயிலா மாவட்டத்தின் ஒரு பகுதிக்கு ஆளுநரான அசபியா அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார்.
18 பிறகு, அவர்களுடைய உறவினர் பழுது பார்த்தனர். கெயிலா மாவட்டத்தின் மறு பாதிக்கு ஆளுநரும் ஏனதாதின் மகனுமான பவ்வாயும் பழுதுபார்த்தார்.
19 மிஸ்பாவின் ஆளுநரும் ஏசுவாவின் மகனுமான ஏட்சேர் மதிலின் மூலையில் ஆயுதக் கிடங்குக்கு எதிரே இருந்த அடுத்த பகுதியைப் பழுது பார்த்தார்.
20 அவருக்கு அடுத்து, சபாயின் மகன் பாரூக்கு அந்த மூலையிலிருந்து பெரிய குரு எலியாசிபின் வீட்டு வாயில்வரை பழுது பார்த்தார்.
21 அவருக்கு அடுத்து, ஆக்கோனின் மகனான உரியாவின் மகன் மெரேயோத்து எலியாசிபின் வீட்டு வாயிற்படி முதல் அவ்வீட்டின் கடைக்கோடிவரை பழுது பார்த்தார்.
மதில் பழுதுபார்ப்பில் உதவிய குருக்கள்
22 அவருக்குப்பின் சமவெளியில் வாழ்ந்த குருக்கள் பழுது பார்த்தார்கள்.
23 இதன்பின் பென்யமினும், அசுபும் தங்கள் வீட்டுக்கு எதிரேயிருந்த பாகத்தைப் பழுது பார்த்தனர். அவர்களுக்குப்பின், அனனியாவின் மகனான மாசேயாவின் மகன் அசரியா, தம் வீட்டிற்கு அருகேயிருந்த பகுதியைப் பழுதுபார்த்தார்.
24 அவருக்குப்பின் அசரியாவின் வீட்டின் மூலையிலிருந்து மதிலின் மூலைவரையிலுள்ள மற்றொரு பகுதியை ஏனதாதின் மகன் பழுது பார்த்தார்.
25 மூலைக்கும் சிறைமுற்றத்தை நோக்கி அரச மாளிகையிலிருந்து உயர்ந்திருக்கும் காவல் மாடத்திற்கும் எதிரே இருந்த பகுதியை ஊசாயின் மகன் பாலால் பழுதுபார்த்தார். அவருக்குப்பின் பாரோசின் மகன் பெதாயாவும்
26 ஒபேல் வாழ் கோவில் பணியாளர்களும், கிழக்கிலிருந்த ‘தண்ணீர் வாயிலின்’ எதிர்ப்புறத்தையும் உயர்ந்திருக்கும் கோபுரத்தையும் பழுதுபார்த்தனர்.
மதில் பழுதுபார்ப்பில் உதவிய ஏனையோர்
27 அவருக்குபின், உயர்ந்திருந்த பெரிய காவல்மாடத்திலிருந்து ஒபேல் வரையிலுள்ள பகுதியைத் தெக்கோவாவினர் பழுது பார்த்தனர்.
28 ‘குதிரை வாயில்’ முதற்கொண்டு குருக்கள் ஒவ்வொருவரும் தம் வீட்டிற்கு எதிரே உள்ள பகுதிகளைப் பழுது பார்த்தனர்.
29 அவர்களுக்குப்பின், இம்மேரின் மகன் சாதோக்கு தம் வீட்டிற்கு எதிரேயுள்ள பகுதியைப் பழுது பார்த்தார். அவருக்குப்பின் கீழ்வாயில் காவலரும், செக்கனியாவின் மகனுமான செமாயா பழுது பார்த்தார்.
30 அவர்களுக்குப் பின், செலேமியாவின் மகனான அனனியாவும், சாலபின் ஆறாவது மகனான காலூவும் மற்றொரு பகுதியைப் பழுது பார்த்தனர். அவர்களுக்குபின் பெரேக்கியாவின் மகனான மெசுல்லாம் தம் அறைக்கு எதிரே உள்ள பாகத்தைப் பழுதுபார்த்தார்.
31 அவருக்குப்பின், பொற்கொல்லர்களில் ஒருவரான மல்கியா கணக்கர் வாயிலுக்கு எதிரேயிருந்த கோவிற்பணியாளர், வணிகர் ஆகியோரின் குடியிருப்பிலிருந்து மூலையிலிருந்த மேல்மாடிவரையும் பழுது பார்த்தார்.
32 மூலையிலிருந்த மேல் மாடிக்கும் ‘ஆட்டு வாயிலுக்கும்’ இடையிலுள்ள பகுதியைப் பொற்கொல்லரும் வணிகரும் பழுது பார்த்தனர். | https://bible.catholicgallery.org/tamil/etb-nehemiah-3 |
416 | நெகேமியா | நெகேமியா அதிகாரம் – 4 – திருவிவிலியம் | எதிர்ப்புகளை நெகேமியா மேற்கொள்ளல்
1 நாங்கள் மதிலைக் கட்டுவதுபற்றிக் கேள்வியுற்ற சன்பலாற்று சினமுற்று வெகுண்டெழுந்து, யூதர்களை ஏளனம் செய்தான்.
2 தன் தோழர்கள் முன்னிலையிலும், சமாரியப் படையின் முன்னிலையிலும், “இந்த அற்ப யூதர்கள் என்ன செய்யமுடியும்? அவர்கள் சும்மா விடப்படுவார்களா? அவர்களால் பலி செலுத்த முடியுமா? ஒரு நாளில் வேலையை முடித்து விடுவார்களா? எரிந்துபோன சாம்பல் குவியலிலிருந்து அவர்களால் கற்கள் உண்டாக்க இயலுமா?” என்று எள்ளி நகையாடினான்.
3 அவனுக்கு அருகிலிருந்த அம்மோனியனான தோபியா “ஆமாம், அவர்கள் அதைக் கட்டுகிறார்களாம்; ஆனால், ஒரு நரி அதன் மேல் ஏறிச்சென்றால்கூட அந்தக் கல்மதில் இடிந்துவிழும்” என்று ஏளனம் செய்தான்.
4 “எம் கடவுளே! நாங்கள் ஏளனம் செய்யப்படுவதைப் பாரும்! இந்த இழிவு அவர்களின் தலைமேலேயே சுமத்தப்படட்டும். அந்நியரின் நாட்டில் அவர்கள் அடிமைகளாகிக் கொள்ளையடிக்கப்படட்டும்.
5 அவர்களின் குற்றத்தை மூடிவிடாதேயும்! அவர்களின் பாவத்தை உம் முகத்திலிருந்து கழுவிவிடாதேயும்! ஏனெனில், கட்டுவோரை இழித்துரைத்தார்கள்.
6 இவ்வாறு நாங்கள் மதிலைத் தொடர்ந்து கட்டினோம். எல்லா மதில்களும் பாதி உயரத்திற்கு எழும்பிவிட்டன. மக்களும் பணி செய்வதில் முழு உள்ளத்துடன் ஈடுபட்டனர்.
7 சன்பலாற்று, தோபியா, அரேபியர், அம்மோனியர், அஸ்தோதியர் ஆகியோர், எருசலேமின் மதில்களைப் பழுதுபார்க்கும் வேலை முன்னேறிச் செல்வதையும், உடைப்புகள் அடைக்கப்பட்டுவருவதையும் கேள்வியுற்று மிகவும் சீற்றம் கொண்டனர்.
8 அவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து எருசலேமின்மீது போர் தொடுக்கவும், அங்கே கலகத்தை உருவாக்கவும் சதி செய்தனர்.
9 நாங்களோ எங்கள் கடவுளை வேண்டினோம்; அவர்களிடமிருந்து காத்துக்கொள்ள, இரவும் பகலும் காவலர்களை அமர்த்தினோம்.
10 அப்பொழுது யூதா நாட்டினர், சுமப்போர் தளர்ந்து போயினர்; மண்மேடோ பெரிதாய் உள்ளது; மதில்களை நம்மால் கட்டிமுடிக்க இயலாது” என்றனர்.
11 எங்கள் எதிரிகளோ, “நாம் அவர்கள் நடுவே சென்று அவர்களைக் கொன்று, வேலையை நிறுத்தும்வரை, அவர்கள் இதை அறியாமலும், தெரியாமலும் இருக்கட்டும்” என்று சொல்லிக்கொண்டனர்.
12 அவர்களைச் சுற்றி வாழ்ந்து வந்த யூதர்கள் பத்துமுறை வந்து எங்களிடம், “எல்லாத் திசைகளிலிருந்தும் நம்மை எதிர்த்து வருகிறார்கள்” என்று அறிவித்தனர்.
13 எனவே மதிலுக்குப் பின்புறமாக மிகத் தாழ்வான பகுதியில் திறந்த வெளியில் மக்களைக் குடும்பம் குடும்பமாக அவர்களின் வாள், ஈட்டி வில்களோடு நிறத்தி வைத்தேன்.
14 தலைவர்களையும், அலுவலர்களையும், ஏனைய மக்களையும் பார்த்தேன். நான் எழுந்து அவர்களை நோக்கி, “பகைவருக்கு அஞ்சாதீர்கள். மேன்மை மிக்கவரும் அஞ்சுதற்கு உரியவருமான ஆண்டவரை மனத்தில் கொண்டு உங்கள் சகோதரர், மகன்கள், மகள்கள், மனைவியர் ஆகியோர்க்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும் போராடுங்கள்” என்றேன்.
15 தங்கள் சதி எங்களுக்குத் தெரிந்துவிட்டது என்பதையும், அதைக் கடவுள் சிதறடித்தார் என்பதையும் எங்கள் எதிரிகள் அறிய வந்தபோது, நாங்கள் எல்லோரும் அவரவர் வேலையைச் செய்ய மதிலுக்குத் திரும்பினோம்.
16 அந்நாள்முதல், என் பணியாளர்களில் பாதிப்பேர் வேலை செய்தனர். மற்றப் பாதிப்பேர் ஈட்டி கேடயம், வில், மார்புக்கவசம் இவைகளை அணிந்துகொண்டு நின்றனர். மக்கள் தலைவர்கள் யூதா வீட்டார் அனைவரையும் மேற்பார்வை செய்தனர்.
17 மதில் கட்டுவோரும், சுமை சுமப்பவரும் ஒரு கையால் வேலை செய்தனர்; மறு கையிலோ ஆயுதம் தாங்கியிருந்தனர்.
18 கட்டுவோர் ஒவ்வொருவரும் தம் வாளை இடையில் கட்டிக்கொண்டு வேலை செய்தனர். எக்காளம் ஊதுபவன் என் அருகிலேயே இருந்தான்.
19 பிறகு நான் தலைவர்களையும், அலுவலர்களையும் ஏனைய மக்களையும் நோக்கிக் கூறியது: “வேலை மிகுந்துள்ளது; பரந்துள்ளது; நாமோ மதில்நெடுகத் தனித்தனியே சிதறி நிற்கின்றோம்.
20 எந்த இடத்திலிருந்து எக்காள முழக்கம் கேட்குமோ, அந்த இடத்திற்கு எங்களிடம் ஒன்று கூடி வாருங்கள். நம் கடவுள் நமக்காகப் போர் புரிவார்”.
21 இவ்வாறு நாங்கள் வேலை செய்துவந்தோம். எங்களுள் பாதிப்பேர் அதிகாலைமுதல் விண்மீன்கள் தோன்றும்வரை ஆயுதம் தாங்கியிருந்தனர்.
22 அப்பொழுது மக்களைப் பார்த்து நான் கூறியது: “ஒவ்வொருவரும் தம் வேலைக்காரரோடு இரவை எருசலேமில் கழிக்கட்டும். இவ்வாறு அவர்கள் நமக்காக இரவில் காவலும் பகலில் வேலையும் செய்வர்”.
23 நான், என் சகோதரர், என் ஊழியர், என் மெய்க்காவலர் யாருமே எம் உடைகளைக் களையவேயில்லை. ஒவ்வொருவரும் வலக்கையில்* ஆயுதம் தாங்கியிருந்தோம்.
4:23 ‘தண்ணீர்’ எனவும் பொருள்படும். | https://bible.catholicgallery.org/tamil/etb-nehemiah-4 |
417 | நெகேமியா | நெகேமியா அதிகாரம் – 5 – திருவிவிலியம் | ஏழைகள் ஒடுக்கப்படுதல்
1 பின்னர் ஆடவரும் பெண்டிரும் தங்கள் இனத்தவரான யூதர்களுக்கு எதிராகப் பெரிதும் முறையிட்டனர்.
2 அவர்களில் சிலர், “எங்கள் புதல்வர், புதல்வியர் உள்பட நாங்கள் பலர். எனவே நாங்கள் உண்டு, உயிர் வாழும் பொருட்டு எங்களுக்குத் தானியம் கிடைக்கும்படி செய்யும்” என்றனர்.
3 இன்னும் சிலர் கூறியது: “எங்கள் நிலங்களையும், திராட்சைத் தோட்டங்களையும் வீடுகளையும் அடைமானம் வைத்துப் பஞ்சத்தில் பிழைக்கத் தானியம் வாங்கினோம்” என்றனர்.
4 வேறு சிலர் கூறியது: “எங்கள் நிலங்களுக்காகவும் திராட்சைத் தோட்டத்திற்காகவும் மண்ணுக்குச் செலுத்த வேண்டிய தீர்வைக்காகக் கடன் வாங்கினோம். எங்கள் மக்களும் அவர்களின் மக்களைப் போன்றவர்கள் தாமே!
5 எங்கள் சகோதரர்களும் எங்களைப் போன்றவர்கள் தாமே! இருப்பினும் நாங்கள், எங்கள் புதல்வரையும் புதல்வியரையும் அடிமைகளாக்கும் நிலை ஏற்பட்டுவிட்டதே! எங்கள் புதல்வியர் ஏற்கனவே அடிமைகளாகி விட்டனர். அவர்களை மீட்க எங்களிடம் வசதியில்லை. ஏனெனில் எங்கள் நிலங்களும், திராட்சைத் தோட்டங்களும் மற்றவர் கையில் உள்ளன”.
6 அவர்களது முறையீடுகளையும், இவ்வார்த்தைகளையும் கேட்டபொழுது, நான் மிகவும் சினமுற்றேன்.
7 நான் என்னுள் சிந்தித்தேன். பின் தலைவர்களையும், அதிகாரிகளையும் கண்டித்து அவர்களிடம் கூறியது: “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சகோதரர்களிடமிருந்து அநியாய வட்டி வாங்குவதேன்?” பிறகு அவர்களுக்கு எதிராகப் பெரும் சபையைக் கூட்டினேன்.
8 அவர்களைப் பார்த்து நான், “வேற்றினத்தாருக்கு விற்கப்பட்டிருந்த யூத சகோதரர்களை, நம்மால் முடிந்த அளவு மீட்டு வந்துள்ளோம். அப்படியிருக்க நீங்கள் உங்கள் சகோதரர்களை விற்கலாமா? அவர்கள் நமக்கே விற்கப்படவேண்டுமா?” என்று கேட்டேன். அவர்களோ மறுமொழி கூற இயலாது மௌனமாக இருந்தனர்.
9 மீண்டும் நான் கூறியது: “நீங்கள் செய்வது சரியில்லை. நம் எதிரிகளான வேற்றினத்தார் நம்மை ஏளனம் செய்யாதவாறு நீங்கள் நம் கடவுளுக்கு அஞ்சி நடப்பதே முறை.
10 நானும் என் சகோதரரும் என் பணியாளரும் கடனாகப் பணத்தையும், தானியத்தையும் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம். அக்கடனைக் கேளாது விட்டு விடுவோம்.
11 இன்றே நீங்களும் அவர்களது நிலங்களையும், திராட்சைத் தோட்டங்களையும் ஒலிவத் தோப்புகளையும், வீடுகளையும் நூற்றுக்கு ஒன்று வட்டியாக வாங்கிய பணம், தானியம், திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவைகளையும் அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுங்கள்”.
12 அதற்கு அவர்கள், “நீர் சொன்னபடியே நாங்கள் திருப்பிக் கொடுத்து விடுகிறோம். நாங்கள் அவர்களிடமிருந்து எதையும் கேட்கமாட்டோம்” என்றனர். நான் குருக்களை அழைத்து இவ் வார்த்தையின்படி செய்வோம் என்று அவர்களை ஆணையிட்டுக் கூற வைத்தேன்.
13 மேலும், நான் என் ஆடையை உதறிவிட்டு, இவ் வார்த்தையின்படி நடக்காத ஒவ்வொருவரையும் கடவுள் இவ்வாறே தம் வீட்டினின்றும், திருப்பணியினின்றும் உதறிவிடுவாராக. அவர்கள் இவ்வாறு உதறிவிடப்பட்டு, வெறுமையாக்கப்படுவர்” என்றேன். இதற்குச் சபையார் அனைவரும் “ஆமென்” என்று சொல்லி ஆண்டவரைப் புகழ்ந்தனர். பின்னர் மக்கள் தாங்கள் வாக்களித்தபடியே செய்தனர்.
நெகேமியாவின் தன்னலமின்மை
14 மேலும் யூதா நாட்டில் ஆளுநராய் இருக்குமாறு அர்த்தக்சஸ்தா என்னை நியமித்த நாள்முதல், அதாவது மன்னரது ஆட்சியின் இருபதாம் ஆண்டுமுதல் முப்பத்திரண்டாம் ஆண்டுவரை, ஆக இப்பன்னிரண்டு ஆண்டுகளாய், நானும் என் சகோதரரும், ஆளுநர்களுக்குரிய படியை வாங்கி உண்ணவில்லை.
15 எனக்கு முன்னிருந்த ஆளுநர்கள் அதிகத் தீர்வை விதித்து மக்களை வதைத்தனர். உணவு, திராட்சை இரசத்தோடு நாற்பது செக்கேல் வெள்ளியும் அவர்களிடம் வசூலித்தனர். அவர்களுடைய அலுவலர்கள் மக்கள்மீது அதிகாரம் காட்டி வந்தனர். நானோ கடவுளுக்கு அஞ்சி அவ்வாறெல்லாம் செய்யவில்லை.
16 மேலும் இம்மதில் வேலைக்கு என்னை முற்றும் ஈடுபடுத்திக் கொண்டேன். என் பணியாளர்கள் அனைவரும் அவ்வேலைக்கே அங்குக் கூடிவந்தார்கள். நாங்கள் நிலம் ஏதும் வாங்கிச் சேர்க்கவில்லை.
17 மேலும் யூதர்களும், மக்கள் தலைவர்களுமான நூற்றைம்பது பேரும், எங்களைச் சுற்றி அண்டை நாட்டினின்று வந்திருந்த அனைவரும் எனது பந்தியில் உணவருந்தினார்கள்.
18 ஒவ்வொரு நாளும் என் பந்திக்குத் தயார் செய்யப்பட்டவை பின்வருமாறு: ஒரு காளை, கொழுத்த ஆறு ஆடுகள், மேலும் கோழி வகைகள் பத்து. நாளுக்கு ஒருமுறை எல்லாவித இரசமும் ஏராளமாகக் கொள்முதல் செய்யப்பட்டது; எனினும் ஆளுநருக்குரிய படிக்கு நான் உரிமை கொண்டாடவில்லை. ஏனெனில் இம்மக்கள் பட்ட பாடு மிகப்பெரிது.
19 என் இறைவா! இம் மக்களுக்கு நான் செய்துள்ள எல்லா நன்மைகளுக்கும் ஏற்ப எனக்கு ஆதரவாயிரும்.
5:7 விப 22:25; லேவி 25:35-37; இச 23:19-20. | https://bible.catholicgallery.org/tamil/etb-nehemiah-5 |
418 | நெகேமியா | நெகேமியா அதிகாரம் – 6 – திருவிவிலியம் | நெகேமியாவுக்கு எதிரான சதித் திட்டங்கள்
1 நான் மதிலைக் கட்டி முடித்துவிட்டேன் என்றும், அதில் உடைப்பு ஒன்றுமில்லையென்றும், மேலும் இதுவரை நான் கோட்டை வாயில்களில் கதவுகள் அமைக்கவில்லை என்றும், சன்பலாற்று, தோபியா, கெசேம், அரேபியர், மற்றும் எங்கள் எதிரிகள் அறிய வந்தனர்.
2 அப்பொழுது, சன்பலாற்று, தோபியா, கெசேம் ஆகியோர் என்னிடம் தூதனுப்பி,” நீர் புறப்பட்டு வாரும்; ஓனோ சமவெளியிலுள்ள ஊர் ஒன்றில் சந்திப்போம்” என்றனர். ஆனால் அவர்கள் எனக்குத் தீங்கிழைக்கவே எண்ணியிருந்தனர்.
3 அப்பொழுது நான் அவர்களிடம் தூதனுப்பி, “முக்கியமான அலுவலில் நான் ஈடுபட்டுள்ளேன். எனவே நான் அங்குச் செல்ல இயலாத நிலையில் உள்ளேன். நான் இந்த வேலையை விட்டுவிட்டு உங்களிடம் வந்தால், இது முடங்கிவிடும் அன்றோ!” என்றேன்.
4 இவ்வாறாக அவர்கள் எனக்கு நான்கு முறை தூதனுப்பினார்கள். நானும் இதேமுறையில் பதில் அனுப்பினேன்.
5 ஐந்தாம் முறையும் சன்பலாற்று தன் அலுவலன் மூலம் இதே செய்தியை எனக்கு அனுப்பினான். அவனுடைய கையில் திறந்த மடல் ஒன்றிருந்தது.
6 அதில் எழுதுப்பட்டிருந்தது பின்வருமாறு: “கெசேமின் கூற்றின்படி வேற்றினத்தாரிடையே ஒரு செய்தி பரவியுள்ளது. அதன்படி, நீரும் யூதர்களும் கலகம் ஏற்படுத்தச் சூழ்ச்சி செய்துள்ளீர்கள். இதற்காகவே நீர் மதிலைக் கட்டி எழுப்புகிறீர். நீர் அவர்களுக்கு அரசர் ஆக விரும்புகிறீர்.
7 யூதாவில் ஓர் அரசர் உங்களுக்கு இருக்கிறார் என்று எருசலேமில் அறிவிக்க இறைவாக்கினர்களை நீர் ஏற்படுத்தியுள்ளீர். இச்செய்திகள் மன்னருக்கு எட்டிவிடும். எனவே நீர் வாரும். நாம் ஒன்றாக ஆலோசிக்கலாம்.”
8 நான் அவனுக்குப் பதில் அனுப்பினேன்: “நீர் சொல்வதுபோல் எவையும் நடக்கவில்லை. இவையெல்லாம் நீர் செய்யும் கற்பனையே.”
9 ஏனெனில் அவர்கள் அனைவரும் எங்களை அச்சுறுத்தினர், “அவர்கள் கைகள் வேலை செய்வதில் தளர்ந்துவிடும். வேலை நின்று விடும்” என்று சொல்லி வந்தனர். எனவே, கடவுளே! என் “கைளை வலிமைப்படுத்தும்.”
10 நான், மெகேற்றபேலுக்குப் பிறந்த தெலாயாவின் மகன் செமாயாவின் வீட்டுக்குச் சென்றேன். அவன் அங்கு அடைபட்டுக்கிடந்தான். அவன், “நாம் கடவுளின் இல்லமான கோவிலின் உள்ளே சந்திப்போம். கோவிலின் கதவுகளை நாம் மூடிக்கொள்வோம். ஏனெனில் அவர்கள் உம்மைக் கொல்ல வருகிறார்கள். உம்மைக் கொல்ல இரவில் வருகிறார்கள்.”
11 நான் மறுமொழியாக: “என்னைப்போன்ற மனிதன் ஓடி ஒளிவது முறையா? நான் பிழைத்துக் கொள்ளக் கோவிலுக்குள் செல்வதா? நான் செல்ல மாட்டேன்” என்றேன்.
12 அப்பொழுது, கடவுள் அவனை அனுப்பவில்லை என்றும், தோபியாவும் சன்பலாற்றும் அவனுக்குக் கையூட்டுக் கொடுத்து எனக்கு எதிராக இறைவாக்கு உரைக்கச் செய்தனர் என்றும் நான் அறிந்து கொண்டேன்.
13 அஞ்சியவாறு நான் இதைச் செய்யவும், இதனால் பாவம் கட்டிக்கொள்ளவும், என் பெயருக்கு இழிவு ஏற்படுத்தி என்னைச் சிறுமைப்படுத்தவும் அவர்கள் அவனுக்குக் கையூட்டுத் தந்திருந்தனர்.
14 ‘என் கடவுளே! தோபியா, சன்பலாற்று இவர்களின் இச்செயல்களையும் இறைவாக்கினனான நொவாதியாவையும் என்னை அச்சுறுத்த முயன்ற ஏனைய இறைவாக்கினர்களையும் மறந்து விடாதேயும்.’
மதில் கட்டும் பணி நிறைவுறுதல்
15 மதில் ஐம்பத்திரண்டு நாள்களுள் கட்டப்பட்டு எலூல் மாதம் இருபத்தைந்தாம் நாளில் நிறைவடைந்தது.
16 இதை எங்கள் எதிரிகள் அனைவரும் கேள்வியுற்றபோது, எங்களைச் சூழ்ந்திருந்த எல்லா நாட்டினரும் அஞ்சி, மனம் தளர்ந்து போயினர்; ஏனெனில் இவ்வேலை நம் கடவுளின் உதவியால் நிறைவேறியது என்று கண்டனர்.
17 அக்காலத்தில் யூதாவின் தலைவர்கள் தோபியாவுக்குப் பல மடல்கள் அனுப்பி வந்தார்கள். தோபியாவின் மடல்களும் அவர்களுக்கு வந்து கொண்டிருந்தன.
18 ஏனெனில், யூதாவில் பலர் அவனுக்கு வாக்குறுதி தந்திருந்தார்கள். ஏனென்றால் அவன், ஆரகின் மகனான செக்கனியாவுக்கு மருமகன். அவனுடைய யோகனான், பெரக்கியாவுக்குப் பிறந்த மெசுல்லாவின் மகளை மணந்திருந்தான்.
19 எனவே அவர்கள் எனக்கு முன்பாக அவனது நற்செயல்களைப்பற்றிச் சொல்வார்கள். நான் சொன்னதை அவனிடம் சொல்வார்கள். என்னை அச்சுறுத்தும்படி தோபியா மடல்கள் அனுப்பிக் கொண்டிருந்தான். | https://bible.catholicgallery.org/tamil/etb-nehemiah-6 |
419 | நெகேமியா | நெகேமியா அதிகாரம் – 7 – திருவிவிலியம் | 1 மதிலைக் கட்டி முடித்தபின், நான் கதவுகளை அமைத்தேன்; வாயிற் காவலர்களையும், பாடகர்களையும், லேவியர்களையும் அமர்த்தினேன்.
2 என் சகோதரர் அனானியிடமும், கொத்தளத் தலைவர் அனனியாவிடமும், எருசலேமின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தேன். ஏனெனில் அனானி மற்றவர்களை விட உண்மையானவர்; கடவுளுக்கு அஞ்சியவர்.
3 நான் அவர்களைப் பார்த்து, “வெயில் ஏறும்வரை எருசலேமின் கதவுகளைத் திறக்க வேண்டாம்; காவலர்கள் போகுமுன் கதவுகளை மூடித் தாழிடுங்கள்; எருசலேமில் வாழ்வோரைக் காவலராய் நியமியுங்கள்; அவர்களுள் சிலர் குறிக்கப்பட்ட இடங்களிலும் மற்றும் சிலர் தங்கள் வீட்டிற்கு எதிரேயும் காவல் புரியட்டும்” என்று சொன்னேன்.
சிறையிருப்பினின்று திரும்பியோர் பட்டியல்
(எஸ்ரா 2:1-70)
4 எருசலேம் நகர் பரந்ததும் பெரியதுமாய் இருந்தது. ஆனால் அதனுள் வாழ்ந்து வந்த மக்கள் வெகு சிலரே. வீடுகள் இன்னும் கட்டப்படவில்லை.
5 அப்பொழுது கடவுள் என்னைத் தூண்டியபடி, தலைவர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் அனைவரையும் வழிமரபு வாரியாகப் பதிவு செய்தேன். அப்பொழுது அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்திருந்தவரின் தலைமுறைப் பதிவேட்டைக் கண்டுபிடித்தேன். அதில் எழுதியிருக்கக் கண்டது பின்வருமாறு:
6 பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரால் சிறைப்படுத்தப்பட்டு, பின்னர் அடிமைத்தனத்திலிருந்து மீண்டு, எருசலேமுக்கும் யூதாவில் அவரவர் நகருக்கும் திரும்பி வந்த மாநில மக்கள் இவர்களே: செருபாபேல், ஏசுவா, நெகேமியா, அசரியா, இரகமியா, நகமானி, மோர்தக்காய், பில்சான், மிசுபெரேத்து, பிக்வாய், நெகூம், பானா.
7 இவர்களோடு வந்த இஸ்ரயேல் மக்களில் ஆடவரின் எண்ணிக்கை:
8 பாரோசின் புதல்வர் இரண்டாயிரத்து நூற்றுமுப்பதிரண்டு பேர்;
9 செபாற்றியாவின் புதல்வர் முந்நூற்று எழுபத்திரண்டு பேர்;
10 அராகின் புதல்வர் அறுநூற்று ஐம்பத்திரண்டு பேர்;
11 பாகாத் மோவாபின் புதல்வரான ஏசுவா, யோவாபு ஆகியோரின் புதல்வர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுப் பேர்;
12 ஏலாமின் புதல்வர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு பேர்;
13 சத்தூவின் புதல்வர் எண்ணூற்று நாற்பத்தைந்து பேர்;
14 சக்காயின் புதல்வர் எழுநூற்று அறுபது பேர்;
15 பின்னூயின் புதல்வர் அறுநூற்று நாற்பத்தெட்டு பேர்;
16 பேபாயின் புதல்வர் அறுநூற்று இருபத்தெட்டு பேர்;
17 அசகாதின் புதல்வர் இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்திரண்டு பேர்;
18 அதோனிக்காமின் புதல்வர் அறுநூற்று அறுபத்தேழு பேர்;
19 பிக்வாயின் புதல்வர் இரண்டாயிரத்து அறுபத்தேழு பேர்;
20 ஆதினின் புதல்வர் அறுநூற்று ஐம்பத்தைந்து பேர்;
21 எசேக்கியாவின் வழிவந்த அற்றேரின் புதல்வர் தொண்ணூற்றெட்டுப் பேர்;
22 ஆசுமின் புதல்வர் முந்நூற்று இருபத்தெட்டுப் பேர்;
23 பேசாயின் புதல்வர் முந்நூற்று இருபத்து நான்கு பேர்;
24 ஆரிப்பின் புதல்வர் நூற்றுப்பன்னிரண்டு பேர்;
25 கிபயோனின் புதல்வர் நூற்றுத் தொண்ணூற்றைந்து பேர்;
26 பெத்லகேம், நேற்றோபாவின் ஆண்கள் நூற்று எண்பத்தெட்டுப் பேர்;
27 அனத்தோத்தின் ஆண்கள் நூற்று இருபத்தெட்டுப் பேர்;
28 பெத்தசுமாவேத்தின் ஆண்கள் நாற்பத்திரண்டு பேர்;
29 கிரியத்து எயாரிம், கெபிரா, பெயரோத்து ஆகியவற்றின் ஆண்கள் எழுநூற்று நாற்பத்திமூன்று பேர்;
30 இராமா, மற்றும் கேபாவின் ஆண்கள் அறுநூற்று இருபத்தொரு பேர்;
31 மிக்மாசின் ஆண்கள் நூற்று இருபத்திரண்டு பேர்;
32 பெத்தேல், மற்றும் ஆயினின் ஆண்கள் நூற்று இருபத்து மூன்று பேர்;
33 மற்றொரு நெபோவின் ஆண்கள் ஐம்பத்திரண்டு பேர்;
34 மற்றொரு ஏலாமின் புதல்வர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்திநான்கு பேர்;
35 ஆரிமின் புதல்வர் முந்நூற்று இருபது பேர்;
36 எரிகோவின் புதல்வர் முந்நூற்று நாற்பத்தைந்து பேர்;
37 லோது, ஆதிது, ஓனோ ஆகியோரின் புதல்வர் எழுநூற்று இருபத்தொரு பேர்;
38 செனாவின் புதல்வர் மூவாயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பது பேர்.
39 குருக்கள்; ஏசுவாவின் வீட்டைச் சார்ந்த எதாயாவின் புதல்வர் தொள்ளாயிரத்து எழுபத்து மூன்று பேர்;
40 இம்மேரின் புதல்வர் ஆயிரத்து ஐம்பத்திரண்டு பேர்;
41 பஸ்கூரின் புதல்வர் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழு பேர்;
42 ஆரிமின் புதல்வர் ஆயிரத்துப் பதினேழு பேர்.
43 லேவியர்: ஓதவாவின் புதல்வரில், கத்மியேலின் வழிவந்த ஏசுவாவின் புதல்வர் எழுபத்து நான்கு பேர்;
44 பாடகர்: ஆசாபின் புதல்வர் நூற்று நாற்பத்தெட்டுப் பேர்;
45 வாயிற்காவலர்: சல்லூம், ஆற்றேர், தல்மோன், அக்குபு, அத்தித்தா, சோபாய் ஆகியோரின் புதல்வர் நூற்று முப்பத்தெட்டுப் பேர்.
46 கோவில் ஊழியர்: சிகாவின் புதல்வர்; அசுப்பாவின் புதல்வர்; தபாயோத்தின் புதல்வர்;
47 கேரோசின் புதல்வர்; சீயாவின் புதல்வர்; கிதோனின் புதல்வர்;
48 இலபனாவின் புதல்வர்; அகாபாவின் புதல்வர்; சல்மாயின் புதல்வர்;
49 அனானின் புதல்வர்; கிதேலின் புதல்வர்; ககாரின் புதல்வர்;
50 இரயாயாவின் புதல்வர்; இரசினின் புதல்வர்; நெக்கோதாவின் புதல்வர்;
51 கசாமின் புதல்வர்; உசாவின் புதல்வர்; பாசயாகின் புதல்வர்;
52 பேசாயின் புதல்வரான மெயோனிமின் புதல்வர்; நெபுசசிமின் புதல்வர்;
53 பக்புகின் புதல்வரான அகுப்பாவின் புதல்வர்; அர்குரின் புதல்வர்;
54 பட்சிலித்தின் புதல்வர்; மெகிதாவின் புதல்வர்; அர்சாவின் புதல்வர்;
55 பர்கோசின் புதல்வர்; சீசாவின் புதல்வர்; தேமாகின் புதல்வர்;
56 நெட்சியாகின் புதல்வர்; அற்றிப்பாவின் புதல்வர்;
57 சாலமோனுடைய பணியாளர்களின் புதல்வர்; சோற்றாவின் புதல்வர்; சொபரேத்தின் புதல்வர்; பெரிதாவின் புதல்வர்;
58 ஏலாவின் புதல்வர்; தர்கோனின் புதல்வர்; கித்தேலின் புதல்வர்;
59 செபத்தியாவின் புதல்வர்; அற்றிலின் புதல்வர்; பொக்கரேத்து சபாயிமின் புதல்வர்; அம்மோனின் புதல்வர்;
60 கோவில் பணியாளரும் சாலமோனின் பணியாளரின் புதல்வர்களும் மொத்தம் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டு பேர்.
61 மேலும் தெல்மெல்லா, தெல்கர்சா, கெருபு, அதோன் இம்மேர் ஆகிய இடங்களிலிருந்து வந்தும், தங்கள் மூதாதையரின் குலத்தையும், வழிமரபையும், தாங்கள் இஸ்ரயேலைச் சார்ந்தவர்கள் என்பதையும் எண்பிக்க இயலாதவர்கள் பின்வருமாறு:
62 தெலாயாவின் புதல்வர் தோபியாவின் புதல்வர், நெக்கோதாவின் புதல்வர் ஆகிய அறுநூற்று நாற்பத்திரண்டு பேர்.
63 குருக்கள்: ஒபய்யாவின் புதல்வர்; அக்கோசின் புதல்வர்; பர்சில்லாயின் புதல்வர். பர்சில்லாய் கிலயாதைச் சார்ந்த பர்சில்லாயின் புதல்வியருள் ஒருத்தியை மணந்ததால் அப்பெயரால் அழைக்கப்பட்டார்.
64 இவர்கள் அனைவரும் தங்கள் தலைமுறை அட்டவணை எழுதப்பட்ட ஏடுகளைத் தேடியும் கிடைக்காததால் குருத்துவப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்கள்.
65 ஊரிம், தும்மிம் கொண்ட குரு ஒருவர் வரும் வரை திருத்தூயக உணவில் பங்கு கொள்ளக்கூடாது என்று அவர்களுக்கு ஆளுநர் ஆணையிட்டார்.
66 மக்கள் சபையாரின் மொத்த எண்ணிக்கை நாற்பத்திரண்டு ஆயிரத்து முந்நூற்று அறுபது.
67 அவர்களைத் தவிர அவர்களின் ஆண் ஊழியர்களும் பெண் ஊழியர்களும் ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழு. மற்றும் அவர்களுக்கு இருநூற்று நாற்பத்தைந்து பாடகரும், பாடகிகளும் இருந்தார்கள்.
68 அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு; கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து;
69 அவர்களுடைய ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து; கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்றிருபது.
70 இறுதியாக குலத்தலைவர்களில் சிலர் வேலைக்காகச் கொடுத்தது பின்வருமாறு: ஆளுநர், கருவூலத்திற்கு ஆயிரம் பொற்காசுகள், ஐம்பது பாத்திரங்கள், ஐந்நூற்று முப்பது குருத்துவ ஆடைகள் ஆகியவற்றைத் தந்தார்.
71 குலத்தலைவர்களில் வேறுசிலர், வேலைக்காகக் கருவூலத்திற்கு இருபதாயிரம் பொற்காசுகளும் ஆயிரத்து ஐநூறு கிலோகிராம்* வெள்ளியும் கொடுத்தார்கள்.
72 ஏனைய மக்கள் கொடுத்ததாவது: இருபதாயிரம் பொற்காசுகள், ஆயிரத்து முந்நூற்று எழுபது கிலோகிராம்* வெள்ளி, அறுபத்தேழு குருத்துவ உடைகள்.
73 குருக்களும், லேவியரும், வாயிற்காவலரும், பாடகரும், மக்களுள் சிலரும், கோவில் பணியாளரும் ஆகிய இஸ்ரயேலர் அனைவரும் தம் நகர்களில் குடியேறினர். ஏழாவது மாதம் வந்தபோது இஸ்ரயேல் மக்கள் அனைவரும் தம் நகர்களில் இருந்தார்கள்.
7:65 விப 28:30; இச 33:8.
7:71 ‘இரண்டாயிரத்து இருநூறு மினா’ என்பது எபிரேய பாடம்.
7:72 ‘இரண்டாயிரம் மினா’ என்பது எபிரேய பாடம்.
7:73 1 குறி 9:2; நெகே 11:3. | https://bible.catholicgallery.org/tamil/etb-nehemiah-7 |
420 | நெகேமியா | நெகேமியா அதிகாரம் – 8 – திருவிவிலியம் | திருச்சட்டத்தை மக்கள்முன் எஸ்ரா வாசித்தல்
1 மக்கள் அனைவரும், ஒரே ஆளென, தண்ணீர் வாயிலுக்கு எதிரே இருந்த வளாகத்தில் ஒன்றுகூடினர். ஆண்டவர் இஸ்ரயேலுக்குக் கொடுத்த மோசேயின் திருநூலைக் கொண்டுவருமாறு திருநூல் வல்லுநர் எஸ்ராவை வேண்டினர்.
2 அவ்வாறே ஏழாம் மாதம் முதல்நாள் குரு எஸ்ரா ஆடவர், பெண்டிர், புரிந்துகொள்ளும் ஆற்றலுள்ள சிறுவர் அனைவரும் அடங்கிய சபை முன்னிலையில் திருநூலைக் கொண்டு வந்தார்.
3 தண்ணீர் வாயிலுக்குமுன் இருந்த வளாகத்தில் காலைமுதல் நண்பகல்வரை ஆடவரையும், பெண்டிரையும், புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ள சிறுவரையும் பார்த்து அதை உரக்க வாசித்தார். எல்லா மக்களும் திருநூலுக்குச் செவி கொடுத்தனர்.
4 திருநூல் வல்லுநரான எஸ்ராவோ இதற்காகச் செய்யப்பட்ட மர மேடையின்மேல் நின்றுகொண்டிருந்தார். அவருக்கு அருகே வலப்பக்கத்தில் மத்தித்தியா, சேமா, அனாயா, உரியா, இல்க்கியா, மாசேயா ஆகியோரும், இடப்பக்கத்தில் பெதாயா, மிசாவேல், மல்கியா, ஆசும், அசுபதீனா, செக்கரியா, மெசுல்லாம் ஆகியோரும் நின்று கொண்டிருந்தார்கள்.
5 எஸ்ரா மக்களை விட உயரமான இடத்தில் நின்றதால் அவர் திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் அதைப் பார்த்தார்கள்; திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள்.
6 அப்பொழுது எஸ்ரா மாபெரும் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்தினார். மக்கள் எல்லாரும் கைகளை உயர்த்தி “ஆமென்! ஆமென்!” என்று பதிலுரைத்தார்கள்; பணிந்து, முகங்குப்புற விழுந்து ஆண்டவரைத் தொழுதார்கள்.
7 மேலும் லேவியரான ஏசுவா, பானி, செரேபியா, யாமின், கூபு, சபத்தாய், ஓதியா, மாசேயா, கெலிற்றா, அசரியா, யோசபாத்து, அனான், பெலாயா ஆகியோர் சட்டத்தை மக்களுக்கு விளக்கினார்கள். மக்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள்.
8 மக்களுக்குப் புரியும்படி தெளிவாகவும், பொருளோடும் கடவுளின் திருச்சட்டத்தை உரக்க வாசித்தார்கள். ஆதலால் மக்களும் வாசிக்கப்பட்டதன் பொருளைப் புரிந்து கொண்டனர்.
9 ஆளுநர் நெகேமியாவும், குருவும் திருநூல் வல்லுநருமான எஸ்ராவும், விளக்கம் கூறிய லேவியர்களும் மக்கள் அனைவரையும் நோக்கி: “இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள்; எனவே நீங்கள் அழுதுபுலம்ப வேண்டாம்” என்றனர். ஏனெனில் மக்கள் அனைவரும் திருச்சட்டத்தின் சொற்களைக்கேட்டதிலிருந்து அழுது கொண்டிருந்தார்கள்.
10 அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய்க் கொழுத்தவற்றை உண்டு, இனிய திராட்சை இரசத்தைக் குடியுங்கள்; எதுவும் தயார் செய்யாதவருக்குச் சிறிது அனுப்பிவையுங்கள். ஏனென்றால், நம் ஆண்டவரின் புனித நாள் இதுவே; எனவே வருந்த வேண்டாம்; ஏனெனில் ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை” என்று கூறினார்.
11 எனவே லேவியர் எல்லா மக்களையும் நோக்கி, “அமைதியாயிருங்கள்; ஏனெனில் இன்று புனித நாள், துயரம் கொள்ளாதீர்கள்” எனச் சொல்லி அழுகையை அமர்த்தினார்கள்.
12 எல்லா மக்களும் அவர்களுக்குக் கூறப்பட்ட வார்த்தைகளைப் புரிந்துகொண்டதால், உண்ணவும், குடிக்கவும், உணவு அனுப்பவும், மகிழ்ச்சி கொண்டாடவும் புறப்பட்டுச் சென்றார்கள்.
கூடாரத் திருவிழா
13 இரண்டாம் நாள் அனைத்து மக்களின் குலத்தலைவர்களும், குருக்களும், லேவியர்களும், திருநூல் வல்லுநரான எஸ்ராவிடம் திருச்சட்டத்தின் சொற்களைக் கற்றுக்கொள்ளக் கூடி வந்தார்கள்.
14 அப்பொழுது அவர்கள், “ஏழாம் மாதத் திருவிழாக் காலத்தில் இஸ்ரயேல் மக்கள் கூடாரங்களில் தங்கியிருக்க வேண்டும்” என்று ஆண்டவர் மோசே வழியாகத் தந்த கட்டளை திருச்சட்டத்தில் எழுதியிருக்கக் கண்டார்கள்.
15 ஆகையால், “திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, கூடாரங்கள் அமைப்பதற்கு மலைகளுக்குச் சென்று ஒலிவக் கிளைகள், காட்டு ஒலிவக் கிளைகள், மிருதுச்செடி கிளைகள், பேரீச்ச ஓலைகள் மற்றும் அடர்ந்த மரக் கிளைகளையும் கொண்டு வாருங்கள்” என்று தங்களுடைய நகரங்கள் எல்லாவற்றிலும் எருசலேமிலும் பறைசாற்றி அறிவிக்கச் செய்தார்கள்.
16 எனவே மக்கள் புறப்பட்டுச் சென்று, அவற்றைக் கொண்டு வந்தார்கள். ஒவ்வொருவரும், தம் வீட்டின் மேல்மாடியிலும் தங்கள் முற்றங்களிலும், கடவுளின் இல்லமுற்றங்களிலும், தண்ணீர் வாயில் வளாகத்திலும், எப்ராயிம் வாயில் வளாகத்திலும் தமக்குக் கூடாரங்கள் அமைத்துக் கொண்டார்கள்.
17 அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த சபையார் அனைவரும் கூடாரங்கள் அமைத்து அக்கூடாரங்களில் தங்கினர். நூனின் மகன் யோசுவாவின் காலத்திலிருந்து அன்றுவரை இஸ்ரயேல் மக்கள் இவ்விதம் செய்ததில்லை. அன்று பெருமகிழ்ச்சி நிலவியது.
18 எஸ்ரா முதல்நாள் தொடங்கிக் கடைசிநாள்வரை கடவுளின் திருச்சட்டநூலை உரக்க வாசித்தார். அவர்கள் ஏழு நாளளவும் திருவிழாக் கொண்டாடினர். சட்ட ஒழுங்கின்படி, எட்டாம் நாள் பெரும் சபையைக் கூட்டினர்.
8:14-15 லேவி 23:33-36, 39-43; இச 16:13-15. | https://bible.catholicgallery.org/tamil/etb-nehemiah-8 |
421 | நெகேமியா | நெகேமியா அதிகாரம் – 9 – திருவிவிலியம் | 1 சாக்கு உடை அணிந்து, புழுதியைத் தங்கள்மேல் பூசிக் கொண்டு நோன்பிருக்குமாறு அம்மாதத்தின் இருபத்து நான்காம் நாளன்று மக்கள் ஒன்று கூட்டப்பட்டனர்.
2 இஸ்ரயேல் இனத்தார் வேற்றினத்தாரிடமிருந்து பிரிந்து நின்றனர். எழுந்து நின்று தங்கள் பாவங்களையும், தங்கள் முன்னோரின் குற்றங்களையும் அறிக்கையிட்டனர்.
3 ஒவ்வொரு நாளும் பகலில் கால் பகுதியைத் தங்கள் இடத்திலேயே எழுந்து நின்று கடவுளாகிய ஆண்டவரின் திருச்சட்டநூலை வாசிப்பதிலும், மற்றொரு கால் பகுதியைத் தங்கள் பாவங்களை அறிக்கையிடுவதிலும், தங்கள் கடவுளாகிய ஆண்டவரைத் தொழுவதிலும் செலவழித்தனர்.
4 மீண்டும், லேவியரான ஏசுவா, பானி, கெத்மியேல், செபானியா, பூனி, செரேபியா, பானி, கெனானி ஆகியோர், படியின்மேல் நின்று கொண்டு உரத்த குரலில் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் கதறினார்கள்.
5 பின்பு, லேவியரான ஏசுவா, கத்மியேல், பானி, அசபினியா, செரேபியா, ஓதியா, செபானியா, பெத்தகியா எழுந்து, “என்றுமுள உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுங்கள்” என்றனர். அவர்கள் பதில்மொழியாக உரைத்தது. “எல்லாப் புகழ்ச்சிக்கும், வாழ்த்துக்கும் எட்டாத மாட்சி மிகு உமது பெயர் போற்றி! போற்றி!”
மக்களின் மன்றாட்டு
6 நீர் ஒருவரே ஆண்டவர்! நீரே வானத்தையும், விண்வெளி வானங்களையும், வான அணிகளையும், நிலத்தையும், அதிலுள்ள அனைத்தையும், கடலையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்தவர்! அவற்றையெல்லாம் வாழ வைப்பவர்! வானக அணிகள் உமக்கு அடிபணிகின்றன.
7 ஆபிராமைத் தேர்ந்தெடுத்து, ஊர் என்ற கல்தேயர்களின் நகரினின்று வெளிக்கொணர்ந்து அவர் பெயரை ஆபிரகாம் என்று மாற்றியமைத்த கடவுளாகிய ஆண்டவர் நீரே!
8 உம்மீது பற்றுக் கொண்ட அவருடைய இதயத்தைக் கண்டீர்! கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், எபூசியர், கிர்காசியர் ஆகியோரின் நாட்டை அவருடைய வழி மரபினருக்குத் தருவதாக அவரோடு உடன்படிக்கை செய்தீர்! நீர் நீதி உள்ளவர்! எனவே உமது வார்த்தையை நிறைவு செய்தீர்!
9 எகிப்தில் வாழ்ந்த எங்கள் மூதாதையரின் துன்பத்தைக் கண்ணோக்கினீர். செங்கடலில் அவர்களின் கூக்குரலுக்குச் செவிசாய்த்தீர்!
10 பார்வோனிடமும், அவன் அலுவலர்கள் எல்லோரிடமும் அவனது நாட்டின் அனைத்து மக்களிடமும் அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் விளங்கச் செய்தீர்! ஏனெனில் எம் மூதாதையர்களை அவர்கள் செருக்குடன் நடத்தினார்கள் என்பதை நீர் அறிவீர்! இந்நாளில் இருப்பது போல் உமது பெயரை நீர் விளங்கச் செய்தீர்!
11 அவர்கள்முன் கடலைப் பிளந்தீர்; எனவே, கடலின் நடவே உலர்ந்த தரையில் அவர்கள் கடந்து போனார்கள். அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையோ கல்லைப் போன்று ஆழ்கடலின் பாதாளத்திற்குள் வீழ்த்தினீர்!
12 நீர் அவர்களைப் பகலில் மேகத் தூணினால் வழி நடத்தினீர்! இரவில் நெருப்புத் தூணினால் அவர்களின் வழிக்கு ஒளி கொடுத்து அதில் நடக்கச் செய்தீர்!
13 நீர் சீனாய் மலை இறங்கினீர்! விண்ணிலிருந்து அவர்களோடு பேசினீர்! நேர்மையான நீதி நெறிகளையும், உண்மையான சட்டங்களையும், நல்ல நியமங்களையும் விதிமுறைகளையும் தந்தீர்!
14 புனிதமான ஓய்வு நாளைப் பற்றி அவர்களுக்குக் கற்பித்தீர்! விதிமுறைகளையும், நியமங்களையும், சட்டங்களையும், உமது அடியாராகிய மோசே வழியாக அவர்களுக்குக் கட்டளையிட்டீர்!
15 அவர்கள் பசியாயிருக்கையில், விண்ணிலிருந்து உணவு அளித்தீர்! அவர்கள் தாகமாயிருக்கையில், பாறையிலிருந்து தண்ணீர் புறப்படச் செய்தீர்! நீர் அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்திருந்த நாட்டை அடைந்து அவர்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறு பணித்தீர்.
16 ஆனால் அவர்களும், எங்கள் முன்னோரும், செருக்குடன் நடந்து வணங்காக் கழுத்தினராகி, உமது விதிமுறைகளுக்குச் செவி கொடுக்கவில்லை.
17 அவர்கள் செவி கொடுக்க மறுத்ததுமல்லாமல், நீர் அவர்களிடம் செய்திருந்த உமது அருஞ்செயல்களையும் நினைத்துப் பார்க்கவுமில்லை. மாறாக, வணங்காக் கழுத்தினராய்க் கலகம் செய்து ஒரு தலைவரை ஏற்படுத்தி, அடிமை வாழ்வுக்கு மீண்டும் செல்ல முற்பட்டனர். தயை, சாந்தம், இரக்கம், நீடிய பொறுமை மற்றும் பரிவிரக்கம் கொண்ட கடவுளான நீரோ அவர்களைத் தள்ளிவிடவில்லை.
18 அவர்கள் ஒரு வார்ப்புக் கன்றுக் குட்டியைச் செய்து, ‘உங்களை எகிப்திலிருந்து மீட்டுவந்த உங்கள் கடவுளைப் பாருங்கள்’ என்று பெரும் இறைநிந்தனைகளைச் செய்த போதும்,
19 நீர் உமது பேரிரக்கத்தினால் அவர்களைப் பாலை நிலத்திலே கைவிட்டு விடவில்லை, அவர்களைப் பகலில் வழிநடத்தி வந்த மேகத் தூணையும், அவர்கள் செல்ல வேண்டிய பாதையை இரவில் காட்டி வந்த நெருப்புத்தூணையும் அவர்களை விட்டு விலக்கவுமில்லை.
20 அவர்களுக்கு அறிவு புகட்ட உமது நல்ல ஆவியைக் கொடுத்தீர். உமது மன்னாவை அவர்களுக்கு உண்ணக் கொடுக்க நீர் மறுக்கவில்லை. அவர்களின் தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்தீர்.
21 நாற்பது ஆண்டுகளாய்ப் பாலை நிலத்தில் அவர்களைப் பராமரித்தீர். அவர்களுக்கு எந்தக் குறையுமில்லை. அவர்கள் ஆடைகள் கிழிந்து போகவுமில்லை. அவர்கள் கால்கள் கொப்பளிக்கவுமில்லை.
22 அரசுகளையும், மக்களினங்களையும் அவர்களிடம் ஒப்புவித்தீர். அவற்றின் எல்லைவரையும் பங்கிட்டளித்தீர். இவ்வாறு அவர்கள் சீகோன் நாட்டையும், எஸ்போன் அரசனின் நாட்டையும் ஓகு அரசனின் நாடான பாசானையும் உரிமையாக்கிக் கொண்டனர்.
23 அவர்களின் மக்களை விண்மீன்களைப் போன்று பெருகச் செய்தீர். அவர்கள் உட்புகுந்து உரிமையாக்கிக் கொள்ளும்படி அவர்களின் மூதாதையர்களுக்கு வாக்களித்திருந்த நாட்டிற்கு அவர்களை அழைத்துவந்தீர்.
24 அவர்களின் மக்கள் அங்குவந்து, அந்நாட்டை உரிமையாக்கிக் கொண்டனர். அவர்களின் முன்னிலையில் அந்நாட்டின் மக்களான கானானியரை அடக்கினீர். அவர்களையும் அவர்கள் மன்னர்களையும், நாட்டின் மக்களையும் அவர்கள் கையில் ஒப்புவித்து, அவர்களின் விருப்பத்தின்படி நடத்த விட்டு விட்டீர்.
25 எனவே அவர்கள் அரண்சூழ் நகர்களையும் செழிப்பான நிலத்தையும் கைப்பற்றினர். எல்லாவித உடைமைகளையும் கொண்ட வீடுகளையும், வெட்டப்பட்ட கிணறுகளையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், கனிதரும் மிகுதியான மரங்களையும் சொந்தமாக்கிக் கொண்டனர். உண்டு, நிறைவு கொண்டு, கொழுத்துப் போயினர். மிகுதியான உமது நன்மைத்தனத்தை அனுபவித்து மகிழ்ந்தனர்.
26 இருப்பினும், அவர்கள் கீழ்ப்படியாது, உமக்கு எதிராகச் கிளர்ச்சி செய்தனர்; உமது திருச்சட்டத்தைப் புறக்கணித்தனர். உம்மை நோக்கித் திரும்பும்படி அவர்களை எச்சரித்த உமது இறைவாக்கினர்களைக் கொன்றனர். இவ்வாறு பெரும் இறை நிந்தனைகளைச் செய்தார்கள்.
27 அப்பொழுது நீர் அவர்களை எதிரிகளிடம் கையளித்தீர். அவர்கள் அவர்களைத் துன்புறுத்தினர். தங்களது துன்ப வேளையில் உம்மை நோக்கிக் கூக்குரலிட்டனர். நீர் விண்ணிலிருந்து கேட்டருளினீர். அளவுகடந்த உமது இரகத்தினால் அவர்களுக்கு விடுதலைத் தலைவர்களைத் தந்து, அவர்களின் எதிரிகளிடமிருந்து விடுவித்தீர்.
28 அவர்கள் அமைதி கண்டபின்னர், உமது திருமுன் மீளவும் தீயது செய்யத் தலைப்பட்டனர். நீர் அவர்களை அவர்களின் எதிரிகளிடம் கையளித்தீர். எதிரிகள் அவர்களை அடக்கி ஆண்டார்கள். எனவே மீண்டும் உம்மிடம் கூக்குரலிட்டார்கள். நீரோ விண்ணிலிருந்து செவிசாய்த்து உமது பேரிரக்கதின்படி பலமுறை அவர்களுக்கு விடுதலையளித்தீர்.
29 உமது திருச்சட்டத்துக்கு திரும்பிவர அவர்களை நீர் எச்சரித்தீர். அவர்களோ செருக்குற்றவர்களாய் உமது விதிமுறைகளுக்குச் செவிசாய்க்காமல், உமது நீதிநெறிகளுக்கு எதிராகப் பாவம் செய்தனர். ஒருவர் அவற்றைக் கடைப்பிடித்தால் வாழ்வு பெறமுடியும். இருப்பினும், அவர்கள் பிடிவாதமாகப் புறக்கணித்தனர்; வணங்காக் கழுத்தினராக அடிபணிய மறுத்தனர்.
30 நீரோ பல்லாண்டுகளாய் அவர்கள்மேல் பொறுமையாய் இருந்தீர். இறைவாக்கினர்மூலம் உமது ஆவியால் அவர்களை எச்சரித்து வந்தீர். இருப்பினும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. எனவே நாடுகளின் மக்களுக்கு அவர்களைக் கையளித்தீர்.
31 ஆயினும் உமது பேரிரக்கத்தின் பொருட்டு, நீர் அவர்களை அழித்து, விடவுமில்லை. கைவிட்டு விடவுமில்லை; ஏனெனில், நீரே கனிவும் கருணையும் உள்ள கடவுள்.
32 எங்கள் கடவுளே! மேன்மை மிக்க வரும், வல்லவரும், அஞ்சுவதற்குரியவரும், உடன்படிக்கையையும், பேரிரக்கத்தையும் காப்பவருமான கடவுளே! அசீரிய மன்னர்களின் காலமுதல் இன்றுவரை, எங்களுக்கும் எங்கள் அரசர்களுக்கும் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் குருக்களுக்கும், எங்கள் இறைவாக்கினர்களுக்கும், எங்கள் மூதாதையர்களுக்கும், உம் மக்கள் எல்லாருக்கும் நேரிட்டுள்ள துன்பங்கள் அனைத்தையும் அற்பமாய் எண்ணாதேயும்.
33 எமக்கு நேரிட்டவை அனைத்திலுமே நீர் நீதியுள்ளவர். ஏனெனில் நீர் உமது சொல்லுறுதியைக் காட்டியுள்ளீர். நாங்களோ தீயவை செய்துள்ளோம்.
34 எங்கள் அரசர்களும், எங்கள் தலைவர்களும், எங்கள் குருக்களும், எங்கள் மூதாதையர்களும், உமது திருச்சட்டத்தைக் கடைப் பிடிக்கவில்லை. உமது விதிமுறைகளையும், நீர் அவர்களுக்குக் கொடுத்துள்ள எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தவில்லை.
35 உமது நல்லுளத்திற்கேற்ப அவர்களுக்குத் தந்துள்ள அவர்களின் நாட்டிலும், அவர்களுக்குத் தந்துள்ள பரந்த, செழிப்பான நிலத்திலும் அவர்கள் உமக்கு ஊழியம் செய்யவுமில்லை, தங்கள் தீச்செயல்களை விட்டு விலகவுமில்லை.
36 நாங்கள் இப்பொழுது அடிமைகளாக இருக்கிறோம். அதன் நற்கனிகளையும் நற்பலன்களையும் அனுபவிக்கும்படி நீர் எம் முன்னோருக்குக் கொடுத்த வளமிகு நாட்டிலேயே நாங்கள் அடிமைகளாக இருக்கிறோம்.
37 எங்கள் பாவங்களால் இந்நாட்டின் மிகுந்த விளைச்சல் நீர் எங்கள் மீது ஏற்படுத்தியுள்ள மன்னர்களுக்கே சேருகிறது. அவர்களோ தங்கள் விருப்பப்படி எங்களையும் எங்கள் கால்நடைகளையும் ஆட்டிப் படைக்கிறார்கள். நாங்களோ மிகுந்த வேதனையில் அமிழ்ந்துள்ளோம்.
ஒப்பந்தத்தில் மக்கள் கையொப்பமிடல்
38 இவற்றின்பொருட்டே நாங்கள் நிலையான உடன்படிக்கை செய்து அதை எழுதிவைத்திருக்கிறோம். எங்கள் தலைவர்கள், லேவியர்கள் மற்றும் குருக்கள் அதில் தங்களது முத்திரையை இட்டுள்ளார்கள்.
9:7 தொநூ 11:31; 12:1; 17:5.
9:8 தொநூ 15:18-21.
9:9 விப 3:7; 14:10-12.
9:10 விப 7:8-12:32.
9:11 விப 14:21-29; 15:4-5.
9:12 விப 13:21-22.
9:13-14 விப 19:18-23:33.
9:15 விப 16:4-5; 17:1-7; இச 1:21.
9:16-17 எண் 14:1-4; இச 1:33.
9:17 விப 34:6; எண் 14:18.
9:18 விப 32:1-4.
9:19-21 இச 8:2-4.
9:22 எண் 21:21-35.
9:23 தொநூ 15:5; 22:17; யோசு 3:14-17.
9:24 யோசு 11:23.
9:25 இச 6:10-11.
9:26-28 நீத 2:11-16.
9:29 லேவி 18:5.
9:30 2 அர 17:13-18; 2 குறி 36:15-16.
9:32 2 அர 15:19, 29; 17:3-6; எஸ்ரா 4:2,10. | https://bible.catholicgallery.org/tamil/etb-nehemiah-9 |
422 | நெகேமியா | நெகேமியா அதிகாரம் – 10 – திருவிவிலியம் | 1 முத்திரையிட்டவர்கள் பின் வருமாறு: அக்கலியாவின் மகனும், ஆளுநருமான நெகேமியா, செதேக்கியா,
2 குருக்கள்: செராயா அசரியா, எரேமியா,
3 பஸ்கூர், அமரியா, மல்கியா,
4 அத்தூசு, செபானியா, மல்லூக்கு,
5 ஆரிம், மெரேமோத்து, ஒபதியா, தானியேல், கின்னத்தோன், பாரூக்கு,
6 மெசுல்லாம், அபியா, மியாமின்,
7 மாசியா, பில்காய், செமாயா.
8 லேவியர்: அசனியாவின் மகன் ஏசுவா, ஏனாதாத்தின் புதல்வரில்
9 பின்னூய், கத்மியேல்,
10 இவர்களின் சகோதரர்கள் செபானியா, ஓதியா, கெலிற்றா, பெலாயா, ஆனான்,
11 மீக்கா, இரகோபு, அசபியா,
12 சக்கூர், செரேபியா, செபானியா,
13 ஓதியா, பானி, பெனினு.
14 மக்கள் தலைவர்: பாரோசு, பாகத்து மோவாபு, ஏலாம், சத்தூ, பானி,
15 புன்னி, அஸ்காது, பேபாய்,
16 அதோனியா, பிக்வாய், ஆதின்,
17 அத்தேர், எசேக்கியா, அசூர்,
18 ஓதியா, ஆசும், பெசாய்,
19 ஆரிபு, அனத்தோத்து, நேபாய்,
20 மக்பியாசு, மெசுல்லாம், ஏசீர்,
21 மெசபேல், சாதோக்கு யாதுவா,
22 பெலாத்தியா, ஆனான், அனாயா,
23 ஓசேயா, அனனியா, அசூபு,
24 அல்லோகேசு, பில்கா, சோபேக்கு,
25 இரகூம், மாசேயா,
26 அகியா, ஆனான், அனான்,
27 மல்லூக்கு, ஆரிம், பானா.
ஒப்பந்தம்
28 ஏனைய மக்களும், குருக்களும், லேவியரும், வாயிற்காப்போரும், பாடகர்களும், கோவிற் பணியாளர்களும், வேற்றின மக்களிடமிருந்து பிரிந்து கடவுளின் திருச்சட்டப்படி வாழ்ந்த அனைவரும், அவர்களின் மனைவியரும், புதல்வரும், புதல்வியரும், அறிவுத் தெளிவு அடைந்த அனைவரும்,
29 மேன்மக்களாகிய தங்கள் சகோதரர்களோடு சேர்ந்து, கடவுளின் ஊழியனான மோசே வழியாகக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியும் சாபமும் உள்ளிட்ட கடவுளின் திருசட்டத்தை ஏற்றுக் கடைப்பிடிப்பதாகவும், தம் தலைவராகிய ஆண்டவரின் அனைத்து விதிமுறைகளையும் நீதி நெறிகளையும், நியமங்களையும் காத்து நடப்பதாகவும் வாக்குறுதி தந்தார்கள்.
30 சிறப்பாக, “நாங்கள் வேற்றின மக்களுக்குப் பெண் கொடுக்கவும் மாட்டோம்; எங்கள் புதல்வருக்கு அவர்கள் பெண்களை எடுக்கவும் மாட்டோம்.
31 வேற்றின மக்கள் ஓய்வு நாளில் சரக்குகளையும், தானிய வகைகளையும் விற்கக் கொண்டு வந்தால், நாங்கள் அவர்களிடமிருந்து ஓய்வு நாளிலும், புனித நாளிலும் வாங்கமாட்டோம். ஏழாம் ஆண்டின் விளைச்சலை விட்டுக் கொடுப்போம்; எவ்விதக் கடனையும் திரும்பக் கேட்க மாட்டோம்.
32 காணிக்கை அப்பங்கள், அன்றாட உணவுப் படையல்கள், ஓய்வுநாள்கள் மற்றும் அமாவாசைகளில் செலுத்தும் வழக்கமான பலிகள், குறிக்கப்பட்ட திருவிழாக்கள், புனிதப் பொருள்கள், இஸ்ரயேலுக்காகச் செலுத்தவேண்டிய பாவம் போக்கும் பலிகள், எங்கள் கடவுளது கோவிலின் அனைத்து வேலைகள் ஆகியவற்றிற்காக
33 ஆண்டுக்கு நான்கு கிராம் வெள்ளியை* நாங்கள் கோவிலுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை விதிமுறையாக ஏற்படுத்திக் கொண்டோம்.
34 திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, எம் கடவுளாகிய ஆண்டவரின் பலிபீடத்தின்மீது எரிப்பதற்காக, ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில், எம் முன்னோரின் குல வரிசைப்படி, விறகுக் காணிக்கை எம் கடவுளின் கோவிலுக்குக் கொண்டுவர குருக்களும், லேவியரும், மக்களும் ஆகிய நாங்கள் சீட்டுப் போட்டுத் தெரிந்தெடுப்போம்.
35 எங்கள் நிலத்தின் முதற் பலனையும் எல்லா மரங்களின் முதற் கனிகளையும் ஆண்டுதோறும் ஆண்டவரின் இல்லத்திற்குக் கொண்டு வர நேர்ந்து கொண்டோம்.
36 திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி எங்கள் மக்களின் தலைப்பிள்ளைகளையும், எங்கள் கால்நடைகளின் தலைப்பேறுகளையும், அதாவது மாட்டு மந்தைகளின் தலைப்பேறுகளையும், ஆட்டுக் கிடைகளின் தலைப்பேறுகளையும், நம் இறைவனின் இல்லத்தில் பணி செய்யும் குருக்களிடம் கொண்டு வர நேர்ந்து கொண்டோம்.
37 மேலும், எங்களது முதல் பிசைந்த மாவையும், எங்கள் படையல்களையும், ஒவ்வொரு மரத்தின் கனிகளையும், திராட்சை இரசம், எண்ணெய் முதலியவற்றையும் குருக்களுக்காக, நம் கடவுளின் கோவில் அறைகளில் கொடுப்போம் என்றும், எங்கள் நிலப் பலனில் பத்தில் ஒரு பகுதியை லேவியருக்குக் கொடுப்போம் என்றும் நேர்ந்து கொண்டோம். ஆனால், அதை நாங்கள் உழைக்கும் ஒவ்வொரு நகரிலும் லேவியர் வசூல் செய்வர்.
38 பத்தில் ஒரு பகுதியை லேவியர் பெறும்போது, ஆரோனின் வழிமரபினரான குரு ஒருவர் லேவியரோடு இருக்கட்டும். லேவியர்கள் தங்கள் வசூலில் பத்தில் ஒரு பகுதியை நம் கடவுளின் கோவிலுக்கு கொண்டு வந்து, கருவூல அறைகளில் சேர்த்து வைக்கட்டும்.
39 ஏனெனில், அக்கருவூல அறைகளில்தான் இஸ்ரயேல் மக்களும், லேவியரும் கொடையாகக் கொடுத்த தானியம், திராட்சை இரசம், எண்ணெய் முதலியவற்றைச் சேர்த்து வைத்தனர். அங்கேதான் கோவில் திருப்பணிக்குரிய பாத்திரங்களும் இருந்தன. குருக்களும், பாடகர்களும், வாயிற்காவலரும், திருப்பணியாளர்களும் அங்கு இருந்து வந்தனர். ‘எங்கள் கடவுளின் கோவிலைப் புறக்கணிக்க மாட்டோம்’ என்று வாக்குறுதி அளித்தனர்.
10:30 விப 34:6; இச 7:3.
10:31 விப 23:10-11; லேவி 25:1-7; இச 15:1-2.
10:32 விப 30:11-16.
10:35 விப 23:19; 34:26; இச 26:2.
10:36 விப 13:2.
10:37 எண் 18:21.
10:38 எண் 18:26.
10:33 ‘செக்கேலில் மூன்றில் ஒரு பகுதி’ என்பது எபிரேய பாடம். | https://bible.catholicgallery.org/tamil/etb-nehemiah-10 |
423 | நெகேமியா | நெகேமியா அதிகாரம் – 11 – திருவிவிலியம் | எருசலேமில் வாழ்ந்தோர் பட்டியல்
1 மக்கள் தலைவர்கள் எருசலேமில் குடியிருந்தனர். ஏனைய மக்களில் பத்தில் ஒருவர் புனித நகரான எருசலேமில் வாழ்வதற்குக் கொண்டு வரப்படச் சீட்டுப் போட்டார்கள். மற்ற ஒன்பது பேர் தங்கள் நகர்களிலேயே வாழ்ந்தார்கள்.
2 எருசலேமில் மனமுவந்து வாழ முன்வந்த மனிதர்கள் அனைவரையும் மக்கள் வாழ்த்தினர்.
3 இஸ்ரயேல் மக்கள், குருக்கள், லேவியர்கள், கோவில் பணியாளர்கள், சாலமோனின் பணியாளரின் வழிமரபினர் ஆகியோர் யூதாவின் நகர்களில், ஒவ்வொருவரும் தங்கள் சொந்த மனைகளில் சொந்த நகர்களில் வாழ்ந்து வந்தார்கள்.
4 எருசலேமில் வாழ்ந்து வந்த மாநிலத் தலைவர்கள் பின்வருமாறு; இவர்கள் யூதா புதல்வர் சிலரும், பென்யமின் புதல்வர் சிலரும் ஆவர். யூதாவின் புதல்வர் பின்வருமாறு; உசியா மகன் அத்தாயா — உசியா செக்கரியாவின் மகன்; இவர் அமரியாவின் மகன்; இவர் செபற்றியாவின் மகன்; இவர் மகலலேலின் மகன். பேரேட்சின் வழிமரபினர்:
5 மாவேசியா பாரூக்கின் மகன்; இவர் கொல்கோசியின் மகன்; இவர் அசாயாவின் மகன்; இவர் அதாயாவின் மகன்; இவர் யோயாரிபின் மகன்; இவர் செக்கரியாவின் மகன்; இவர் சீலோனியின் மகன்.
6 எருசலேமில் குடியிருந்த பேரேட்சியின் புதல்வர் நானூற்று அறுபத்து எட்டு மாபெரும் வீரர்கள்.
7 பென்யமினின் புதல்வர் இவர்களே; சல்லூ மெசுல்லாமின் மகன்; இவர் யோபேதுவின் மகன்; இவர் பெத்யாவின் மகன்; இவர் கொலயாவின் மகன்; இவர் மாசேயாவின் மகன்; இவர் இத்தியேலின் மகன்; இவர் ஏசாயாவின் மகன்.
8 அவருக்குப் பின் கபாயும் சல்லாயும். இவர்கள் மொத்தம் தொள்ளாயிரத்து இருபத்தெட்டுப் பேர்.
9 சிக்ரியின் மகன் யோவேல் அவர்களுக்குத் தலைவராய் இருந்தார். அசனுவாவின் மகன் யூதா மற்றோர் ஊருக்குத் தலைவராக விளங்கினார்.
10 குருக்கள்: யோயாரிபு மகன் எதாயா, யாக்கின்;
11 செராயா; இவர் இல்க்கியாவின் மகன்; இவர் மெசுல்லாவின் மகன்; இவர் சாதோக்கின் மகன்; இவர் மெரயோத்தின் மகன்; இவர் கோவில் மேற்பார்வையாளரான அகித்தூபின் மகன்.
12 கோவில் திருப்பணி செய்துவந்த இவர்களுடைய சகோதரர் எண்ணூற்று இருபத்திரண்டு பேர். அதாயா எரோகாமின் மகன்; இவர் பெலலியாவின் மகன்; இவர் அம்சியின் மகன்; இவர் செக்கரியாவின் மகன்; இவர் பஸ்கூரின் மகன்; இவர் மல்கியாவின் மகன்.
13 குலத்தலைவர்களான இவர் சகோதரர் இருநூற்று நாற்பத்திரண்டு பேர். அம்சசாய் அசரியேலின் மகன்; இவர் அகிசாயின் மகன்; இவர் மெசில்ல மோத்தின் மகன்; இவர் இம்மேரின் மகன்.
14 படைவீரர்களான அவர்களுடைய சகோதரர் நூற்று இருபத்து எட்டு. அக்கெதோலியின் மகன் சப்தியேல் அவர்களுக்குத் தலைவராக இருந்தார்.
15 லேவியர்: செமாயா; இவர் அசூபாவின் மகன்; இவர் அசபியாவின் மகன்; இவர் பூனியின் மகன்.
16 கடவுளின் இல்லத்தின் வெளிப்புற வேலைக்குப் பொறுப்பானவர்களாகவும், லேவியருக்குத் தலைவர்களாகவும் இருந்த சபத்தாய்; யோசபாத்து;
17 மன்றாட்டில் நன்றிப்பண் ஆரம்பிக்கும் தலைவர் மத்தனியா; இவர் மீக்காவின் மகன்; இவர் சப்தியின் மகன்; இவர் ஆசாபின் மகன்; பக்புக்கியா அவருடைய சகோதரரில் இரண்டாம் இடத்தை வகித்தார். அப்தா சம்முவாவின் மகன்; இவர் காலாயின் மகன்; இவர் எதுத்தூனின் மகன்.
18 புனித நகரில் வாழ்ந்த லேவியர் மொத்தம் இருநூற்று எண்பத்துநான்கு பேர்.
19 வாயிற்காவலர்: வாயில் காக்கும் அக்கூபு, தல்மோன், இவர்களுடைய சகோதரர் மொத்தம் நூற்று எழுபத்திரண்டு பேர்.
20 ஏனைய இஸ்ரயேல் மக்களும், குருக்களும், லேவியரும், யூதாவின் எல்லா நகர்களிலும் அவரவர் தம் உரிமைச் சொத்தில் குடியிருந்தனர்.
21 கோவில் பணியாளர் ஒபேலில் குடியிருந்தனர். சிகாவும் கிஸ்பாவும் கோவில் பணியாளருக்குத் தலைவர்களாக இருந்தனர்.
22 எருசலேமில் வாழ்ந்துவந்த லேவியருக்குத் தலைவராயிருந்த உசி, பானின் மகன்; இவர் அசபியாவின் மகன்; இவர் மத்தனியாவின் மகன்; இவர் மீக்காவின் மகன்; இவர் கடவுளின் கோவில் பணிசெய்கின்ற பாடகர்களாகிய ஆசாபின் மக்களில் ஒருவர்.
23 பாடகர்களைக் குறித்து அரச கட்டளை ஒன்று இருந்தது. அதன்படி அவர்களின் அன்றாடப் படி வரையறுக்கப்பட்டிருந்தது.
24 மேலும் யூதாவின் மகனான செராகின் வழித்தோன்றிய மெசசபேலின் மகன் பெத்தகியா மக்களைக் குறித்த எல்லாக் காரியங்களிலும் அரசருக்கு உதவியாக இருந்தார்.
மற்ற ஊர்களிலும் நகர்களிலும் வாழ்ந்தோர் பட்டியல்
25 சிற்றூர்கள், அவைகளைச் சார்ந்த நிலங்களைப்பற்றிய குறிப்பு பின்வருமாறு: யூதா மக்கள் கிரியத்து அர்பாவிலும் அதன் குடியிருப்புகளிலும், தீபோனிலும் அதன் குடியிருப்புகளிலும் எக்கபட்சவேலிலும் அதன் நிலங்களிலும் குடியிருந்தனர்;
26 மேலும் ஏசுவாபிலும், மோலதாவிலும், பெத்பலேத்திலும்
27 அட்சர்சூவாவிலும் பெயேர்சபாவிலும் அதன் குடியிருப்புகளிலும்,
28 சிக்லாசிலும், மெக்கோனாவிலும், அதன் குடியிருப்புகளிலும்,
29 ஏன்ரிம்மோனிலும், சோராவிலும், யார்முத்திலும்,
30 சானோவாகிலும், அதுல்லாமிலும், அதன் குடியிருப்புகளிலும், இலாக்கிசிலும் அதன் நிலங்களிலும், அசேக்காவிலும் அதன் குடியிருப்புகளிலும், ஆகப் பெயேர்செபா முதல் இன்னோம் பள்ளத்தாக்கு வரை குடியிருந்தனர்.
31 பென்யமின் மக்கள் கெபா முதல் மிக்மாசிலும், அயாவிலும், பெத்தேலிலும் அதன் குடியிருப்புகளிலும்,
32 அனத்தோத்திலும், நோபிலும் அனனியாவிலும்
33 ஆட்சோரிலும், இராமாவிலும், கித்தயிமிலும்
34 ஆதிது, சேபோயிம் நேபல்லாற்று,
35 லோது, ஒனோ என்ற ஊர்களிலும், தொழிலாளர் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தனர்.
36 லேவியரில் சில பிரிவினர் யூதாவிலும் பென்யமினிலும் குடியிருந்தனர்.
11:3 நெகே 7:73. | https://bible.catholicgallery.org/tamil/etb-nehemiah-11 |
424 | நெகேமியா | நெகேமியா அதிகாரம் – 12 – திருவிவிலியம் | குருக்கள் மற்றும் லேவியர் பட்டியல்
1 செயல்தியேலின் மகன் செருபாபேலுடனும், ஏசுவாவுடனும், வந்த குருக்களும், லேவியரும் பின்வருமாறு: செராயா, எரேமியா, எஸ்ரா,
2 அமரியா, மல்லூக்கு, அத்தூசு,
3 செக்கனியா, இரகூம், மெரமோத்து,
4 இத்தோ, கின்னத்தோய், அபியா,
5 மியாமின், மாதியா, பில்கா,
6 செமாயா, யோயாரிபு, எதாயா,
7 சல்லூ, அமோக்கு, இல்க்கியா, எதாயா ஆகியோர் ஏசுவாவின் நாள்களில், குருக்களுக்கும் — தங்கள் சகோதரர்களுக்கும் தலைவர்களாக விளங்கினர்.
8 லேவியர்களில் ஏசுவா, பின்னூய், கத்மியேல், செரேபியா, யூதா, மத்தனியா ஆகியோரும், இவர்கள் சகோதரர்களும் நன்றிப் பாடல்களுக்குப் பொறுப்பாளர்களாக இருந்தார்கள்.
9 பக்புக்கியாவும், உன்னியும் இவர்களின் சகோதரர்களும் அவர்களுக்கு எதிரே நின்று கவனித்துக் கொண்டு வந்தார்கள்.
தலைமைக்குரு ஏசுவாவின் வழிவந்தோர்
10 ஏசுவாவுக்கு யோவாக்கிம் பிறந்தார்; யோவாக்கிமுக்கு எலியாசிபு பிறந்தார்; எலியாசிபுக்கு யோயாதா பிறந்தார்.
11 யோயாதாவுக்கு யோனத்தான் பிறந்தார்; யோனத்தானுக்கு யாதுவா பிறந்தார்.
குருகுலத் தலைவர்கள்
12 யோவாக்கிமின் நாள்களில் குலத் தலைவர்களாக இருந்த குருக்கள் பின்வருமாறு; செராயா வழிவந்த மெராயா; எரேமியா வழிவந்த அனனியா;
13 எஸ்ரா வழிவந்த மெசுல்லாம்; அமரியா வழிவந்த யோகனான்;
14 மல்லூக்கி வழிவந்த யோனத்தான்; செபனியா வழி வந்த யோசேப்பு;
15 ஆரிம் வழிவந்த அத்னா; மெரயோத்து வழிவந்த எல்க்காய்;
16 இத்தோ வழிவந்த செக்கரியா; கின்னத்தோன் வழிவந்த மெசுல்லாம்;
17 அபியா வழிவந்த சிக்ரி; மின்யமீன், மோவதியா, பில்த்தாய்;
18 பில்கா வழிவந்த சம்முவா; செமாயா வழிவந்த யோனத்தான்;
19 யோயாரிபு வழிவந்த மத்தனாய்; எதாயா வழிவந்த உசீ;
20 சல்லாம் வழிவந்த கல்லாய்; அமோக்கு வழிவந்த ஏபேர்;
21 இல்க்கியா வழிவந்த அசுபியா; யாதாய் வழிவந்த நத்தானியேல் ஆவர்.
குருக்கள் மற்றும் லேவியரின் பதிவேடு
22 லேவியரில், எல்யாசிபு, யோயாதா, யோகானான், யாதுவா ஆகிய தலைமைக் குருக்களின் காலத்திலிருந்து பாரசீகரான தாரியுவின் காலம் வரையுள்ள லேவியர் குலத் தலைவர்களும் குருக்களும் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
23 லேவியின் மக்களான குலத்தலைவர்கள், குறிப்பேட்டில் எல்யாசிபின் மகன் யோகனானின் நாள்கள் வரை பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
கோவில் பணியின் பிரித்தளிப்பு
24 லேவியரின் தலைவர்களான அசபியா, சேரேபியா, கத்மியேலின் மகன் ஏசுவா ஆகியோரும் அவர்களுக்கு எதிரில் அவர்களின் சகோதரரும் நின்று கொண்டு, கடவுளின் மனிதர் தாவீது கொடுத்த கட்டளையின்படி, புகழும் நன்றியும் முறைமுறையாகச் செலுத்தி வந்தனர்.
25 மத்தனியா, பக்புக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூபு ஆகிய வாயிற்காப்போர், வாயிலருகில் இருந்த கருவூல அறைகளைக் காத்து வந்தனர்.
26 இவர்கள் யோசாதாக்கிற்குப் பிறந்த ஏசுவாவின் மகன் யோவாக்கிமின் காலத்திலும், ஆளுநர் நெகேமியா, குருவும் சட்ட வல்லுநருமான எஸ்ரா ஆகியோரின் காலத்திலும் வாழ்ந்தனர்.
எருசலேம் மதிலின் அர்ப்பணம்
27 எருசலேம் மதிலின் அர்ப்பண நாள் வந்தபோது லேவியர்களை எல்லா இடங்களிலிருந்தும் தேடி எருசலேமுக்குக் கொண்டு வந்தார்கள். ஏனெனில், மதில் அர்ப்பணம் மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும், கைத்தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகியவை ஒலிக்கப் பாடல்களுடனும் கொண்டாட வேண்டியிருந்தது.
28 பாடகர்கள், எருசலேமைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் நெற்றோபாயரின் சிற்றூர்களிலிருந்தும்,
29 பெத்கில்காலிலிருந்தும், கேபா, அஸ்மவேத்து ஆகிய பகுதிகளிலிருந்தும் ஒன்று சேர்க்கப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள் எருசலேமைச் சுற்றிக் குடியிருப்புகள் அமைத்திருந்தார்கள்.
30 குருக்களும் லேவியரும் தங்களைத் தூய்மை செய்துகொண்டு மக்களையும் வாயில்களையும் மதில்களையும் தூய்மைப்படுத்தினர்.
31 அப்பொழுது நான், யூதாவின் தலைவர்களை மதில்மேல் ஏறச் சொல்லி, புகழ்பாட இரண்டு பாடகர் குழுக்களை நிறுத்தினேன். ஒரு குழுவினர் வலப்பக்கம் இருந்த குப்பைமேட்டு வாயிலை நோக்கி, மதிலின்மேல் பவனியாகச் சென்றார்கள்.
32 அவர்களுக்குப் பின்னால் ஒசயாவும், யூதாவின் தலைவர்களில் பாதிப்பேரும்,
33 அசரியா, எஸ்ரா, மெசுல்லாம்,
34 யூதா, பென்யமின், செமாயா, எரேமியா ஆகியோரும் சென்றனர்.
35 மேலும் எக்காளம் ஏந்தி இருந்த குருத்துவப் புதல்வர்கள்; ஆசாபு வழி வந்த சக்கூருக்குப் பிறந்த மீக்காயாவின் மைந்தனான மத்தனியாவின் புதல்வனான செமாயாவின் மைந்தனான யோனத்தானின் மகன் செக்கரியாவும்,
36 அவர் சகோதரர்களான செமாயா, அசரியேல், மில்லலாய், கில்லேல், மாவாய், நெத்தனேல், யூதா, அனானி என்பவர்களும் கடவுளின் மனிதர் தாவீதின் இசைக்கருவிகளை ஏந்தியிருந்தனர். நீதிச் சட்ட வல்லுநரான எஸ்ரா அவர்களுக்கு முன்பாகச் சென்றார்.
37 அவர்கள் ஊருணி வாயிலைக் கடந்து தங்களுக்கு எதிரே இருந்த தாவீது நகரின் படிகளின் வழியாக மேலே சென்று தாவீதின் அரண்மணைக்கு மேலே செல்லும் மதிற்சுவரின் படிகளைக் கடந்து கிழக்கே இருந்த தண்ணீர் வாயில்வரை சென்றனர்.
38 இரண்டாவது பாடற் குழுவினர் இடப்பக்கமாக நடந்து செல்லுகையில், நானும் மக்களில் பாதிப்பேரும் மதிலின் மேல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றோம். சூளைக் காவல் மாடத்தைக் கடந்து அகன்ற மதில்வரை வந்தோம்.
39 எப்ராயிம் வாயில்மேலும், பழைய வாயில்மேலும், மீன்வாயில்மேலும், அனனியேல் காவல் மாடம், மேயா காவல் மாடம் ஆகியவை வழியாகவும் ஆட்டு வாயிலை அடைந்தோம். அவர்களோ ‘காவலர்’ வாயிலில் நின்று கொண்டார்கள்.
40 பின்பு, இரண்டு பாடகர் குழுவினர்களும் கடவுளின் இல்லத்தில் நின்றுகொண்டார்கள். நானும் என்னோடு அலுவலர்களில் பாதிப்பேரும் அங்கு இருந்தோம்.
41 குருக்களில் எலியாக்கிம், மாசேயா, மின்யமின், மீக்காயா, எலியோனாய், செக்கரியா, அனனியா ஆகியோர் எக்காளம் தாங்கி இருந்தனர்.
42 மாசேயா, செமாயா, எலயாசர், உசீ, யோகனான், மல்கியா, ஏலாம், ஆசேர் ஆகியோரும் நின்றனர். பாடகர்களும், அவர்களின் தலைவர் இஸ்ரகியாவும், உரக்கப் பாடினார்கள்.
43 அன்று அவர்கள் மிகுதியாகப் பலி செலுத்தி மகிழ்ந்தனர். ஏனெனில், கடவுள் அவர்களைப் பெரும் மகிழ்ச்சியால் நிரப்பினார். அவர்களின் மனைவியரும் பிள்ளைகளும் மகிழ்ச்சி கொண்டாடினர். எருசலேமின் ஆரவாரம் வெகுதூரம்வரை கேட்டது.
கோவில் வழிபாட்டிற்கான ஏற்பாடுகள்
44 கருவூலம், படையல்கள், முதற்கனி, பத்திலொரு பகுதி ஆகியவைகளுக்கான அறைகளின் பொறுப்பாளர்களையும், திருச்சட்டத்தின்படி, குருக்களுக்கும் லேவியருக்கும் உரிய பகுதிகளை நகர்களின் வயல்களில் தண்டல் செய்யும் ஆள்களையும் அன்று நியமித்தார்கள். ஏனெனில் அங்கே பணிபுரிந்த குருக்களையும் லேவியர்களையும் குறித்து யூதா மகிழ்ச்சி கொண்டது.
45 தாவீது, அவருடைய மகன் சாலமோன் ஆகியோரின் கட்டளைப்படி, இவர்கள் தங்கள் கடவுளின் பணியிலும், தூய்மை செய்யும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர். அவ்வாறே பாடகர்களும் வாயிற்காப்போரும் பணி செய்தனர்.
46 ஏனெனில், தாவீது, ஆசாபு ஆகியோரின் பழங்காலத்திலிருந்தே பாடகர் தலைவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கடவுளுக்குரிய புகழ்ப் பாடல்களும் நன்றிப் பாடல்களும் இருந்தன.
47 மேலும் செருபாபேலின் நாள்களிலிருந்தும் நெகேமியாவின் நாள்களிலிருந்தும், இஸ்ரயேல் மக்கள் யாவரும், பாடகர்களுக்கும், வாயிற்காப்போருக்கும் உரிய பகுதிகளை நாள்தோறும் கொடுத்து வந்தனர். அவர்கள் லேவியர்க்கு உரியதைப் பிரித்து வைத்தனர். லேவியர் ஆரோனின் மக்களுக்கு உரியதைப் பிரித்து வைத்தனர்.
12:45 1 குறி 25:1-8; 26:12. | https://bible.catholicgallery.org/tamil/etb-nehemiah-12 |
425 | நெகேமியா | நெகேமியா அதிகாரம் – 13 – திருவிவிலியம் | வேற்றினத்தார் விலக்கப்படல்
1 அந்நாளில் மோசேயின் நூலை மக்கள் கேட்கும்படி உரக்கப் படித்தனர். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருப்பதைக் கண்டனர்: “அம்மோனியரும் மோவாபியரும் என்றுமே கடவுளின் சபைக்குள் நுழையக் கூடாது.
2 ஏனெனில் அவர்கள் இஸ்ரயேல் மக்களை அப்பத்தோடும் நீரோடும் சந்திக்காது, அவர்களைச் சபிக்குமாறு பிலயாமுக்குக் கையூட்டுக் கொடுத்தனர். ஆனால் எங்கள் கடவுள் சாபத்தை ஆசியாக மாற்றிவிட்டார்”.
3 திருச்சட்டத்தைக் கேட்டவுடன் அவர்கள் எல்லா வேற்றினத்தாரையும் இஸ்ரயேல் மக்களிடமிருந்து பிரித்து விட்டனர்.
நெகேமியாவின் சீர்திருத்தங்கள்
4 இதற்குமுன் தோபியாவுக்கு உறவினரான குரு எல்யாசிபிடம் எங்கள் கடவுளின் இல்லக் கருவூல அறைகள் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
5 எனவே இவர் தோபியாவுக்குப் பெரியதோர் அறை ஒன்றைக் கொடுத்திருந்தார். அங்கே தான் முன்பு படையல்களும், சாம்பிராணியும், பாத்திரங்களும், லேவியர், பாடகர், வாயிற்காப்போர் ஆகியோருக்குக் கட்டளைப்படி கொடுக்கப்பட்ட பத்திலொரு பகுதியான தானியம், திராட்சை இரசம், எண்ணெய் முதலியவையும் குருக்களைச் சேரவேண்டிய காணிக்கைகளும் வைக்கப்பட்டிருந்தன.
6 இவை எல்லாம் நடந்தபோது நான் எருசலேமில் இல்லை. ஏனெனில் பாபிலோனிய மன்னர் அர்த்தக்சஸ்தாவின் முப்பத்து இரண்டாம் ஆண்டில் நான் மன்னரிடம் சென்றேன். சில காலத்துக்குப் பின் மன்னரிடம் நான் விடைபெற்றுத் திரும்பி வந்தேன்.
7 எல்யாசிபு தோபியாவுக்குக் கடவுளின் இல்ல முற்றத்தில் ஓர் அறை கொடுத்திருந்ததால் விளைந்த தீமையை நான் எருசலேமுக்கு வந்தபோது கண்டுபிடித்தேன்.
8 நான் மிகவும் சீற்றமுற்று, தோபியாவின் வீட்டுப் பாத்திரங்களை அறைக்கு வெளியே எறிந்தேன்.
9 பின்னர் நான் கட்டளையிட்டபடி அவர்கள் அறைகளைத் துப்புரவு செய்தார்கள். பிறகு நான் கடவுளின் இல்லத்துப் பாத்திரங்களையும், காணிக்கையையும், சாம்பிராணியையும் அங்குத் திரும்பக் கொண்டுவரச் செய்தேன்.
10 மேலும் லேவியருக்குச் சேர வேண்டிய காணிக்கைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்றும், இதனால் அங்குப் பணிபுரிந்து வந்த லேவியரும் பாடகரும் அவரவர் தம் நிலங்களுக்கு ஓடிப்போய் விட்டனர் என்றும் அறிந்தேன்.
11 அப்பொழுது அலுவலர்களைக் கடிந்துகொண்டு, அவர்களிடம் “கடவுளின் கோவில் கைவிடப்பட்டுக் கிடப்பதேன்?” என்று கேட்டேன். பின்பு அவர்களை ஒன்றுகூட்டி, ஒவ்வொருவரும் தம் கடமையைச் செய்யுமாறு பணித்தேன்.
12 அதன்பின் யூதாவின் மக்கள் அனைவரும் தானியத்தையும், திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றில் பத்திலொரு பங்கையும் கருவூல அறைக்குக் கொண்டு வந்தனர்.
13 குரு செலேமியாவையும், மறை நூல் வல்லுநர் சாதோக்கையும், லேவியர் பெதாயாவையும் கருவூலங்களுக்குப் பொருளாளராகவும், மத்தனியாவுக்குப் பிறந்த சக்கூரின் மகனான அனானை அவர்களுக்கு உதவியாளராகவும் நியமித்தேன். ஏனெனில் அவர்கள் நேர்மையானவர்கள் என்று கருதப்பட்டார்கள். தங்கள் சதோதரர்களுக்குப் பங்கிட்டு அளிப்பதே அவர்கள் கடமையாகும்.
14 ‘என் கடவுளே! இதன் பொருட்டு என்னைக் கண்ணோக்கும். என் கடவுளின் கோவிலுக்கும் அதன் திருப்பணிக்கும் அடியேன் உண்மையாய்ச் செய்துள்ளதை மறவாதேயும்’.
15 அக்காலத்தில் யூதா மக்கள் ஓய்வு நாளில் திராட்சை ஆலைகளில் வேலை செய்வதையும், தானியப் பொதிகள் கொண்டு வந்து கழுதைகள் மீது சுமத்துவதையும், திராட்சை இரசம், திராட்சைப் பழங்கள், அத்திப் பழங்கள் இன்னும் பலவித சுமைகளை ஓய்வு நாளில் எருசலேமுக்குக் கொண்டு வருவதையும் கண்டேன். அன்று உணவுப் பொருள் விற்பதை நான் கண்டித்தேன்.
16 மேலும், அங்கு வாழ்ந்து வந்த தீர் நகர மக்கள், மீன் மற்றும் வணிகப் பொருள்களை யூதா மக்களுக்கும் எருசலேமில் வாழ்வோருக்கும் ஓய்வுநாளில் விற்றார்கள்.
17 எனவே யூதாவின் தலைவர்களைக் கடிந்து கொண்டு நான் அவர்களிடம் கூறியது: “எத்துணைத் தீமையான செயலை நீங்கள் செய்கிறீர்கள்? நீங்கள் ஓய்வு நாளைத் தீட்டுப்படுத்தலாமா?
18 உங்கள் மூதாதையர் இவ்வாறு செய்ததால் அல்லவோ நம் கடவுள் நம் மீதும், இந்நகர் மீதும் இத்தீமையெல்லாம் வரச் செய்தார். இருப்பினும், ஒய்வு நாளை நீங்கள் மீறுகிறீர்கள். இஸ்ரயேல்மீது கடவுளின் கடுங்கோபத்தை வரவழைக்கிறீர்கள்.
19 ஓய்வு நாளுக்குமுன் எருசலேம் வாயில்களில் இருள் படரும்போது, கதவுகள் மூடப்படவேண்டும் என்றும் ஓய்வுநாள் முடியும்வரை அவற்றைக் திறக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டேன். எச்சுமையும் உள்ளே வராதபடி எனது வேலையாள்களை வாயிலருகில் நிறுத்தினேன்.
20 எனவே வணிகரும், பலசரக்குகளை விற்பவர்களும் ஓரிருமுறை எருசலேமுக்கு வெளியே தங்க வேண்டியிருந்தது.
21 நான் அவர்களை எச்சரித்து, “ஏன் மதிலுக்கு எதிரில் நீங்கள் காத்திருக்கிறீர்கள்? மறுபடியும் இப்படிச் செய்வீர்களாகில் உங்களை நான் ஒரு கை பார்ப்பேன்’ என்று கூறினேன். அப்பொழுதிலிருந்து அவர்கள் ஒய்வு நாளில் வராமலிருந்தார்கள்.
22 ஓய்வு நாளைக் கடைப்பிடிக்கும்படி உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்; வாயிலைக் காக்க வாருங்கள்” என்று லேவியரிடம் கூறினேன். இதன் பொருட்டும் ‘என் கடவுளே, என்னைக் கண்ணோக்கும். உமது பேரிரக்கத்தினால் என்னை மீட்டருளும்’.
23 அக்காலத்தில்கூட, அஸ்தோது, அம்மோன், மோவாபு ஆகிய நாடுகளின் பெண்களை மணந்திருந்த யூதர்களைக் கண்டேன்.
24 அவர்கள் பிள்ளைகளில் பாதிப்பேர் அஸ்தோதிய மொழி பேசினார்கள்; அல்லது வேறு ஏதோ ஒரு மொழியை பேசினார்கள். யூத மொழியை அவர்களால் பேச இயலவில்லை.
25 நான் அவர்களைக் கண்டித்துச் சபித்தேன். சில ஆள்களை அடித்து முடியைப் பிடித்து இழுத்தேன். “இனி நாங்கள் அவர்களின் புதல்வருக்குப் பெண் கொடுக்கவோ, அவர்களிடமிருந்து நாங்களும் எங்கள் புதல்வரும் பெண் கொள்ளவோமாட்டோம்” எனக் கடவுள்மேல் அவர்களை ஆணையிட்டுக் கூறச் செய்தேன்.
26 நான் சொன்னது: “இஸ்ரயேலின் அரசர் சாலமோனின் பாவம் இதுதான் அல்லவோ! அவரைப் போன்ற மன்னர் பல நாடுகளிலும் இருந்ததில்லையே! அவருடைய கடவுள் அவருக்கு அன்பு காட்டினார். கடவுள் அவரை இஸ்ரயேலர் அனைவருக்கும் அரசராக ஏற்படுத்தியிருந்தார். இருப்பினும் வேற்றினப் பெண்கள் அவரையும் பாவம் செய்திடச் செய்தார்கள்.
27 வேற்றினப் பெண்களை மணந்து கடவுளுக்கு எதிராக இப்பெரும் தீமை அனைத்தையும் நீங்கள் செய்து வருவதைப்போல் நாங்களும் செய்ய வேண்டுமா?”
28 பெரிய குரு எல்யாசிபின் மகன் யோயாதாவின் மக்களில் ஒருவன் ஓரானியனான சன்பலாற்றுக்கு மருமகனாய் இருந்தான். அவனை என்னிடமிருந்து துரத்திவிட்டேன்.
29 “என் கடவுளே, குருத்துவத்தையும், குருத்துவ உடன்படிக்கையையும், லேவியரையும் மாசுபடுத்தியவர்களாகிய அவர்களை மறந்து விடாதேயும்.”
30 வேற்றினத்தார் அனைவரிடமிருந்தும் அவர்களைத் தூய்மைப்படுத்தினேன். குருக்களுக்கும் லேவியருக்கும் அவர் அவர்களுக்குரிய வேலையைக் கொடுத்து பணிமுறைமைகளை அமைத்தேன்.
31 விறகுக் காணிக்கைகளையும் முதற் கனிகளையும் குறிப்பிட்ட காலங்களில் கொடுக்க ஆவன செய்தேன். “என் கடவுளே, என்னை நினைவு கூர்ந்து எனக்கு நன்மை செய்தருளும்.”
13:1-2 இச 23:3-5.
13:2 எண் 22:1-6.
13:23-25 விப 34:11-16; இச 7:1-5.
13:28 நெகே 4:1. | https://bible.catholicgallery.org/tamil/etb-nehemiah-13 |
426 | எஸ்தர் | எஸ்தர் அதிகாரம் – 1 – திருவிவிலியம் | அரசி வஸ்தி மன்னர் அகஸ்வேரை அவமதித்தல்
1 இந்தியா தொடங்கி எத்தியோப்பியா வரை இருந்த நூற்றிருபத்தேழு மாநிலங்களையும் ஆட்சி செய்த மன்னர் அகஸ்வேரின் காலத்தில்,
2 அவர் சூசான் தலைநகரில் அரசுக் கட்டிலில் அமர்ந்து ஆட்சி புரிந்தார்.
3 மூன்றாம் ஆண்டில் தம் குறுநில மன்னர்கள், அலுவலர் அனைவருக்கும் விருந்தொன்று அளித்தார். பாரசீக, மேதியப் படைத் தளபதிகளும், உயர்குடி மக்களும், மாநிலத் தலைவர்களும் அவர்முன் வந்திருந்தனர்.
4 அவர் தம் அரசின் செல்வச் செழிப்பினையும், தம் மாண்பின் மேன்மை மிகு பெருமையையும் நூற்றி எண்பது நாள்கள் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தார்.
5 அந்நாள்கள் அனைத்தும் நிறைவு பெற்றபின் சூசான் தலைநகரிலிருந்து சிறியோர் முதல் பெரியோர் வரை மக்கள் அனைவருக்கும் அரண்மனைத் தோட்ட வளாகத்தில் ஏழு நாள்களுக்கு அவர் விருந்து அளித்தார்.
6 அங்கு வெண்ணிற, நீல நிறத் தொங்கு திரைகள், வெள்ளித் தண்டுகளிலும் வெண்ணிறப் பளிங்குத் தூண்களிலும் மென்துகிலாலும் கருஞ்சிவப்புப் பட்டாலும் பிணைக்கப் பெற்றிருந்தன. வெண்ணீலக் கற்கள், பளிங்கு, முத்துக்கள், விலைமதிப்பற்ற கற்கள் ஆகியவை பதிக்கப்பெற்ற பல வண்ண ஓட்டுத் தளத்தின் மீது பொன், வெள்ளி இழைகள் கலந்த மஞ்சங்கள் இருந்தன.
7 வெவ்வேறு வகையான பொற்கிண்ணங்களில் அனைவருக்கும் திராட்சை மது வழங்கினர். அரச மேன்மைக்கு ஏற்பப் பெருமளவில் திராட்சை மது வழங்கப்பட்டது.
8 திராட்சை மது அருந்துதல் சட்டப்படி ஏற்புடையதாக இருந்தது. ஒருவரும் வற்புறுத்தப்படவில்லை. விருந்தினரின் விருப்பத்திற்கிணங்கப் பரிமாறுமாறு அரண்மனையின் தலைமை அலுவலர்களுக்கு அரசர் கட்டளையிட்டிருந்தார்.
9 அவ்வாறே அரசி வஸ்தியும் மன்னர் அகஸ்வேரின் பெண்டிர்க்கு விருந்தளித்தாள்.
10 ஏழாம் நாளன்று திராட்சை மதுவினால் மனம் பூரித்திருந்த மன்னர் அகஸ்வேர் தம் முன்னிலையில் பணியாற்றிய அண்ணகர்களான மெகுமான், பிஸ்தா, அர்போனா, பிக்தா, அபக்தா, சேத்தார், கர்க்கசு ஆகியோருக்கு,
11 பேரழிகியான அரசி வஸ்தியின் எழிலை மக்களும் தலைவர்களும் காணுமாறு அவளை அரச மகுடம் சூட்டப்பட்டவளாகத் தம்முன் அழைத்து வரும்படி கட்டளையிட்டார்.
12 ஆனால் அரசி வஸ்தி அண்ணகர்களின் வழியாக வந்த மன்னரின் சொல்லுக்கு இணங்க மறுத்துவிட்டாள். எனவே மன்னர் கடுஞ்சினமுற்றார். பெரும் கோபக்கனல் அவர் மனத்தில் பற்றி எரிந்தது.
13 உடனே அவர் காலங்கள் பற்றிய நுண்ணறிவுடைய ஞானிகளிடம் கலந்துரையாடினார். ஏனெனில் சட்டங்களிலும், நெறிமுறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களிடம் கலந்துரையாடுவது மன்னரின் வழக்கம்.
14 கர்சனா, சேத்தார், அதிமாத்தா, தர்சீசு, மெரேசு, மர்சனா, மெமுக்கான், ஆகிய பாரசீகத்தையும் மேதியாவையும் சார்ந்த ஏழு தலைவர்களும் மன்னருக்கு மிக நெருக்கமானவர்கள்; ஆட்சிப் பொறுப்பில் முதன்மை பெற்றோர். அவர்கள் மன்னரின் முகமாற்றத்தைக் கண்டனர்.
15 மன்னர் அகஸ்வேர், அண்ணகர்களின் வழியாய் இட்ட கட்டளைப் படி செய்ய மறுத்த அரசி வஸ்திக்குச் சட்டப்படி செய்ய வேண்டியது என்ன? என்று வினவினார்.
16 மன்னருக்கும் ஏனைய தலைவர்களுக்கும் முன்பாக மெமுக்கான் கூறியது: “அரசி வஸ்தி மன்னருக்கு எதிராக மட்டுமன்றித் தலைவர் அனைவர்க்கு எதிராகவும், அகஸ்வேரின் ஆட்சிக்குட்பட்ட அனைத்து மாநில மக்களுக்கு எதிராகவும் தவறிழைத்துவிட்டாள்.
17 அரசி வஸ்தியின் நடத்தை எல்லாப் பெண்களுக்கும் தெரியவரும். அவர்கள் பார்வையில் அவர்களின் கணவர் இழிவுப்படுத்தப்படுவர். ஏனெனில் மன்னர் அகஸ்வேர் அவளைத் தம்முன் வருமாறு பணித்தும்கூட அவர்முன் அவள் வரவில்லையே! என்பர்.
18 இன்றே அரசியின் நடத்தை பற்றிக் கேள்வியுறும் பாரசீக, மேதிய இளவரசிகளும் தம் தலைவர்களிடமும் இதுபோன்றே கூறுவர். ஆதலின் ஏளனத்திற்கும் சினத்திற்கும் முடிவே இராது.
19 எனவே, அரசே, உமக்கு நலமெனப்படின் தாங்கள் ஆணையொன்று பிறப்பிக்க வேண்டும். அவ்வாணை பாரசீக, மேதியச் சட்டங்களில் நிலையாய் இருக்கும்படி எழுதப்படல் வேண்டும். அரசராகிய தங்கள் முன் வஸ்தி இனிவருதல் கூடாது. அவளது அரசுரிமையை அவளைக் காட்டிலும் சிறந்த ஒருத்திக்குத் தாங்கள் கொடுப்பீராக!
20 அரசரால் பிறக்கப்படும் இந்த ஆணை உமது ஆட்சிக்குட்பட்ட பரந்துகிடக்கும் நாடுகளில் அறிவிக்கப்பட்டவுடன் சிறியோர் பெரியோர் அனைவரின் மனைவியரும் அவர்களின் கணவருக்கு மரியாதை செலுத்துவர்.
21 இவ்வார்த்தை அரசர் மற்றும் தலைவர்களின் பார்வையில் நலமெனத் தோன்றியது. மெமுக்கானின் கருத்திற்கு ஏற்ப மன்னர் செயல்பட்டார்.
22 அவர் தம் ஆட்சிக்குட்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் அவரவர் மாநில வரிவடிவ வாரியாகவும் *ஒவ்வொரு மக்களினத்திற்கும் அதனதன் மொழிவாரியகவும் எழுதிய மடல்களில், ஒவ்வொரு ஆண்மகனும் தனது வீட்டில் ஆளுகை செய்யவேண்டும்* என்று கட்டளையிட்டிருந்தார்.
1:1 எஸ்ரா 4:6.
1:22 ‘ஒவ்வொரு ஆண் மகனும் தனது வீட்டில் ஆளுகை செய்ய வேண்டும் என்றும் தன் மக்களின் மொழியிலேயே பேச வேண்டும் என்றும்’ என்பது எபிரேய பாடம். | https://bible.catholicgallery.org/tamil/etb-esther-1 |
427 | எஸ்தர் | எஸ்தர் அதிகாரம் – 2 – திருவிவிலியம் | எஸ்தர் அரசி ஆதல்
1 இவற்றுக்குப்பின் மன்னர் அகஸ்வேர் சினம் தணிய அவர் வஸ்தியையும் அவளது செயலையும் அவளுக்கு எதிராய்த் தாம் விடுத்த ஆணையையும் எண்ணிப் பார்த்தார்.
2 அவ்வமயம் மன்னருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த பணியாளர் அவரை நோக்கிக் கூறியது: ‘அரசராகிய உமக்கென அழகும் இளமையும் கொண்ட கன்னிப் பெண்களைத் தேடுவார்களாக!
3 அரசரின் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து மாநிலங்களிலும் அழகும் இளமையும் கொண்ட கன்னிப் பெண்கள் அனைவரையும் ஒன்று கூட்டும்படி மேற்பார்வையாளர்களை மன்னர் நியமிப்பாராக! சூசான் அரண்மணையின் அந்தப்புரத்தில் மன்னரின் அண்ணகரான ஏகாயிடம் அப்பெண்களை ஒப்படைத்து, தூய்மைப்படுத்தும் பொருள்களை அவர்களுக்குத் தர ஆவன செய்வாராக!
4 மன்னரின் கண்களில் இனியவளாய்க் காணப்படுகின்ற இளம் பெண்ணே வஸ்திக்குப் பதிலாக அரசி ஆவாள்.’ இது மன்னருக்கு நலமெனப் பட்டதால் அவரும் அவ்வாறே செய்தார்.
5 சூசான் அரண்மனையில் மொர்த்க்காய் என்னும் பெயர்கொண்ட யூதர் ஒருவர் இருந்தார்.
6 அவர் பென்யமினைச் சார்ந்த கீசின் மகனான சிமயியின் புதல்வரான யாயிரின் மைந்தர்; இந்தக் கீசு எருசலேமில் கைது செய்யப்பட்டு, பாபிலோன் மன்னன் நெபுகத்னேசரால் சிறைப்பிடிக்கப்பட்ட யூதாவின் அரசன் எக்கோனியாவுடன் நாடு கடத்தப்பட்டவர்களுள் ஒருவர்.
7 மொர்தக்காய் ‘அதசா’ என்னும் மறுபெயர் கொண்ட எஸ்தர் என்பவரை எடுத்து வளர்த்தார். அவர் அவருடைய சிற்றப்பன் மகள்; தாய் தந்தையை இழந்தவர்; எழில்மிகு தோற்றமும் வடிவழகும் கொண்ட இளம் பெண்.
8 மன்னரின் சொற்களும் ஆணையும் அறிவிக்கப்பட்டபொழுது, இளம் பெண்கள் பலர் சூசான் அரண்மனைக்குள் ஒன்று சேர்க்கப்பட்டு ஏகாயிடம் ஒப்படைக்கப்பட்டனர். எஸ்தரும் அவ்வாறே அரண்மனையில் அந்தப்புரப் பொறுப்பேற்றிருந்த ஏகாயிடம் ஒப்படைக்கப்பட்டார்.
9 அவ்விளம் பெண் ஏகாயின் கண்களுக்கு இனியவளெனக் காணப்பெற்று இவரது தயவைப் பெற்றார். அவரும் அவருக்குத் தேவையான அழகு சாதனங்களை உடனே தந்து, அரண்மனையில் சிறந்த செவிலியர் எழுவரையும் கொடுத்தார். மேலும் எஸ்தரையும் அவருடைய செவிலியரையும் அந்தப்புரத்தின் சிறந்த பகுதிக்கு மாற்றினார்.
10 யாரிடமும் சொல்லக்கூடாது என்று மொர்தக்காய் ஆணையிட்டிருந்ததால் எஸ்தர் தம் இனத்தையோ வழி மரபையோ வெளிப்படுத்தவில்லை.
11 ஒவ்வொரு நாளும் மொர்தக்காய் அந்தப்புர முற்றத்தில் அங்கும் இங்கும் உலவி, எஸ்தரின் நலன்பற்றியும் அவருக்கு என்னென்ன செய்யப்படுகிறது என்பதைப் பற்றியும் அறிந்து வந்தார்.
12 ஆறு மாதம் வெள்ளைப்போளத் தைலத்தினாலும், ஆறு மாதம் பெண்டிர்க்கான வாசனைத் தைலங்கள், நறுமணத் பொருள்கள் ஆகியவற்றாலும் அழகுபடுத்தும் பன்னிரு மாதங்கள் நிறைவெய்தின.பின்னர் ஒவ்வொரு இளமங்கையும் மன்னர் அகஸ்வேரின் முன் செல்லும் சமயம் வந்தது.
13 மன்னரிடம் செல்லும் ஒவ்வொரு இளம் பெண்ணுக்கும், அந்தப்புரத்திலிருந்து அரச மாளிகைக்குச் செல்லும்போது, அவள் கேட்பதனைத்தும் கொடுக்கப்பட்டது.
14 அவள் மாலையில் சென்று, மறுநாள் காலையில் இரண்டாம் அந்தப்புரத்திற்குச் செல்வாள்; அங்கு வைப்பாட்டியரின் கண்காணிப்பாளரான அரச அண்ணகர் சாட்சகாசின் பொறுப்பில் விடப்படுவாள். மன்னர் அவள் மீது விருப்பம் கொண்டு பெயர் சொல்லி அழைக்கும் வரை மன்னரிடம் அவள் மீண்டும் செல்ல இயலாது.
15 அபிகாயிலின் புதல்வியும், மொர்தக்காயின் வளர்ப்பு மகளுமாகிய எஸ்தர் மன்னருக்கு முன்னே செல்லும் முறை வந்தபொழுது, பெண்களைக் கண்காணிக்கும் அரச அண்ணகர் ஏகாயின் அறிவுரையைத் தவிர வேறெதையும் நாடாமல், காண்போர் அனைவரின் கண்களிலும் அவர் தயவு பெற்றிருந்தார்.
16 அகஸ்வேரின் ஆட்சியின் ஏழாம் ஆண்டில், பத்தாம் மாதமாகிய தேபேத்து மாதத்தில், அகஸ்வேரின் அரச மாளிகைக்குள் எஸ்தர் அழைத்துச் செல்லப்பட்டார்.
17 பெண்கள் அனைவரிலும் எஸ்தரையே மன்னர் மிகுதியாய் விரும்பினார். கன்னிப் பெண்கள் அனைவருள்ளும் அவரே மன்னரின் கண்களில் மிகுதியான தயவு பெற்றார். எனவே அவர் அவரது தலைமீது அரசியின் மகுடம் வைத்து, வஸ்திக்குப் பதிலாக அவரை அரசி ஆக்கினார்.
18 இவற்றிற்குப்பின், எஸ்தரை முன்னிட்டுக் குறுநில மன்னர்களுக்கும் தம் அலுவலர் அனைவருக்கும் பெரிய விருந்து வைத்தார். மேலும் அனைத்து மாநிலங்களுக்கும் மன்னர் விடுமுறை * நாளை அறிவித்துத் தம் கைகளினால் அன்பளிப்புகள் வழங்கினார்.
மன்னரின் உயிரை மொர்தக்காய் காத்தல்
19 கன்னிப் பெண்கள் இரண்டாம் முறையாய் ஒன்று கூட்டப்பட்டபொழுது, மொர்தக்காய் அரசவாயிலில் பணி புரிந்து கொண்டிருந்தார்.
20 மொர்தக்காய் கட்டளையிட்டவாறு, எஸ்தர் தம் வழிமரபையோ இனத்தையோ வெளிப்படுத்தாதிருந்தார். அவரால் வளர்க்கப்பட்டபோது செய்தது போலவே, அப்பொழுதும், எஸ்தர் மொர்தக்காயின் கட்டளைக்கு இணங்கி நடந்தார்.
21 மொர்தக்காய் அரசவாயிலருகில் பணிபுரிந்த நாள்களில், பிகதான், தெரேசு, என்ற இருவர் சினமுற்று மன்னர் அகஸ்வேரைத் தாக்க வகை தேடினர்.
22 இக்காரியம் மொர்தக்காய்க்குத் தெரிந்தது. இதனை அவர் அரசி எஸ்தரிடம் கூற, அவர் மொர்தக்காயின் பெயரால் அதனை மன்னரிடம் அறிவித்தார்.
23 உடனே அக்காரியம் புலனாய்வு செய்யப்பட, உண்மை வெளிப்பட்டது. அவர்கள் இருவரும் தூக்கிலிடப்பட்டனர். இந்நிகழ்ச்சி மன்னர் முன்னிலையில் குறிப்பேட்டில் எழுதிவைக்கப்பட்டது.
2:6 2 அர 24:10-16; 2 குறி 36:10.
2:18 ‘அரசியல் குற்ற மன்னிப்பு’ எனவும் பொருள்படும். | https://bible.catholicgallery.org/tamil/etb-esther-2 |
428 | எஸ்தர் | எஸ்தர் அதிகாரம் – 3 – திருவிவிலியம் | யூதரை அழிக்க ஆமானின் திட்டம்
1 இந்நிகழ்ச்சிக்குப்பின் மன்னர் அகஸ்வேர் ஆகாகியனான அம்மதாத்தின் மகன் ஆமானை உயர்த்தி, அவனுடன் இருந்த அனைத்து அதிகாரிகளுக்கும் மேலான பதவியில் அமர்த்தினார்.
2 மன்னரின் ஆணைப்படி, அரசவாயிலில் பணிபுரிந்த அனைத்து அலுவலர்களும் தலை வணங்கி ஆமானைப் பணிந்தனர். ஆனால் மொர்தக்காய் மட்டும் அவன்முன் மண்டியிட்டு வணங்கவில்லை.
3 அவ்வமயம் அரச வாயிலில் இருந்த அரசப் பணியாளர் மொர்தக்காயிடம், “நீ ஏன் மன்னரின் ஆணைக்குக் கீழ்ப்படிவதில்லை?” என வினவினர்.
4 ஒவ்வொரு நாளும் அவர்கள் இவ்வாறு சொல்லியும் மொர்தக்காய் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை. தாம் ஒரு யூதர் என்று மொர்தக்காய் அவர்களுக்கு அறிவிக்க, விளைவைக் காணுமாறு அவர்கள் அதை ஆமானுக்குத் தெரிவித்தனர்.
5 மொர்தக்காய் தம்முன் மண்டியிட்டு வணங்குவதில்லை என்பதைக் கண்ட ஆமானின் நெஞ்சில் வெஞ்சினம் நிரம்பியது.
6 மொர்தக்காயை மட்டும் அழிக்க அவன் விரும்பவில்லை. அவர்தம் இனத்தார் யார் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டிருந்ததால், அகஸ்வேரின் அரசெங்கும் இருந்த அவர்தம் இனத்தாராகிய யூதர் அனைவரையும் அழிக்க ஆமான் வழிதேடினான்.
7 அகஸ்வேரது ஆட்சியில் பன்னிரண்டாம் ஆண்டில், முதல் மாதமாகிய நீசானில், யூதரைக் கொன்று ஒழிப்பதற்கான மாதத்தையும், நாளையும் அறியுமாறு, ஆமானின் முன்னிலையில் ‘பூர்’ என்ற சீட்டுப் போடப்பட்டது. அதார் என்னும் பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாளுக்குச் சீட்டு விழுந்தது.
8 ஆமான் அகஸ்வேரிடம், “உம் ஆட்சிக்குட்பட்ட அனைத்து மாநிலங்களின் மக்களிடையே மாறுபட்ட மக்கள் சிதறுண்டு பரவியுள்ளனர். அவர்தம் நியமங்கள் மற்றெல்லா மக்களின் நியமங்களிலும் மாறுபட்டவை. அவர்கள் மன்னரின் நியமங்களின் படி செய்வதில்லை. அவர்களை அவ்வாறே விட்டுவைப்பதில் மன்னருக்கு நன்மை ஏதுமில்லை.
9 இது மன்னருக்கு நலமெனப்பட்டால் அவர்களை அழிக்கும்படி கட்டளையிடவேண்டும். இவ்வேலையைச் செய்வோருக்குக் கொடுக்குமாறு நானூறு ‘டன்’* வெள்ளியை நிறுத்து மன்னரின் கருவூலத்தில் சேர்ப்பேன்” என்று கூறினான்.
10 அப்போது, மன்னர் தம் கணையாழியைக் கழற்றி, யூதரின் பகைவனாம் ஆகாகியனான அம்மாதத்தின் மகன் ஆமானிடம் கொடுத்தார்.
11 மன்னர் ஆமானிடம், “வெள்ளியும், யூத மக்களும் உன் கையில்; உனக்கு நலமெனப்பட்டதை அவர்களுக்குச் செய்” என்றார்.
12 உடனே அரச எழுத்தர்கள் வரவழைக்கப்பட்டனர். முதல் மாதம் பதின்மூன்றாம் நாளில் ஆமான் கட்டளையிட்ட அனைத்தும் அரசின் குறுநில மன்னர்களுக்கும், மாநிலங்களுக்கும் அனைத்து ஆளுநர்களுக்கும், அனைத்து மாநிலத் தலைவர்களுக்கும், அவர்தம் மக்களின் வரிவடிவ வாரியாகவும், மொழி வாரியாகவும் அரசரின் பெயரால் எழுதப்பெற்று, அரச கணையாழியால் முத்திரையிடப் பெற்று அனுப்பப்பட்டது.
13 அதார் என்ற பன்னிரண்டாம் மாதத்தின் பதின்மூன்றாம் நாளன்று, ஒரே நாளில், சிறுவர்முதல் பெரியோர் வரை, குழந்தைகளும் பெண்களும் உட்பட யூதர் அனைவரும் கொல்லப்பட்டு, அழிந்து ஒழிந்துபோகுமாறும், அவர்தம் உடைமைகள் கொள்ளையிடப்பட வேண்டும் எனவும் எழுதப்பட்ட மடல்கள் விரைவு அஞ்சலர் வழியே அரசின் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பட்டன.
14 இம்மடலின் நகல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டமாக அறிவிக்கப்பட்டு, மக்கள் அனைவரும் அந்நாளுக்கென ஆயத்தமாகும்படி அழைக்கப்பட்டனர்.
15 விரைவு அஞ்சலர் மன்னரின் ஆணையால் ஏவப்பட்டு விரைந்து வெளியேற, சூசான் அரண்மனையிலும் இச்சட்டம் அறிவிக்கப்பட்டது. மன்னரும் ஆமானும் மது அருந்துமாறு அமர்ந்தனர். சூசான் நகரே கலங்கிற்று.
3:9 ‘பதினாயிரம் தாலந்து’ என்பது எபிரேய பாடம். | https://bible.catholicgallery.org/tamil/etb-esther-3 |
429 | எஸ்தர் | எஸ்தர் அதிகாரம் – 4 – திருவிவிலியம் | அரசி எஸ்தரின் உதவியை மொர்தக்காய் நாடல்
1 இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் அறிந்த மொர்தக்காய் தம் ஆடைகளைக் கிழித்து சாக்கு உடை அணிந்து, சாம்பல் பூசிக்கொண்டு, வெளியே நகரின் மையத்திற்குச் சென்று ஓலமிட்டு, மனங்கசிந்து அழுதார்.
2 அரச வாயிலுள் சாக்கு உடை அணிந்து எவரும் நுழையக்கூடாது என்பதால் அவர் வாயில் வரை சென்றார்.
3 மன்னரின் வார்த்தையும் நியமமும் எந்தெந்த மாநிலங்களை அடைந்தனவோ, அங்கெல்லாம் இருந்த யூதரிடையே பெரும், புலம்பலும், நோன்பும், கண்ணீரும், அழுகையும் விளங்க, அனைவரும் சாக்கு உடை அணிந்து சாம்பல் பூசிக் கொண்டனர்.
4 எஸ்தரின் செவிலியரும் அண்ணகர்களும் வந்து இவற்றை அவரிடம் சொல்ல, அரசி பெரிதும் வாடித் துடித்தார். மொர்தக்காய் சாக்கு உடை களைந்து, நல்லாடை அணிந்து கொள்ளும்படி ஆடைகளை அவர் அனுப்பி வைத்தார். அவரோ அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை.
5 எஸ்தருக்குப் பணிபுரியும்படி மன்னரால் நியமிக்கப்பட்டிருந்த அண்ணகர் அத்தாக்கை அவர் அழைத்து, மொர்தக்காயின் அவலநிலைக்குக் காரணம் யாதென அறிந்து வருமாறு அனுப்பினார்.
6 அத்தாக்கு அரச வாயிலுக்கு எதிரே நகர்ச் சந்தியில் இருந்த மொர்தக்காயிடம் சென்றார்.
7 மொர்தக்காய் தமக்கு நேரிட்ட அனைத்தைப்பற்றியும், யூதரை அழிக்கும்படி அரச கருவூலத்தில் சேர்ப்பதற்காக ஆமான் வாக்களித்த வெள்ளி பற்றியும் அவருக்குத் தெரிவித்தார்.
8 மேலும், சூசானில் பிறப்பிக்கப்பட்ட நியமத்தின் ஒரு நகலை எஸ்தரிடம் காட்டும்படி கொடுத்து, அவர் மன்னனிடம் சென்று மன்றாடி, அவர் முன்னிலையில் தம் மக்களுக்காகப் பரிந்து பேசுமாறு வேண்டினர்.
9 அத்தாக்கு அவ்வாறே சென்று, எஸ்தரிடம் மொர்தக்காயின் வார்த்தைகளை எடுத்துரைத்தார்.
10 எஸ்தர் மறுபடியும் அத்தாக்கு வழியாக மொர்தக்காய்க்குச் சொல்லி அனுப்பியது:
11 “மன்னரால் அழைப்புப் பெறாத ஆண், பெண் எவரும் மன்னரின் உள்முற்றத்திற்குச் சென்றால் கொல்லப்படுவர் என்பதும், யாருக்கு மன்னர் தம் பொற்செங்கோலை நீட்டுகிறாரோ அவரே பிழைப்பார் என்பதும் அரச நியமம்; இதனை மன்னரின் அனைத்து ஊழியர்களும் மாநில மக்கள் அனைவரும் அறிவர்.”
12 அவரும் எஸ்தரின் வார்த்தைகளை மொர்தக்காயிடம் அறிவித்தார்.
13 அதற்கு மொர்தக்காய் எஸ்தரிடம் அறிவிக்கும்படியாகக் கூறியது: “அனைத்து யூதருள்ளும் அரச மாளிகையில் உள்ள நீ மட்டும் காப்பாற்றப் பெறுவாய் என உனக்குள் கற்பனை செய்யவேண்டாம்.
14 ஏனெனில், இவ்வமயம் நீ மௌனமாய் வாளாவிருப்பின், விடுதலையும் பாதுகாப்பும் யூதருக்குப் பிறிதொரு இடத்தினின்று தோன்றும். ஆனால் நீயும் உன் தந்தையின் வீட்டாரும் அழிவீர். யார் அறிவார்? ஒருவேளை இதுபோன்ற நேரத்திற்கெனவே நீ அரசியாகி உள்ளாய் போலும்!”.
15 இது கேட்ட எஸ்தர் மொர்தக்காயிடம் சொல்லும்படியாகக் கூறியது:
16 “சூசானில் காணப்படும் அனைத்து யூதரையும் ஒன்று சேர்ப்பீராக! எனக்காக நோன்பிருந்து மூன்றுநாள் இரவு பகல் உண்ணாமலும், குடியாமலும் இருப்பீராக! நானும் என் செவிலியரும் அவ்வாறே நோன்பிருப்போம். சட்டத்திற்குப் புறம்பே எனினும் நான் மன்னரிடம் செல்வேன்! அழிவதாயின் அழிகின்றேன்.”
17 மொர்தக்காய் அவ்வாறே சென்று, எஸ்தரின் வாக்கின்படியே அனைத்தையும் செய்தார். | https://bible.catholicgallery.org/tamil/etb-esther-4 |
430 | எஸ்தர் | எஸ்தர் அதிகாரம் – 5 – திருவிவிலியம் | மன்னரையும் ஆமானையும் எஸ்தர் விருந்துக்கு அழைத்தல்
1 மூன்றாம் நாள் எஸ்தர், அரசியின் ஆடையணிந்து அரச மாளிகைக்கு எதிரில் இருந்த உள்முற்றத்தில் நின்றார். அரண்மனை நுழைவாயிலின் எதிரில் இருந்த அரசவை மண்டபத்தில், அரியணை மீது மன்னர் வீற்றிருந்தார்.
2 உள்முற்றத்தில் நின்ற அரசி எஸ்தரைக் கண்டதும் மன்னரின் கண்களில் அவருக்குத் தயவு கிடைத்தது. மன்னர் தம் கைகளில் இருந்த பொற்செங்கோலை எஸ்தரிடம் நீட்ட, எஸ்தர் அருகில் சென்று செங்கோலின் நுனியைத் தொட்டார்.
3 மன்னர் அவரை நோக்கி, “எஸ்தர் அரசியே! உனக்கு என்ன வேண்டும்? உன் வேண்டுகோள் யாது? என் அரசின் பாதியேயாகிலும் அது உனக்களிக்கப்படும்” என்றார்.
4 அதற்கு எஸ்தர், “மன்னர் விரும்பினால், இன்று நான் வைத்திருக்கும் விருந்திற்குத் தாங்களும் ஆமானும் வருகை தரவேண்டும்” என்று பதிலளித்தார்.
5 எஸ்தரின் அழைப்பிற்கிணங்கி மன்னர் ஆமானை விரைந்து வருமாறு பணித்தார்; அவ்வாறே மன்னரும் ஆமானும் எஸ்தர் வைத்த விருந்திற்குச் சென்றனர்.
6 விருந்தில் திராட்சை மது அருந்துகையில், மன்னர் எஸ்தரை நோக்கி, “உன் வேண்டுகோள் எதுவோ அது உனக்குக் கொடுக்கப்படும்; அது அரசின் பாதியே ஆனாலும் உனக்குக் கொடுக்கப்படும்” என்றார்.
7-8 அதற்கு எஸ்தர், “என் விண்ணப்பமும் வேண்டுகோளும் இதுவே: மன்னரின் கண்களில் எனக்குத் தயவு கிடைத்தால், மன்னரின் பார்வையில் இது நலமெனத் தோன்றினால், மன்னரும் ஆமானும் நான் நாளைய தினமும் உங்களுக்காய் ஆயத்தம் செய்யும் விருந்திற்கு வருகை தருமாறு வேண்டுகிறேன். அவ்வமயம் மன்னரின் வார்த்தையின்படி என் விண்ணப்பத்தைத் தெரிவிப்பேன்” என்று பதிலளித்தாள்.
மொர்தக்காயைக் கொல்ல ஆமானின் திட்டம்
9 அன்று ஆமான் மகிழ்வுடனும் உவகையுடனும் வெளியே சென்றான். ஆயினும் அரச வாயிலருகில் பணிபுரிந்த மொர்தக்காய் எழுந்து நிற்காததையும் தன்னைக் கண்டு ஒதுங்கி நில்லாததையும் பார்த்தபொழுது அவருக்கெதிராய் ஆமானின் நெஞ்சம் வெஞ்சினத்தால் நிறைந்தது.
10 எனினும், ஆமான் தன்னைக் கட்டுப்படுத்தியவாறே வீட்டிற்கு வந்து, தன் நண்பர்களையும் மனைவி செரேசையும் வரும்படி அழைத்தான்.
11 ஆமான் அவர்களிடம் தன் செல்வச் சிறப்பைப் பற்றியும் தன் மைந்தர்களின் எண்ணிக்கையைப் பற்றியும், மன்னர் தன்னை எவ்வாறு அனைத்துத் தலைவர்களுக்கும் அரச அலுவலர்களுக்கும் மேலாய் உயர்த்தியுள்ளார் என்பதைப் பற்றியும் விரித்துரைத்தான்.
12 மேலும் அவன், “அரசி எஸ்தர் ஆயத்தம் செய்த விருந்திற்குத் தன்னையன்றி வேறேவரையும் மன்னருடன் வரும்படி அனுமதியாமல், நாளையும் விருந்திற்கு என்னை மன்னருடன் வருமாறு அழைத்திருக்கிறாள்.
13 எனினும், அரசவாயிலருகில் அமர்ந்திருக்கும் யூதனாகிய மொர்தக்காயைக் காண்கையில் இவையனைத்தும் எனக்கு ஒன்றும் இல்லை” எனவும் கூறினான்.
14 இதைக் கேட்ட அவன் மனைவி செரேசும், நண்பர்களும் அவனை நோக்கி, “ஐம்பது முழ உயரத் தூக்கு மரம் செய்து, நாளை மன்னரிடம் கூறி, மொர்தக்காயை அதில் தூக்கிலிட்டப் பின்னர் அரசருடன் விருந்துண்டு மகிழச் செல்லும்!” என்றனர். இவ்வார்த்தை ஆமானுக்கு நலமெனப்பட்டதால் அவன் தூக்குமரம் ஒன்று செய்வித்தான். | https://bible.catholicgallery.org/tamil/etb-esther-5 |
431 | எஸ்தர் | எஸ்தர் அதிகாரம் – 6 – திருவிவிலியம் | மொர்தக்காய்க்கு மன்னர் உயர்வு அளித்தல்
1 அன்றிரவு மன்னருக்குத் தூக்கம் வரவில்லை. எனவே, அவர் தம் ஆட்சியின் குறிப்புகள் அடங்கிய ஏட்டைத் தம்மிடம் கொண்டுவந்து வாசிக்குமாறு பணித்தார்.
2 அரண்மனை வாயிற்காவலர்களான அலுவலர் பிக்தானாவும், செரேசும், மன்னர் அகஸ்வேரை கொல்ல வகை தேடினதை மொர்தக்காய் அறிவித்ததாக அதில் எழுதப்பட்டிருந்தது.
3 அச்சமயம் மன்னர், “இதற்காக மொர்தக்காய்க்கு என்ன மரியாதையும் சிறப்பும் செய்யப்பட்டன?” என்று வினவ, மன்னரின் பணியாளர் “அவருக்கு யாதொன்றும் செய்யப்படவில்லை” என்றனர்.
4 “முற்றத்தில் இருப்பது யார்?” என்று மன்னர் வினவினார். தான் நாட்டிய தூக்குமரத்தில் மொர்தக்காயைத் தூக்கிலிட வேண்டும் என்று மன்னரிடம் வேண்டுவதற்காய் ஆமான் அவ்வமயம் அரசமாளிகையின் வெளிமுற்றத்தில் வந்து நின்றான்.
5 மன்னரின் பணியாளர் மன்னரை நோக்கி, “இதோ, ஆமான் முற்றத்தில் நின்று கொண்டிருக்கிறார்” என்றனர். உடனே மன்னர் அவனை உள்ளே வரச்சொன்னார்.
6 ஆமானிடம், “மன்னர் தாம் மரியாதை செய்ய விரும்பும் மனிதருக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று மன்னர் வினவினார். “என்னைவிட வேறு எவருக்கு மன்னர் மரியாதை செய்ய விரும்புவார்?” என்று ஆமான் தன் உள்ளத்தில் நினைத்துக் கொண்டான்.
7 எனவே ஆமான் மன்னரை நோக்கி, “மன்னர் தாம் மரியாதை செய்ய விரும்பும் ஒருவருக்கென,
8 மன்னர் அணிகின்ற ஆடைகளும், அமர்கின்ற புரவியும், தலையில் சூடும் மகுடமும் கொண்டுவரப்பட வேண்டும்.
9 அந்த ஆடைகளும் புரவியும் அரசரின் தலைமை அதிகாரிகளுள் சிறந்த உயர்குடிமகன் ஒருவரிடம் ஒப்படைக்கப்படவேண்டும். மன்னர் மரியாதை செய்ய விரும்பும் மனிதருக்கு அவர் அந்த ஆடைகளை அணிவித்து, புரவியின்மீது அமர்த்தி, அவரை நகர் வீதிகளில் வலம் வரச் செய்து, ‛இதுவே அரசர் தாம் மரியாதை செய்ய விரும்பும் மனிதருக்குச் செய்யும் சிறப்பாகும்!’ என, அவருக்கு முன்னால் அறிவிக்கவேண்டும்” என்று பதிலளித்தான்.
10 உடனே மன்னர் ஆமானை நோக்கி, “ஆடைகளையும் புரவியையும் விரைவாய்க் கொணர்ந்து நீ கூறியவாறே அரசவாயிலில் நிற்கும் யூதராகிய மொர்தக்காய்க்குச் செய், நீ கூறியவற்றில் எதையும் விட்டுவிடாதே” என்று கூறினார்.
11 அவ்வாறே, ஆமான் ஆடைகளையும் புரவியையும் கொணர்ந்து, மொர்தக்காய்க்கு அந்த ஆடைகளை உடுத்துவித்து, புரவியின் மீது அமர்த்தி, நகர் வீதிகளில் வலம் வரச் செய்து, “இதுவே அரசர் தாம் மரியாதை செய்ய விரும்பும் மனிதருக்குச் செய்யும் சிறப்பாகும்” என்று அவருக்கு முன்பாய் அறிவிக்கப்படுமாறு செய்தான்.
12 இதற்குப்பின் மொர்தக்காய் அரச வாயிலுக்குச் சென்றார். ஆமானோ புலம்பிக்கொண்டு, தன் தலைக்கு முக்காடிட்டுத் தன் வீட்டிற்கு விரைந்தான்.
13 ஆமான் தன் மனைவி செரேசு, நண்பர்கள் அனைவரிடமும் தனக்கு நேரிட்ட அனைத்தையும் கூறினான். உடனே அந்த ஆலோசகர்களும் அவன் மனைவி செரேசும் அவனை நோக்கி, “யூத குலத்தினனாகிய மொர்தக்காய்க்கு முன்பாக நீ வீழ்ச்சியுறத் தொடங்கிவிட்டாய். நீ அவனை எதிர்த்து நிற்க மாட்டாய்; அவனுக்கு முன்பாய் முற்றிலும் வீழ்வது திண்ணம்” என்றனர்.
ஆமான் கொல்லப்படல்
14 இவ்வாறு அவர்கள் அவனிடம் பேசிக்கொண்டிருக்கையில், மன்னரின் அலுவலர் அவ்விடம் வந்து, எஸ்தர் ஏற்பாடுசெய்திருந்த விருந்திற்கு வருமாறு ஆமானை விரைவுப்படுத்தினர்.
6:2 எஸ் 2:21-22. | https://bible.catholicgallery.org/tamil/etb-esther-6 |
432 | எஸ்தர் | எஸ்தர் அதிகாரம் – 7 – திருவிவிலியம் | 1 மன்னரும் ஆமானும் அரசி எஸ்தர் வைத்த விருந்துக்குச் சென்றனர்.
2 மன்னர் இரண்டாம் நாள் விருந்தில் திராட்சை மதுவை மீண்டும் அருந்துகையில், எஸ்தரிடம் “எஸ்தர் அரசியே, உன் விண்ணப்பம் யாது? அது உனக்கு அளிக்கப்படும். நீ வேண்டுவது என் அரசின் பாதியே ஆனாலும் அது உனக்குக் கொடுக்கப்படும்” என்றார்.
3 அப்பொழுது அரசி எஸ்தர், “உம் கண்களில் எனக்குத் தயவு கிடைத்திருப்பின், அரசே! உமக்கு நலமெனப்பட்டால், எனது விண்ணப்பத்திற்கிணங்க எனக்கும் என் வேண்டுகோளின்படி என் மக்களுக்கும் உயிர்ப்பிச்சை அருள்வீராக!
4 என் மக்களும் நானும் கொலையுண்டு அழிந்து ஒழிந்துபோகும்படி விலை பேசப்பட்டிருக்கிறோம்; ஆண்களும் பெண்களுமாக நாங்கள் அடிமைகளாய் விற்கப்பட்டிருந்தால் கூட நான் மௌனமாய் இருந்திருப்பேன். ஆனால் மன்னருக்கு உண்டாகும் இழப்பிற்கு எதிரியால் ஈடு செய்ய முடியாது” என்று பதிலளித்தார்.
5 மன்னர் அகஸ்வேர் அரசி எஸ்தரை நோக்கி, “இப்படிச் செய்தவன் எவன்? தன் இதயத்தில் செருக்குற்று இவ்வாறு செய்யும்படி நினைத்த அவன் எங்கே?” என வினவினார்.
6 “எதிரியும் வஞ்சனகனுமாகிய மனிதன் இந்த ஆமானே; இவனே அந்தத் தீயவன்!” என்று எஸ்தர் பதிலுரைத்தார். இது கேட்ட ஆமான், மன்னருக்கும் எஸ்தருக்கும் முன்பாகப் பேரச்சம் கொண்டான்.
7 மன்னர் கடுஞ்சினமுற்று, விருந்தில் திராட்சை மது அருந்துவதை விட்டுவிட்டு, எழுந்து அரண்மனைப் பூங்காவில் நுழைந்தார். தனக்குத் தீங்கிழைக்க மன்னர் முடிவு செய்துவிட்டார் என்று கண்ட ஆமான் அரசி எஸ்தரிடம் தன் உயிருக்காய் மன்றாட எண்ணிப் பின்தங்கினான்.
8 மன்னர் அரண்மனைப் பூங்காவிலிருந்து விருந்து நடைபெற இடத்திற்குத் திரும்பிய பொழுது, எஸ்தரின் மெத்தையில் ஆமான் வீழ்ந்து கிடக்கக் கண்டார். “என் மாளிகையில் நான் இருக்கும் போதே, இவன் அரசியைக் கெடுப்பானோ?” என்ற சொற்கள் மன்னரின் வாயினின்று வெளிப்பட, காவலர் ஆமானின் முகத்தை மூடிவிட்டனர்.
9 அச்சமயம், மன்னருக்குப் பணிவிடை செய்த அர்போனா என்ற அலுவலர் மன்னரை நோக்கி, “அதோ! ஆமானின் வீட்டெதிரே மன்னருக்கு நல்லது செய்த மொர்தக்காயைத் தூக்கிலிட ஆமான் நாட்டிய ஐம்பது முழத் தூக்குமரம்!” என்றார். அதற்கு மன்னர், “அதிலேயே அவனைத் தூக்கிலிடுங்கள்!” என்றார்.
10 மொர்தக்காயைத் தூக்கிலிட அவன் நாட்டிய தூக்கு மரத்திலேயே ஆமான் தூக்கிலிடப்பட்டான். மன்னரின் சீற்றமும் தணிந்தது. | https://bible.catholicgallery.org/tamil/etb-esther-7 |
433 | எஸ்தர் | எஸ்தர் அதிகாரம் – 8 – திருவிவிலியம் | தம்மைக் காத்துக்கொள்ளும்படி எஸ்தர் யூதரைத் தூண்டல்
1 சில நாள்களில் மன்னர் அகஸ்வேர், யூதரின் பகைவனான ஆமானின் இல்லத்தை அரசி எஸ்தருக்கு வழங்கினார். மொர்தக்காய்க்கும் தமக்கும் உள்ள உறவை எஸ்தர் வெளிப்படுத்த, அவரும் மன்னரின் முன்னிலைக்கு வந்தார்.
2 ஆமானிடமிருந்து கழற்றப்பெற்ற தம் கணையாழியை மன்னர் எடுத்து மொர்தக்காய்க்கு அளித்தார். எஸ்தரும் மொர்தக்காயை ஆமான் வீட்டின் பொறுப்பாளராக நியமித்தார்.
3 மீண்டும் எஸ்தர், யூதருக்கு எதிராய்ச் சதிசெய்த தீயோன் ஆகாகியானான ஆமானின் திட்டங்கள் யாவும் குலைந்து போகுமாறு, மன்னரின் காலடிகளில் வீழ்ந்து, அழுது மன்றாடி, அவரது தயவினை நாடினார்.
4 உடனே மன்னர் தம் பொற்செங்கோலை எஸ்தருக்கு நீட்ட, அவர் எழுந்து மன்னர்முன் நின்றார்.
5 அவர், “மன்னருக்கு இது நலமெனப்பட்டால், அவர்தம் கண்களில் எனக்குத் தயவு கிடைத்தால், அரசருக்கு இது சரியெனத் தோன்றினால், நானும் உம் பார்வையில் இனியவளெனப்பட்டால் மன்னரின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள யூதர் அழிந்துபோகுமாறு வஞ்சனையாய்த் திட்டமிட்ட அம்மதாத்தின் மகனும் ஆகாகியனுமான ஆமான் எழுதிய மடல்கள் அனைத்தையும் திருப்பி அனுப்பும்படி எழுதுவீராக!
6 என் மக்களுக்கு நேரிடும் தீங்கினையும், என் உறைவினரின் படுகொலையினையும் நான் எவ்வாறு காண இயலும்?” என்று கூறினார்.
7 அப்பொழுது மன்னர் அகஸ்வேர், அரசி எஸ்தரையும் யூதரான மொர்தக்காயையும் நோக்கி, “இதோ! ஆமானின் இல்லத்தை எஸ்தருக்கு அளித்தேன்; யூதருக்கு எதிராய்க் கை நீட்டிய ஆமான் தூக்கிலிடப்பட்டான்.
8 மன்னரின் பெயரால் எழுதப்பட்டு, அவர் கணையாழியின் முத்திரை பதிக்கப்பெற்ற எம்மடலும் திருப்பிப் பெற இயலாதபடியால், உங்கள் பார்வையில் நலமெனத்தோன்றும் அனைத்தையும் மன்னரின் பெயரால் நீங்கள் யூதருக்கு எழுதி, மன்னரின் கணையாழியால் முத்திரையிடுங்கள்” என்று கூறினார்.
9 சீவான் என்ற மூன்றாம் மாதத்தில், இருபத்து மூன்றாம் நாளன்று மன்னரின் எழுத்தர்கள் வரவழைக்கப்பட்டனர். மொர்தக்காய் இட்ட ஆணையின்படியே யூதர் அனைவருக்கும் இந்தியா தொடங்கி எத்தியோப்பியா வரையிலுள்ள நூற்றிருபத்தேழு மாநிலங்களின் குறுநில மன்னர்களுக்கும், மாநிலங்களின் ஆளுநர் அனைவர்க்கும் மாநிலத் தலைவர் அனைவர்க்கும் அவர்தம் மக்களின் வரிவடிவ வாரியாகவும், மொழி வாரியாகவும் மடல்கள் வரையப் பெற்றன.
10 மன்னர் அகஸ்வேர் பெயரால் எழுதப் பெற்று, அரச கணையாழி முத்திரையிடப்பெற்ற இம்மடல்கள், அரசக் கொட்டிலைச் சார்ந்த அரசப் பணிக்குரிய புரவிகள் மீது அமர்ந்தேகும் விரைவு அஞ்சலர் மூலம் அனுப்பப்பட்டன.
11 ஒவ்வொரு நகரிலும் உள்ள யூதர் ஒன்றுதிரண்டு தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், அவர்களையும் அவர்களின் குழந்தைகள், பெண்கள் ஆகியோரையும் தாக்கக்கூடிய எந்த நாட்டையும் மாநிலத்தையும் சார்ந்த படைகளை அழித்துக் கொன்று ஒழிக்கவும், அவற்றின் உடைமைகளைக் கொள்ளையிடவும் தேவையான அதிகாரத்தை மன்னரின் பெயரால் எழுதப்பட்ட இம்மடல்கள் அளித்தன.
12 மன்னர் அகஸ்வேரின் மாநிலங்கள் அனைத்திலும், அதார் என்ற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாளன்று, ஒரே நாளில் இவ்வாறு செய்வதென அறிவிக்கப்பட்டது.
13 அம்மடலின் நகல் ஒவ்வொரு மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் சட்டமாக அறிவிக்கப்பட்டது. யூதரும் தம் பகைவரைப் பழிதீர்க்க இந்நாளில் ஆயத்தமாகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
14 அரசப் பணிக்குரிய புரவிகள் மீது அமர்ந்தேகும் விரைவு அஞ்சலர் மன்னரின் ஆணையால் ஏவப்பட்டு, வெளி மாநிலங்களுக்கு விரைந்தனர். சூசான் அரண்மனையிலும் இச்சட்டம் அறிவிக்கப்பட்டது.
15 நீலமும் வெண்மையுமான அரச உடையணிந்து, பெரிய பொன் மகுடம் சூடி, கருஞ்சிவப்பு மென்துகில் அணிந்தவராய் மொர்தக்காய் மன்னரின் முன்னிலையிலிருந்து வெளியேற, சூசான் நகர் மகிழ்ந்து களிகூர்ந்தது.
16 இச்செய்தி யூதருக்கு நம்பிக்கை ஒளியாகவும், மகிழ்வுக்கும், அக்களிப்புக்கும் மதிப்பிற்கும் உரிய ஒன்றாகவும் விளங்கியது.
17 ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நகரிலும், எங்கெல்லாம் மன்னரின் இந்த வாக்கும் நியமமும் எட்டினவோ, அங்கெல்லாம் வாழ்ந்த யூதர் மகிழ்ந்து களிகூர்ந்தனர். அந்நாள் விருந்தாடும் விழா நாளாக விளங்கியது. யூதரைப்பற்றிய அச்சம் பிறர்மீது விழ, நாட்டு மக்களில் பலர் யூதராயினர். | https://bible.catholicgallery.org/tamil/etb-esther-8 |
434 | எஸ்தர் | எஸ்தர் அதிகாரம் – 9 – திருவிவிலியம் | யூதர் தம் எதிரிகளை அழித்தல்
1 மன்னரின் வாக்கும் நியமும் நிறைவேற்றப்படவேண்டிய அதார் என்ற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாள் வந்தது. எதிரிகள் யூதரை மேற்கொள்ளலாம் என்று நம்பியிருந்த அந்த நாள், யூதர் தம் பகைவரை மேற்கொள்ளும் நாளாக மாறியது.
2 அகஸ்வேர் மன்னரின் மாநிலங்களில் இருந்த யூதர் அனைவரும் தமக்குத் துன்பம் விளைவிக்க எண்ணியோர்க்கு எதிராய்த் தம் கைகளை நீட்ட அவரவர் தம் இடங்களில் ஒன்று திரண்டனர். வேற்றினத்தாரை அச்சம் ஆட்கொள்ள, அவர்களுள் எவராலும் யூதரை எதிர்த்து நிற்க இயலவில்லை.
3 மொர்தக்காயைப் பற்றிய அச்சம் மன்னரின் அலுவல்களில் உதவி செய்கின்ற மாநிலத் தலைவர்கள், குறுநில மன்னர்கள், ஆளுநர்கள் அரச ஊழியம் செய்வோர் அனைவரையும் ஆட்கொள்ள அவர்களும் யூதருக்கு உதவி செய்யலாயினர்.
4 மொர்தக்காய் அரச மாளிகையில் வல்லவரானார். அவரது புகழ் அனைத்து மாநிலங்களிலும் பரவியது. அவரது ஆற்றல் மென்மேலும் வளர்ந்தது.
5 எனவே, யூதர் தம் பகைவருக்கு எதிராய்த் தாம் விரும்பியபடி செய்தனர். அவர்களை வாளால் தாக்கி வெட்டி வீழ்த்தினர்.
6 சூசான் அரண்மனையில் ஐந்நூறு பேரை யூதர் கொன்றொழித்தனர்.
7 பர்சந்தத்தா, தல்போன், அஸ்பாத்தா,
8 போராத்தா, அதலியா, அரிதாத்தா,
9 பர்மஸ்தா, அரிசாய், அரிதாய், வய்சாத்தா ஆகிய
10 யூதரின் எதிரியும் அம்மதாத்தின் மகனுமான ஆமானின் புதல்வர் பதின்மரையும் அவர்கள் கொன்றனர்; ஆயினும், அவர்களின் உடைமைகளைக் கொள்ளையடிக்கவில்லை.
11 மன்னரின் பிற மாநிலங்களில் வாழ்ந்த யூதர் ஒன்று திரண்டு தம்மைப் பாதுகாத்துக்கொன்டனர். தம் பகைவரிடமிருந்து விடுதலை பெறுமாறு அவர்கள் எழுபத்தைந்து ஆயிரம் பேரைக் கொன்றனர். ஆயினும் அவர்கள் உடைமைகளைக் கொள்ளையடிக்கவில்லை.
12 அதார் மாதம் பதின்மூன்றாம் நாளையடுத்த பதினான்காம் நாளன்று அவர்கள் ஓய்வெடுத்தனர். அந்நாளை விருந்துண்டு மகிழும் விழாவாக ஆக்கினர்.
13 சூசான் வாழ் யூதரோ அதார் மாதம் பதின்மூன்றாம், பதினான்காம் நாள்களில் ஒன்றுகூடி அடுத்துவந்த பதினைந்தாம் நாளை ஒய்வெடுத்து, விருந்துண்டு மகிழும் விழாவாக ஆக்கினர்.
14 அரணற்ற நகர்ப்புறச் சிற்றூர்களில் வாழ்ந்த யூதர், அதார் மாதம் பதினான்காம் நாளை விருந்துண்டு மகிழ்ந்து, ஒருவருக்கொருவர் அன்பளிப்பு கொடுத்துக் கொள்ளும் விழாவாக ஆக்கினர்.
பூரிம் பெருவிழா
15 மொர்தக்காய் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் மடல்களில் வரைந்து, அவற்றை அருகிலும் தொலையிலும், மன்னர் அகஸ்வோரின் அனைத்து மாநிலங்களிலும் வாழ்ந்த யூதருக்கு அனுப்பி,
16 ஆண்டுதோறும் அதார் மாதம் பதினான்காம், பதினைந்தாம் நாள்களை
17 யூதர் தம் பகைவரின் தொல்லையினின்று விடுதலை பெற்ற நாள்களாகவும், அவர்களின் துன்பம் மகிழ்ச்சியாகவும், புலம்பல் விழாக் கோலமாகவும் மாறின மாதமாகவும் கொண்டு, அந்நாள்களில் விருந்துண்டு மகிழவும், ஒருவருக்கொருவர் அன்பளிப்பு கொடுத்துக் கொள்ளவும், ஏழைகளுக்கு உணவளிக்கவும், வேண்டுமென்று நியமம் தந்தார்.
18 யூதர்கள் தாம் செய்யத் தொடங்கிவாறும், மொர்தக்காய் தங்களுக்கு எழுதியவாறும் செய்ய உடன்பட்டார்கள்.
19 ஆகாகியனும் அம்மதாத்தின் மகனுமான ஆமான், யூதர்க்கெல்லாம் எதிரியாய் இருந்து, அவர்களை அழிக்கவும், அடியோடு ஒழிக்கவும், ‘பூர்’ என்ற சீட்டைப் போட்டான்.
20 அப்போது எஸ்தர், மன்னரின் உதவியை நாட, யூதருக்கு எதிராய்ச் சதிசெய்த ஆமானின் தீவினை அவன் தலைமேலே விழுமாறு அவர் கட்டளை பிறப்பித்தார். அதன்படி அவனும் அவன் புதல்வரும் தூக்கிலிடப்பட்டனர்.
21 எனவே, யூதர் இந்நாள்களை, ‘பூர்’ என்ற சொல்லினின்று எழுந்த ‘பூரிம்’ என்ற பெயரால் அழைக்கலாயினர். ‘பூரிம்’ என்ற இவ்விழாவிற்கு மொர்தக்காயின் மடலின் வாசகமும் அவர்கள் கண்டவையும் அனுபவித்தவையுமே அடிப்படை ஆயின.
22 அவர்களும் அவர்களின் வழிமரபினரும் அவர்களைச் சார்ந்தோர் அனைவரும், இந்த இரு நாள்களை அவை பற்றிய மடல்களின்படியும் குறிக்கப்பட்ட காலத்திலும் கண்டிப்பாய்க் கொண்டாடுவது என்று கீழ்க் கண்டவாறு உறுதி பூண்டனர்:
23 “இந்நாள்கள் தலைமுறைதோறும், ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நகரிலும் நினைவுகூரப்பட்டுக் கொண்டாடப்பட வேண்டும். ‘பூரிம்’ என்ற இந்நாள்கள் யூதரிடையே கொண்டாடப்படாமல் போகா. இவற்றின் நினைவு அவர்களின் வழிமரபினரிடையிலும் ஒழிந்து போகாது”.
24 அபிகாயிலின் மகளான அரசி எஸ்தரும் யூதராகிய மொர்தக்காயும் ‘பூரிம்’ பற்றிய இந்த இரண்டாம் மடலை முழு அதிகாரத்துடன் எழுதி உறுதிப்படுத்தினர்.
25 அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் அம்மடல் எழுதப்பட்டு, அகஸ்வேரின் ஆட்சிக்குட்பட்ட நூற்றிருப்பத்தேழு மாநிலங்களிலும் வாழ்ந்த யூதருக்கு அனுப்பப்பட்டது.
26 யூதராகிய மொர்தக்காயும் அரசி எஸ்தரும் இட்ட ஆணையின்படி, ‘பூரிம்’ என்ற இந்த நாள்களை யூதரும், அவர்களின் வழிமரபினரும் குறிக்கப்பட்ட காலத்தில் நோன்பு, புலம்பல் நாள்களாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
27 இந்தப் ‘பூரிம்’ விழாபற்றிய ஒழுங்குமுறைகள் யாவற்றையும் உறுதிப்படுத்திய எஸ்தரின் ஆணை ஓர் ஏட்டுச் சுருளில் எழுதி வைக்கப்பட்டது.
9:24 எஸ் 3:7. | https://bible.catholicgallery.org/tamil/etb-esther-9 |
435 | எஸ்தர் | எஸ்தர் அதிகாரம் – 10 – திருவிவிலியம் | நிறையுரை
1 மன்னர் அகஸ்வேர் நிலங்களின் மீதும், கடலின் தீவுகளின் மீதும் தீர்வை விதித்தார்.
2 அவருடைய ஆற்றலும் வலிமைமிகு செயல்களும், அவர் மொர்தக்காய்க்கு அளித்த மேன்மையின் முழுவிவரமும், மேதியா மற்றும் பாரசீக மன்னர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன அல்லவா?
3 யூதராகிய மொர்தக்காய், மன்னர் அகஸ்வேருக்கு அடுத்த நிலைபெற்று, யூதருள் மேன்மை நிறைந்தவராகவும், தம் சகோதரர் பலருக்கு இனியவராகவும், தம் மக்களின் நன்மையை நாடுபவராகவும், தம் இனத்தார் அனைவரின் நல்வாழ்வுக்காகப் பரிந்துரை செய்பவராகவும் விளங்கினார். | https://bible.catholicgallery.org/tamil/etb-esther-10 |
436 | யோபு | யோபு அதிகாரம் – 1 – திருவிவிலியம் | சாத்தான் யோபைச் சோதித்தல்
1 ஊசு என்ற நாட்டில் யோபு என்ற ஒருவர் இருந்தார். அவர் மாசற்றவரும் நேர்மையானவருமாய் இருந்தார். கடவுளுக்கு அஞ்சித் தீயதை விலக்கி வந்தார்.
2 அவருக்கு ஏழு புதல்வரும் மூன்று புதல்வியரும் பிறந்தனர்.
3 அவருடைய உடைமைகளாக ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்க் காளைகளும், ஐந்நூறு பெண் கழுதைகளும் இருந்தன. பணியாள்களும் மிகப் பலர் இருந்தனர். கீழை நாட்டு மக்கள் எல்லாரிலும் இவரே மிகப் பெரியராக இருந்தார்.
4 அவருடைய புதல்வர்கள் ஒவ்வொருவரும் தம் வீட்டில் தமக்குரிய நாளில் விருந்து தயாரித்து, தம் மூன்று சகோதரரிகளைத் தம்முடன் உண்டு குடிப்பதற்கு அழைப்பது வழக்கம்.
5 விருந்து நாள்களின் முறை முடிந்ததும், யோபு அவர்களை வரவழைத்துத் தூய்மைப்படுத்துவார். “என் பிள்ளைகள் ஒருவேளை பாவம் செய்து, உள்ளத்தில் கடவுளைத் தூற்றியிருக்கக்கூடும்” என்று யோபு நினைத்து, காலையில் எழுந்து அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எல்லார்க்காகவும் எரிபலியை ஒப்புக்கொடுப்பார். யோபு எப்பொழுதும் இவ்வாறு செய்வது வழக்கம்.
6 ஒருநாள் தெய்வப் புதல்வர் ஆண்டவர் முன்னிலையில் ஒன்றுகூடினர். சாத்தான் அவர்கள் நடுவே வந்துநின்றான்.
7 ஆண்டவர் சாத்தானிடம், “எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். சாத்தான் ஆண்டவரிடம் “உலகைச் சுற்றி உலவி வருகிறேன்” என்றான்.
8 ஆண்டவர் சாத்தானிடம், “என் உழியன் யோபைப் பார்த்தாயா? அவனைப் போல் மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சி தீமையானதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனும் இல்லை” என்றார்.
9 மறுமொழியாக, சாத்தான் ஆண்டவரிடம் “ஒன்றுமில்லாமலா யோபு கடவுளுக்கு அஞ்சி நடக்கிறான்?
10 அவனையும் அவன் வீட்டாரையும், அவனுக்குரிய அனைத்தையும் நீர் சூழ்ந்து “நின்று காக்கவில்லையா? அவன் கைவேலைகளுக்கு ஆசி வழங்கவில்லையா? அவன் மந்தைகளை நாட்டில் பெருகச் செய்யவில்லையா?
11 ஆனால், உமது கையை நீட்டும்; அவனுக்குரியவற்றின்மீது கை வையும். அப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மைப் பழிப்பான்” என்றான்.
12 ஆண்டவர் சாத்தானிடம், “இதோ! அவனுக்குரியவையெல்லாம் உன் கையிலே; அவன்மீது மட்டும் கை வைக்காதே” என்றார். சாத்தானும் ஆண்டவர் முன்னிலையினின்று புறப்பட்டான்.
யோபு பிள்ளைகளையும் செல்வத்தையும் இழத்தல்
13 ஒருநாள் யோபின் புதல்வரும் புதல்வியரும் தம் மூத்த சகோதரன் வீட்டில் உண்டு திராட்சை இரசம் குடித்துக் கொண்டிருந்தனர்.
14 அப்போது தூதன் ஒருவன் யோபிடம் வந்து, “எருதுகள் உழுதுகொண்டிருந்தன; கழுதைகளும் அவற்றிற்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்தன.
15 அப்போது செபாயர் பாய்ந்து, அவற்றைக் கைப்பற்றினர். ஊழியரை வாள் முனையில் வீழ்த்தினர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான்.
16 இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, “கடவுளின் நெருப்பு விண்ணிலிருந்து விழுந்து, ஆடுகளையும், வேலையாள்களையும் சுட்டெரித்துவிட்டது. நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான்.
17 இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, “கல்தேயர் மூன்று கும்பலாக வந்து ஒட்டகங்கள் மேல் பாய்ந்து அவற்றைக் கைப்பற்றிக் கொண்டனர். ஊழியர்களை வாள் முனையில் வீழ்த்தினர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான்.
18 இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, “உம் புதல்வரும், புதல்வியரும் தம் மூத்த சகோதரன் வீட்டில் உண்டு திராட்சை இரசம் குடித்துக்கொண்டிருந்தனர்.
19 அப்போது திடீரெனப் பெருங்காற்று பாலை நிலத்திலிருந்து வீசி, வீட்டின் நான்கு மூலைகளிலும் தாக்கியது. வீடு இளைஞர்கள் மேல் இடிந்து விழ, அவர்களும் மடிந்துவிட்டனர். நான் ஒருவன்மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான்.
20 யோபு எழுந்தார்; தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்; தம் தலையை மழித்துக்கொண்டார். பின்பு தரையில் விழுந்து வணங்கி,
21 “என் தாயின் கருப்பையினின்று
பிறந்த மேனியனாய் யான் வந்தேன்;
அங்கே திரும்புகையில் பிறந்த
மேனியனாய் யான் செல்வேன்;
ஆண்டவர் அளித்தார்;
ஆண்டவர் எடுத்துக்கொண்டார்.
ஆண்டவரது பெயர்
போற்றப்பெறுக!” என்றார்.
22 இவை அனைத்திலும் யோபு பாவம் செய்யவுமில்லை; கடவுள் மீது குற்றஞ்சாட்டவும் இல்லை.
1:6 தொநூ 6:2.
1:9-11 திவெ 12:10. | https://bible.catholicgallery.org/tamil/etb-job-1 |
437 | யோபு | யோபு அதிகாரம் – 2 – திருவிவிலியம் | சாத்தான் யோபை மீண்டும் சோதித்தல்
1 ஒருநாள் தெய்வப் புதல்வர் ஆண்டவர் முன்னிலையில் ஒன்றுகூடினர். சாத்தானும் அவர்கள் நடுவே வந்து, ஆண்டவர்முன் நின்றான்.
2 ஆண்டவர் சாத்தானிடம் “எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். சாத்தான் ஆண்டவரிடம், “உலகைச் சுற்றி உலவி வருகிறேன்” என்றான்.
3 அப்போது ஆண்டவர் சாத்தானிடம், “என் ஊழியன் யோபைப் பார்த்தாயா? அவனைப்போல் மாசற்றவனும் நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சித் தீயதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனுமில்லை. காரணமின்றி அவனை அழிக்க நீ என்னை அவனுக்கு எதிராகத் தூண்டிவிட்ட போதிலும், அவன் தன் மாசின்மையில் உறுதியாக நிலைத்துள்ளான்” என்றார்.
4 சாத்தான் மறுமொழியாக ஆண்டவரிடம், “தோலுக்குத் தோல்; எவரும் தம் உயிருக்காகத் தமக்கு உள்ளதெல்லாம் கொடுப்பார்.
5 உமது கையை நீட்டி அவனுடைய எலும்பு, சதைமீது கைவையும். அப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மை இழித்துரைப்பது உறுதி” என்றான்.
6 ஆண்டவர் சாத்தானை நோக்கி, “இதோ! அவன் உன் கையிலே! அவன் உயிரை மட்டும் விட்டுவை” என்றார்.
7 சாத்தானும் ஆண்டவரின் முன்னின்று புறப்பட்டுப் போனான். அவன் யோபை உள்ளங்கால் முதல் உச்சந்தலைவரை எரியும் புண்களால் வாட்டி வதைத்தான்.
8 ஓடொன்றை எடுத்துத் தம்மைச் சொறிந்து கொண்டு, யோபு சாம்பலில் உட்கார்ந்தார்.
9 அப்போது அவரின் மனைவி அவரிடம், “இன்னுமா மாசின்மையில் நிலைத்திருக்கிறீர்! கடவுளைப் பழித்து மடிவதுதானே?” என்றாள்.
10 ஆனால் அவர் அவளிடம், “நீ அறிவற்ற பெண்போல் பேசுகிறாய்! நன்மையைக் கடவுளிடமிருந்து பெற்ற நாம் ஏன் தீமையைப் பெறக்கூடாது?” என்றார். இவை அனைத்திலும் யோபு தம் வாயால் பாவம் செய்யவில்லை.
11 அப்போது யோபின் நண்பர் மூவர், அவருக்கு நேர்ந்த இத்தீமை அனைத்தையும் பற்றிக் கேள்விப்பட்டனர். தேமாவைச் சார்ந்த எலிப்பாசு, சூகாவைச் சார்ந்த பில்தாது, நாமாவைச் சார்ந்த சோப்பார் ஆகியோர் தம்மிடமிருந்து கிளம்பி வந்து, அவரிடம் துக்கம் விசாரிக்கவும், அவருக்கு ஆறுதல் கூறவும் ஒன்றுகூடினர்.
12 தொலையிலிருந்தே கண்களை உயர்த்திப் பார்த்தபோது, அவரை அவர்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. அவர்கள் வாய் விட்டு அழுதார்கள்; ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்கள். வானத்தை நோக்கித் தங்கள் தலையில் புழுதியை வாரிப்போட்டுக் கொண்டார்கள்.
13 அவரோடு அவர்கள் ஏழு பகலும், ஏழு இரவும் தரையில் உட்கார்ந்திருந்தனர். அவருடைய துயரின் மிகுதியைக் கண்டு எவரும் ஒரு வார்த்தைகூட அவருடன் பேசவில்லை. | https://bible.catholicgallery.org/tamil/etb-job-2 |
438 | யோபு | யோபு அதிகாரம் – 3 – திருவிவிலியம் | யோபு தாம் பிறந்த நாளைச் சபித்தல்
1 இதன்பிறகு யோபு வாய்திறந்து, தாம் பிறந்த நாளைப் பழிக்கத் தொடங்கினார்.
2 யோபு கூறியது:
3 “ஒழிக நான் பிறந்த அந்த நாளே!
ஓர் ஆண்மகவு கருவுற்றதெனச்
சொல்லிய அந்த இரவே!
4 அந்த நாள் இருளாகட்டும்;
மேலிருந்து கடவுள் அதை
நோக்காதிருக்கட்டும்; ஒளியும்
அதன்மேல் வீசாதிருக்கட்டும்.
5 காரிருளும் சாவிருட்டும்
அதைக் கவ்விக்கொள்ளட்டும்;
கார்முகில் அதனை மூடிக் கொள்ளட்டும்;
பகலை இருளாக்குபவை
அதனை அச்சுறுத்தட்டும்.
6 அவ்விரவைக் பேயிருட்டு பிடிப்பதாக!
ஆண்டின் நாள்கணக்கினின்று
அது அகற்றப்படுவதாக!
திங்கள் எண்ணிக்கையிலும்
அது சேரா தொழிக!
7 அவ்விரவு வெறுமையுற்றுப் பாழாகட்டும்;
மகிழ்ச்சியொலி ஒன்றும்
அதில் எழாதிருக்கட்டும்;
8 பகலைப் பழிப்போரும்
லிவியத்தானைக் தூண்டி எழுப்புவோரும்
அதனைப் பழிக்கட்டும்.
9 அதன் விடியற்காலை விண்மீன்கள்
இருண்டு போகட்டும்;
அது விடியலொளிக்குக் காத்திருக்க
அதுவும் இல்லாமற்போகட்டும்;
அது வைகறையின் கண்விழிப்பைக்
காணாதிருக்கட்டும்.
10 ஏனெனில் என் தாயின் கருப்பையை
அவ்விரவு அடைக்காமற்போயிற்றே!
என் கண்களினின்று வேதனையை
அது மறைக்காமற் போயிற்றே!
11 கருப்பையிலேயே நான் இறந்திருக்கலாகாதா?
கருவறையினின்று வெளிப்பட்டவுடனே
நான் ஒழிந்திருக்கலாகாதா?
12 என்னை ஏந்த முழங்கால்கள்
முன் வந்ததேன்?
நான் பாலுண்ண முலைகள் இருந்தேன்?
13 இல்லாதிருந்திருந்தால்,
நான் வெறுமனே கிடந்து
துயில் கொண்டிருப்பேன்.
14 பாழானவைகளைத்
தமக்குக் கட்டிக்கொண்ட
மாநிலத்து மன்னர்களோடும்
அமைச்சர்களோடும்
15 அல்லது பொன்னை
மிகுதியிருக்கக் கொண்டு,
வெள்ளியால் தங்கள் இல்லங்களை நிரப்பின
உயர்குடி மக்களோடும்
நான் உறங்கியிருந்திருப்பேன்.
16 அல்லது முழுமை பெறாக்
கருவைப் போலவும்
ஒளியைக் காணாக்
குழவியைப் போலவும் அழிந்திருப்பேன்.
17 அங்குத் தீயவர் தீங்கு செய்வதை நிறுத்துவர்.
களைப்புற்றோரும் அங்கு இளைப்பாறுவர்.
18 சிறைப்பட்டோர் அங்கு
நிம்மதியாகக் கூடியிருப்பர்;
ஒடுக்குவோரின் அதட்டலைக் கேளாதிருப்பர்.
19 சிறியவரும் பெரியவரும் அங்கு இருப்பர்;
அடிமை தம் ஆண்டான் பிடியில் இரான்.
20 உறுதுயர் உற்றோர்க்கு ஒளி தருவானேன்?
உள்ளம் கசந்தோர்க்கு
உயிர் கொடுப்பானேன்?
21 சாவுக்கு அவர்கள் ஏங்குகிறார்கள்;
அதைப் புதையலினும் மேலாய்க்
கருதித் தேடுகிறார்கள்.
ஆனால் அதுவோ வந்த பாடில்லை.
22 கல்லறை காணின் களிப்பெய்தி
அகமகிழ்வோர்க்கு,
வாழ்வு வழங்கப்படுவதேன்?
23 எவருக்கு வழி மறைக்கப்பட்டுள்ளதோ,
எவரைச் சுற்றிலும் கடவுள்
தடைச்சுவர் எழுப்பியுள்ளாரோ,
அவருக்கு ஒளியால் என்ன பயன்?
24 பெருமூச்சு எனக்கு உணவாயிற்று;
வேதனைக்கதறல் வெள்ளமாய் ஓடிற்று.
25 ஏனெனில் நான் அஞ்சியது எதுவோ?
அதுவே எனக்கு நேர்ந்தது;
திகிலுற்றது எதுவோ
அதுவே என்மேல் விழுந்தது.
26 எனக்கு நிம்மதி இல்லை; ஓய்வு இல்லை;
அமைதி இல்லை; அல்லலே வந்துற்றது.”
3:1-19 எரே 20:14-18.
3:21 திவெ 9:6. | https://bible.catholicgallery.org/tamil/etb-job-3 |
439 | யோபு | யோபு அதிகாரம் – 4 – திருவிவிலியம் | கடவுள் மீது நம்பிக்கை
(4:1-14:22)
1 அதன்பின் தேமானியன் எலிப்பாக பேசத் தொடங்கினான்:
2 “ஒன்று சொன்னால்
உமக்குப் பொறுக்குமோ?
சொல்லாமல் நிறுத்த யாரால்தான் முடியும்?
3 பலர்க்கு அறிவுரை பகர்ந்தவர் நீர்!
தளர்ந்த கைகளைத் திடப்படுத்தியவர் நீர்!
4 உம் சொற்கள், தடுக்கி விழுவோரைத்
தாங்கியுள்ளன; தள்ளாடும்
கால்களை உறுதியாக்கியுள்ளன.
5 ஆனால் இப்பொழுதோ,
ஒன்று உமக்கு வந்துற்றதும்
வருந்துகின்றீர்; அது உம்மைத்
தாக்கியதும் கலங்குகின்றீர்.
6 இறையச்சம் அல்லவா உமது உறுதி?
நம்பிக்கையல்லவா உமது நேரிய வழி?
7 நினைத்துப்பாரும்! குற்றமற்றவர்
எவராவது அழிந்ததுண்டா?
நேர்மையானவர் எங்கேயாவது ஒழிந்ததுண்டா?
8 நான் பார்த்த அளவில், தீவினையை உழுது,
தீங்கினை விதைத்தவர்
அறுப்பது அதையே!
9 கடவுளின் மூச்சினால் அவர்கள் அழிவர்;
அவரின் கோபக் கனலால் எரிந்தொழிவர்.
10 அரியின் முழக்கமும்
கொடுஞ்சிங்கத்தின் உறுமலும் அடங்கும்;
குருளையின் பற்களும் உடைபடும்.
11 இறந்துபோம் சிங்கம் இரையில்லாமல்;
குலைந்துபோம்
பெண்சிங்கத்தின் குட்டிகள்.
12 எனக்கொரு வார்த்தை
மறைவாய் வந்தது;
அதன் மெல்லிய ஓசை
என் செவிக்கு எட்டியது.
13 ஆழ்ந்த உறக்கம் மனிதர்க்கு வருகையில்,
இரவுக் காட்சியின் சிந்தனைகளில்,
14 அச்சமும் நடுக்கமும் எனை ஆட்கொள்ள,
என் எலும்புகள் பலவும் நெக்குவிட்டனவே.
15 ஆவி ஒன்று என் முன்னே கடந்து சென்றது;
என் உடலின் மயிர் சிலிர்த்து நின்றது.
16 ஆவி நின்றது; ஆனால்,
அதன் தோற்றம் எனக்குத் தெளிவில்லை;
உருவொன்று என் கண்முன் நின்றது;
அமைதி நிலவிற்று; குரலொன்றைக் கேட்டேன்.
17 கடவுளைவிட மனிதர் நேர்மையாளரா?
படைத்தவரைவிட மானிடர் மாசற்றவரா?
18 அவர் தம் தொண்டர்களிலே
நம்பிக்கை வைக்கவில்லையெனில்,
அவருடைய வான தூதரிடமே
அவர் குறைகாண்கின்றாரெனில்,
19 புழுதியைக் கால்கோளாகக்கொண்டு,
மண் குடிசையில் வாழ்ந்து,
அந்துப்பூச்சிபோல் விரைவில் அழியும்
மனிதர் எம்மாத்திரம்?
20 காலைமுதல் மாலைவரையில்
அவர்கள் ஒழிக்கப்டுவர்; ஈவு இன்றி
என்றென்றும் அழிக்கப்படுவர்.
21 அவர்களின் கூடாரக் கயிறுகள் அறுபட,
அவர்கள் ஞானமின்றி மடிவதில்லையா?
4:13 யோபு 33:15. | https://bible.catholicgallery.org/tamil/etb-job-4 |
440 | யோபு | யோபு அதிகாரம் – 5 – திருவிவிலியம் | 1 இப்போது கூப்பிட்டுப்பாரும்!
யார் உமக்குப் பதிலுரைப்பார்?
எந்தத் தூயவரிடம் துணை தேடுவீர்?
2 உண்மையில், அறிவிலியைத்தான்
எரிச்சல் கொல்லும்;
பேதையைத் தான் பொறாமை சாகடிக்கும்,
3 அறிவிலி வேரூன்றுவதை
நானே கண்டேன்;
ஆனால் உடனே அவன் உறைவிடத்தில்
வெம்பழி விழுந்தது,
4 அவனுடைய மக்களுக்குப்
பாதுகாப்பு இல்லை; ஊர்மன்றத்தில்
அவர்கள் நொறுக்கப்படுகின்றனர்;
மீட்பார் எவரும் அவர்க்கு இல்லாது போயினர்.
5 அவனது அறுவடையைப் பசித்தவர் உண்பர்;
முள்ளுக்கு நடுவிலுள்ளதையும்
அவர்கள் பறிப்பர்; பேராசைக்காரர்
அவன் சொத்துக்காகத் துடிப்பர்.
6 ஏனெனில், புழுதியினின்று இடுக்கண் எழாது;
மண்ணினின்று இன்னல் விளையாது.
7 நெருப்புச்சுடர் மேல்நோக்கி எழுவதுபோல,
துன்பத்திற்கென்றே தோன்றினர் மனிதர்.
8 ஆனால், நான் கடவுளையே நாடுவேன்;
அவரிடம் மட்டுமே என் வாழ்க்கை ஒப்புவிப்பேன்.
9 ஆராய முடியாப் பெரியனவற்றையும்
எண்ணிலடங்கா வியக்கத்
தக்கனவற்றையும் செய்பவர் அவரே.
10 மண் முகத்தே மழையைப் பொழிபவரும்
வயல் முகத்தே நீரைத் தருபவரும் அவரே.
11 அவர் தாழ்ந்தோரை
மேலிடத்தில் அமர்த்துகின்றார்;
அழுவோரைக் காத்து உயர்த்துகின்றார்.
12 வஞ்சகரின் திட்டங்களைத் தகர்க்கின்றார்;
அவர்களின் கைளோ ஒன்றையும் சாதிக்கமாட்டா.
13 ஞானிகளை அவர்தம் சூழ்ச்சியில்
சிக்க வைக்கின்றார்;
வஞ்சகரின் திட்டங்கள் வீழ்த்தப்படுகின்றன;
14 அவர்கள் பகலில் இருளைக் காண்கின்றனர்;
நண்பகலிலும் இரவில்போல்
தடுமாறுகின்றனர்.
15 அவர் வறியவரை அவர்களின்
வாயெனும் வாளினின்று காக்கின்றார்;
எளியவரை வலியவரின்
கையினின்று மீட்கின்றார்.
16 எனவே, நலிந்தவர்க்கு நம்பிக்கை உண்டு;
அநீதி தன் வாயைப் பொத்திக்கொள்ளும்.
17 இதோ! கடவுள் திருத்தும் மனிதர்
பேறு பெற்றோர்; ஆகவே,
வல்லவரின் கண்டிப்பை வெறுக்காதீர்.
18 காயப்படுத்தினாலும்
கட்டுப்போடுபவர் அவரே;
அடித்தாலும் ஆற்றுகின்ற கை அவரதே.
19 ஆறு வகை அல்லல்களினின்றும்
அவர் உம்மை மீட்பார்;
ஏழாவதும் உமக்கு இன்னல் தராது.
20 பஞ்சத்தில் சாவினின்றும்
சண்டையில் வாள் முனையினின்றும்
உம்மை விடுவிப்பார்.
21 நாவின் சொல்லடியினின்றும்
நீர் மறைக்கப்படுவீர்;
நாசமே வந்து விழுந்தாலும் நடுங்கமாட்டீர்.
22 அழிவிலும் பஞ்சத்திலும் நீர் நகுவீர்;
மண்ணக விலங்குகளுக்கு மருளீர்.
23 வயல்வெளிக் கற்களோடு
உம் உடன்படிக்கை இருக்கும்;
காட்டு விலங்குகளோடும்
நீர் அமைதியில் வாழ்வீர்.
24 உம் கூடாரத்தில் அமைதியைக் காண்பீர்;
உம் மந்தையைச் சென்று காண்கையில்
ஒன்றும் குறைவுபடாதிருக்கும்.
25 உமது வித்து பெருகுவதையும்,
உமது வழிமரபினர் நிலத்துப்
புற்களைப் போன்றிருப்பதையும் அறிவீர்.
26 பழுத்த வயதில் தளர்வின்றிக்
கல்லறை செல்வீர்,
பருவத்தே மேலோங்கும் கதிர்மணி போல்.
27 இதுவே யாம் கண்டறிந்த உண்மை!
செவிகொடுப்பீர்; நீவிரே கண்டுணர்வீர்.
5:13 1 கொரி 3:19.
5:17 நீமொ 3:11; எபி 12:5-6.
5:18 ஓசே 6:1. | https://bible.catholicgallery.org/tamil/etb-job-5 |
441 | யோபு | யோபு அதிகாரம் – 6 – திருவிவிலியம் | துன்புறுவோரே தம் துயர் அறிவார்
1 யோபு கூறிய பதிலுரையாவது:
2 ஓ! என் வேதனைகள்
உண்மையாகவே நிறுக்கப்பட்டு,
என் இன்னல்கள் அனைத்தும்
சீர்தூக்கப்படுமானால் நலமாயிருக்குமே!
3 கடற்கரை மணலிலும் இப்போது அவை
கனமானவை; பதற்றமான என்
சொற்களுக்குக் காரணமும் அதுவே;
4 எல்லாம் வல்லவரின் அம்புகள்
என்னில் தைத்துள்ளன; அவற்றின் நஞ்சு
என் உயிரைக் குடிக்கின்றது;
கடவுளின் அச்சுறுத்தல்கள்
எனக்கெதிராய் அணிவகுத்துள்ளன.
5 காட்டுக் கழுதைக்குப் புல் இருக்க,
அது கனைக்குமா?
காளைக்குத் தீனி இருக்க, அது கத்துமா?
6 சுவையற்றது உப்பின்றி உண்ணப்படுமா?
துப்பும் எச்சிலில் சுவை இருக்குமா?
7 அவற்றைத் தொட என் நெஞ்சம் மறுக்கிறது;
அவை எனக்கு அருவருப்புத்தரும் உணவாமே!
8 ஓ! என் வேண்டுதலுக்கு அருள்பவர் யார்?
நான் ஏங்குவதை
இறைவன் ஈந்திடமாட்டாரா?
9 அவர் என்னை நசுக்கிவிடக்கூடாதா?
தம் கையை நீட்டி எனைத் துண்டித்திடலாகாதா?
10 அதுவே எனக்கு ஆறுதலாகும்;
அழிக்கும் அல்லலிலும் அகமகிழ்வேன்;
தொடரும் துயரிலும் துள்ளி மகிழ்வேன்;
ஏனெனில் தூயவரின் சொற்களை
மறுத்தேனில்லை.
11 நான் இன்னும் பொறுத்திருக்க வலிமை ஏது?
என நெஞ்சம் காத்திருக்க நோக்கமேது?
12 என் வலிமை கல்லின் வலிமையோ?
என் சதை வெண்கலத்தாலானதோ?
13 இதோ! என்னில் உதவி ஏதுமில்லை;
என்னிலிருந்து உரம் நீக்கப்பட்டது.
14 அடுத்திருப்போர்க்கு கனிவு காட்டாதோர்
எல்லாம் வல்லவரையே புறக்கணிப்போர்.
15 காய்ந்துவிடும் காட்டாற்றுக்
கண்ணிகள் போலும் சிற்றாறுகள்போலும்
வஞ்சினத்தனர் என் உறவின் முறையார்.
16 அவற்றில் பனிக்கட்டி உருகிச் செல்லும்;
அவற்றின் மேற்பகுதியை
உறைபனி மூடி நிற்கும்.
17 வெப்பக் காலத்திலோ அவை
உருகி மறைந்துபோம்; வெயில் காலத்திலோ
அவை இடந்தெரியாது ஒழியும்.
18 வணிகர் கூட்டம் தம் வழியை மாற்றுகின்றது;
பாலையில் அலைந்து தொலைந்து மடிகின்றது.
19 தேடி நிற்கின்றனர் தேமாவின் வணிகர்;
நாடி நிற்கின்றனர் சேபாவின் வழிப்போக்கர்.
20 அவர்கள் நம்பியிருந்தனர்;
ஆனால், ஏமாற்றமடைகின்றனர்;
அங்கு வந்தடைந்தனர்;
ஆனால் திகைத்துப் போகின்றனர்.
21 இப்போது நீங்களும் எனக்கு
அவ்வாறே ஆனீர்கள்;
என் அவலம் கண்டீர்கள்;
அஞ்சி நடுங்குகின்றீர்கள்.
22 எனக்கு அன்பளிப்புத் தாரும் என்றோ,
உம் செல்வத்திலிருந்து
என் பொருட்டுக் கையூட்டுக் கொடும்
என்றோ சொன்னதுண்டா?
23 எதிரியின் கையினின்று
என்னைக் காப்பாற்றும் என்றோ,
கொடியவர் பிடியினின்று
என்னை மீட்டருளும் என்றோ
நான் எப்போதுதாவது வேண்டியதுண்டா?
24 அறிவு புகட்டுக! அமைதியடைவேன்;
என்ன தவறிழைத்தேன்? எடுத்துக்காட்டுக!
25 நேர்மையான சொற்கள்
எத்துணை ஆற்றலுள்ளவை? ஆனால்,
நீர் மெய்ப்பிப்பது எதை மெய்ப்பிக்கிறது?
26 என் வார்த்தைகளைக் கண்டிக்க
எண்ணலாமா? புலம்புவோரின்
சொற்கள் காற்றுக்கு நிகராமா?
27 திக்கற்றோர் மீது சீட்டுப் போடுவீர்கள்;
நண்பர்மீதும் பேரம் பேசுவீர்கள்.
28 பரிவாக இப்பொழுது என்னைப் பாருங்கள்;
உங்கள் முகத்திற்கெதிரே
உண்மையில் பொய் சொல்லேன்,
29 போதும் நிறுத்துங்கள்;
அநீதி செய்ய வேண்டாம்!
பொறுங்கள்! நீதி இன்னும் என் பக்கமே;
30 என் நாவில் அநீதி உள்ளதா? என்
அண்ணம் சுவையானதைப் பிரித்துணராதா? | https://bible.catholicgallery.org/tamil/etb-job-6 |
442 | யோபு | யோபு அதிகாரம் – 7 – திருவிவிலியம் | 1 மண்ணில் வாழ்வது
மனிதருக்குப் போரட்டந்தானே?
அவர்களின் நாள்கள் கூலியாள்களின்
நாள்களைப் போன்றவைதாமே?
2 நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும்,
கூலிக்குக் காத்திருக்கும்
வேலையாள் போலவும்,
3 வெறுமையான திங்கள்கள்
எனக்கு வாய்த்தன;
இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின.
4 படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்!
இரவோ நீண்டிருக்கும்;
விடியும்வரை புரண்டு உழல்வேன்,
5 புழுவும் புழுதிப்படலமும் போர்த்தின
என் உடலை; வெடித்தது என் தோல்;
வடிந்தது சீழ்.
6 என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும்
விரைந்தோடுகின்றன; அவை
நம்பிக்கையின்றி முடிவடைகின்றன.
7 என் உயிர் வெறுங்காற்றே என்பதை
நினைவுகூர்வீர்; என் கண்கள்
மீண்டும் நன்மையைக் காணா.
8 என்னைக் காணும் கண்
இனி என்னைப் பார்க்காது.
என் மேல் உம் கண்கள் இருக்கும்;
நானோ இரேன்.
9 கார்முகில் கலைந்து மறைவதுபோல்
பாதாளம் செல்வோர் ஏறி வாரார்.
10 இனி அவர்கள் தம் இல்லம் திரும்பார்;
அவர்களது இருப்பிடம்
அவர்களை அறியாது.
11 ஆகையால், நான் என் வாயை அடக்கமாட்டேன்;
என் மனத்தின் வேதனையை
எடுத்துரைப்பேன்;
உள்ளக் கசப்பில் முறையிடுவேன்.
12 கடலா நான்? அல்லது கடலின் பெருநாகமா?
காவல் என்மீது வைக்கலானீர்!
13 “என் படுக்கை ஆறுதல் அளிக்கும்;
என் மெத்தை முறையீட்டைத்
தணிக்கும்” என்பேனாகில்,
14 கனவுகளால் என்னைக்
கலங்க வைக்கின்றீர்;
காட்சிகளால் என்னைத்
திகிலடையச் செய்கின்றீர்.
15 ஆதலால் நான் குரல்வளை
நெரிக்கப்படுவதையும்
வேதனையைவிடச் சாவதையும்
விரும்புகின்றேன்.
16 வெறுத்துப்போயிற்று; என்றென்றும்
நான் வாழப்போவதில்லை;
என்னைவிட்டுவிடும். ஏனெனில்
என் வாழ்நாள்கள் காற்றுப்போன்றனவே.
17 மனிதர் எம்மாத்திரம், நீர் அவர்களை
ஒரு பொருட்டாய் எண்ண?
உமது இதயத்தை அவர்கள்மேல் வைக்க?
18 காலைதோறும் நீர் அவர்களைச் ஆய்ந்தறிய?
மணித்துளிதோறும் அவர்களைச் சோதிக்க?
19 எவ்வளவு காலம் என்மேல்
வைத்த கண்ணை எடுக்காதிருப்பீர்?
என் எச்சிலை விழுங்குமளவுக்குக் கூட
என்னை விடமாட்டீரா?
20 மானிடரின் காவலரே!
நான் பாவம் இழைத்துவிட்டேனா?
உமக்கு நான் செய்ததென்னவோ?
என்னை உம் இலக்காக ஆக்கியதேன்?
உமக்கு நான் சுமையாய்ப் போனதேன்?
21 என் மீறலை மன்னியாதது ஏன்?
என் அக்கிரமங்களை அகற்றாதது ஏன்?
இப்பொழுதோ நான் மண்ணுக்குள்
உறங்கப் போகின்றேன்;
நீர் என்னைத் தேடுவீர்; நான் இல்லாதுபோவேன்.
7:17 திபா 8:4; 144:3. | https://bible.catholicgallery.org/tamil/etb-job-7 |
443 | யோபு | யோபு அதிகாரம் – 8 – திருவிவிலியம் | கடவுளின் மாறாத நீதி
1 அதற்குச் சூகாயனான பில்தாது
கூறிய பதில்:
2 எதுவரை இவ்வாறே பேசிக் கொண்டிருப்பீர்?
உம் வாய்ச்சொற்கள்
புயல்காற்றைப் போல் இருக்கின்றன.
3 இறைவனே நீதியைப் புரட்டுவாரா?
எல்லாம் வல்லவரே நேர்மை பிறழ்வாரா?
4 உம் புதல்வர்கள் அவருக்கெதிராயப்
பாவம் செய்ததால், குற்றப்பழியின்
ஆற்றலிடம் அவர்களைக் கையளித்தார்.
5 ஆனால், நீர் இறைவனை
ஆர்வத்துடன் நாடினால்,
எல்லாம் வல்லவரிடம் இறைஞ்சினால்,
6 நீர் மாசற்றவரும் நேர்மையானவருமாய்
இருந்தால் இப்பொழுது கூட
அவர் உம்பொருட்டு எழுந்திடுவார்,
உமக்குரிய உறையுளை மீண்டும் ஈந்திடுவார்.
7 உம்முடைய தொடக்கம்
எளிமையாக இருப்பினும்,
உம் வருங்காலம் வளமைமிகக் கொழிக்கும்.
8 முன்னோரின் தலைமுறையைக்
கேட்டுப்பாரும்;
அன்னாரின் தந்தையர் ஆய்ந்ததை அறியும்.
9 நேற்றுத் தோன்றிய நாம் ஒன்றும் அறியோம்;
நிலமிசை நம் வாழ்நாள் நிழலைப் போன்றது,
10 அவர்களன்றோ உமக்கு
அறிவித்து உணர்த்துவர்!
புரிந்த வார்த்தைகளை
உமக்குப் புகட்டுவர்!
11 சேறின்றி நாணல் தழைக்குமா?
நீரின்றிக் கோரை வளருமா?
12 இன்னும் பசுமையாக வெட்டாது இருக்கையிலே
எல்லாப் புற்களுக்கு முன்னே அவை வாடிடும்.
13 இறைவனை மறப்போரின் கதி இதுவே;
இறைப்பற்றில்லாரின் நம்பிக்கை இடிந்துபோம்;
14 அவர்களின் நம்பிக்கை முறிந்துபோம்;
அவர்கள் சார்ந்திருப்பது சிலந்திக் கூட்டையே.
15 யாராவது அவ்வீட்டின்மீது சாய்ந்தால்,
அது நில்லாதுபோம்; யாராவது அதைப்
பற்றி பிடித்தால், அது நிலைத்திராது.
16 பகலவன்முன் பசுஞ்செடி போன்றோர் அவர்கள்;
படரும் தோட்டமெங்கும்
அவர்களின் கிளைகள்.
17 கற்குவியலில் பின்னிடும் அவர்களின் வேர்கள்
கற்களிடையே இடம் தேடும்.
18 அவர்கள் தம் இடத்திலிருந்து எடுபட்டால்,
‘உங்களை நான் கண்டதேயில்லை’ என
உதறிவிடும் அவ்விடம்.
19 பார்! அவர்கள் தம் வாழ்வில்
கண்ட இன்பம் இதுவே:
மண்ணினின்று மற்றவர் முளைத்தெழுவர்.
20 இதோ! கறையிலாதவரை
இறைவன் கைவிடுவதில்லை;
காதகர்க்கு அவர் கைகொடுப்பதுமில்லை.
21 இருப்பினும், உம் வாயைச் சிரிப்பாலும்,
இதழ்களை மகிழ்வொலியாலும் நிரப்புவார்.
22 உம்மைப் பகைப்பவர்
வெட்கத்தால் உடுத்தப்படுவர்;
தீயோர் கூடாரம் இல்லாது போகும். | https://bible.catholicgallery.org/tamil/etb-job-8 |
444 | யோபு | யோபு அதிகாரம் – 9 – திருவிவிலியம் | கடவுளது நீதியின் மேன்மை
1 யோபு அதற்கு உரைத்த பதில்:
2 உண்மையில் இது இவ்வாறு
என்று அறிவேன்; ஆனால், மனிதர்
இறைவன்முன் நேர்மையாய் இருப்பதெப்படி?
3 ஒருவர் அவருடன் வழக்காட விரும்பினால்,
ஆயிரத்தில் ஒன்றுக்கேனும்
அம்மனிதரால் பதிலளிக்க முடியுமா?
4 இறைவன் உள்ளத்தில் ஞானமுள்ளவர்;
ஆற்றலில் வல்லவர்;
அவர்க்கு எதிராய்த் தம்மைக் கடினப்படுத்தி,
வளமுடன் வாழ்ந்தவர் யார்?
5 அவர் மலைகளை அகற்றுவார்;
அவை அதை அறியா; அவர் சீற்றத்தில்
அவைகளைத் தலைகீழாக்குவார்.
6 அசைப்பார் அவர் நிலத்தை
அதனிடத்தினின்று;
அதிரும் அதனுடைய தூண்கள்.
7 அவர் கட்டளையிடுவார்;
கதிரவன் தோன்றான்;
அவர் மறைத்திடுவார் விண்மீன்களை.
8 தாமே தனியாய் வானை விரித்தவர்,
ஆழியின் முதுகை மிதித்து நடந்தவர்.
9 வடமீன் குழுவையும், மிருகசீரிடத்தையும்,
கார்த்திகை விண்மீன்களையும்,
தென்திசை விண்மீன் குழுக்களையும்
அமைத்தவர் அவரே.
10 உணர்ந்திட இயலாப் பெருஞ்செயல்களையும்,
கணக்கிட முடியா அருஞ்செயல்களையும்
ஆற்றுநர் அவரே.
11 இதோ! என் அருகே அவர் கடந்து செல்கையில்
நான் பார்க்க முடியவில்லை; நழுவிச்
செல்கையில் நான் உணர முடியவில்லை.
12 இதோ! அவர் பறிப்பாரானால்,
அவரை மறிப்பார் யார்? யாது செய்கின்றீர்
என அவரைத் கேட்பார் யார்?
13 கடவுள் தம் சீற்றத்தைத் தணிக்கமாட்டார்;
அவரடி பணிந்தனர்
இராகாபின் துணைவர்கள்.
14 இப்படியிருக்க, எப்படி அவருக்குப்
பதிலுரைப்பேன்? எதிர்நின்று
அவரோடு எச்சொல் தொடுப்பேன்?
15 நான் நேர்மையாக இருந்தாலும்
அவருக்குப் பதிலுரைக்க இயலேன்;
என் நீதிபதியிடம் நான்
இரக்கத்தையே கெஞ்சுவேன்.
16 நான் கூப்பிட அவர் பதிலுரைப்பினும்,
என் வேண்டுதலுக்கு அவர்
செவிகொடுப்பார் என்று நம்புவதற்கில்லை.
17 புயலினால் என்னை நொறுக்குவார்;
காரணமின்றி என் காயங்களைப்
பெருக்குவார்.
18 அவர் என்னை மூச்சிழுக்கவும் விடாது,
கசப்பினால் என்னை நிரப்புகின்றார்.
19 வலிமையில் அவருக்கு நிகர் அவரே!
அவர்மேல் வழக்குத் தொடுப்பவர் யார்?
20 நான் நேர்மையாக இருந்தாலும்,
என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்;
நான் குற்றமற்றவனாக இருந்தாலும்,
மாறுபட்டவனாக அது என்னைத் தீர்ப்பிடும்.
21 குற்றமற்றவன் நான்;
என்னைப்பற்றிக் கவலையில்லை;
என் வாழ்க்கையையே வெறுக்கின்றேன்.
22 எல்லாம் ஒன்றுதான்; எனவேதான்
சொல்கின்றேன்; “அவர் நல்லாரையும்
பொல்லாரையும் ஒருங்கே அழிக்கின்றார்’.
23 பேரிடர் சாவைத் திடீரெனத் தரும்போது,
அவர் மாசற்றவரின்
நெருக்கடி கண்டு நகைப்பார்.
24 வையகம் கொடியோர் கையில்
கொடுக்கப்படுகின்றது; அதன் நீதிபதிகளின்
கண்களை அவர் கட்டுகின்றார்.
அவரேயன்றி வேறு யார் இதைச் செய்வார்?
25 ஓடுபவரைவிட விரைந்து செல்கின்றன
என் வாழ்நாள்கள்;
அவை பறந்து செல்கின்றன;
நன்மையொன்றும் அவை காண்பதில்லை.
26 நாணற் படகுபோல் அவை விரைந்தோடும்;
இரைமேல் பாயும் ஒரு கழுகைப்போல் ஆகும்.
27 ‘நான் துயர் மறப்பேன்;
முகமலர்ச்சி கொள்வேன்;
d புன்முறுவல் பூப்பேன், எனப் புகல்வேனாயினும்,
28 என் இடுக்கண் கண்டு நடுக்கமுறுகின்றேன்,
ஏனெனில், அவர் என்னைக்
குற்றமற்றவனாய்க் கொள்ளார் என அறிவேன்.
29 நான்தான் குற்றவாளி எனில்,
வீணே ஏன் நான் போராடவேண்டும்?
30 பனிநீரில் நான் என்னைக் கழுவினும்,
சவர்க்காரத்தினால்
என் கைகளைத் தூய்மையாக்கினும்,
31 குழியில் என்னை அவர் அமிழ்த்திடுவார்;
என் உடையே என்னை வெறுத்திடுமே!
32 ஏனெனில், அவரோடு நான் வழக்காடவும்,
வழக்கு மன்றத்தில் எதிர்க்கவும்
என்னைப்போல் அவர் மனிதர் இல்லை.
33 இருவர்மீதும் தம் கையை வைக்க,
ஒரு நடுவர்கூட எம் நடுவே இல்லையே.
34 அகற்றப்படுக அவர் கோல் என்னிடமிருந்து!
அப்போது மிரட்டாது என்னை
அவரைப்பற்றிய அச்சம்!
35 அவரிடம் அச்சமின்றிப் பேசுவேன் அப்போது;
அப்படிப் பேசும் நிலையில்
நான் இல்லையே இப்போது.
9:2 யோபு 4:17.
9:9 யோபு 38:31; ஆமோ 5:8.
9:13 இராகாபு = தீங்கை விளைவிக்கும் ஒரு நீர்வாழ் விலங்கு. | https://bible.catholicgallery.org/tamil/etb-job-9 |
445 | யோபு | யோபு அதிகாரம் – 10 – திருவிவிலியம் | 1 என் உள்ளம் என் வாழ்வை
அருவருக்கின்றது; என் ஆற்றாமையைத்
தாராளமாய்க் கொட்டித் தீர்ப்பேன்;
உள்ளத்தில் கசப்பினை
நான் உரைத்திடுவேன்.
2 நான் கடவுளிடம் சொல்வேன்;
என்னைக் கண்டனம் செய்யாதீர்;
என் மீது நீர் சாட்டும் குற்றத்தின் காரணம்
என்னவெனச் சாற்றுவீர்.
3 என்னை ஒடுக்குவதும்
உமது கையின் படைப்பை இகழ்வதும்
உலுத்தர் சூழ்ச்சியில் உளம் மகிழ்வதும்
உமக்கு அழகாமோ?
4 ஊனக் கண்களா உமக்கு உள்ளன?
உண்மையில்,
மானிடப்பார்வையா உமது பார்வை?
5 மானிட நாள்கள் போன்றவோ உம் நாள்கள்?
மனிதரின் வாழ்நாள் அனையவோ
உம் ஆண்டுகள்?
6 பின், ஏன் என் குற்றங்களைத்
துருவிப் பார்க்கிறீர்? ஏன்
என் பாவங்களைக் கிளறுகின்றீர்?
7 நான் குற்றமற்றவன் என நீர் அறிந்தாலும்,
உம் கையினின்று என்னைத்
தப்புவிப்பவர் ஒருவருமில்லை.
8 என்னை வனைந்து வடிவமைத்து
உண்டாக்கின உம் கைகள்; இருப்பினும்,
நீரே என்னை அழிக்கின்றீர்.
9 தயைகூர்ந்து நினைத்துப் பாரும்!
களிமண்போல் என்னை வனைந்தீர்;
அந்த மண்ணுக்கே என்னைத்
திரும்பச் செய்வீரோ?
10 பால்போல் என்னை நீர் வார்க்கவில்லையா?
தயிர்போல் என்னை நீர்
உறைவிக்கவில்லையா?
11 எலும்பும் தசைநாரும் கொண்டு
என்னைப் பின்னினீர்;
தோலும் சதையும் கொண்டு
என்னை உடுத்தினீர்.
12 வாழ்வையும் இரக்கத்தையும்
எனக்கு வழங்கினீர்; என் உயிர் மூச்சை
உம் கரிசனை காத்தது.
13 எனினும், இவற்றை உம் உள்ளத்தில்
ஒளித்திருந்தீர்; இதுவே உம் மனத்துள்
இருந்ததென நான் அறிவேன்.
14 நான் பாவம் செய்தால்,
என்னைக் கவனிக்கிறீர்;
என் குற்றத்தை எனக்குச்
சுட்டிக்காட்டாது விடமாட்டீர்;
நான் குற்றம் புரிந்தால்
அதை என்மீது சுமத்தாது விடீர்.
15 நான் தீங்கு செய்தால், ஐயோ ஒழிந்தேன்!
நான் நேர்மையாக இருந்தாலும்
தலைதூக்க முடியவில்லை; ஏனெனில்,
வெட்கம் நிறைந்தாலும்
வேதனையில் உள்ளேன்.
16 தலைநிமிர்ந்தால் அரிமாபோல்
என்னை வேட்டையாடுவீர்;
உம் வியத்தகு செயல்களை
எனக்கெதிராய்க் காட்டுவீர்;
17 எனக்கெதிராய்ச் சான்றுகளைப்
புதுப்பிக்கிறீர்; என்மீது
உமது சீற்றத்தைப் பெருக்குகிறீர்;
எனக்கெதிராய்ப் போராட்டத்தைப்
புதிதாக எழுப்புகிறீர்.
18 கருப்பையிலிருந்து என்னை
ஏன் வெளிக் கொணர்ந்தீர்?
கண் ஏதும் என்னைக் காணுமுன்பே
நான் இறந்திருக்கலாகாதா?
19 உருவாகாதவன் போலவே
இருந்திருக்கக்கூடாதா?
கருவறையிலிருந்தே
கல்லறைக்குப் போயிருப்பேனே;
20 என்னுடைய நாள்கள் சிலமட்டுமே;
என்னிடமிருந்து எட்டி நிற்பீரானால்,
மணித்துளி நேரமாவது மகிழ்ந்திருப்பேன்;
21 பின்னர், இருளும் இறப்பின் நிழலும் சூழ்ந்த
திரும்ப இயலாத நாட்டிற்குப் போவேன்.
22 அது காரிருளும் சாவின் நிழலும் சூழ்ந்த
இருண்ட நாடு; அங்கு ஒழுங்கில்லை;
ஒளியும் இருள்போல் இருக்கும்.
10:10 மனிதன் கருவாகி, தாய் வயிற்றில் வளரும் நிகழ்ச்சியை இவ்வசனம் வருணிக்கிறது. | https://bible.catholicgallery.org/tamil/etb-job-10 |
446 | யோபு | யோபு அதிகாரம் – 11 – திருவிவிலியம் | கடவுளின் ஞானத்தை ஏற்றுக்கொள்ள யோபு தூண்டப்படல்
1 அதற்கு நாமாவியனான
சோப்பார் சொன்ன மறுமொழி:
2 திரளான சொற்கள் பதிலின்றிப் போகலாமா?
மிகுதியாகப் பேசுவதால்,
ஒருவர் நேர்மையாளர் ஆகிவிடுவாரோ?
3 உம் வீண் வார்த்தைகள் மனிதரை
வாயடைத்திடுமோ? நீர் நகையாடும் போது
உம்மை யாரும் நையாண்டி செய்யாரோ?
4 “என் அறிவுரை தூயது; நானும்
என் கண்களுக்கு மாசற்றவன்” என்கின்றீர்.
5 ஆனால், “கடவுளே பேசட்டும்; தம் இதழ்களை
உமக்கெதிராயத் திறக்கட்டும்” என
யாரேனும் அவரை வேண்டாரோ!
6 அவரே ஞானத்தின் மறைபொருளை
உமக்கு அறிவிக்கட்டும்;
அவர் இரட்டிப்பான அறிவும் திறனுமுடையவர்;
கடவுள் உம் தீமைகளில் சிலவற்றை
மறந்தார் என்பதை அறிக!
7 கடவுளின் ஆழ்ந்த உண்மைகளை
நீர் அறிய முடியுமா? எல்லாம் வல்லவரின்
எல்லையைக் கண்டுணர முடியுமா?
8 அவை வானங்களை விட உயர்ந்தவை;
நீர் என்ன செய்வீர்?
அவை பாதாளத்தைவிட ஆழமானவை;
நீர் என்ன அறிவீர்?
9 அதன் அளவு பாருலகைவிடப் பரந்தது;
ஆழ்கடலைவிட அகலமானது.
10 அவர் இழுத்து வந்து அடைத்துப் போட்டாலும்,
அவைமுன் நிறுத்தினாலும்
அவரைத் தடுப்பார் யார்?
11 ஏனெனில், அவர் மனிதரின்
ஒன்றுமில்லாமையை அறிவார்;
தீமையைக் காண்கின்றார்; ஆனால்,
அதை ஒருபொருட்டாகக் கருதுவதில்லை.
12 காட்டுக்கழுதைக்குட்டி
மனிதனாகப் பிறந்தால்,
அறிவிலியும் அறிவு பெறுவான்.
13 உம்முடைய உள்ளத்தை
நீர் ஒழுங்குபடுத்தினால்,
உம்முடைய கைகளை
அவரை நோக்கி நீட்டுவீராக!
14 உம் கையில் கறையிருக்குமாயின்
அப்புறப்படுத்தும்; உம் கூடாரத்தில்
தீமை குடிகொள்ளாதிருக்கட்டும்.
15 அப்போது உண்மையாகவே நாணமின்றி
உம் முகத்தை ஏறெடுப்பீர்;
நிலைநிறுத்தப்படுவீர்; அஞ்சமாட்டீர்.
16 உம் துயரை நீர் மறந்துபோவீர்;
கடந்துபோன வெள்ளம்போல்
அதை நினைகூர்வீர்.
17 உம் வாழ்வுக்காலம் நண்பகலைவிட ஒளிரும்;
காரிருளால் மூடப்பட்டிருந்தாலும்
காலைபோல் ஆவீர்;
18 நம்பிக்கை இருப்பதனால் உறுதிகொள்வீர்;
சுற்றிலும் நோக்கிப் பாதுகாப்பில் ஓய்வீர்;
19 ஓய்ந்து படுப்பீர்; ஒருவரும் உம்மை அச்சுறுத்தார்;
உம் முகம்தேடிப் பலர் உம் தயவை நாடுவர்;
20 தீயோரின் கண்கள் மங்கிப்போம்;
அனைத்துப் புகலிடமும் அவர்க்கு அழிந்துபோம்;
உயிர்பிரிதலே அவர்தம் நம்பிக்கை! | https://bible.catholicgallery.org/tamil/etb-job-11 |
447 | யோபு | யோபு அதிகாரம் – 12 – திருவிவிலியம் | வலிமைமிகு செயல்களில் தெரியும் கடவுளின் ஞானம்
1 அதற்கு யோபு உரைத்த மறுமொழி:
2 உண்மையிலும் உண்மை;
நீங்கள்தாம் எல்லாம் தெரிந்தவர்கள்.
உங்களோடு ஞானமும் ஒழிந்துவிடும்!
3 உங்களைப்போல அறிவு எனக்கும் உண்டு;
உங்களுக்கு நான் தாழ்ந்தவன் அல்லன்;
இத்தகையவற்றை யார்தான் அறியார்?
4 கடவுளை மன்றாடி மறுமொழி பெற்ற நான்,
என் நண்பர்க்கு நகைப்புப் பொருள் ஆனேன்.
குற்றமற்ற நேர்மையாளனாகிய நான்
நகைப்புப் பொருள் ஆனேன்.
5 இன்பத்தில் திளைத்திருக்கும் நீங்கள்
என்னை ஏளனம் செய்கின்றீர்கள்;
அடிசறுக்கிய என்னைத் தாக்குகின்றீர்கள்.
6 கொள்ளையரின் கூடாரங்கள்
கொழிக்கின்றன!
இறைவனைச் சினந்தெழச் செய்வோரும்
கடவுளுக்குச் சவால் விடுப்போரும்
பாதுகாப்பாய் உள்ளனர்!
7 இருப்பினும், விலங்கிடம் வினவுக;
உமக்கு அது கற்றுக்கொடுக்கும்;
வானத்துப் பறவை உமக்கு அறிவுறுத்தும்.
8 அல்லது மண்ணில் ஊர்வனவற்றிடம் பேசுக;
அவை உமக்குக் கற்பிக்கும்.
ஆழியின் மீன்கள் உமக்கு அறிவிக்கும்.
9 இவற்றில் ஆண்டவரை அறியாதது எது?
அவரது கைதான் இதைச் செய்தது என
எது அறியாது?
10 அவர் கையில்தான்
அனைத்துப் படைப்புகளின் உயிரும்
மனித இனத்தின் மூச்சும் உள்ளன.
11 செவி, சொற்களைப்
பிரித்து உணர்வதில்லையா?
நாக்கு, உணவைச்
சுவைத்து அறிவதில்லையா?
12 முதியோரிடம் ஞானமுண்டு;
ஆயுள் நீண்டோரிடம் அறிவுண்டு.
13 ஞானமும் வலிமையும் அவரிடமே உள்ளன!
ஆலோசனையும் அறிவும் அவர்க்கே உரியன!
14 இதோ! அவர் இடித்திடுவதை
எழுப்பிட இயலாது;
அவர் அடைத்திடுபவரை விடுவித்திட முடியாது.
15 இதோ; அவர் மழையைத் தடுப்பாரெனில்,
அனைத்தும் வறண்டுபோம்;
வெளியே அதை வரவிடுவாரெனில்,
நிலத்தையே மூழ்கடிக்கும்.
16 வல்லமையும் மதிநுட்பமும்
அவருக்கே உரியன;
ஏமாற்றுவோரும் ஏமாறுவோரும்
அவருடையோரே!
17 அமைச்சர்களை அறிவிழக்கச் செய்கின்றார்;
நடுவர்களை மடையர்கள் ஆக்குகின்றார்.
18 அரசர்களின் அரைக்கச்சையை
அவிழ்க்கின்றார்;
அவர்களின் இடையில்
கந்தையைக் கட்டுகின்றார்;
19 குருக்களைத் தம் நிலையிலிருந்து
விழச் செய்கின்றார்;
நிலைபெற்ற வலியோரைக்
கவிழ்த்து வீழ்த்துகின்றார்;
20 வாய்மையாளரின் வாயை அடைக்கின்றார்;
முதியோரின் பகுத்துணர்
மதியைப் பறிக்கின்றார்;
21 உயர்குடி மக்கள் மீது
வெறுப்பினைப் பொழிகின்றார்;
வலியோரின் கச்சை
கழன்றுபோகச் செய்கின்றார்;
22 புரியாப் புதிர்களை
இருளினின்று இலங்கச் செய்கின்றார்
. காரிருளை ஒளிக்குக் கடத்திவருகின்றார்.
23 மக்களினங்களைப் பெருகச் செய்கின்றார்;
பின்பு அழிக்கின்றார்;
மக்களினங்களைப் பரவச் செய்கின்றார்;
பின், குறையச் செய்கின்றார்.
24 மண்ணக மக்களின் தலைவர்
தம் அறிவாற்றலை அழிக்கின்றார்.
வழியிலாப் பாழ்வெளியில்
அவர்களை அலையச் செய்கின்றார்.
25 இருளில் ஒளியிலாது தடவுகின்றார்கள்;
குடித்தவர்போல் அவர்களைத்
தடுமாற வைக்கின்றார். | https://bible.catholicgallery.org/tamil/etb-job-12 |
448 | யோபு | யோபு அதிகாரம் – 13 – திருவிவிலியம் | 1 இதோ! இவை என் கண்களே கண்டவை;
என் காதுகளே கேட்டு உணர்ந்தவை.
2 நீங்கள் அறிந்திருப்பதை
நானும் அறிந்திருக்கின்றேன்;
நான் உங்களுக்கு
எதிலும் இளைத்தவன் இல்லை.
3 ஆனால் நான் எல்லாம் வல்லவரோடு
சொல்லாடுவேன்;
கடவுளோடு வழக்காட விழைகின்றேன்,
4 நீங்களோ பொய்யினால் மழுப்புகின்றவர்கள்;
நீங்கள் எல்லாருமே பயனற்ற மருத்துவர்கள்.
5 ஐயோ! பேசாது
அனைவரும் அமைதியாக இருங்கள்;
அதுவே உங்களுக்கு ஞானமாகும்.
6 இப்பொழுது என் வழக்கினைக் கேளுங்கள்;
என் இதழின் முறையீட்டைக் கவனியுங்கள்.
7 இறைவன் பொருட்டு
முறைகேடாய்ப் பேசுவீர்களா?
அவர்பொருட்டு வஞ்சகமாய்ப் பேசுவீர்களா?
8 கடவுள் பொருட்டு
ஒரு சார்பாகப் பேசுவீர்களா? அல்லது
அவர்க்காக வாதாடுவீர்களா?
9 அவர் உங்களை ஆராய்ந்தால்
உங்களில் நல்லதைக் காண்பாரா?
அல்லது மனிதரை வஞ்சிப்பதுபோல,
அவரையும் வஞ்சிப்பீர்களா?
10 நீங்கள் மறைவாக ஓரவஞ்சனை காட்டினால்
உங்களை உறுதியாக அவர் கண்டிப்பார்.
11 அவருடைய மாட்சி உங்களை மருளவைக்காதா?
அவருடைய அச்சுறுத்தல்
உங்கள் மீது விழாதா?
12 உங்களுடைய மூதுரைகள்
சாம்பலையொத்த முதுமொழிகள்;
உங்கள் எதிர்வாதங்கள் உண்மையில்
களிமண்ணையொத்த வாதங்கள்.
13 பேசாதிருங்கள்; என்னைப் பேசவிடுங்கள்;
எனக்கு எது வந்தாலும் வரட்டும்.
14 என் சதையை என் பற்களிடையே
ஏன் வைத்துக்கொள்ளவேண்டும்?
என் உயிரை என் கைகளால்
ஏன் பிடித்துக்கொள்ளவேண்டும்?
15 அவர் என்னைக்
கொன்றாலும் கொல்லட்டும்;
இருப்பினும், என் வழிகள் குற்றமற்றவை என
எடுத்துரைப்பதில் நான் தளரேன்.
16 இதுவே எனக்கு மீட்பு ஆகலாம்;
ஏனெனில், இறைப்பற்றில்லாதார்
அவர்முன் வர முடியாது.
17 என் வார்த்தையைக் கவனித்துக்கேளுங்கள்;
என் கூற்று உங்கள் செவிகளில் ஏறட்டும்.
18 இதோ! இப்பொழுது என் வழக்கை
வகைப்படுத்தி வைத்தேன்;
குற்றமற்றவன் என
மெய்ப்பிக்கப்படுவேன் என்று அறிவேன்.
19 இறைவா! நீர்தாமோ
எனக்கெதிராய் வழக்காடுவது?
அவ்வாறாயின், இப்போதே
வாய்பொத்தி உயிர் நீப்பேன்.
20 எனக்கு இரண்டு
செயல்களை மட்டும் செய்யும்;
அப்போது உமது முகத்திலிருந்து
ஒளியமாட்டேன்.
21 உமது கையை
என்னிடமிருந்து எடுத்துவிடும்;
உம்மைப்பற்றிய திகில்
என்னைக் கலங்கடிக்காதிருக்கட்டும்.
22 பின்னர் என்னைக் கூப்பிடும்;
நான் விடையளிப்பேன்;
அல்லது என்னைப் பேசவிடும்;
பின் நீர் மறுமொழி அருளும்.
23 என்னுடைய குற்றங்கள், தீமைகள் எத்தனை?
என் மீறுதலையும் தீமையையும்
எனக்குணர்த்தும்.
24 உம் முகத்தை ஏன் மறைக்கின்றீர்?
பகைவனாய் என்னை ஏன் கருதுகின்றீர்?
25 காற்றடித்த சருகைப்
பறக்கடிப்பீரோ?
காய்ந்த கூளத்தைக் கடிது விரட்டுவீரோ?
26 கசப்பானவற்றை
எனக்கெதிராய் எழுதுகின்றீர்;
என் இளமையின் குற்றங்களை
எனக்கு உடைமையாக்குகின்றீர்.
27 என் கால்களைத் தொழுவில் மாட்டினீர்;
கண் வைத்தீர் என் பாதை எல்லாம்;
காலடிக்கு எல்லை குறித்துக்
குழிதோண்டினீர்.
28 மனிதர் உளுத்தமரம்போல்
விழுந்து விடுகின்றனர்; அந்துப்பூச்சி
அரிக்கும் ஆடைபோல் ஆகின்றனர்.
13:27 யோபு 33:11. | https://bible.catholicgallery.org/tamil/etb-job-13 |
449 | யோபு | யோபு அதிகாரம் – 14 – திருவிவிலியம் | 1 பெண்ணிடம் பிறந்த மனிதருக்கு
வாழ்நாளோ குறைவு;
வருத்தமோ மிகுதி.
2 மலர்போல் பூத்து
அவர்கள் உலர்ந்து போகின்றனர்
; நிழல்போல் ஓடி
அவர்கள் நிலையற்றுப் போகின்றனர்.
3 இத்தகையோர்மீதா உம் கண்களை வைப்பீர்?
தீர்ப்பிட அவர்களை உம்மிடம் கொணர்வீர்?
4 அழுக்குற்றதினின்று
அழுக்கற்றதைக் கொணர முடியுமா?
யாராலும் முடியவே முடியாது.
5 அவர்களுடைய நாள்கள்
உண்மையாகவே கணிக்கப்பட்டுள்ளன.
அவர்களுடைய திங்கள்களின் எண்ணிக்கை
உம்மிடம் உள்ளது;
அவர்கள் கடக்க இயலாத
எல்லையைக் குறித்தீர்.
6 எனவே அவர்களிடமிருந்து
உம் பார்வையைத் திருப்பும்;
அப்பொழுது, கூலியாள்கள்
தம் நாள் முடிவில் இருப்பது போல்,
அவர்கள் ஓய்ந்து மகிழ்வர்.
7 மரத்திற்காவது நம்பிக்கையுண்டு;
அது தறிக்கப்பட்டால் மீண்டும் துளிர்க்கும்;
அதன் குருத்துகள் விடாது துளிர்க்கும்.
8 அதன் வேர் மண்ணில் பழமை அடைந்தாலும்,
அதன் அடிமரம் நிலத்தில் பட்டுப்போனாலும்,
9 தண்ணீர் மணம் பட்டதும் அது துளிர்க்கும்;
இளஞ்செடிபோல் கிளைகள் விடும்.
10 ஆனால், மனிதர் மடிகின்றனர்;
மண்ணில் மறைகின்றனர்;
உயிர் போனபின் எங்கே அவர்கள்?
11 ஏரியில் தண்ணீர் இல்லாது போம்;
ஆறும் வறண்டு காய்ந்துபோம்.
12 மனிதர் படுப்பர்; எழுந்திருக்கமாட்டார்;
வானங்கள் அழியும்வரை
அவர்கள் எழுவதில்லை;
அவர்கள் துயிலிலிருந்து எழுப்பப்படுவதில்லை.
13 ஓ! என்னைப் பாதாளத்தில்
ஒளித்து வைக்கமாட்டீரா?
உமது சீற்றம் தணியும்வரை
மறைத்து வைக்கமாட்டீரா?
என்னை நினைக்க ஒருநேரம்
குறிக்கமாட்டீரா?
14 மனிதர் மாண்டால், மறுபடியும் வாழ்வரா?
எனக்கு விடிவு வரும்வரை,
என் போராட்ட நாள்களெல்லாம்
பொறுத்திருப்பேன்.
15 நீர் அழைப்பீர்; உமக்கு நான் பதிலளிப்பேன்;
உம் கைவினையாம் என்னைக்
காண விழைவீர்.
16 அப்பொழுது, என் காலடிகளைக்
கணக்கிடுவீர்;
என் தீமைகளைத் துருவிப் பார்க்கமாட்டீர்.
17 என் மீறுதலைப் பையிலிட்டு முத்திரையிட்டீர்;
என் குற்றத்தை மூடி மறைத்தீர்.
18 ஆனால் மலை விழுந்து நொறுங்கும்;ம்
பாறையும் தன் இடம்விட்டுப் பெயரும்.
19 கற்களைத் தண்ணீர் தேய்த்துக் கரைக்கும்;
நிலத்தின் மண்ணை வெள்ளம்
அடித்துப்போகும்; இவ்வாறே
ஒரு மனிதனின் நம்பிக்கையை அழிப்பீர்.
20 ஒடுக்குவீர் அவனை எப்பொழுதும்;
ஒழிந்துபோவான் அவனும்;
அவனது முகத்தை உருக்குலைத்து,
விரட்டியடிப்பீர்.
21 புதல்வர்கள் புகழ்பெறினும்
அவன் அறிந்தான் இல்லை; கதியிழந்தாலும்
அதை அவன் கண்டான் இல்லை.
22 அவன் உணர்வது தன் ஊனின் வலியையே;
அவன் புலம்புவது தன் பொருட்டே. | https://bible.catholicgallery.org/tamil/etb-job-14 |
450 | யோபு | யோபு அதிகாரம் – 15 – திருவிவிலியம் | யோபின் சொற்களே அவர்க்குத் தீர்ப்பிடல்
(15:1-21:34)
1 அதற்குத் தேமானியனான எலிப்பாசு
சொன்னான்:
2 வெற்று அறிவினால் ஞானி
விடையளிக்கக்கூடுமோ?
வறண்ட கீழ்க்காற்றினால்
வயிற்றை அவன் நிரப்பவோ?
3 பயனிலாச் சொற்களாலோ,
பொருளிலாப் பொழிவினாலோ
அவன் வழக்காடத் தகுமோ?
4 ஆனால், நீர் இறையச்சத்தை இழந்துவிட்டீர்;
இறைச்சிந்தனை இல்லாது போனீர்.
5 உம் குற்றம் உம் வாயை உந்துகின்றது;
வஞ்சக நாவை நீர் தேர்ந்துகொண்டீர்.
6 கண்டனம் செய்தது உம் வாயே;
நானல்ல; உம் உதடே
உமக்கு எதிராய்ச் சான்றுரைக்கின்றது.
7 மாந்தரில் முதல்பிறவி நீர்தாமோ?
மலைகளுக்கு முன்பே உதித்தவர் நீர்தாமோ?
8 கடவுளின் மன்றத்தில் கவனித்துக் கேட்டீரோ?
ஞானம் உமக்கு மட்டுமே உரியதோ?
9 எங்களுக்குத் தெரியாத எது உமக்குத் தெரியும்?
எங்களுக்குப் புரியாத எது உமக்குப் புரியும்?
10 நரைமுடியும் நிறைவயதும்கொண்டு,
நாள்களில் உம் தந்தைக்கு மூத்தோர்
எங்களிடை உள்ளனர்.
11 கடவுளின் ஆறுதலும், கனிவான சொல்லும்
உமக்கு அற்பமாயினவோ?
12 மனம்போன போக்கில் நீர் செல்வது ஏன்?
உம் கண்கள் திருதிருவென விழிப்பது ஏன்?
13 அதனால், இறைவனுக்கு எதிராய்
உம் கோபத்தைத் திருப்புகின்றீர்;
வாயில் வந்தபடி
வார்த்தைகளைக் கொட்டுகின்றீர்.
14 மாசற்றவராய் இருக்க மானிடர் எம்மாத்திரம்?
நேர்மையாளராய் இருக்கப்
பெண்ணிடம் பிறந்தவர் எம்மாத்திரம்?
15 வான தூதரில் இறைவன் நம்பிக்கை வையார்;
வானங்களும் அவர்தம் கண்முன்
தூயவையல்ல;
16 தீமையை தண்ணீர் போல் குடிக்கும்
அருவருப்பும் ஒழுங்கீனமும் நிறைந்த மாந்தர்
எத்துணை இழிந்தோர் ஆவர்?
17 கேளும்! நான் உமக்கு விளக்குகின்றேன்;
நான் பார்த்த இதனை நவில்கின்றேன்;
18 ஞானிகள் உரைத்தவை அவை!
அவர்கள் தந்தையர் மறைக்காதவை அவை!
19 அவர்களுக்கே நாடு வழங்கப்பட்டது;
அன்னியர் அவர்களிடையே நடமாடியதில்லை.
20 துடிக்கின்றனர் துன்பத்தில் மூர்க்கர்
தம் நாளெல்லாம்; துன்பத்தின் ஆண்டுகள்
கொடியோர்க்குக் கூட்டப்பட்டுள்ளன.
21 திகிலளிக்கும் ஒலி
அவர்களின் செவிகளில் கேட்கும்;
நலமான காலத்தில் அழிப்பவர் தாக்கலாம்.
22 அவர்கள் இருளினின்று தப்பிக்கும்
நம்பிக்கை இழப்பர்;
வாளுக்கு இரையாகக் குறிக்கப்பட்டனர்.
23 எங்கே உணவு என்று ஏங்கி அலைவர்;
இருள்சூழ்நாள்
அண்மையில் உள்ளதென்று அறிவர்.
24 இன்னலும் இடுக்கணும்
அவர்களை நடுங்க வைக்கும்;
போருக்குப் புறப்படும் அரசன்போல்
அவை அவர்களை மேற்கொள்ளும்.
25 ஏனெனில், இறைவனுக்கு எதிராக
அவர்கள் கையை ஓங்கினர்;
எல்லாம் வல்லவரை எதிர்த்து வீரம் பேசினர்.
26 வணங்காக் கழுத்தோடும்
வலுவான பெரிய கேடயத்தோடும்,
அவரை எதிர்த்து வந்தனர்.
27 ஏனெனில், அவர்களின் முகத்தைக்
கொழுப்பு மூடியுள்ளது;
அவர்களின் தொந்தி பருத்துள்ளது.
28 பாழான பட்டணங்களிலும்,
எவரும் உறைய இயலா இல்லங்களிலும்,
இடிபாடுகளுக்குரிய வீடுகளிலும்
அவர்கள் குடியிருப்பர்.
29 அவர்கள் செல்வர் ஆகார்;
அவர்களின் சொத்தும் நில்லாது;
அவர்களது உடைமை மண்ணில் பெருகாது.
30 இருளுக்கு அவர்கள் தப்புவதில்லை;
அவர்களது தளிரை அனல் வாட்டும்.
அவர்களது மலர்
காற்றில் அடித்துப்போகப்படும்.
31 வீணானதை நம்பி ஏமாந்து போகவேண்டாம்;
ஏனெனில், வெறுமையே
அவர்களது செயலுக்கு வெகுமதியாகும்.
32 அவர்களது வாழ்நாள் முடியுமுன்பே
அது நடக்கும்;
அவர்களது தளிர் உலர்ந்துவிடும்;
33 பிஞ்சுகளை உதிர்க்கும்
திராட்சைச் செடிபோன்றும்
பூக்களை உகுக்கும் ஒலிவமரம் போன்றும்
அவர்கள் இருப்பர்.
34 ஏனெனில், இறையச்சமிலாரின் கூட்டம்
கருகிப்போம்; கையூட்டு வாங்குவோரின்
கூடாரம் எரியுண்ணும்.
35 இன்னலைக் கருவுற்று அவர்கள்
இடுக்கண் ஈன்றெடுப்பர்;
வஞ்சகம் அவர்களது வயிற்றில் வளரும்.
15:14-16 யோபு 25:4-6.
15:30 ‘அவர்தம் வாயின் ஊதுதலால் வாரிப்போகப்படுவான்’ என்பது எபிரேய பாடம். | https://bible.catholicgallery.org/tamil/etb-job-15 |
451 | யோபு | யோபு அதிகாரம் – 16 – திருவிவிலியம் | கடவுளின் நீதியும் மனிதனின் அநீதியும்
1 அதற்கு யோபு உரைத்த மறுமொழி;
2 இதைப்போன்ற பலவற்றை
நான் கேட்டதுண்டு;
“புண்படுத்தும் தேற்றுவோர்” நீவிர் எல்லாம்.
3 உங்களின் வெற்று உரைக்கு முடிவில்லையா?
வாதாட இன்னும் உம்மை உந்துவது எதுவோ?
4 என்னாலும் உங்களைப்போல் பேச இயலும்;
என்னுடைய நிலையில் நீவிர் இருந்தால்,
உங்களுக்கெதிராய்ச் சொற்சரம் தொடுத்து,
உங்களை நோக்கித் தலையசைக்கவும் முடியும்.
5 ஆயினும், என் சொற்களால்
உங்களை வலுப்படுத்துவேன்;
என் உதட்டின் ஆறுதல்
உங்கள் வலியைக் குறைக்குமே!
6 நான் பேசினாலும் என் வலி குறையாது;
அடக்கி வைப்பினும் அதில் ஏதும் அகலாது.
7 உண்மையில், கடவுளே!
இப்போது என்னை உளுத்திட வைத்தீர்;
என் சுற்றம் முற்றும் இற்றிடச் செய்தீர்.
8 நீர் என்னை இளைக்கச் செய்தீர்;
அதுவே எனக்கு எதிர்ச்சான்று ஆயிற்று;
என் மெலிவு எழுந்து
எனக்கு எதிராகச் சான்று பகர்ந்தது.
9 அவர் என்னை வெறுத்தார்;
வெஞ்சினத்தில் கீறிப்போட்டார்;
என்னை நோக்கிப் பல்லைக் கடித்தார்;
என் எதிரியும் என்னை முறைத்துப் பார்த்தான்.
10 மக்கள் எனக்கெதிராய் வாயைத் திறந்தார்கள்;
ஏளனமாய் என் கன்னத்தில் அறைந்தார்கள்;
எனக்கெதிராய் அவர்கள் திரண்டனர்.
11 இறைவன் என்னைக் கயவரிடம் ஒப்புவித்தார்.
கொடியவர் கையில் என்னைச் சிக்கவைத்தார்;
12 நலமுடன் இருந்தேன் நான்;
தகர்த்தெறிந்தார் என்னை அவர்;
பிடரியைப் பிடிந்து என்னை நொறுக்கினார்;
என்னையே தம் இலக்காக ஆக்கினார்.
13 அவர் தம் வில்வீரர்
என்னை வளைத்துக் கொண்டனர்;
என் ஈரலை அவர் பிளந்து விட்டார்;
ஈவு இரக்கமின்றி என் ஈரலின் பித்தை
மண்ணில் சிந்தினார்.
14 முகத்தில் அடியடியென்று
என்னை அடித்தார்;
போர்வீரன்போல் என்மீது பாய்ந்தார்.
15 சாக்கு உடையை நான் என் உடலுக்குத்
தைத்துக் கொண்டேன்;
புழுதியில் என் மேன்மையைப் புதைத்தேன்.
16 அழுதழுது என் முகம் சிவந்தது;
என் கண்களும் இருண்டு போயின,
17 இருப்பினும், வன்செயல்
என் கையில் இல்லை;
மாசு என் மன்றாட்டில் இல்லை.
18 மண்ணே! என் குருதியை மறைக்காதே;
என் கூக்குரலைப் புதைக்காதே.
19 இப்பொழுதும் இதோ!
என் சான்று விண்ணில் உள்ளது;
எனக்காக வழக்காடுபவர் வானில் உள்ளார்.
20 என்னை நகைப்பவர்கள் என் நண்பர்களே!
கடவுளிடமே கண்ணீர் வடிக்கின்றேன்.
21 ஒருவன் தன் நண்பனுக்காகப் பேசுவதுபோல்,
அவர் மனிதர் சார்பாகக்
கடவுளிடம் பரிந்து பேசுவார்.
22 இன்னும் சில ஆண்டுகளே உள்ளன;
பிறகு திரும்ப வரவியலா
வழியில் செல்வேன்.
16:19 யோபு 19:25. | https://bible.catholicgallery.org/tamil/etb-job-16 |
452 | யோபு | யோபு அதிகாரம் – 17 – திருவிவிலியம் | 1 என் உயிர் ஊசலாடுகின்றது;
என் நாள்கள் முடிந்துவிட்டன;
கல்லறை எனக்குக் காத்திருக்கின்றது.
2 உண்மையாகவே, எள்ளி நகைப்போர்
என்னைச் சூழ்ந்துள்ளனர்; என் கண்முன்
அவர்தம் பகைமையே நிற்கின்றது.
3 நீரே எனக்குப் பணையமாய் இருப்பீராக!
வேறுயார் எனக்குக்
கையடித்து உறுதியளிப்பார்?
4 அறியமுடியாதபடி
அவர்கள் உள்ளத்தை அடைத்துப் போட்டீர்;
அதனால் அவர்கள்
மேன்மையடைய விடமாட்டீர்.
5 கைம்மாறு கருதி
நண்பர்க்கு எதிராயப் புறங்கூறுவோரின்
பிள்ளைகளின் கண்களும் ஒளியிழந்துபோம்.
6 என் இனத்தார்க்கு அவர்
என்னைப் பழிச் சொல்லாக்கியுள்ளார்;
என்னைக் காண்போர் என்முன் துப்புகின்றனர்.
7 கடுந்துயரால் என் கண்கள் மங்குகின்றன;
என் உறுப்புகளெல்லாம் நிழல்போலாகின்றன.
8 இதைக்கண்டு நேர்மையானவர்
திகைக்கின்றனர்; குற்றமற்றோர்
இறைப்பற்று இல்லார் மேல்
சீற்றமடைகின்றனர்.
9 நேர்மையாளர் தம் நெறியைக் கடைப்பிடிப்பர்;
கறையற்ற கையினர்
இன்னும் வலிமை அடைவர்.
10 ஆனால், இப்பொழுது
நீங்கள் எல்லாரும் திரும்பி வாருங்கள்.
வந்தாலும் ஞானமுள்ள எவரையும்
உங்களில் காணமாட்டேன்.
11 கடந்தன என் நாள்கள்;
தகர்ந்தன என் திட்டங்கள்;
அவ்வாறே ஆயின என் இதய நாட்டங்கள்.
12 அவர்கள் இரவைப் பகலாகத் திரிக்கின்றனர்;
ஒளி இருளுக்கு அண்மையில் உளது
என்கின்றனர்.
13 இருள் உலகையே
என் இல்லமென எதிர்பார்ப்பேனாகில்,
என் படுக்கையை இருளிலே விரிப்பேனாகில்,
14 படுகுழியை நோக்கி “என் தந்தையே” என்றும்,
புழுவை நோக்கி “என் தாயே,
என் தமக்கையே” என்றும் புகல்வேனாகில்,
15 பின் எங்கே என் நம்பிக்கை?
என் நம்பிக்கையைக் காணப்போவது யார்?
16 நாம் ஒன்றாய்ப் புழுதிக்குப் போகும் போது,
இருள் உலகில் வாயில்வரை அது இறங்குமா? | https://bible.catholicgallery.org/tamil/etb-job-17 |
453 | யோபு | யோபு அதிகாரம் – 18 – திருவிவிலியம் | தீயோரின் தவிர்க்க முடியாத முடிவு
1 அதற்குச் சூகாவியனான பில்தாது
சொன்ன பதில்:
2 எப்பொழுது உமது சூழ்ச்சியுள்ள
சொற்பொழிவை முடிக்கப் போகிறீர்?
சிந்தித்திப் பாரும்; பின்னர் நாம் பேசுவோம்.
3 மாக்களாக நாங்கள் கருதப்படுவது ஏன்?
மதியீனர்களோ நாங்கள் உம் கண்களுக்கு?
4 சீற்றத்தில் உம்மையே நீர்
கீறிக்கொள்வதனால், உம்பொருட்டு
உலகம் கைவிடப்பட வேண்டுமா?
பாறையும் தன் இடம்விட்டு
நகர்த்தப்படவேண்டுமா?
5 தீயவரின் ஒளி அணைந்துபோம்;
அவர்களது தீக்கொழுந்து எரியாதுபோம்.
6 அவர்களின் கூடாரத்தில் ஒளி இருளாகும்;
அவர்கள்மீது ஒளிரும் விளக்கு
அணைந்துபோம்.
7 அவர்களின் பீடுநடை தளர்ந்துபோம்;
அவர்களின் திட்டமே
அவர்களைக் கவிழ்க்கும்.
8 அவர்களின் கால்களே
அவர்களை வலைக்குள் தள்ளும்;
அவர்கள் நடப்பதோ கண்ணிகள் நடுவில்தான்.
9 கண்ணி அவர்களின் குதிகாலைச்
சிக்கிப்பிடிக்கும்;
சுருக்கு அவர்களை மாட்டி இழுக்கும்.
10 மண்மீது அவர்களுக்குச் சுருக்கும்,
பாதையில் அவர்களுக்குப் பொறியும்
மறைந்துள்ளன.
11 எப்பக்கமும் திகில்
அவர்களை நடுங்க வைக்கும்;
கால் செல்லும் வழியில் துரத்தி விரட்டும்.
12 பட்டினி அவர்களின் வலிமையை
விழுங்கிடும்; தீங்கு அவர்களின்
வீழ்ச்சிக்குக் காத்திருக்கும்.
13 நோய் அவர்களின் தோலைத் தின்னும்;
சாவின் தலைப்பேறு
அவர்களின் உறுப்புகளை விழுங்கும்.
14 அவர்கள் நம்பியிருந்த கூடாரத்தினின்று
பிடுங்கப்படுவர்; அச்சம்தரும்
அரசன்முன் கொணரப்படுவர்.
15 அவர்களின் கூடாரங்களில் எதுவும் தங்காது;
அவர்களின் உறைவிடங்களில்
கந்தகம் தூவப்படுகின்றது.
16 கீழே அவர்களின் வேர்கள் காய்ந்துபோம்;
மேலே அவர்களின் கிளைகள் பட்டுப்போம்.
17 அவர்களின் நினைவே அவனியில்
இல்லாதுபோம்; மண்ணின் முகத்தே
அவனுக்குப் பெயரே இல்லாது போம்.
18 ஒளியிலிருந்து இருளுக்குள்
அவர்கள் தள்ளப்படுவர்; உலகிலிருந்தே
அவர்கள் துரத்தப்படுவர்.
19 அவர்களின் இனத்தாரிடையே
அவர்களுக்கு வழிமரபும்
வழித்தோன்றலுமில்லை;
அவர்கள் வாழ்ந்த இடத்தில்
அவர்கள்வழி எஞ்சினோர் யாருமில்லை.
20 அவர்கள் கதி கண்டு திடுக்கிட்டது
மேற்றிசை; திகிலுற்றது கீழ்த்திசை.
21 கொடியவரின் குடியிருப்பெல்லாம்
இத்தகையதே; இறைவனை
அறியாதவரின் நிலையும் இதுவே.
18:5-6 யோபு 21:17. | https://bible.catholicgallery.org/tamil/etb-job-18 |
454 | யோபு | யோபு அதிகாரம் – 19 – திருவிவிலியம் | பற்றுறுதியின் வெற்றி
1 பின் யோபு உரைத்த மறுமொழி:
2 என் உள்ளத்தை எவ்வளவு காலத்திற்குப் புண்படுத்துவீர்?
என்னை வார்த்தையால் நொறுக்குவீர்?
3 பன்முறை என்னைப் பழித்துரைத்தீர்;
வெட்கமின்றி என்னைத் தாக்கிப் பேசினீர்.
4 உண்மையாகவே
நான் பிழை செய்திருந்தாலும்
என்னுடன் அன்றோ அந்தப் பிழை இருக்கும்?
5 எனக்கு எதிராய் நீங்களே உங்களைப்
பெருமைப்படுத்திக் கொள்வீர்களாகில்,
என் இழிநிலையை
எனக்கு விரோதமாய்க் காட்டுவீராகில்,
6 கடவுள்தான் என்னை
நெருக்கடிக்குள் செலுத்தினார் என்றும்,
வலைவீசி என்னை வளைத்தார் என்றும்
அறிந்துகொள்க!
7 இதோ! ‘கொடுமை’ எனக்
கூக்குரலிட்டாலும் கேட்பாரில்லை;
நான் ஓலமிட்டாலும் தீர்ப்பாரில்லை.
8 நான் கடந்துபோகாவண்ணம்,
கடவுள் என் வழியை அடைத்தார்;
என் பாதையை இருளாக்கினார்.
9 என் மாண்பினை அவர் களைந்தார்;
மணிமுடியை என் தலையினின்று அகற்றினார்.
10 எல்லாப் பக்கமும் என்னை
இடித்துக் தகர்த்தார்;
நான் தொலைந்தேன்;
மரம்போலும் என் நம்பிக்கையை
வேரோடு பிடுங்கினார்.
11 அவர்தம் கோபக்கனல் எனக்கெதிராய்த்
தெறித்தது; அவர் எதிரிகளில் ஒருவனாய்
என்னையும் எண்ணுகின்றார்.
12 அவர்தம் படைகள் ஒன்றாக எழுந்தன;
அவர்கள் எனக்கெதிராய் முற்றுகை இட்டனர்;
என் கூடாரத்தைச் சுற்றிப்
பாசறை அமைத்தனர்.
13 என் உடன் பிறந்தவரை
என்னிடமிருந்து அகற்றினார்;
எனக்கு அறிமுகமானவரை
முற்றிலும் விலக்கினார்;
14 என் உற்றார் என்னை ஒதுக்கினர்;
என் நண்பர்கள் என்னை மறந்தனர்.
15 என் வீட்டு விருந்தினரும்
என் பணிப்பெண்களும்
என்னை அன்னியனாகக் கருதினர்;
அவர்கள் கண்களுக்குமுன்
நான் அயலானானேன்.
16 என் அடிமையை அழைப்பேன்;
மறுமொழி கொடான்; என் வாயால்
அவனைக் கெஞ்ச வேண்டியிருக்கிறது.
17 என் மனைவிக்கு என் மூச்சு வீச்சம் ஆயிற்று;
என் தாயின் பிள்ளைகளுக்கு
நாற்றம் ஆனேன்.
18 குழந்தைகளும் என்னைக்
கேலி செய்கின்றனர்;
நான் எழுந்தால் கூட ஏளனம் செய்கின்றனர்.
19 என் உயிர் நண்பர் எல்லாரும்
என்னை வெறுத்தனர்;
என் அன்புக்குரியவராய் இருந்தோரும்
எனக்கெதிராக மாறினர்.
20 நான் வெறும் எலும்பும் தோலும் ஆனேன்;
நான் பற்களின் ஈறோடு தப்பினேன்.
21 என் மேல் இரங்குங்கள்;
என் நண்பர்காள்! என் மேல்
இரக்கம் கொள்ளுங்கள்; ஏனெனில்
கடவுளின் கை என்னைத் தண்டித்தது.
22 இறைவனைப் போல்
நீங்களும் என்னை விரட்டுவது ஏன்?
என் சதையை நீங்கள் குதறியது போதாதா?
23 ஓ! என் வார்த்தைகள் இப்பொழுது
வரையப்படலாகாதா? ஓ! அவை
ஏட்டுச் சுருளில் எழுதப்படலாகாதா?
24 இரும்புக்கருவியாலும் ஈயத்தாலும்
என்றென்றும் அவை
பாறையில் பொறிக்கப்பட வேண்டும்.
25 ஏனெனில், என் மீட்பர்
வாழ்கின்றார் என்றும்
இறுதியில் மண்மேல் எழுவார் என்றும்
நான் அறிவேன்.
26 என் தோல் இவ்வாறு அழிக்கப்பட்ட பின்,
நான் சதையோடு இருக்கும் போதே
கடவுளைக் காண்பேன்.
27 நானே, அவர் என் பக்கத்தில்
நிற்கக் காண்பேன்; என் கண்களே காணும்;
வேறு கண்கள் அல்ல;
என் நெஞ்சம் அதற்காக ஏங்குகின்றது.
28 ஆனால், நீங்கள் பேசிக்கொள்கின்றீர்கள்;
‘அவனை எப்படி நாம் வதைப்பது?
அவனிடம் அடிப்படைக் காரணத்தை
எவ்வாறு கண்டுபிடிப்பது?’
29 மாறாக — வாளுக்கு நீங்களே
அஞ்சவேண்டும்; ஏனெனில்,
சீற்றம் வாளின் தண்டனையைக் கொணரும்;
அப்போது, நீதித் தீர்ப்பு உண்டு என்பதை
அறிந்துகொள்வீர்கள். | https://bible.catholicgallery.org/tamil/etb-job-19 |
455 | யோபு | யோபு அதிகாரம் – 20 – திருவிவிலியம் | நீதிக்கு விதிவிலக்கு இல்லை
1 அதற்கு நாமாயனான சோப்பார்
கூறின பதில்:
2 என்னுள் இருக்கும் துடிப்பின் பொருட்டு,
என் எண்ணங்கள்
பதில் சொல்ல வைக்கின்றன.
3 என்னை வெட்கமடையச் செய்யும்
குத்தல்மொழி கேட்டேன்;
நான் புரிந்து கொண்டதிலிருந்து
விடை அளிக்க
மனம் என்னை உந்துகிறது.
4 மாந்தர் மண்ணில் தோன்றியதிலிருந்து,
தொன்றுதொட்டு நடக்குமிது
உமக்குத் தெரியாதா?
5 கொடியவரின் மகிழ்ச்சி நொடிப் பொழுதே!
கடவுளுக்கு அஞ்சாதவரின் களிப்பு
கணப்பொழுதே!
6 அவர்களின் பெருமை
விசும்பு மட்டும் உயர்ந்தாலும்,
அவர்களின் தலை
முகிலை முட்டுமளவு இருந்தாலும்,
7 அவர்கள் தங்களின் சொந்த மலம் போன்று
என்றைக்கும் ஒழிந்திடுவர்;
அவர்களைக் கண்டவர்,
எங்கே அவர்கள்? என்பர்.
8 கனவுபோல் கலைந்திடுவர்; காணப்படார்;
இரவு நேரக் காட்சிபோல் மறைந்திடுவர்.
9 பார்த்த கண் இனி அவர்களைப் பார்க்காது;
வாழ்ந்த இடம், அவர்களை என்றும் காணாது.
10 ஏழைகளின் தயவை
அவர்களின் குழந்தைகள் நாடுவர்;
அவர்களின் கைகளே
அவர்களின் செல்வத்தைத் திரும்ப அளிக்கும்.
11 எலும்புகளை நிரப்பிய
அவர்களின் இளமைத் துடிப்பு,
மண்ணில் அவர்களோடு மறைந்துவிடும்.
12 தீங்கு அவர்களின் வாயில்
இனிப்பாய் இருப்பினும், நாவின் அடியில்
அதை அவர்கள் மறைத்து வைப்பினும்,
13 இழந்து போகாமல்
அதை அவர்கள் இருத்தி வைத்தாலும்,
அண்ணத்தின் நடுவே
அதை அடைத்து வைத்தாலும்,
14 வயிற்றிலே அவர்களின் உணவு
மாற்றமடைந்து, அவர்களுக்கு
விரியன் பாம்பின் நஞ்சாகிவிடுமே;
15 செல்வத்தை விழுங்கினர்;
அதை அவர்களே கக்குவர்;
இறைவன் அவர்களின் வயிற்றிலிருந்து
அதை வெளியேற்றுவார்.
16 விரியன் பாம்பின் நஞ்சை
அவர்கள் உறிஞ்சுவர்;
கட்டு விரியனின் நாக்கு
அவர்களைக் கொன்றுபோடும்.
17 ஓலிவ எண்ணெய்க் கால்வாய்களிலும்
, தேன், வெண்ணெய் ஆறுகளிலும்
அவர்கள் இன்பம் காணார்.
18 தங்களின் உழைப்பின் பயனை
அவர்கள் திரும்ப அளிப்பர்;
அதை அவர்கள் உண்ணமாட்டார்;
வணிகத்தின் வருவாயில் இன்புறார்.
19 ஏனெனில், அவர்கள் ஏழைகளை ஒடுக்கி,
இல்லாதவராக்கினர்;
தாங்கள் கட்டாத வீட்டை
அவர்கள் அபகரித்துக் கொண்டனர்.
20 அவர்களின் ஆசைக்கோர் அளவேயில்லை;
ஆதலால், அவர்கள் இச்சித்த செல்வத்தில்
மிச்சத்தைக் காணார்.
21 அவர்கள் தின்றபின்
எஞ்சியது எதுவும் இல்லை; எனவே
அவர்களது செழுமை நின்று நிலைக்காது.
22 நிறைந்த செல்வத்திடை
அவர்களுக்கு நெருக்கடி ஏற்படும்;
அவலத்தின் பளுவெல்லாம்
அவர்கள்மேல் விழும்.
23 அவர்கள் வயிறு புடைக்க உண்ணும்போது,
இறைவன் தம் கோபக்கனலை
அவர்கள்மேல் கொட்டுவார்; அதையே
அவர்களுக்கு உணவாகப் பொழிவார்.
24 அவர்கள் இரும்பு ஆயுதத்திற்கு
அஞ்சி ஓடுவர்; ஆனால், வெண்கல வில்
அவர்களை வீழ்த்திடுமே!
25 அவர்கள் அதைப் பின்புறமாக இழுப்பர்;
மின்னும் அம்புமுனை பிச்சியிலிருந்து வெளிவரும்;
அச்சம் அவர்கள் மேல் விழும்.
26 காரிருள் அவர்களது கருவூலத்திற்குக்
காத்திருக்கும்; மூட்டாத தீ
அதனைச் சுட்டெரிக்கும்; அவர்களின்
கூடாரத்தில் எஞ்சியதை விழுங்கும்.
27 விண்ணகம் அவர்களின் பழியை
வெளியாக்கும்; மண்ணகம் அவர்களை
மறுத்திட எழுந்து நிற்கும்.
28 அவர்களது இல்லத்தின் செல்வம்
சூறையாடப்படும்; இறைவனின்
வெஞ்சின நாளில் அது அடித்துப்போகப்படும்.
29 இதுவே பொல்லார்க்குக்
கடவுள் அளிக்கும் பங்கு; அவர்களுக்கு
இறைவன் குறிக்கும் உரிமைச் சொத்து. | https://bible.catholicgallery.org/tamil/etb-job-20 |
456 | யோபு | யோபு அதிகாரம் – 21 – திருவிவிலியம் | நிகழ்வன எதிர்மாறாய் இருத்தல்
1 அதற்கு யோபு கூறிய மறுமொழி:
2 நான் கூறுவதைக் கவனமாய்க்
கேளுங்கள்; இதுவே நீங்கள்
எனக்கு அளிக்கும் ஆறுதலாயிருக்கும்.
3 பொறுங்கள்! என்னைப் பேசவிடுங்கள்;
நான் பேசிய பிறகு கேலி செய்யுங்கள்.
4 என்னைப் பொறுத்த மட்டில்,
நான் முறையிடுவது மனிதரை எதிர்த்தா?
இல்லையேல் நான் ஏன்
பொறுமை இழக்கக்கூடாது?
5 என்னை உற்றுப்பாருங்கள்; பதறுங்கள்;
கையால் வாயில் அடித்துக்கொள்ளுங்கள்.
6 இதை நான் நினைக்கும்பொழுது
திகிலடைகிறேன்;
நடுக்கம் என் சதையை ஆட்டுகிறது.
7 தீயோர் வாழ்வதேன்?
நீண்ட ஆயுள் பெறுவதேன்?
. வலியோராய் வளர்வதேன்?
8 அவர்களின் வழிமரபினர்
அவர்கள்முன் நிலைபெறுகின்றனர்;
அவர்களின் வழித்தோன்றல்கள்
அவர்கள் கண்முன் நிலைத்திருக்கின்றனர்.
9 அவர்களின் இல்லங்களில்
அச்சமற்ற அமைதி நிலவுகின்றது.
கடவுளின் தண்டனை
அவர்கள்மேல் விழவில்லை.
10 அவர்களின் காளைகள் பொலிகின்றன.
ஆனால் பிசகுவதில்லை;
அவர்களின் பசுக்கள் கருவுறும்;
ஆனால் கரு கலைவதில்லை.
11 மந்தைபோல அவர்கள் தம் மழலைகளை
வெளியனுப்புகின்றனர்; அவர்களின்
குழந்தைகள் குதித்தாடுகின்றனர்.
12 அவர்கள் தம்புரு, சுரமண்டலம் இசைத்துப்
பாடுகின்றனர்; குழல் ஊதி மகிழ்ந்திடுகின்றனர்.
13 அவர்கள் மகிழ்வில்
தம் நாள்களைக் கழிக்கின்றனர்;
அமைதியில் பாதாளம் இறங்குகின்றனர்.
14 அவர்கள் இறைவனிடம் இயம்புகின்றனர்;
‘எம்மை விட்டு அகலும்; ஏனெனில்,
உமது வழிகளை அறிந்து கொள்ள
நாங்கள் விரும்பவில்லை;’
15 எல்லாம் வல்லவர் யார் நாங்கள் பணி புரிய?
அவரை நோக்கி நாங்கள்
மன்றாடுவதால் என்ன பயன்?
16 இதோ! அவர்களின் வளமை
அவர்களின் கையில் இல்லை;
எனவே, தீயோரின் ஆலோசனை
எனக்குத் தொலையிலிருப்பதாக!
17 எத்தனைமுறை தீயோரின் ஒளி
அணைகின்றது? அழிவு
அவர்கள்மேல் வருகின்றது?
கடவுள் தம் சீற்றத்தில்
வேதனையைப் பங்கிட்டு அளிக்கின்றார்.
18 அவர்கள் காற்றுக்குமுன் துரும்பு போன்றோர்;
சூறாவளி அடித்துப் போகும் பதர் போன்றோர்.
19 அவர்களின் தீங்கைக் கடவுள் அவர்களின்
பிள்ளைகளுக்கா சேர்த்து வைக்கின்றார்?
அவர்களுக்கே அவர் திரும்பக் கொடுக்கின்றார்;
அவர்களும் அதை உணர்வர்.
20 அவர்களின் அழிவை அவர்களின்
கண்களே காணட்டும்;
எல்லாம் வல்லவரின் வெஞ்சினத்தை
அவர்கள் குடிக்கட்டும்.
21 அவருடைய நாள்கள் எண்ணப்பட்டபின்,
அவர்களது இல்லத்தில்
அவர்கள் கொள்ளும் அக்கறை என்ன?
22 இறைவனுக்கு அறிவைக் கற்பிப்போர் யார்?
ஏனெனில், அவரே
உயர்ந்தோரைத் தீர்ப்பிடுகின்றார்.
23 சிலர் வளமையோடும் வலிமையோடும்
நிறைவோடும் முழு அமைதியோடும்
சாகின்றனர்.
24 அவர்களின் தொடைகள்
கொழுப்பேறி உள்ளன; அவர்களின்
எலும்புகளின் சோறு உலரவில்லை.
25 வேறு சிலர், கசந்த உள்ளத்துடன்
இனிமையைச் சுவைக்காதவராய்ச் சாகின்றனர்;
26 புழுதியில் இருசாராரும் ஒன்றாய்த் துஞ்சுவர்;
புழுக்கள் அவர்களைப் போர்த்தி நிற்குமே.
27 இதோ! உம் எண்ணங்களையும்
எனக்கெதிராய்த் தீட்டும் திட்டங்களையும்
நான் அறிவேன்.
28 ஏனெனில், நீங்கள் கூறுகின்றீர்கள்;
‘கொடுங்கோலனின் இல்லம் எங்கே?
கொடியவன் குடியிருக்கும் கூடாரம் எங்கே?’
29 வழிப்போக்கர்களை நீங்கள் வினவவில்லையா?
அவர்கள் அறிவித்ததை
நீங்கள் கேட்கவில்லையா?
30 தீயோர் அழிவின் நாளுக்கென
விடப்பட்டுள்ளனர்; வெஞ்சின நாளில்
அவர்கள் விடுவிக்கப்படுவாரா?
31 யார் அவர்களின் முகத்துக்கு எதிரே
அவர்களின் போக்கை உரைப்பார்?
யார் அவர்களின் செயலுக்கேற்ப கொடுப்பார்?
32 இருப்பினும், கல்லறைக்கு
அவர்கள் கொண்டுவரப்படுவர்;
அவர்களின் சமாதிக்குக்
காவல் வைக்கப்படும்.
33 பள்ளத்தாக்கின் மண் அவர்களுக்கு
இனிமையாய் இருக்கும்;
மாந்தர் அனைவரும் அவர்களைப்
பின்தொடர்வர்; அவர்களின்
முன் செல்வோர்க்குக் கணக்கில்லை.
34 அப்படியிருக்க, வெற்றுமொழியால்
நீர் என்னைத் தேற்றுவதெப்படி?
உமது மறுமொழி முற்றிலும் பொய்யே! | https://bible.catholicgallery.org/tamil/etb-job-21 |
457 | யோபு | யோபு அதிகாரம் – 22 – திருவிவிலியம் | கடவுளோடு ஒப்புரவாகும் வழி
(22:1-27:23)
1 பின்னர் தேமானியனான எலிப்பாசு
பேசத் தொடங்கினான்:
2 மனிதரால் இறைவனுக்குப் பயன் உண்டா?
மதிநுட்பம் உடையவரால்
அவருக்குப் பயன் உண்டா?
3 நீர் நேர்மையாக இருப்பது
எல்லாம் வல்லவர்க்கு இன்பம் பயக்குமா?
நீர் உமது வழியைச் செம்மைப்படுத்துவது
அவர்க்கு நன்மை பயக்குமா?
4 நீர் அவரை அஞ்சி மதிப்பதாலா
அவர் உம்மைக் கண்டிக்கிறார்?
அதனை முன்னிட்டா
உம்மைத் தீர்ப்பிடுகிறார்?
5 உமது தீமை பெரிதல்லவா?
உமது கொடுமைக்கு முடிவில்லையா?
6 ஏனெனில், அற்பமானவற்றுக்கும்
உம் உறவின்முறையாரிடம் அடகு வாங்கினீர்;
ஏழைகளின் உடையை உரிந்து விட்டீர்!
7 தாகமுள்ளோர்க்குக்
குடிக்கத் தண்ணீர் தரவில்லை;
பசித்தோர்க்கு உணவு கொடுக்க
முன்வரவில்லை.
8 வலிய மனிதராகிய உமக்கு
வையகம் சொந்தமாயிற்று;.
உம் தயவு பெற்றவர்க்கே
அது குடியிருப்பாயிற்று.
9 விதவைகளை நீர்
வெறுங்கையராய் விரட்டினீர்;
.அனாதைகளின் கைகளை முறித்துப் போட்டீர்.
10 ஆகையால்,
கண்ணிகள் உம்மைச் சூழ்ந்துள்ளன;
கிலி உம்மைத் திடீரென ஆட்கொள்ளும்.
11 நீர் காணாவண்ணம் காரிருள் சூழ்ந்தது;
நீர்ப்பெருக்கு உம்மை மூழ்கடித்தது.
12 உயரத்தே விண்ணகத்தில்
கடவுள் இல்லையா?
வானிலிருக்கும் விண்மீன்களைப் பாரும்!
அவை எவ்வளவு உயரத்திலுள்ளன!
13 ஆனால், நீர் சொல்கின்றீர்;
‘இறைவனுக்கு என்ன தெரியும்?
கார்முகிலை ஊடுருவிப் பார்த்து
அவரால் தீர்ப்பிட முடியுமா?
14 அவர் பார்க்காவண்ணம் முகில் மறைக்கின்றது;
அவர் வான்தளத்தில் உலவுகின்றார்’.
15 பாதகர் சென்ற பழைய நெறியில்
நீரும் செல்ல விழைகின்றீரோ!
16 நேரம் வருமுன்பே அவர்கள் பிடிப்பட்டனர்;
அவர்கள் அடித்தளத்தை
வெள்ளம் அடித்துச் சென்றது.
17 அவர்கள் இறைவனிடம்,
‘எங்களைவிட்டு அகலும்; எல்லாம் வல்லவர்
எங்களுக்கு என்ன செய்ய முடியும்?’ என்பர்.
18 இருப்பினும், அவரே அவர்களின் இல்லத்தை
நம்மையினால் நிரப்பினார்; .
எனினும், தீயவரின் திட்டம்
எனக்குத் தொலைவாயிருப்பதாக!
19 நேர்மையுள்ளோர் அதைக் கண்டு
மனம் மகிழ்கின்றனர்; மாசற்றோர்
அவர்களை எள்ளி நகையாடுகின்றனர்;
20 ‘இதோ! நம் பகைவர் வீழ்த்தப்பட்டனர்;
அவர்களின் சேமிப்பு
தீயால் விழுங்கப்பட்டது’
என்கின்றனர்.
21 இணங்குக இறைவனுக்கு;எய்துக அமைதி;
அதனால் உமக்கு நன்மை வந்தடையும்.
22 அவர் வாயினின்று அறிவுரை பெறுக;
அவர்தம் மொழிகளை
உம் நெஞ்சில் பொறித்திடுக;
23 நீர் எல்லாம் வல்லவரிடம்
திரும்பி வருவீராகில்,
நீர் கட்டியெழுப்பப்படுவீர்; தீயவற்றை
உம் கூடாரத்திலிருந்து அகற்றி விடும்!
24 பொன்னைப் புழுதியிலே எறிந்து,
ஓபீர்த் தங்கத்தை ஓடைக் கற்களிடை வீசிவிடும்!
25 எல்லாம் வல்லவரே உமக்குப் பொன்னாகவும்,
வெள்ளியாகவும், வலிமையாகவும் திகழ்வார்.
கடவுளின் ஆற்றலுக்குப் புகழ்ப்பாடல்
26 அப்போது எல்லாம் வல்லவரில்
நீர் நம்பிக்கை கொள்வீர்.
கடவுளைப் பார்த்து
உம் முகத்தை நிமிர்த்திடுவீர்.
27 நீர் அவரிடம் மன்றாடுவீர்;
அவரும் உமக்குச் செவி கொடுப்பார்.
28 நீர் நினைப்பது கைகூடும்;
உம் வழிகள் ஒளிமயமாகும்.
29 ஏனெனில், அவர் செருக்குற்றோரின்
ஆணவத்தை அழிக்கின்றார்;
தாழ்வாகக் கருதப்பட்டோரை மீட்கின்றார்.
30 குற்றவாளிகளையும் அவர் விடுவிப்பார்;
அவர்கள் உம் கைகளின்
தூய்மையால் மீட்கப்படுவர்.
22:2-3 யோபு 35:6-8.
22:29 ‘ஏனெனில் அவர்கள் தாழ்த்தப்படும்போது,அவர்களை உயர்த்தும், என்பீர்; அவரும் அவர்களைத் தாழ்நிலையினின்று விடுவிப்பார்’ என்பது எபிரேய பாடம். | https://bible.catholicgallery.org/tamil/etb-job-22 |
458 | யோபு | யோபு அதிகாரம் – 23 – திருவிவிலியம் | 1 யோபு அதற்கு உரைத்த மறுமொழி:
2 இன்றுகூட என் முறைப்பாடு
கசப்பாயுள்ளது;
நான் வேதனைக் குரல் எழுப்பியும்,
என் மேல் அவரது* கை பளுவாயுள்ளது.
3 அவரை எங்கே கண்டுபிடிக்கலாமென
நான் அறிய யாராவது உதவுவாரானால்,
நான் அவர் இருக்கையை அணுகுவேன்.
4 என் வழக்கை அவர்முன் எடுத்துரைப்பேன்;
என் வாயை வழக்குரைகளால் நிரப்புவேன்.
5 அவர் எனக்கு என்ன வார்த்தை கூறுவார் என
அறிந்து கொள்வேன்; அவர் எனக்கு
என்ன சொல்வார் என்பதையும்
நான் புரிந்து கொள்வேன்.
6 மாபெரும் வல்லமையுடன்
அவர் என்னோடு வழக்காடுவாரா?
இல்லை; அவர் கண்டிப்பாக
எனக்குச் செவி கொடுப்பார்.
7 அங்கே நேர்மையானவன்
அவரோடு வழக்காடலாம்;
நானும் என் நடுவரால்
முழுமையாக விடுவிக்கப்படுவேன்.
8 கிழக்கே நான் சென்றாலும்
அவர் அங்கில்லை;
மேற்கேயும் நான் அவரைக் காண்கிலேன்.
9 இடப்புறம் தேடினும்
செயல்படுகிற அவரைக் காணேன்;
வலப்புறம் திரும்பினும்
நான் அவரைப் பார்த்தேனில்லை.
10 ஆயினும் நான் போகும் வழியை
அவர் அறிவார்; என்னை அவர் புடமிட்டால்,
நான் பொன்போல் துலங்கிடுவேன்.
11 அவர் அடிச்சுவடுகளை
என் கால்கள் பின்பற்றின;
அவர் நெறியில் நடந்தேன்; பிறழவில்லை.
12 அவர் நா உரைத்த ஆணையினின்று
நான் விலகவில்லை;
அவர்தம் வாய்மொழிகளை
அரும்பொருளின் மேலாகப் போற்றினேன்.
13 ஆனால், அவர் ஒரு முடிவை எடுத்தால்,
யாரால் மாற்ற முடியும்? ஏனெனில்,
எதை அவர் விரும்புகிறாரோ
அதை அவர் செய்கிறார்.
14 ஏனெனில் எனக்கு அவர் குறித்துள்ளதை
அவர் நிறைவேற்றுவார்;
இத்தகையன பல அவர் உள்ளத்தில் உள்ளன.
15 ஆகையால், அவர்முன் நடுங்குகின்றேன்;
அவரைப்பற்றி நினைக்கையில்
திகிலடைகின்றேன்.
16 இறைவன் எனை உளம் குன்றச் செய்தார்;
எல்லாம் வல்லவர் என்னைக்
கலங்கச் செய்தார்.
17 ஏனெனில் இருள் என்னை மறைக்கிறது;
காரிருள் என் முகத்தைக் கவ்வுகிறது.
23:2 ‘எனது’ என்பது எபிரேய பாடம். | https://bible.catholicgallery.org/tamil/etb-job-23 |
459 | யோபு | யோபு அதிகாரம் – 24 – திருவிவிலியம் | 1 குறித்த காலத்தை எல்லாம் வல்லவர்
ஏன் வெளிப்படுத்தவில்லை?
அவரை அறிந்தோரும்
ஏன் அவர் தம் நாள்களைக் காணவில்லை?
2 தீயோர் எல்லைக்கல்லை
எடுத்துப்போடுகின்றனர். மந்தையைக்
கொள்ளையிட்டு மேய்கின்றனர்.
3 அனாதையின் கழுதையை
ஓட்டிச் செல்கின்றனர்.
விதவையின் எருதை
அடகாய்க் கொள்கின்றனர்.
4 ஏழையை வழியினின்று தள்ளுகின்றனர்.
நாட்டின் வறியோர்
ஒன்றாக ஒளிந்து கொள்கின்றனர்.
5 ஏழைகள் உணவுதேடும் வேலையாய்க்
காட்டுக் கழுதையெனப்
பாலைநிலத்தில் அலைகின்றனர்;
பாலைநிலத்தில் கிடைப்பதே
அவர்கள் பிள்ளைகளுக்கு உணவாகும்.
6 கயவரின் கழனியில் அவர்கள்
சேகரிக்கின்றனர்;
பொல்லாரின் திராட்சைத் தோட்டத்தில்
அவர்கள் பொறுக்குகின்றனர்.
7 ஆடையின்றி இரவில்
வெற்று உடலாய்க் கிடக்கின்றனர்;
வாடையில் போர்த்திக் கொள்ளப்
போர்வையின்றி இருக்கின்றனர்;
8 மலையில் பொழியும் மழையால் நனைகின்றனர்;
உறைவிடமின்றிப் பாறையில் ஒண்டுகின்றனர்;
9 தந்தையிலாக் குழந்தையைத்
தாயினின்று பறிக்கின்றனர்;
ஏழையின் குழந்தையை அடகு வைக்கின்றனர்.
10 ஆடையின்றி வெற்றுடலாய் அலைகின்றனர்;
ஆறாப்பசியுடன் அரிக்கட்டைத் தூக்குகின்றனர்.
11 ஒலிவத் தோட்டத்தில்
எண்ணெய் ஆட்டுகின்றனர்;
திராட்சை பிழிந்தும்
தாகத்தோடு இருக்கின்றனர்.
12 நகரில் இறப்போர் முனகல் கேட்கின்றது;
காயமடைந்தோர் உள்ளம்
உதவிக்குக் கதறுகின்றது; கடவுளோ
அவர்கள் மன்றாட்டைக் கேட்கவில்லை.
13 இன்னும் உள்ளனர் ஒளியை எதிர்ப்போர்;
இவர்கள் அதன் வழியை அறியார்;
இவர்கள் அதன் நெறியில் நில்லார்.
14 எழுவான் கொலைஞன் புலரும் முன்பே;
ஏழை எளியோரைக் கொன்று குவிக்க;
இரவில் திரிவான் திருடன் போல.
15 காமுகனின் கண்
கருக்கலுக்காய்க் காத்திருக்கும்;
கண்ணெதுவும் என்னைக் காணாது
என்றெண்ணி;
முகத்தை அவனோ மூடிக் கொள்வான்!
16 இருட்டில் வீடுகளில் கன்னம் இடுவர்;
பகலில் இவர்கள் பதுங்கிக் கிடப்பர்;
ஒளியினை இவர்கள் அறியாதவரே!
17 ஏனென்றால் இவர்களுக்கு நிழல்
காலைபோன்றது; சாவின் திகில்
இவர்களுக்குப் பழக்கமானதே!
18 வெள்ளத்தில் விரைந்தோடும்
வைக்கோல் அவர்கள்;
பார்மேல் அவர்கள் பங்கு சபிக்கப்பட்டது;
அவர்தம் திராட்சைத் தோட்டத்தை
எவரும் அணுகார்.
19 வறட்சியும் வெம்மையும் பனிநீரைத் தீய்க்கும்;
தீமை செய்வோரைப் பாதாளம் விழுங்கும்.
20 தாங்கிய கருப்பையே அவர்களை மறக்கும்;
புழு அவர்களைச் சுவைத்துத் தின்னும்.
அவர்கள் கொடுமை மரம்போல் முறிந்துபோம்.
21 ஏனெனில், மகவிலா மலடியை
இழிவாய் நடத்தினர்; கைம்பெண்ணுக்கு
நன்மையைக் கருதினாரில்லை.
22 இருப்பினும், கடவுள் தம் வலிமையால்
வலியோரின் வாழ்வை நீட்டிக்கிறார்;
அவர்கள் தம் வாழ்வில்
நம்பிக்கையோடு இருந்தாலும்
நிலைக்கமாட்டார்கள்.
23 அவர் அவர்களைப்
பாதுகாப்புடன் வாழவிடுகிறார்;
அவர்களும் அதில் ஊன்றி நிற்கிறார்கள்;
இருப்பினும் அவரது கண்
அவர்கள் நடத்தைமேல் உள்ளது.
24 அவர்கள் உயர்த்தப்பட்டனர்;
அது ஒரு நொடிப்பொழுதே;
அதன்பின் இல்லாமற் போயினர்;
எல்லோரையும் போல் தாழ்த்தப்பட்டனர்;
கதிர் நுனிபோல் கிள்ளி எறியப்பட்டனர்.
25 இப்படி இல்லையெனில்,
என்னைப் பொய்யன் என்றோ,
என் மொழி தவறு என்றோ,
எண்பிப்பவன் எவன்? | https://bible.catholicgallery.org/tamil/etb-job-24 |
460 | யோபு | யோபு அதிகாரம் – 25 – திருவிவிலியம் | கடவுளின் ஆற்றலுக்குப் புகழ்ப்பாடல்
1 பிறகு சூகாவியனான பில்தாது பேசினான்:
2 ஆட்சியும் மாட்சியும் கடவுளுக்கே உரியன;
அமைதியை உன்னதங்களில்
அவரே நிலைநாட்டுவார்.
3 அளவிட முடியுமா அவர்தம் படைகளை?
எவர்மேல் அவரொளி வீசாதிருக்கும்?
4 அப்படியெனில், எப்படி மனிதர் கடவுள்முன்
நேரியவராய் இருக்க முடியும்? அல்லது
பெண்ணிடம் பிறந்தவர்
எப்படித் தூயவராய் இருக்கக் கூடும்?
5 இதோ! வெண்ணிலவும் ஒளி குன்றியதே!
விண்மீனும் அவர்தம் பார்வையில்
தூய்மையற்றதே!
6 அப்படியிருக்க, புழுவைப்போன்ற மனிதர்
எத்துணைத் தாழ்ந்தவர்!
பூச்சி போன்ற மானிடர்
எவ்வளவு குறைந்தவர்! | https://bible.catholicgallery.org/tamil/etb-job-25 |
461 | யோபு | யோபு அதிகாரம் – 26 – திருவிவிலியம் | ‘பில்தாத்தின் சொற்கள் வீணே’
1 அதற்கு யோபு கூறிய பதில்:
2 என்போன்ற வலிமையற்றவர்க்கு
எத்துணைப் துணைபுரிந்தீர்!
ஆற்றலற்ற தோளுக்கு
எவ்வளவு துணைநின்றீர்!
3 என் போன்ற அறிவற்றவர்க்கு
எவ்வளவு அறிவுரை கூறினீர்!
நன்னெறிகளை நிறையக் காட்டீனீர்!
4 எவர் துணைகொண்டு
இயம்பினீர் இம்மொழிகளை?
எவர்தம் ஏவுதல்
உம்மிடமிருந்து வெளிப்பட்டது?
5 கீழ்உலகின் ஆவிகள் நடுங்குகின்றன;
நீர்த் திரள்களும் அவற்றில் வாழ்வனவும்
அஞ்சுகின்றன.
6 பாதாளம் கடவுள்முன் திறந்து கிடக்கிறது;
படுகுழி அவர்முன் மூடப்படவில்லை.
7 வெற்றிடத்தில் வடபுறத்தை அவர் விரித்தார்;
காற்றிடையே உலகைத் தொங்கவிட்டார்.
8 நீரினை மேகத்துள் பொதித்துள்ளார்;
அதன் நிறைவால் முகிலும் கிழிவதில்லை.
9 தம் அரியணையின் முகத்தை மூடுகின்றார்;
முகிலை அதன்மேல் பரப்புகின்றார்.
10 நீர்ப்பரப்பின் மீது வட்டம் வரைந்து,
இருளுக்கும் ஒளிக்குமிடையில்
எல்லை அமைத்தார்.
11 விண்ணின் தூண்கள் அதிர்கின்றன;
அவர் அதட்டலில் அதிர்ச்சியடைகின்றன.
12 ஆழியைத் தம் ஆற்றலால் அடக்கினார்;
இராகாபை அழித்தார் அறிவுக்கூர்மையால்.
13 தம் மூச்சால் வான்வெளியை ஒளிர்வித்தார்;
தம் கையால் விரைந்தோடும் பாம்பை
ஊடுருவக் குத்தினார்.
14 ஓ! இவையாவும்
அவர்தம் செயல்களின் விளிம்புகளே!
எத்துணை மென்குரல் அவற்றில் கேட்கின்றது.
அவர்தம் வல்லமையின் இடிமுழக்கத்தை அறிய
யாரால் இயலும்? | https://bible.catholicgallery.org/tamil/etb-job-26 |
462 | யோபு | யோபு அதிகாரம் – 27 – திருவிவிலியம் | கடவுளின் ஆற்றலும் யோபின் மாசின்மையும்
1 யோபு தமது உரையைத்
தொடர்ந்து கூறியது:
2 என்றுமுள்ள இறைவன்மேல் ஆணை!
அவர் எனக்கு உரிமை வழங்க மறுத்தார்;
எல்லாம் வல்லவர் எனக்கு
வாழ்வைக் கசப்பாக்கினார்.
3 என் உடலில் உயிர் இருக்கும்வரை,
என் மூக்கில் கடவுளின் மூச்சு இருக்கும்வரை,
4 என் உதடுகள் வஞ்சகம் உரையா;
என் நாவும் பொய்யைப் புகலாது.
5 நீங்கள் சொல்வது சரியென
ஒருகாலும் ஒப்புக்கொள்ள மாட்டேன்.
சாகும்வரையில்
என்வாய்மையைக் கைவிடவும் மாட்டேன்.
6 என் நேர்மையை நான் பற்றிக் கொண்டேன்;
விடவே மாட்டேன்; என் வாழ்நாளில்
எதைக் குறித்தும் என் உள்ளம் உறுத்தவில்லை.
7 என் பகைவர் தீயோராக எண்ணப்படட்டும்;
என் எதிரிகள்
நேர்மையற்றோராகக் கருதப்படட்டும்.
8 கடவுள் இறைப்பற்றில்லாதோரை அழித்து,
அவர்களின் உயிரைப் பறிக்கும்போது,
அவர்களுக்கு என்ன நம்பிக்கை?
9 அவர்கள்மேல் கேடுவிழும்போது
இறைவன் அவர்களின் கூக்குரலைக் கேட்பாரா?
10 எல்லாம் வல்லவர் தரும் மகிழ்ச்சியை
அவர்கள் நாடுவார்களா?
கடவுளைக் காலமெல்லாம் அழைப்பார்களா?
11 இறைவனின் கைத்திறனை
நான் உங்களுக்குக் கற்பிப்பேன்;
எல்லாம் வல்லவரின் திட்டங்களை
மறைக்கமாட்டேன்.
12 இதோ! நீங்கள் யாவருமே
இதைக் கண்டிருக்கின்றீர்கள்;
பின், ஏன் வறட்டு வாதம் பேசுகின்றீர்கள்?
13 இதுவே கொடிய மனிதர்
இறைவனிடமிருந்து பெறும் பங்கு;
பொல்லாதவர்
எல்லாம் வல்லவரிடம் பெறும் சொத்து.
14 அவர்களின் பிள்ளைகள் பெருகினும்
வாளால் மடிவர்; அவர்களின் வழிமரபினர்
உண்டு நிறைவடையார்.
15 அவர்களின் எஞ்சியோர் நோயால் மடிவர்;
அவர்களின் கைம்பெண்கள் புலம்ப மாட்டார்.
16 மணல்போல் அவர்கள் வெள்ளியைக் குவிப்பர்;
அடுக்கடுக்காய் ஆடைகளைச் சேர்ப்பர்.
17 ஆனால் நேர்மையாளர் ஆடைகளை அணிவர்;
மாசற்றவர் வெள்ளியைப் பங்கிடுவர்.
18 சிலந்தி கூடு கட்டுவதுபோலும்,
காவற்காரன் குடில் போடுவதுபோலும்
அவர்கள் வீடு கட்டுகின்றனர்.
19 படுக்கைக்குப் போகின்றனர் பணக்காரராய்;
ஆனால் இனி அவ்வாறு இராது;
கண் திறந்து பார்க்கின்றனர்;
செல்வம் காணாமற் போயிற்று.
20 திகில் வெள்ளம்போல் அவர்களை அமிழ்த்தும்;
சுழற்காற்று இரவில்
அவர்களைத் தூக்கிச் செல்லும்.
21 கீழைக் காற்று
அவர்களை அடித்துச் செல்லும்;
அவர்களின் இடத்திலிருந்து
அவர்களைப் பெயர்த்துச் செல்லும்;
22 ஈவு இரக்கமின்றி அவர்களை விரட்டும்;
அதன் பிடியிலிருந்து தலைதெறிக்க ஓடுவர்.
23 அவர்களைப் பார்த்து
அது கைகொட்டி நகைக்கும்;
அதன் இடத்திலிருந்து அவர்கள்மேல் சீறிவிழும். | https://bible.catholicgallery.org/tamil/etb-job-27 |
463 | யோபு | யோபு அதிகாரம் – 28 – திருவிவிலியம் | ‘ஞானத்தின் மேன்மை’
1 வெள்ளிக்கு விளைநிலம் உண்டு;
பொன்னுக்குப் புடமிடும் இடமுண்டு.
2 மண்ணிலிருந்து இரும்பு எடுக்கப்படுகின்றது;
கல்லிலிருந்து செம்பு உருக்கப்படுகின்றது.
3 மனிதர் இருளுக்கு இறுதி கண்டு,
எட்டின மட்டும் தோண்டி,
இருட்டிலும் சாவின் இருளிலும்
கனிமப் பொருளைத் தேடுகின்றனர்.
4 மக்கள் குடியிருப்புக்குத் தொலையில்
சுரங்கத்தைத் தோண்டுவர்;
வழிநடப்போரால் அவர்கள் மறக்கப்படுவர்;
மனிதரிடமிருந்து கீழே இறங்கி
ஊசலாடி வேலை செய்வர்.
5 மேலே நிலத்தில் உணவு விளைகின்றது;
கீழே அது நெருப்புக் குழம்பாய் மாறுகின்றது.
6 நீலமணிகள் அதன் கற்களில் கிட்டும்;
பொன்துகளும் அதில் கிடைக்கும்.
7 அதற்குச் செல்லும் பாதையை,
ஊன் உண்ணும் பறவையும் அறியாது;
கழுகின் கண்களும் அதைக் கண்டதில்லை.
8 வீறுகொண்ட விலங்குகள்
அதன் மேல் சென்றதில்லை;
சிங்கமும் அவ்வழி நடந்து கடந்ததில்லை.
9 கடின பாறையிலும் அவர்கள் கைவைப்பர்;
மலைகளின் அடித்தளத்தையே
பெயர்த்துப் புரட்டிடுவர்.
10 பாறைகள் நடுவே
சுரங்க வழிகளை வெட்டுகின்றனர்;
விலையுயர் பொருளையே
அவர்களது கண் தேடும்.
11 ஒழுகும் ஊற்றுகளைத்
தடுத்து நிறுத்துகின்றனர்;
மறைவாய் இருப்பதை
ஒளிக்குக் கொணர்கின்றனர்.
12 ஆனால், ஞானம்
எங்கே கண்டெடுக்கப்படும்?
அறிவின் உறைவிடம் எங்கேயுள்ளது?
13 மனிதர் அதன் மதிப்பை உணரார்;
வாழ்வோர் உலகிலும் அது காணப்படாது.
14 ‘என்னுள் இல்லை’ என உரைக்கும் ஆழ்கடல்;
‘என்னிடம் இல்லை’ என இயம்பும் பெருங்கடல்.
15 தங்கத்தைக் கொடுத்து
அதைப் பெறமுடியாது; வெள்ளியால்
அதன் விலையை நிறுக்க இயலாது.
16 ஓபீர்த் தங்கமும் கோமேதகமும்
அரிய நீலமணியும் அதற்கு மதிப்பாகா!
17 பொன்னும் பளிங்கும் அதற்கு நிகராகா;
பசும்பொன் கலன்களும் பண்டமாற்றாகா.
18 மணியும் பவளமும் அதற்கு இணையில்லை;
மதிப்பினில் முத்தினை ஞானம் விஞ்சும்.
19 எத்தியோப்பிய புட்பராகம்
அதற்கு இணையல்ல;
பத்தரை மாற்றுத் தங்கமும் அதற்கு நிகரல்ல.
20 அவ்வாறாயின், எங்கிருந்து வருகிறது ஞானம்?
எங்குள்ளது அறிவின் உறைவிடம்?
21 வாழ்வோர் அனைவர்தம் கண்களுக்கும்
ஒளிந்துள்ளது;
வானத்துப் பறவைகளுக்கும்
மறைவாய் உள்ளது.
22 படுகுழியும் சாவும் பகர்கின்றன;
அதைப்பற்றிய பேச்சு காதில் விழுந்தது;
23 அதன் வழியைத் தெரிந்தவர் கடவுள்;
அதன் இடத்தை அறிந்தவரும் அவரே!
24 ஏனெனில், வையகத்தின் எல்லை வரை
அவர் காண்கின்றார்;
வானத்தின்கீழ் உள்ளவற்றைப் பார்க்கின்றார்.
25 காற்றுக்கு எடையைக் கடவுள் கணித்தபோது,
நீரினை அளவையால் அளந்தபோது,
26 மழைக்கு அவர் கட்டளை இட்டபொழுது,
இடி மின்னலுக்கு வழியை வகுத்த பொழுது,
27 அவர் ஞானத்தைக் கண்டார்;
அதைப்பற்றி அறிவித்தார்;
அதை நிலைநாட்டினார்;
இன்னும் அதை ஆய்ந்தறிந்தார்.
28 அவர் மானிடர்க்குக் கூறினார்;
ஆண்டவர்க்கு அஞ்சுங்கள்; அதுவே ஞானம்;
தீமையை விட்டு விலகுங்கள்; அதுவே அறிவு.
28:28 திபா 111:10; நீமொ 1:7; 9:10. | https://bible.catholicgallery.org/tamil/etb-job-28 |
464 | யோபு | யோபு அதிகாரம் – 29 – திருவிவிலியம் | யோபின் முன்னைய இன்பநிலை
1 யோபு இன்னும் தொடர்ந்து
பேசிய உரை:
2 காண்பேனா முன்னைய திங்கள்களை;
கடவுள் என்னைக் கண்காணித்த நாள்களை!
3 அப்போது அவர் விளக்கு
என் தலைமீது ஒளிவீசிற்று;
அவரது ஒளியால் இருளில் நான் நடந்தேன்.
4 அப்போது என் இளமையின் நாள்களில்
நான் இருந்தேன்; கடவுளின் கருணை
என் குடிசை மீது இருந்தது.
5 அன்று வல்லவர் என்னோடு இருந்தார்;
என் மக்கள் என்னைச் சூழ்ந்திருந்தனர்.
6 அப்போது என் காலடிகள் நெய்யில் குளித்தன;
பாறையிலிருந்து எனக்கு எண்ணெய் ஆறாய்ப் பாய்ந்தது.
7 நகர வாயிலுக்கு நான் செல்கையிலும்,
பொது மன்றத்தில்
என் இருக்கையில் அமர்கையிலும்,
8 என்னைக் கண்டதும்
இளைஞர் ஒதுங்கிக்கொள்வர்;
முதிர்ந்த வயதினர் எழுந்து நிற்பர்.
9 உயர்குடி மக்கள் தம் பேச்சை நிறுத்துவர்;
கைகட்டி, வாய்பொத்தி வாளாவிருப்பர்.
10 தலைவர்தம் குரல் அடங்கிப்போம்;
அவர் நா அண்ணத்தோடு ஒட்டிக்கொள்ளும்.
11 என்னைக் கேட்ட செவி,
என்னை வாழ்த்தியது;
என்னைப் பார்த்த கண்
எனக்குச் சான்று பகர்ந்தது.
12 ஏனெனில், கதறிய ஏழைகளை
நான் காப்பாற்றினேன்;
தந்தை இல்லார்க்கு உதவினேன்.
13 அழிய இருந்தோர் எனக்கு ஆசி வழங்கினர்;
கைம்பெண்டிர்தம் உள்ளத்தைக்
களிப்பால் பாடச் செய்தேன்.
14 அறத்தை அணிந்தேன்;
அது என் ஆடையாயிற்று.
நீதி எனக்கு மேலாடையும் பாகையும் ஆயிற்று.
15 பார்வையற்றோர்க்குக் கண் ஆனேன்;
காலூனமுற்றோர்க்குக் கால் ஆனேன்.
16 ஏழைகளுக்கு நான் தந்தையாக இருந்தேன்;
அறிமுகமற்றோரின் வழக்குகளுக்காக
வாதிட்டேன்.
17 கொடியவரின் பற்களை உடைத்தேன்;
அவரின் பற்களுக்கு இரையானவரை
விடுவித்தேன்.
18 நான் எண்ணினேன்;
‘மணல் மணியைப்போல்
நிறைந்த நாள் உடையவனாய்
என் இல்லத்தில் சாவேன்.
19 என் வேர் நீர்வரை ஓடிப் பரவும்;
இரவெல்லாம் என் கிளையில் பனி இறங்கும்.
20 என் புகழ் என்றும் ஓங்கும்;
என் வில் வளைதிறன் கொண்டது.’
21 எனக்குச் செவிகொடுக்க
மக்கள் காத்திருந்தனர்;
என் அறிவுரைக்காக அமைதி காத்தனர்.
22 என் சொல்லுக்கு மறுசொல்
அவர்கள் கூறவில்லை;
என் மொழிகள் அவர்களில் தங்கின.
23 மழைக்கென அவர்கள்
எனக்காய்க் காத்திருந்தனர்;
மாரிக்கெனத் தங்கள் வாயைத் திறந்தனர்.
24 நம்பிக்கை இழந்தோரை
என் புன்முறவல் தேற்றியது;
என் முகப்பொலிவு உரமூட்டியது.
25 நானே அவர்களுக்கு வழியைக் காட்டினேன்;
தலைவனாய்த் திகழ்ந்தேன்;
வீரர் நடுவே வேந்தனைப்போல் வாழ்ந்தேன்;
அழுகின்றவர்க்கு
ஆறுதல் அளிப்பவன் போல் இருந்தேன். | https://bible.catholicgallery.org/tamil/etb-job-29 |
465 | யோபு | யோபு அதிகாரம் – 30 – திருவிவிலியம் | யோபின் தற்போதைய துன்பநிலை
1 ஆனால், இன்று என்னை,
என்னைவிட இளையோர்
ஏளனம் செய்கின்றனர்;
அவர்களின் தந்தையரை என் மந்தையின்
நாய்களோடு இருத்தவும் உடன் பட்டிரேன்.
2 எனக்கு அவர்களின் கைவன்மையால்
என்ன பயன்? அவர்கள்தாம்
ஆற்றல் இழந்து போயினரே?
3 அவர்கள் பட்டினியாலும் பசியாலும்
மெலிந்தனர்; வறண்டு, இருண்டு
அழிந்த பாலைக்கு ஓடினர்.
4 அவர்கள் உப்புக்கீரையைப்
புதரிடையே பறித்தார்கள்;
காட்டுப் பூண்டின் வேரே அவர்களின் உணவு.
5 மக்கள் அவர்களைத்
தம்மிடமிருந்து விரட்டினர்;
கள்வரைப் பிடிக்கத் கத்துவதுபோல்
அவர்களுக்குச் செய்தனர்.
6 ஓடைகளின் உடைப்புகளிலும்
நிலவெடிப்புகளிலும் பாறைப்பிளவுகளிலும்
அவர்கள் வாழ்ந்தனர்.
7 புதர்களின் நடுவில் அவர்கள் கத்துவர்;
முட்செடியின் அடியில் முடங்கிக் கிடப்பர்.
8 மடையனின் மக்கள் பெயரில்லாப் பிள்ளைகள்;
அவர்கள் நாட்டிலிருந்து விரட்டப்பட்டனர்.
9 இப்பொழுதோ, அவர்களுக்கு நான்
வசைப்பாட்டு ஆனேன்;
அவர்களுக்கு நான் பழமொழியானேன்.
10 என்னை அவர்கள் அருவருக்கின்றனர்;
என்னைவிட்டு விலகிப் போகின்றனர்;
என்முன் காறித் துப்பவும்
அவர்கள் தயங்கவில்லை.
11 என் வில்லின் நாணைக் கடவுள் தளர்த்தி,
என்னைத் தாழ்த்தியதால்,
என்முன் அவர்கள் கடிவாளம் அற்றவராயினர்.
12 என் வலப்பக்கம் கும்பல் கூடுகின்றது;
என்னை நெட்டித் தள்ளுகின்றது;
அழிவுக்கான வழிகளை
எனக்கெதிராய் வகுத்தது.
13 எனக்கு அவர்கள் குழி தோண்டுகின்றனர்;
என் அழிவை விரைவுபடுத்துகின்றனர்;
அவர்களைத் தடுப்பார் யாருமில்லை.
14 அகன்ற உடைப்பில் நுழைவது போலப்
பாய்கின்றனர்; இடிபாடுகளுக்கு இடையில்
அலைபோல் வருகின்றனர்.
15 பெருந்திகில் மீண்டும் என்னைப் பிடித்தது;
என் பெருமை காற்றோடு போயிற்று;
முகிலென மறைந்தது என் சொத்து.
16 இப்பொழுதோ, என் உயிர்
போய்க்கொண்டே இருக்கின்றது;
இன்னலின் நாள்கள் என்னை இறுக்குகின்றன.
17 இரவு என் எலும்புகளை உருக்குகின்றது;
என்னை வாட்டும் வேதனை ஓய்வதில்லை.
18 நோயின் கொடுமை என்னை உருக்குலைத்தது;
கழுத்துப்பட்டை போல்
என்னை ஒட்டிக்கொண்டது.
19 கடவுள் சேற்றில் என்னை அமிழ்த்தி விட்டார்;
புழுதியும் சாம்பலும்போல் ஆனேன்.
20 நான் உம்மை நோக்கி மன்றாடினேன்.
ஆனால், நீர் எனக்குப் பதில் அளிக்கவில்லை,
நான் உம்முன் நின்றேன்;
நீர் என்னைக் கண்ணோக்கவில்லை.
21 கொடுமையுள்ளவராய் என்மட்டில் மாறினீர்;
உம் கை வல்லமையால்
என்னைத் துன்புறுத்துகின்றீர்;
22 என்னைத் தூக்கிக் காற்றில் பறக்கவிட்டீர்;
புயலின் சீற்றத்தால் என்னை அலைக்கழித்தீர்.
23 ஏனெனில், சாவுக்கும்,
வாழ்வோர் அனைவரும் கூடுமிடத்திற்கும்
என்னைக் கொணர்வீர் என அறிவேன்.
24 இருப்பினும், அழிவின் நடுவில்
ஒருவர் உதவிக்கு அலறும்பொழுது,
அவல நிலையில் அவர் இருக்கும்பொழுது,
எவர் அவருக்கு எதிராகக்
கையை உயர்த்துவார்?
25 அவதிபட்டவருக்காக நான் அழவில்லையா?
ஏழைக்காக என் உள்ளம் இளகவில்லையா?
26 நன்மையை எதிர்பார்த்தேன்; தீமை வந்தது.
ஒளிக்குக் காத்திருந்தேன்; இருளே வந்தது.
27 என் குலை நடுங்குகிறது, அடங்கவில்லை;
இன்னலின் நாள்கள்
எனை எதிர்கொண்டு வருகின்றன.
28 கதிரோன் இன்றியும்
நான் கருகித் திரிகிறேன்; எழுகிறேன்;
மன்றத்தில் அழுகிறேன் உதவிக்கு.
29 குள்ள நரிக்கு உடன்பிறப்பானேன்;
நெருப்புக் கோழிக்குத் தோழனும் ஆனேன்.
30 என் தோல் கருகி உரிகின்றது;
என் எலும்புகள் வெப்பத்தால் தீய்கின்றன.
31 என் யாழின் ஓசை புலம்பலாயிற்று;
என் குழலின் ஒலி அழுகையாயிற்று. | https://bible.catholicgallery.org/tamil/etb-job-30 |
466 | யோபு | யோபு அதிகாரம் – 31 – திருவிவிலியம் | தாம் குற்றமற்றவர் என்பதை யோபு விளக்குதல்
1 கண்களோடு நான் உடன்படிக்கை
செய்துகொண்டேன்; பின்பு,
கன்னி ஒருத்தியை எப்படி நோக்குவேன்?
2 வானின்று கடவுள் வழங்கும் பங்கென்ன?
விசும்பினின்று எல்லாம் வல்லவர்
விதிக்கும் உரிமையென்ன?
3 தீயோர்க்கு வருவது கேடு அல்லவா?
கொடியோர்க்கு வருவது அழிவு அல்லவா?
4 என் வழிகளை அவர் பார்ப்பதில்லையா?
என் காலடிகளை அவர்
கணக்கிடுவதில்லையா?
5 பொய்ம்மையை நோக்கி நான் போயிருந்தால்,
வஞ்சகத்தை நோக்கி
என் காலடி விரைந்திருந்தால்,
6 சீர்தூக்கும் கோலில் எனை அவர்
நிறுக்கட்டும்; இவ்வாறு கடவுள்
என் நேர்மையை அறியட்டும்.
7 நெறிதவறி என் காலடி போயிருந்தால்,
கண்ணில் பட்டதையெல்லாம்
என் உள்ளம் நாடியிருந்தால்,
என் கைகளில் கறையேதும் படிந்திருந்தால்,
8 நான் விதைக்க,
இன்னொருவர் அதனை உண்ணட்டும்;
எனக்கென வளர்பவை
வேரொடு பிடுங்கப்படட்டும்.
9 பெண்ணில் என் மனம்
மயங்கியிருந்திருந்தால்;
பிறரின் கதவருகில் காத்துக்கிடந்திருந்தால்,
10 என் மனைவி
மற்றொருவனுக்கு மாவரைக்கட்டும்;
மற்றவர்கள் அவளோடு படுக்கட்டும்.
11 ஏனெனில், அது தீச்செயல்;
நடுவரின் தண்டனைக்குரிய பாதகம்.
12 ஏனெனில் படுகுழிவரை சுட்டெரிக்கும்
நெருப்பு அது; வருவாய் அனைத்தையும்
அடியோடு அழிக்கும் தீ அது.
13 என் வேலைக்காரனோ, வேலைக்காரியோ
எனக்கெதிராய் வழக்குக் கொணரும்போது
நான் அதைத் தட்டிக் கழித்திருந்தால்,
14 இறைவன் எனக்கெதிராய் எழும்போது
நான் என்ன செய்வேன்?
அவர் என்னிடம் கணக்குக் கேட்டால்
நான் என்ன பதிலளிப்பேன்?
15 கருப்பையில் என்னை உருவாக்கியவர்தாமே
அவனையும் உருவாக்கினார்.
கருப்பையில் எங்களுக்கு வடிவளித்தவர்
அவர் ஒருவரே அல்லவோ?
16 ஏழையர் விரும்பியதை ஈய
இணங்காது இருந்தேனா?
கைப்பெண்டிரின் கண்கள்
பூத்துப்போகச் செய்தேனா?
17 என் உணவை நானே தனித்து உண்டேனா?
தாய் தந்தையற்றோர்
அதில் உண்ணாமல் போயினரா?
18 ஏனெனில், குழந்தைப் பருவமுதல்
அவர் என்னைத் தந்தைபோல் வளர்த்தார்
; என் தாய்வயிற்றிலிருந்து என்னை வழி நடத்தினார்.
19 ஆடையில்லாமல் எவராவது அழிவதையோ
போர்வையின்றி ஏழை எவராவது இருந்ததையோ
பார்த்துக்கொண்டு இருந்தேனா?
20 என் ஆட்டுமுடிக் கம்பளியினால்
குளிர்போக்கப்பட்டு, அவர்களின் உடல்
என்னைப் பாராட்டவில்லையா?
21 எனக்கு மன்றத்தில் செல்வாக்கு உண்டு
எனக்கண்டு, தாய் தந்தையற்றோர்க்கு
எதிராகக் கைஓங்கினேனா?
22 அப்படியிருந்திருந்தால், என் தோள்மூட்டு
தோளிலிருந்து நெகிழ்வதாக!
முழங்கை மூட்டு முறிந்து கழல்வதாக!
23 ஏனெனில், இறைவன் அனுப்பும் இடர்
எனக்குப் பேரச்சம்; அவர் மாட்சிக்குமுன்
என்னால் எதுவும் இயலாது.
24 தங்கத்தில் நான் நம்பிக்கை வைத்திருந்தேனாகில்,
‘பசும்பொன் என்உறுதுணை ‘ என்று பகர்ந்திருப்பேனாகில்,
25 செல்வப் பெருக்கினால், அல்லது
கை நிறையப் பெற்றதால்
. நான் மகிழ்திருப்பேனாகில்,
26 சுடர்விடும் கதிரவனையும்
ஒளியில் தவழும் திங்களையும் நான் கண்டு,
27 என் உள்ளம் மறைவாக மயங்கியிருந்தால்,
அல்லது, என் வாயில் கை வைத்து
முத்தமிட்டிருந்தால்,
28 அதுவும் நடுவர் தீர்ப்புக்குரிய.
பழியாய் இருக்கும்; ஏனெனில்,
அது உன்னத இறைவனை நான் மறுப்பதாகும்.
29 என்னை வெறுப்போரின் அழிவில்
நான் மகிழ்ந்ததுண்டா? அல்லது
அவர்கள் இடர்படும் போது இன்புற்றதுண்டா?
30 சாகும்படி அவர்களைச் சபித்து,
என் வாய் பாவம் செய்ய நான் விடவில்லை.
31 ‘இறைச்சி உண்டு நிறைவு அடையாதவர்
யாரேனும் உண்டோ?’ என்று
என் வீட்டார் வினவாமல் இருந்ததுண்டா?
32 வீதியில் வேற்றார் உறங்கியதில்லை;
ஏனெனில், வழிப்போக்கருக்கு
என் வாயிலைத் திறந்து விட்டேன்.
33 என் தீச்செயலை உள்ளத்தில் புதைத்து,
என் குற்றங்களை மானிடர்போல்
மறைத்ததுண்டா?
34 பெருங்கும்பலைக் கண்டு நடுங்கி,
உறவினர் இகழ்ச்சிக்கு அஞ்சி,
நான் வாளாவிருந்ததுண்டா?
கதவுக்கு வெளியே வராதிருந்தது உண்டா?
35 என் வழக்கைக் கேட்க ஒருவர் இருந்தால்
எத்துணை நன்று! இதோ!
என் கையொப்பம்; எல்லாம் வல்லவர்
எனக்குப் பதில் அளிக்கட்டும்!
என் எதிராளி வழக்கை எழுதட்டும்.
36 உண்மையாகவே அதை
என் தோள்மேல் தூக்கிச்செல்வேன்!
எனக்கு மணி முடியாகச் சூட்டிக்கொள்வேன்.
37 என் நடத்தை முழுவதையுமே
அவருக்கு எடுத்துரைப்பேன்;
இளவரசனைப்போல்
அவரை அணுகிச் செல்வேன்.
38 எனது நிலம் எனக்கெதிராயக் கதறினால்,
அதன் படைச்சால்கள் ஒன்றாக அழுதால்,
39 விலைகொடாமல்
அதன் விளைச்சலை உண்டிருந்தால்,
அதன் உரிமையாளரின்
உயிரைப் போக்கியிருந்தால்,
40 கோதுமைக்குப் பதில் முட்களும்,
வாற்கோதுமைக்கு பதில்
களையும் வளரட்டும்.
யோபின் மொழிகள் முடிவுற்றன. | https://bible.catholicgallery.org/tamil/etb-job-31 |
467 | யோபு | யோபு அதிகாரம் – 32 – திருவிவிலியம் | எலிகூவின் முதல் சொற்பொழிவு
(32:1-37:24)
1 யோபு தம்மை நேர்மையாளராகக் கருதியதால் இந்த மூன்று மனிதர்களும் அவருடன் சொல்லாடுவதை நிறுத்திவிட்டார்கள்.
2 அப்பொழுது பூசியனும், இராமின் வீட்டைச் சார்ந்த பாரக்கேலின் புதல்வனுமான எலிகூ சீற்றம் அடைந்தான்.
3 யோபு கடவுளைவிடத் தம்மை நேர்மையாளராய்க் கருதியதால் அவர்மீது சினம் கொண்டான். மூன்று நண்பர்கள்மீதும் அவன் கோபப்பட்டான். ஏனெனில் யோபின் மீது அவர்கள் குற்றம் சாட்டினார்களேயன்றி, அதற்கான ஆதாரத்தை எடுத்துக் கூறவில்லை.
4 எலிகூ யோபிடம் பேச இதுவரை காத்திருந்தான். ஏனெனில், அவனை விட அவர்கள் வயதில் முதிர்ந்தவர்கள்.
5 அந்த மூவரும் தகுந்த மறுமொழி தரவில்லை எனக் கண்ட எலிகூ இன்னும் ஆத்திரம் அடைந்தான்.
6 ஆகவே பூசியனும் பாரக்கேலின் புதல்வனுமான
எலிகூ பேசத் தொடங்கினான்;
நான் வயதில் சிறியவன்;
நீங்களோ பெரியவர். ஆகவே,
என் கருத்தை உங்களிடம் உரைக்கத்
தயங்கினேன்; அஞ்சினேன்.
7 நான் நினைத்தேன்; ‘முதுமை பேசட்டும்;
வயதானோர் ஞானத்தை உணர்த்தட்டும்.’
8 ஆனால், உண்மையில்
எல்லாம் வல்லவரின் மூச்சே,
மனிதரில் இருக்கும் அந்த ஆவியே
உய்த்துணர்வை அளிக்கின்றது.
9 வயதானோர் எல்லாம் ஞானிகள் இல்லை;
முதியோர் நீதியை அறிந்தவரும் இல்லை.
10 ஆகையால் நான் சொல்கின்றேன்;
எனக்குச் செவி கொடுத்தருள்க!
நானும் என் கருத்தைச் சொல்கின்றேன்.
11 இதோ! உம் சொற்களுக்காகக்
காத்திருந்தேன்,
நீங்கள் ஆய்ந்து கூறிய வார்த்தைகளை,
அறிவார்ந்த கூற்றை நான் கேட்டேன்.
12 உங்களைக் கவனித்துக் கேட்டேன்;
உங்களுள் எவரும் யோபின் கூற்று
தவறென எண்பிக்கவில்லை.
அவர் சொற்களுக்கு தக்க
பதில் அளிக்கவுமில்லை.
13 எச்சரிக்கை! ‘நாங்கள் ஞானத்தைக்
கண்டு கொண்டோம்;
இறைவனே அவர்மீது வெற்றி கொள்ளட்டும்;
மனிதரால் முடியாது’ என்று சொல்லாதீர்கள்!
14 என்னை நோக்கி யோபு
தம்மொழிகளைக் கூறவில்லை;
உங்கள் சொற்களில் அவருக்கு நான் பதிலளிக்கமாட்டேன்.
15 அவர்கள் மலைத்துப் போயினர்;
மீண்டும் மறுமொழி உரையார்;
அவர்கள் ஒரு வார்த்தையும்
சொல்வதற்கில்லை.
16 அவர்கள் பேசவில்லை;
நின்று கொண்டிருந்தாலும்
பதில் சொல்லவில்லை;
நான் இன்னும் காத்திருக்க வேண்டுமா?
17 நானும் எனது பதிலைக் கூறுவேன்;
நானும் எனது கருத்தை நவில்வேன்.
18 ஏனெனில், சொல்லவேண்டியவை
என்னிடம் நிறையவுள்ளன;
என் உள்ளத்தில் ஆவி என்னை உந்துகின்றது.
19 இதோ! என் நெஞ்சம்
அடைபட்ட திராட்சை இரசம் போல் உள்ளது;
வெடிக்கும் புது இரசத் துருத்தி போல் உள்ளது.
20 நான் பேசுவேன்; என் நெஞ்சை
ஆற்றிக் கொள்வேன்; வாய்திறந்து
நான் பதில் அளிக்க வேண்டும்.
21 நான் யாரிடமும்
ஒருதலைச் சார்பாய் இருக்கமாட்டேன்;
நான் யாரையும் பொய்யாகப் புகழ மாட்டேன்.
22 ஏனெனில், பசப்பிப் புகழ எனக்குத் தெரியாது;
இல்லையேல், படைத்தவரே
விரைவில் என்னை அழித்திடுவார். | https://bible.catholicgallery.org/tamil/etb-job-32 |
468 | யோபு | யோபு அதிகாரம் – 33 – திருவிவிலியம் | யோபின் மட்டுமீறிய நம்பிக்கை
1 ஆனால் இப்பொழுது,
யோபே! எனக்குச் செவிகொடும்;
என் எல்லா வார்த்தைகளையும் கேளும்.
2 இதோ! நான் வாய் திறந்துவிட்டேன்;
என் நாவினால் பேசுகிறேன்.
3 என் உள்ளத்தின் நேர்மையை
என் சொற்கள் விளம்பும்;
அறிந்ததை உண்மையாய் இயம்பும் என் உதடுகள்.
4 இறைவனின் ஆவி என்னைப் படைத்தது;
எல்லாம் வல்லவரின் மூச்சு
என்னை வாழ்விக்கின்றது.
5 உம்மால் முடிந்தால் எனக்குப் பதில் சொல்லும்;
என்னோடு வழக்காட எழுந்து நில்லும்.
6 இதோ! இறைவன் முன்னிலையில்
நானும் நீவிரும் ஒன்றே;
உம்மைப்போல் நானும்
களிமண்ணிலிருந்து செய்யப்பட்டவனே!
7 இதோ! நீர் எனக்கு
அஞ்சி நடுங்க வேண்டியதில்லை;
நான் வலுவாக உம்மைத் தாக்கமாட்டேன்.
8 உண்மையாகவே என் காதுகளில் விழ
நீர் கூறினீர்; நானும்
அம்மொழிகளின் ஒலியைக் கேட்டேன்;
9 ‘குற்றமில்லாத் தூயவன் நான்;
மாசற்ற வெண் மனத்தான் யான்.
10 இதோ! அவர் என்னில்
குற்றம்காணப் பார்க்கின்றார்;
அவர் என்னை எதிரியாக எண்ணுகின்றார்.
11 மரத் துளையில் என் கால்களை மாட்டுகின்றார்;
என் காலடிகளையெல்லாம் கவனிக்கின்றார்’.
12 இதோ! இது சரியென்று;
பதில் உமக்குக் கூறுகிறேன்;
கடவுள் மனிதரைவிடப் பெரியவர்.
13 ‘என் சொல் எதற்கும்
அவர் பதில் கூறுவதில்லை’ என
ஏன் அவரோடு வழக்காடுகின்றீர்?
14 ஏனெனில், இறைவன் முதலில்
ஒருவகையில் இயம்புகின்றார்;
இரண்டாவது வேறுவகையில் விளம்புகின்றார்;
அதை யாரும் உணர்வதில்லை.
15 கனவில், இரவின் காட்சியில்
ஆழ்துயில் மனிதரை ஆட்கொள்கையில்;
படுக்கையில் அவர்கள் அயர்ந்து உறங்குகையில்,
16 அவர் மனிதரின் காதைத் திறக்கின்றார்;
எச்சரிக்கை மூலம் அச்சுறுத்துகின்றார்.
17 இவ்வாறு மாந்தரிடமிருந்து
தீவினையை நீக்குகின்றார்;
மனிதரிடமிருந்து
ஆணவத்தை அகற்றுகின்றார்.
18 அவர்களின் ஆன்மாவைக் குழியிலிருந்தும்,
உயிரை வாளின் அழிவிலிருந்தும்
காக்கின்றார்.
19 படுக்கையில் படும் வேதனையினாலும்
எலும்பில் வரும் தீரா வலியினாலும்
அவர்கள் கண்டித்துத்
திருத்தப்படுகின்றார்கள்.
20 அப்போது அவர்களின் உயிர் உணவையும்,
அவர்களின் ஆன்மா அறுசுவை
உண்டியையும் அருவருக்கும்.
21 அவர்களின் சதை கரைந்து மறையும்;
காணப்படா அவர்களின் எலும்புகள்
வெளியே தெரியும்.
22 அவர்களின் ஆன்மா குழியினையும்
அவர்களின் உயிர் அழிப்போரையும் அணுகும்.
23 மனிதர் சார்பாக இருந்து,
அவர்களுக்கு நேர்மையானதைக் கற்பிக்கும்
ஓர் ஆயிரத்தவராகிய வானதூதர்
24 அவர்களின் மீது இரங்கி, “குழியில் விழாமல்
இவர்களைக் காப்பாற்றும்;
ஏனெனில், இவர்களுக்கான
மீட்டுத் தொகை என்னிடமுள்ளது;
25 இவர்களின் மேனி
இளைஞனதைப்போல் ஆகட்டும்;
இவர்கள் இளமையின்
நாள்களுக்குத் திரும்பட்டும்”
26 என்று கடவுளிடம் மன்றாடினால்,
அவர் அவர்களை ஏற்றுக் கொள்வார்;
அவர்தம் முகத்தை மகிழ்ச்சியோடு
அவர்கள் காணச் செய்வார்;
அவர்களுக்குத் தம் மீட்பை மீண்டும் அளிப்பார்.
27 அவர்கள் மனிதர் முன்
இவ்வாறு அறிக்கையிடுவர்;
‘நாங்கள் பாவம் செய்தோம்;
நேரியதைக் கோணலாக்கினோம்;
இருப்பினும் அதற்கேற்ப
நாங்கள் தண்டிக்கப்படவில்லை;
28 எங்கள் ஆன்மாவைக்
குழியில் விழாது அவர் காத்தார்;
எங்கள் உயிர் ஒளியைக் காணும்.’
29 இதோ இறைவன் இவற்றையெல்லாம்
மனிதர்க்கு மீண்டும் மீண்டும் செய்கிறார்.
30 இவ்வாறு குழியிலிருந்து
அவர்களின் ஆன்மாவைக் காப்பாற்றுகின்றார்;
வாழ்வோரின் ஒளியை
அவர்கள் காணச் செய்கின்றார்.
31 யோபே! கவனியும்! எனக்குச் செவிகொடும்;
பேசாதிரும்; நான் பேசுவேன்.
32 சொல்வதற்கு இருந்தால்,
எனக்குப் பதில் சொல்லும்; பேசுக!
உம்மை நேர்மையுள்ளவரெனக் காட்டவே
நான் விழைகின்றேன்.
33 இல்லையெனில், நீர் எனக்குச் செவி சாயும்;
பேசாதிரும்; நான் உமக்கு
ஞானத்தைக் கற்பிப்பேன்.
33:11 யோபு 13:27.
33:15 யோபு 4:13. | https://bible.catholicgallery.org/tamil/etb-job-33 |
469 | யோபு | யோபு அதிகாரம் – 34 – திருவிவிலியம் | எலிகூவின் இரண்டாம் சொற்பொழிவு
(32:1- 37:24)
1 எலிகூ தொடர்ந்து கூறினான்:
2 ஞானிகளே!
என் சொற்களைக் கேளுங்கள்;
அறிஞர்களே! எனக்குச் செவிகொடுங்கள்.
3 நாக்கு உணவைச் சுவைத்து அறிவதுபோல,
காது சொற்களைப் பகுத்துணர்கின்றது.
4 நேர்மை எதுவோ அதை நமக்கு
நாமே தேர்ந்துகொள்வோம்;
நல்லது எதுவோ அதை
நமக்குள்ளேயே முடிவு செய்வோம்.
5 ஆனால் யோபு சொல்லியுள்ளார்;
“நான் நேர்மையானவன்; ஆனால்
இறைவன் என் உரிமையைப்
பறித்துக் கொண்டார்,
6 நான் நேர்மையாக இருந்தும்
என்னைப் பொய்யனாக்கினார்;
நான் குற்றமில்லாதிருந்தும்
என் புண் ஆறாததாயிற்று.’
7 யோபைப் போன்று இருக்கும் மனிதர் யார்?
நீர்குடிப்பதுபோல்
அவர் இறைவனை இகழ்கின்றார்;
8 தீங்கு செய்வாரோடு தோழமை கொள்கின்றார்;
கொடியவருடன் கூடிப் பழகுகின்றார்.
9 ஏனெனில், அவர் சொல்லியுள்ளார்;
‘கடவுளுக்கு இனியவராய் நடப்பதானால்
எந்த மனிதருக்கும் எப்பயனுமில்லை.’
10 ஆகையால், அறிந்துணரும்
உள்ளம் உடையவர்களே! செவிகொடுங்கள்!
தீங்கிழைப்பது இறைவனுக்கும்,
தவறு செய்வது எல்லாம் வல்லவருக்கும்
தொலைவாய் இருப்பதாக!
11 ஏனெனில், ஒருவரின் செயலுக்கேற்ப
அவர் கைம்மாறு செய்கின்றார்;
அவரது நடத்தைக்கேற்ப நிகழச்செய்கின்றார்.
12 உண்மையாகவே, கொடுமையை
இறைவன் செய்யமாட்டார்;
நீதியை எல்லாம் வல்லவர் புரட்டமாட்டார்.
13 பூவுலகை அவர் பொறுப்பில் விட்டவர் யார்?
உலகனைத்தையும் அவரிடம்
ஒப்படைத்தவர் யார்?
14 அவர்தம் ஆவியைத்
தம்மிடமே எடுத்துக்கொள்வதாக இருந்தால்,
தம் உயிர் மூச்சை
மீண்டும் பெற்றுக் கொள்வதாய் இருந்தால்,
15 ஊனுடம்பு எல்லாம் ஒருங்கே ஒழியும்;
மனிதர் மீண்டும் மண்ணுக்குத் திரும்புவர்;
16 உமக்கு அறிவிருந்தால் இதைக் கேளும்;
என் சொற்களின் ஒலிக்குச் செவிகொடும்.
17 உண்மையில், நீதியை வெறுப்பவரால்
ஆட்சி செய்ய இயலுமா?
வாய்மையும் வல்லமையும் உடையவரை
நீர் பழிப்பீரோ?
18 அவர் வேந்தனை நோக்கி
“வீணன்” என்றும்
கோமகனைப் பார்த்து ‘கொடியோன்’
என்றும் கூறுவார்.
19 அவர் ஆளுநனை ஒருதலைச்சார்பாய்
நடத்த மாட்டார்; ஏழைகளை விடச்
செல்வரை உயர்வாய்க் கருதவுமாட்டார்;
ஏனெனில், அவர்கள் அனைவரும்
அவர் கைவேலைப்பாடுகள் அல்லவா?
20 நொடிப்பொழுதில் அவர்கள் மடிவர்;
நள்ளிரவில் நடுக்கமுற்று அழிவர்;
ஆற்றல் மிக்காரும்
மனித உதவியின்றி அகற்றப்படுவர்.
21 ஏனெனில், அவரின் விழிகள்
மனிதரின் வழிகள்மேல் உள்ளன;
அவர்களின் அடிச்சுவடுகளை
அவர் காண்கிறார்.
22 கொடுமை புரிவோர்
தங்களை ஒளித்துக்கொள்ள
இருளும் இல்லை; இறப்பின் நிழலும் இல்லை.
23 இறைவன்முன் சென்று கணக்குக் கொடுக்க,
எவருக்கும் அவர் நேரம் குறிக்கவில்லை.
24 வலியோரை நொறுக்குவதற்கு அவர்
ஆய்ந்தறிவு செய்யத்தேவையில்லை,
அன்னார் இடத்தில் பிறரை அமர்த்துவார்.
25 அவர்களின் செயலை அவர் அறிவார்;
ஆதலால் இரவில் அவர்களை வீழ்த்துவார்;
அவர்களும் நொறுக்கப்படுவர்.
26 அவர்கள் கொடுஞ்செயலுக்காக அவர்
மக்கள் கண்முன் அவர்களை வீழ்த்துவார்.
27 ஏனெனில், அவரைப் பின்பற்றாமல்
அவர்கள் விலகினர்;
அவர்தம் நெறியனைத்தையும்
அவர்கள் பொருட்படுத்தவில்லை;
28 ஏழையின் குரல் அவருக்கு எட்டச் செய்தனர்;
அவரும் ஒடுக்கப்பட்டவர் குரலைக் கேட்டார்.
29 அவர் பேசாதிருந்தால்,
யார் அவரைக் குறைகூற முடியும்?
அவர் தம் முகத்தை மறைத்துக் கொண்டால்,
யார்தான் அவரைக் காணமுடியும்?
நாட்டையும் தனி மனிதரையும்
அவரே கண்காணிக்கின்றார்.
30 எனவே, இறைப்பற்றில்லாதவரோ
மக்களைக் கொடுமைப் படுத்துபவரோ
ஆளக்கூடாது.
31 எவராவது இறைவனிடம்
இவ்வாறு கேட்பதுண்டா;
‘நான் தண்டனை பெற்றுக் கொண்டேன்;
இனி நான் தவறு செய்யமாட்டேன்.
32 தெரியாமல் செய்ததை
எனக்குத் தெளிவாக்கும்;
தீங்கு செய்திருந்தாலும்,
இனி அதை நான் செய்யேன்.’
33 நீர் உம் தவற்றை உணர மறுக்கும்போது,
கடவுள் உம் கருத்துக்கேற்ப
கைம்மாறு வழங்கவேண்டுமா?
நீர் தான் இதைத் தீர்மானிக்க வேண்டும்;
நான் அல்ல; ஆகையால்
உமக்குத் தெரிந்ததைக் கூறும்.
34 புரிந்துகொள்ளும் திறன் உடையவரும்
எனக்குச் செவி சாய்ப்பவர்களில்
ஞானம் உள்ளவரும் இவ்வாறு சொல்வர்;
35 யோபு புரியாமல் பேசுகின்றார்;
அவர் சொற்களும் பொருளற்றவை.
36 யோபு இறுதிவரை சோதிக்கப்படவேண்டுமா?
ஏனெனில், அவரின் மொழிகள்
தீயோருடையவைபோல் உள்ளன.
37 யோபு தாம் பாவம் செய்ததோடு
கிளர்ச்சியும் செய்கின்றார்;
ஏளனமாய் நம்மிடையே அவர்
கை தட்டுகின்றார்; இறைவனுக்கு எதிராக
வார்த்தைகளைக் கொட்டுகின்றார்.
34:3 யோபு 12:11.
34:11 திபா 62:12. | https://bible.catholicgallery.org/tamil/etb-job-34 |
470 | யோபு | யோபு அதிகாரம் – 35 – திருவிவிலியம் | அனைத்தையும் கடந்தவர் கடவுள்
1 எலிகூ தொடர்ந்து கூறினான்:
2 ‘நான் இறைவன்முன் நேர்மை
யானவன்’ என நீர் சொல்வது
சரியென நினைக்கின்றீரா?
3 ‘நான் பாவம் செய்யாததனால்
எனக்கு என்ன ஆதாயம்?
எனக்கு என்ன நன்மை?” என நீர் கேட்கின்றீர்.
4 உமக்கும் உம் நண்பர்களுக்கும் சேர்த்து
நான் பதில் அளிக்கின்றேன்;
5 வானங்களைப் பாரும்; கவனியும்; இதோ!
உம்மைவிட உயரேயிருக்கும் முகில்கள்!
6 நீர் பாவம் செய்தால்,
அவருக்கெதிராய் என்ன சாதிக்கின்றீர்?
நீர் மிகுதியான குற்றங்களைச் செய்வதால்
அவருக்கு என்ன செய்து விடுகின்றீர்?
7 நீர் நேர்மையாய் இருப்பதால்
இவருக்கு நீர் அளிப்பதென்ன?
அல்லது உம் கையிலிருந்து அவர் பெறுவதென்ன?
8 உம் கொடுமை உம்மைப்போன்ற
மனிதரைக் துன்புறுத்துகின்றது;
உம் நேர்மையும் மானிடர்க்கே
நன்மை பயக்கின்றது.
9 கொடுமைகள் குவிய அவர்கள் கூக்குரலிடுவர்;
வலியவர் கைவன்மையால் கத்திக் கதறுவர்.
10 ஆனால் இவ்வாறு எவரும் சொல்வதில்லை;
‘எங்கே என்னைப் படைத்த கடவுள்?
இரவில் பாடச் செய்பவர் எங்கே?
11 நானிலத்தின் விலங்குகளைவிட
நமக்கு அதிகமாய்க் கற்பிக்கின்றவரும்
வானத்துப் புள்ளினங்களை விட
நம்மை ஞானி ஆக்குகின்றவரும் அவரன்றோ?”
12 அங்கே அவர்கள் கூக்குரலிடுகின்றனர்;
பொல்லார் செருக்கின் பொருட்டு
அவர் பதில் ஒன்றும் சொல்லார்.
13 வீண் வேண்டலை
இறைவன் கண்டிப்பாய்க் கேளார்;
எல்லாம் வல்லவர் அதைக்
கவனிக்கவும் மாட்டார்.
14 இப்படியிருக்க,
‘நான் அவரைப் பார்க்கவில்லை;
தீர்ப்பு அவரிடம் இருக்கின்றது.
நான் அவருக்காகக் காத்திருக்கின்றேன்;’
என்று நீர் கூறும்போது,
எப்படி உமக்குச்செவிகொடுப்பார்?
15 இப்பொழுதோ,
‘கடவுளின் சினம் தண்டிப்பதில்லை;
மனிதனின் மடமையை அவ்வளவாய்
அவர் நோக்குவதில்லை’ என எண்ணி,
16 யோபு வெற்றுரை விளம்புகின்றார்;
அறிவில்லாமல் சொற்களைக் கொட்டுகின்றார்.
35:6-8 யோபு 22:2-3. | https://bible.catholicgallery.org/tamil/etb-job-35 |
471 | யோபு | யோபு அதிகாரம் – 36 – திருவிவிலியம் | யோபினுடைய துன்பங்களின் உட்பொருள்
1 எலிகூ தொடர்ந்து பேசலானான்:
2 சற்றுப் பொறும்;
காட்டுவேன் உமக்கு கடவுள் சார்பாய்
நான் கூற வேண்டியவற்றை.
3 தொலையிலிருந்து
என் அறிவைக் கொணர்வேன்;
எனை உண்டாக்கியவர்க்கு
நேர்மையை உரித்தாக்குவேன்.
4 ஏனெனில், மெய்யாகவே
பொய்யன்று என் சொற்கள்;
அறிவுநிறைந்த நான் உம் நடுவே உள்ளேன்.
5 இதோ! இறைவன் வல்லவர்;
எவரையும் புறக்கணியார்;
அவர் வல்லமையும் ஞானமும் கொண்டவர்.
6 கொடியவரை அவர் வாழவிடார்;
ஒடுக்கப்படுவோர்க்கு உரிமையை வழங்குவார்;
7 நேர்மையாளர்மீது கொண்ட
பார்வையை அகற்றார்;
அரசர்களை அரியணையில் அமர்த்துகின்றார்;
என்றென்றும் அவர்கள் ஏற்றமடைவர்.
8 ஆனால் அவர்கள்
சங்கிலியால் கட்டுண்டாரெனில்,
வேதனையின் கயிற்றில் அகப்பட்டாரெனில்,
9 அவர்கள் செய்ததையும் மீறியதையும்,
இறுமாப்புடன் நடந்ததையும்
எடுத்து இயம்புவார்.
10 அறிவுரைகளுக்கு
அவர்கள் செவியைத் திறப்பார்;
தீச்செயலிலிருந்து திரும்புமாறு
ஆணையிடுவார்.
11 அவர்கள் கேட்டு, அவர்க்குப் பணி புரிந்தால்,
வளமாய்த் தங்கள் நாள்களையும்
இன்பமாய்த் தங்கள் ஆண்டுகளையும் கழிப்பர்.
12 செவிகொடுக்காவிடில் வாளால் மடிவர்.
அறிவின்றி அவர்கள் அழிந்துபோவர்.
13 தீயமனத்தோர் வெஞ்சினம் வளர்ப்பர்;
அவர்களை அவர் கட்டிப்போடுகையில்
உதவிக்காகக் கதறமாட்டார்.
14 அவர்கள் இளமையில் மடிவர்;
காமுகரோடு அவர்கள் வாழ்வு முடியும்.
15 துன்புற்றோரைத் துன்பத்தால் காப்பார்;
வேதனையால் அவர்கள் காதைத் திறப்பார்.
16 இடுக்கண் வாயினின்று
உங்களை இழுத்துக் காத்தார்;
ஒடுக்கமற்ற பரந்த வெளியில் சேர்த்தார்.
உங்கள் பந்தியை ஊட்டமுள உணவால் நிரப்பினார்.
17 பொல்லார்க்குரிய தீர்ப்பு உங்கள்மீது வந்தது;
தீர்ப்பும் நீதியும் உங்களைப் பற்றிப் பிடித்தன.
18 வளமையால் வழிபிறழாமல்
பார்த்துக்கொள்ளும்;
நிறைந்த கையூட்டால் நெறிதவறாதேயும்.
19 உம் நிறைந்த செல்வமும்
வல்லமையின் முழு ஆற்றலும்
இன்னலில் உமக்கு உதவுமா?
20 இருந்த இடத்திலேயே மக்கள் மடியும்
இரவுக்காக ஏங்காதீர்.
21 துன்பத்தைவிட தீச்செயலையே
நீர் தேர்ந்துகொண்டீர்; எனவே
அதற்குத் திரும்பாதபடி எச்சரிக்கையாயிரும்.
கடவுளின் ஆற்றலுக்குப் புகழ்ப்பாடல்
22 இதோ! ஆற்றலில் இறைவன் உயர்ந்தவர்;
அவருக்கு நிகரான ஆசிரியர் உளரோ?
23 அவர் நெறியை அவர்க்கு வகுத்தவர் யார்?
அவர்க்கு ‘நீர் வழிதவறினிர்” எனச்
சொல்ல வல்லவர் யார்?
24 அவர் செயலைப் புகழ்வதில் கருத்தாயிரும்.
மாந்தர் அதனைப் பாடிப்போயினர்.
25 மனித இனம் முழுவதும் அதைக் கண்டது;
மனிதன் தொலையிலிருந்தே
அதை நோக்குவான்.
26 இதோ! இறைவன் பெருமை மிக்கவர்;
நம் அறிவுக்கு அப்பாற்பட்டவர்;
அவர்தம் ஆண்டுகள் எண்ணற்றவை;
கணக்கிட முடியாதவை.
27 நீர்த்துளிகளை அவர்
ஆவியாக இழுக்கின்றார்; அவற்றை
மழையாக வடித்துக் கொடுக்கின்றார்.
28 முகில்கள் அவற்றைப் பொழிகின்றன;
மாந்தர்மேல் அவற்றை
மிகுதியாகப் பெய்கின்றன.
29 பரவும் முகில்களையும்
அவர்தம் மணிப்பந்தலின்
ஆர்ப்பரிப்பினையும் ஆய்ந்தறிபவர் யார்?
30 இதோ! தம்மைச் சுற்றி
மின்னல் ஒளிரச் செய்கின்றார்.
கடலின் அடித்தளத்தை மூடுகின்றார்.
31 இவற்றால், மக்களினங்கள்மீது
தீர்ப்பளிக்கின்றார்;
அதிகமாய் உணவினை அளிக்கின்றார்.
32 மின்னலைத் தம் கைக்குள் வைக்கின்றார்;
இலக்கினைத் தாக்க ஆணை இடுகின்றார்.
33 இடிமுழக்கம் அவரைப்பற்றி எடுத்துரைக்கும்;
புயல் காற்று அவர் சீற்றத்தைப் புகலும். | https://bible.catholicgallery.org/tamil/etb-job-36 |
472 | யோபு | யோபு அதிகாரம் – 37 – திருவிவிலியம் | 1 இதைக்கண்டு நடுங்குகிறது
என் இதயம்;
தன் இடம் பெயர்ந்து அது துடிக்கின்றது.
2 அவரது குரலின் இடியோசையையும்
அவர் வாயினின்று வரும் முழக்கத்தையும்
கவனமுடன் கேளுங்கள்.
3 விசும்பின்கீழ் மின்னலை
மிளிரச் செய்கின்றார்; மண்ணகத்தின்
எல்லைவரை செல்ல வைக்கின்றார்.
4 அதனை அடுத்து அதிரும் அவர் குரல்;
பேரொலியில் அவர் முழங்கிடுவாரே;
மின்னலை நிறுத்தார்
அவர்தம் குரல் ஒலிக்கையிலே.
5 கடவுள் வியத்தகு முறையில்
தம் குரலால் முழங்குகின்றார்;
நம் அறிவுக்கு எட்டாத
பெரியனவற்றைச் செய்கின்றார்.
6 ஏனெனில், உறைபனியை
‘மண்மிசை விழு” என்பார்;
மாரியையும் பெருமழையையும்
‘உரத்துப் பெய்க” என்பார்.
7 எல்லா மனிதரும் அவரது கைத்திறனை அறிய,
எல்லா மாந்தரின் கையையும் கட்டிப்போடுவார்.
8 பின்னர் விலங்கு தன் பொந்தினுள் நுழையும்;
தம் குகைக்குள் அது தங்கும்.
9 அவர்தம் கிடங்கிலிருந்து சுழற்காற்றும்
வாடைக்காற்றிலிருந்து குளிரும் கிளம்பும்.
10 கடவுளின் மூச்சால் பனிக்கட்டி உறையும்;
பரந்த நீர்நிலை உறைந்து போகும்.
11 அவர் முகிலில் நீர்த்துளிகளைத் திணிப்பார்;
கொண்டல் அவர் ஒளியைத் தெறிக்கும்.
12 மேகம் அவரது ஆணைப்படியே
சுழன்று ஆடும்;
அவர் ஆணையிடுவதை எல்லாம்
மண்மிசை செய்யும்.
13 கண்டிக்கவோ, கருணைக்காட்டவோ
இவற்றை உலகில் அவர் நிகழச்செய்கின்றார்.
14 யோபே! செவிகொடும்;
இறைவனின் வியத்தகு செயல்களை
நின்று நிதானித்துக் கவனியும்.
15 கடவுள் எவ்வாறு அவற்றை
ஒழுங்குபடுத்துகின்றார் என்றோ,
அவர்தம் முகில்கள் எப்படி மின்னலைத்
தெறிக்கின்றன என்றோ அறிவீரா?
16 முகில்கள் எவ்வாறு மிதக்கின்றன என
உமக்குத் தெரியுமா?
அவை நிறை அறிவுள்ளவரின்
வியத்தகு செயல்கள் அல்லவா!
17 தென்திசைக் காற்றினால்
நிலம் இறுக்கப்படுகையில்
உம் உடையின் வெப்பத்தால்
நீவிர் புழுங்குகின்றீர்.
18 வார்ப்படக் கண்ணாடியை ஒத்த
திண்ணிய விசும்பை
அவரோடு உம்மால் விரிக்கக்கூடுமோ?
19 நாம் அவர்க்கு என்ன சொல்லக்கூடும்
என்று கற்பியும்; இருளின் முகத்தே
வகைதெரியாது உழல்கின்றோம்.
20 ‘நான் பேசுவேன்” என்று
எவர் அவரிடம் சொல்வார்?
அவ்வாறு பேசி எவர் அழிய ஆசிப்பார்?
21 காற்று வீசி கார்முகிலைக் கலைத்தபின்
வானில் கதிரவன் ஒளிரும்போது,
மனிதர் அதனைப் பார்க்க ஒண்ணாதே!
22 பொன்னொளி வடதிசையிலிருந்து வரும்;
அஞ்சுதற்குரிய மாட்சி கடவுளிடம் விளங்கும்.
23 எல்லாம் வல்லவரை
நாம் கண்டுபிடிக்க முடியாது;
ஆற்றலிலும் நீதியிலும் உயர்ந்தவர் அவரே!
நிறைவான நீதியை மீறுபவர் அல்ல.
24 ஆதலால், மாந்தர் அவர்க்கு அஞ்சுவர்;
எல்லாம் தெரியும் என்போரை
அவர் திரும்பியும் பாரார். | https://bible.catholicgallery.org/tamil/etb-job-37 |
473 | யோபு | யோபு அதிகாரம் – 38 – திருவிவிலியம் | ஆண்டவரின் முதல் சொற்பொழிவு
1 ஆண்டவர் சூறாவளியினின்று
யோபுக்கு அருளிய பதில்:
2 அறிவற்ற சொற்களால் என் அறிவுரையை
இருட்டடிப்புச் செய்யும் இவன் யார்?
3 வீரனைப்போல் இடையினை இறுக்கிக்கட்டு;
வினவுவேன் உன்னிடம்,
விடை எனக்களிப்பாய்.
4 மண்ணகத்திற்கு நான்
கால்கோள் இடும்போது நீ எங்கு இருந்தாய்?
உனக்கு அறிவிருக்குமானால் அறிவிப்பாயா?
5 அதற்கு அளவு குறித்தவர் யார்?
உனக்குத்தான் தெரியுமே!
அதன்மேல் நூல் பிடித்து அளந்தவர் யார்?
6 எதன்மேல் அதன் தூண்கள்
ஊன்றப்பட்டன? அல்லது யார் அதன்
மூலைக் கல்லை நாட்டியவர்?
7 அப்போது வைகறை விண்மீன்கள்
ஒன்றிணைந்து பாடின!
கடவுளின் புதல்வர் களிப்பால் ஆர்ப்பரித்தனர்!
8 கருப்பையினின்று கடல்
உடைப்பெடுத்து ஓடியபொழுது
அதனைக் கதவிட்டு அடைத்தவர் யார்?
9 மேகத்தை அதற்கு மேலாடையாக்கி,
காரிருளைப் பொதிதுணியாக்கி,
10 எல்லைகளை நான் அதற்குக் குறித்து
கதவையும் தாழ்ப்பாளையும் பொருத்தி
11 ‘இதுவரை வருவாய், இதற்குமேல் அல்ல;
உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!”
என்று நான் இயம்பியபோது எங்கிருந்தாய் நீ?
12 உன் வாழ்நாளில் காலைப்பொழுதுக்குக்
கட்டளையிட்டதுண்டா?
வைகறையைத் தன் இடமறிய வைத்ததுண்டா?
13 இவ்வாறு, அது வையக விளிம்பைத்
தொட்டிழுத்து, பொல்லாதவரை
அதனுளிருந்து உதறித்தள்ளுமே!
14 முத்திரையால் களிமண் உருப்பெறுவதுபோல்
மண்ணகம் வண்ணம் ஏற்றிய ஆடையாயிற்று.
15 அப்போது, கொடியவரிடமிருந்து
ஒளி பறிக்கப்படும்;
அடிக்க ஓங்கியகை முறிக்கப்படும்.
16 கடலின் ஊற்றுவரை நீ போனதுண்டா?
ஆழியின் அடியில் நீ உலவினதுண்டோ?
17 சாவின் வாயில்கள்
உனக்குக் காட்டப்பட்டனவோ?
இருள் உலகின் கதவுகளைக்
கண்டதுண்டோ நீ?
18 அவனியின் பரப்பை நீ ஆய்ந்தறிந்ததுண்டா?
அறிவிப்பாய் அதிலுள்ள
அனைத்தையும் அறிந்திருந்தால்!
19 ஒளி உறைவிடத்திற்கு வழி எதுவோ!
இருள் இருக்கும் இருப்பிடம் எங்கேயோ?
20 அதன் எல்லைக்கு
அதனை அழைத்துப் போவாயோ?
அதனுறைவிடத்திற்கு நேர்வழி அறிவாயோ!
21 ஆம், அறிவாய்;
அன்றே நீ பிறந்தவனன்றோ! ஆமாம்;
ஆண்டுகளும் உனக்கு அதிகமன்றோ!
22 உறைபனிக் கிடங்கினுள் புகுந்ததுண்டோ?
23 இடுக்கண் வேளைக்கு எனவும்
கடும் போர், சண்டை நாளுக்கு எனவும்
அவற்றை நான் சேர்த்து வைத்தேன்.
24 ஒளி தோன்றும் இடத்திற்குப் பாதை எது?
கீழைக்காற்று அவனிமேல் வீசுவது எப்படி?
25 வெள்ளத்திற்குக் கால்வாய் வெட்டியவர் யார்?
இடி மின்னலுக்கு வழி வகுத்தவர் யார்?
26 மனிதர் வாழா மண்ணிலும்
மாந்தர் குடியிராப் பாலையிலும்
மழை பெய்வித்துப்
27 பாழ்வெளிக்கும் வறண்ட
நிலத்திற்கும் நீர் பாய்ச்சிப்
பசும்புல் முளைக்கச் செய்தவர் யார்?
28 மழைக்குத் தந்தை உண்டோ?
பனித்துளிகளைப் பிறப்பிப்பவர் யார்?
29 பனிக்கட்டி யாருடைய உதரத்தில்
தோன்றுகின்றது? வானின் மூடுபனியை
ஈன்றெடுப்பவர் யார்?
30 கல்லைப்போல் புனல் கட்டியாகிறது;
ஆழ்கடலின் பரப்பு உறைந்து போகிறது.
31 கார்த்திகை மீனைக் கட்டி விலங்கிடுவாயோ?
மார்கழி மீனின் தலையை அவிழ்த்திடுவாயோ?
32 குறித்த காலத்தில்
விடிவெள்ளியைக் கொணர்வாயோ?
வடதிசை விண்மீன் குழுவுக்கு
வழி காட்டுவாயோ?
33 வானின் விதிமுறைகளை அறிந்திடுவாயோ?
அதன் ஒழுங்கை நானிலத்தில்
நிலைநாட்டிடுவாயோ?
34 முகில்வரை உன் குரலை முழங்கிடுவாயோ?
தண்ணீர்ப் பெருக்கு
உன்னை மூடச் செய்வாயோ?
35 ‘புறப்படுக’ என மின்னலுக்கு
ஆணையிடுவாயோ?
‘இதோ! உள்ளோம்’ என
அவை உனக்கு இயம்புமோ?
36 நாரைக்கு ஞானத்தை நல்கியவர் யார்?
சேவலுக்கு அறிவைக்கொடுத்தவர் யார்?
37 ஞானத்தால் முகில்களை
எண்ணக் கூடியவர் யார்?
வானத்தின் நீர்க்குடங்களைக்
கவிழ்ப்பவர் யார்?
38 துகள்களைச் சேர்த்துக்
கட்டியாக்குபவர் யார்? மண்கட்டிகளை
ஒட்டிக் கொள்ளச் செய்பவர் யார்?
39 பெண் சிங்கத்திற்கு இரை தேடுவாயோ?
அரிமாக் குட்டியின் பசியை ஆற்றுவாயோ?
40 குகைகளில் அவை குறுகி இருக்கையிலே,
குழிகளில் அவை பதுங்கி இருக்கையிலே.
41 காக்கைக் குஞ்சுகள்
இறைவனை நோக்கிக் கரையும் போது,
அவை உணவின்றி ஏங்கும்போது,
காகத்திற்கு இரை அளிப்பவர் யார்?
38:8-11 எரே 5:22.
38:31 யோபு 9:9; ஆமோ 5:8. | https://bible.catholicgallery.org/tamil/etb-job-38 |
474 | யோபு | யோபு அதிகாரம் – 39 – திருவிவிலியம் | 1 வரையாடு ஈனும் பருவம் தெரியுமோ?
மான்குட்டியை ஈனுதலைப்
பார்த்தது உண்டா?
2 எண்ணமுடியுமா
அவை சினையாயிருக்கும் மாதத்தை?
கணிக்க முடியுமா
அவை ஈனுகின்ற காலத்தை?,
3 குனிந்து குட்டிகளை அவை தள்ளும்;
வேதனையில் அவற்றை வெளியேற்றும்.
4 வெட்ட வெளியில் குட்டிகள் வளர்ந்து
வலிமைபெறும்; விட்டுப் பிரியும்;
அவைகளிடம் மீண்டும் வராது.
5 காட்டுக் கழுதையைக்
கட்டற்று திரியச் செய்தவர் யார்?
கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்?
6 பாலைநிலத்தை அதற்கு வீடாக்கினேன்;
உவர் நிலத்தை அதற்கு உறைவிடமாக்கினேன்.
7 நகர அமளியை அது நகைக்கும்;
ஓட்டுவோன் அதட்டலுக்கும் செவிகொடாது.
8 குன்றுகள் எங்கும் தேடும் மேய்ச்சலை;
பசுமை அனைத்தையும் நாடி அலையும்.
9 காட்டெருமை உனக்கு ஊழியம் செய்ய விரும்புமா?
உன் தொழுவத்தில் ஓர் இரவேனும் தங்குமா?
10 காட்டெருமையைக் கலப்பையில் பூட்டி
உழுதிடுவாயோ? பள்ளத்தாக்கில் பரம்படிக்க
அது உன் பின்னே வருமோ?
11 அது மிகுந்த வலிமை கொண்டதால்
அதனை நம்பியிருப்பாயோ?
எனவே, உன் வேலையை
அதனிடம் விடுவாயோ?
12 அது திரும்பி வரும் என நீ நம்புவாயோ?
உன் களத்திலிருந்து
தானியத்தைக் கொணருமோ?
13 தீக்கோழி சிறகடித்து நகைத்திடும்;
ஆனால், அதன் இறக்கையிலும்
சிறகுகளிலும் இரக்கம் உண்டோ?
14 ஏனெனில், மண்மேலே
அது தன் முட்டையை இடும்;
புழுதிமேல் பொரிக்க விட்டுவிடும்.
15 காலடி பட்டு அவை நொறுங்குமென்றோ
காட்டு விலங்கு அவைகளை மிதிக்குமென்றோ
அது நினைக்கவில்லை.
16 தன்னுடையவை அல்லாதன போன்று
தன் குஞ்சுகளைக் கொடுமையாய் நடத்தும்;
தன் வேதனை வீணாயிற்று
என்று கூடப் பதறாமல்போம்.
17 கடவுள் அதை மதிமறக்கச் செய்தார்;
அறிவினில் பங்கு அளித்தார் இல்லை.
18 விரித்துச் சிறகடித்து எழும்பொழுது,
பரியோடு அதன் வீரனையும் பரிகசிக்குமே!
19 குதிரைக்கு வலிமை கொடுத்தது நீயோ?
அதன் கழுத்தைப் பிடரியால்
உடுத்தியது நீயோ?
20 அதனைத் தத்துக்கிளிபோல்
தாவச் செய்வது நீயோ?
அதன் செருக்குமிகு கனைப்பு
நடுங்க வைத்திடுமே?
21 அது மண்ணைப் பறிக்கும்;
தன் வலிமையில் மகிழும்
போர்க்களத்தைச் சந்திக்கப்
புறப்பட்டுச் செல்லும்.
22 அது அச்சத்தை எள்ளி நகையாடும்;
அசையாது;
வாள் முனைக்கண்டு பின்வாங்காது.
23 அதன்மேல்
அம்பறாத் தூணி கலகலக்கும்;
ஈட்டியும் வேலும் பளபளக்கும்;
24 அது துள்ளும்; பொங்கி எழும்;
மண்ணை விழுங்கும்;
ஊதுகொம்பு ஓசையில் ஓய்ந்து நிற்காது;
25 எக்காளம் முழங்கும்போதெல்லாம்
“ஐஇ” என்னும்; தளபதிகளின்
இடி முழக்கத்தையும் இரைச்சலையும்
அப்பால் போரினையும்
இப்பாலே மோப்பம் பிடிக்கும்.
26 உன் அறிவினாலா வல்லூறு
பாய்ந்து இறங்குகின்றது?
தெற்கு நோக்கி
இறக்கையை விரிக்கின்றது?
27 உனது கட்டளையாலா
கழுகு பறந்து ஏறுகின்றது?
உயர்ந்த இடத்தில்
தன் உறைவிடத்தைக் கட்டுகின்றது?
28 பாறை உச்சியில்
கூடுகட்டித் தங்குகின்றது;
செங்குத்துப் பாறையை
அரணாகக் கொண்டுள்ளது.
29 அங்கிருந்தே அது கூர்ந்து
இரையைப் பார்க்கும்;
தொலையிலிருந்தே அதன் கண்கள்
அதைக் காணும்.
30 குருதியை உறிஞ்சும் அதன் குஞ்சுகள்;
எங்கே பிணமுண்டோ
அங்கே அது இருக்கும்.
39:30 மத் 24:28; லூக் 17;37. | https://bible.catholicgallery.org/tamil/etb-job-39 |
475 | யோபு | யோபு அதிகாரம் – 40 – திருவிவிலியம் | 1 பின்பு யோபைப் பார்த்து
ஆண்டவர் கூறினார்:
2 குற்றம் காண்பவன்,
எல்லாம் வல்லவரோடு வழக்காடுவானா?
கடவுளோடுவாதாடுபவன்
விடையளிக்கட்டும்.
3 யோபு ஆண்டவர்க்குக் கூறிய மறுமொழி:
4 இதோ! எளியேன் யான்
இயம்புதற்குண்டோ? என் வாயைக்
கையால் பொத்திக் கொள்வேன்.
5 ஒருமுறை பேசினேன்;
மறுமொழி உரையேன்; மீண்டும் பேசினேன்;
இனிப் பேசவேமாட்டேன்.
கடவுளின் இரண்டாம் சொற்பொழிவு
6 ஆண்டவர் சூறாவளியினின்று
யோபுக்கு அருளிய பதில்:
7 வீரனைப்போல்
இடையை இறுக்கிக் கட்டிக்கொள்;
வினவுவேன் உன்னிடம்;
விடையெனக்கு அளிப்பாய்.
8 என் தீர்ப்பிலேயே நீ குற்றம் காண்பாயா?
உன்னைச் சரியெனக் காட்ட
என்மீது குற்றம் சாட்டுவாயா?
9 இறைவனுக்கு உள்ளதுபோல்
உனக்குக் கையுண்டோ?
அவர்போன்று இடிக்குரலில் முழங்குவாயோ?
10 சீர் சிறப்பினால்
உன்னை அணி செய்துகொள்;
மேன்மையையும், மாண்பினையும்
உடுத்திக்கொள்.
11 கொட்டு உன் கோபப் பெருக்கை!
செருக்குற்ற ஒவ்வொருவரையும்
நோக்கிடு; தாழ்த்திடு!
12 செருக்குற்ற எல்லாரையும்
நோக்கிடு; வீழ்த்திடு! தீயோரை
அவர்கள் இடத்திலேயே மிதித்திடு!
13 புழுதியில் அவர்களை
ஒன்றாய்ப் புதைத்திடு!
காரிருளில் அவர் முகங்களை மூடிடு.
14 அப்பொழுது, உனது வலக்கை
உன்னைக் காக்குமென்று
நானே ஒத்துக்கொள்வேன்.
பெகிமோத்து
15 இதோ பார், உன்னைப் படைத்ததுபோல்
நான் உண்டாக்கிய பெகிமோத்து
காளைபோல் புல்லைத் தின்கின்றது.
16 இதோ காண்,
அதன் ஆற்றல் அதன் இடுப்பில்;
அதன் வலிமை வயிற்றுத் தசைநாரில்.
17 அது தன் வாலைக்
கேதுருமரம்போல் விரைக்கும்;
அதன் தொடை நரம்புகள்
கயிறுபோல் இறுகியிருக்கும்;
18 அதன் எலும்புகள், வெண்கலக் குழாய்கள்;
அதன் உறுப்புகள் உருக்குக் கம்பிகள்.
19 இறைவனின் படைப்புகளில்
தலையாயது அதுவே! படைத்தவரே
அதைப் பட்டயத்துடன் நெருக்க முடியும்.
20 மலைகள் அதற்குப்
புற்பூண்டுகளை விளைவிக்கின்றன;
விலங்குகள் எல்லாம்
விளையாடுவதும் அங்கேதான்.
21 அது நிழற்செடிக்கு அடியிலும்
நாணல் மறைவிலும் உளைச் சேற்றிலும்
படுத்துக் கிடக்கும்.
22 அச்செடி தன் நிழலால் அதை மறைக்கும்;
ஓடையின் அலரி அதைச் சூழ்ந்து நிற்கும்.
23 ஆறு புரண்டோடினும் அது மிரண்டோடாது;
அதன் முகத்தே யோர்தான் மோதினும்
அசைவுறாது.
24 அதன் கண்காண அதனைக்
கட்டமுடியுமோ? கொக்கியால்
அதன் மூக்கைத் துளைக்க முடியுமோ? | https://bible.catholicgallery.org/tamil/etb-job-40 |
476 | யோபு | யோபு அதிகாரம் – 41 – திருவிவிலியம் | லிவியத்தான்
1 தூண்டிலால் லிவியத்தனைத்
தூக்கிடுவாயோ? கயிற்றினால்
அதன் நாக்கினைக் கட்டிடுவாயோ?
2 அதன் மூக்கிற்குச் கயிறு இட
உன்னால் முடியுமோ? அதன் தாடையில்
கொக்கியினால் குத்த முடியுமோ?
3 வேண்டுகோள் பல
அது உன்னிடம் விடுக்குமோ?
கனிவாக உன்னிடம் கெஞ்சுமோ?
4 என்றும் உனக்கு ஏவல்புரிய
உன்னுடன் அது
உடன்படிக்கை செய்யுமோ?
5 பறவைபோல் துள்ளி அதனுடன்
ஆடுவாயா? உம் மகளிர்க்கென
அதனைக் கட்டிவைப்பாயா?
6 மீனவர் குழுவினர்
அதன்மேல் பேரம் பேசுவார்களோ?
அவர்கள் வணிகரிடையே
அதைக் கூறுபோடுவார்களோ?
7 கூரிய முட்களால் அதன் தோலையும்
மீன் எறி வேல்களால் அதன் தலையையும்
குத்தி நிரப்புவாயோ?
8 உன் கையை அதன்மேல் வைத்துப்பார்;
எழும் போராட்டத்தை மறக்கமாட்டாய்.
மீண்டும் அதைச் செய்ய மாட்டோம்.
9 இதோ! தொடுவோர் நம்பிக்கை
தொலைந்துபோம்; அதனைக் கண்டாலே
ஒருவர் கதிகலங்குவார்.
10 அதை எழுப்பும் வீரம் எவருக்கும் இல்லை;
பின்பு அதன்முன் நிற்கத் துணிபவர் யார்?
11 அதனை எதிர்த்து உயிரோடிருந்தவர்
எவராவது உண்டோ?
விண்ணகத்தின்கீழ்
அப்படிப்பட்டவர் யாருமில்லை!
12 அதன் உறுப்புகள், அதன் ஆற்றல்
அதன் அமைப்பின் அழகு
அனைத்தையும் பற்றி
அறிவிக்காது விடேன்.
13 அதன் மேல்தோலை உரிப்பவர் யார்?
அதன் தாடை இரண்டுக்குமிடையே
நுழைபவர் யார்?
14 அதன் முகத்தில் வாயிலைத் திறப்பவன் யார்?
அதன் பற்களைச் சூழ்ந்து பேரச்சமே உள்ளது.
15 அதன் முதுகு கேடய வரிசையாம்;
நெருங்க மூடி முத்திரை இடப்பட்டதாம்.
16 ஒன்றோடு ஒன்று ஒட்டி உள்ளது.
காற்றும் அதனிடையே கடந்திடாது;
17 ஒன்றோடு ஒன்றாய் இணைந்துள்ளன;
பிரிக்கமுடியாதவாறு
ஒன்றாய்ப் பிடித்துள்ளன.
18 துலங்கும் மின்னல் அதன் தும்மல்;
வைகறை இமைகள் அதன் கண்கள்.
19 அதன் வாயினின்று புறப்படுவது தீப்பிழம்பு;
அங்கிருந்து பறப்பது நெருப்புப் பொறிகளே.
20 நாணல் நெருப்புக்
கொதிகலனின்று வருவதுபோல்
அதன் நாசியினின்று புகை கிளம்பும்.
21 அதன் மூச்சு கரிகளைப் பற்றவைக்கும்;
அதன் வாயினின்று தீப்பிழம்பு கிளம்பிவரும்.
22 அதன் கழுத்தில் வலிமை வதிகின்றது;
நடுக்கம் அதன்முன் துள்ளியாடுகின்றது.
23 அதன் தசைமடிப்புகள் ஒட்டியிருக்கும்;
கெட்டியாயிருக்கும் அவற்றை
அசைக்க ஒண்ணாது.
24 அதன் நெஞ்சம் கல்லைப்போல்
கடினமானது;
திரிகையின் அடிக்கல்போல்
திண்மையானது.
25 அது எழும்பொழுதே
தெய்வங்கள் அஞ்சுகின்றன;
அது அறையவரும்போதே
நிலைகுலைகின்றன.
26 வாள் அதைத் தாக்கிடினும், ஊடுருவாது;
ஈட்டியோ அம்போ, எறிவேலோ
உட்செல்லாது.
27 இரும்பை அது துரும்பெனக் கருதும்;
வெண்கலத்தை உளுத்த கட்டையெனக்
கொள்ளும்.
28 வில்வீரன் அதை விரட்ட முடியாது;
கவண் கல்லும் கூளம்போல் ஆகுமே.
29 பெருந்தடியைத் தாளடி எனக்கருதும்;
எறிவேல் ஒலிகேட்டு எள்ளி நகைக்கும்.
30 அதன் வயிற்றுப்புறம்
ஒட்டுத் துண்டுகளின் அடுக்கு;
அது சேற்றில் படுத்துக்கிடக்கையில்
பரம்புக் கட்டை.
31 கொதிகலமென அது
கடலைப் பொங்கச் செய்யும்;
தைலச் சட்டியென அது
ஆழியைக் கொப்பளிக்கச் செய்யும்.
32 அது போனபிறகு பாதை பளபளக்கும்;
கடலே நரைத்ததெனக் கருதத்தோன்றும்.
33 அகிலத்தில் அதற்கு இணையானது இல்லை;
அச்சம் கொண்டிலாப் படைப்பு அதுவே.
34 செருக்குற்ற படைப்பு
அனைத்தையும் ஏளனமாய் நோக்கும்;
வீறுகொண்ட விலங்குகட்கு
வேந்தனும் அதுவே.
41:1 திபா 74:14; 104:26; எசா 27:1. | https://bible.catholicgallery.org/tamil/etb-job-41 |
477 | யோபு | யோபு அதிகாரம் – 42 – திருவிவிலியம் | யோபின் இறுதி உறுதிமொழி
1 அப்பொழுது யோபு ஆண்டவர்க்குக்
கூறிய பதில்:
2 நீர் அனைத்தையும் ஆற்றவல்லவர்;
அறிவேன் அதனை;
நீர் நினைத்த எதையும்
தடுக்க இயலாது.
3 ‘அறிவில்லாமல் ஆலோசனையை
மறைப்பவன் எவன்?” என்று கேட்டீர்;
உண்மையில் நான்தான்
புரியாதவற்றைப் புகன்றேன்;
அவை எனக்கு விளங்கா
அளவுக்கு விந்தையானவை.
4 அருள்கூர்ந்து கேளும் அடியேன் பேசுவேன்;
வினவுவேன் உம்மை;
விளங்க வைப்பீர் எனக்கு.
5 உம்மைப்பற்றிக்
காதால் மட்டுமே கேள்விப்பட்டேன்;
. ஆனால் இப்பொழுது,
என் கண்களே உம்மைக் காண்கின்றன.
6 ஆகையால்,
என்னையே நொந்து கொள்ளுகின்றேன்;
புழுதியிலும் சாம்பலிலும் இருந்து
மனம் வருந்துகின்றேன்.
முடிவுரை
7 ஆண்டவர் இவ்வாறு யோபிடம் பேசினபிறகு, தேமானியனான எலிப்பாசைப் பார்த்துக் கூறியது: “உன்மீதும், உன் இரு நண்பர்கள் மீதும் எனக்குச் சினம் பற்றி எரிகிறது. ஏனெனில் என் ஊழியன் யோபு போன்று நீங்கள் என்னைப்பற்றிச் சரியாகப் பேசவில்லை.
8 ஆகவே இப்பொழுது, “ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக் கிடாய்களையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்; என் ஊழியன் யோபிடம் செல்லுங்கள்; உங்களுக்காக எரிபலியை ஒப்புக்கொடுங்கள். என் ஊழியன் யோபு உங்களுக்காக மன்றாடும் பொழுது, நானும் அவன் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வேன். என் ஊழியன் யோபு போன்று என்னைப் பற்றிச் சரியாகப் பேசாத உங்கள் மடமைக்கு ஏற்றவாறு செய்யாது விடுவேன்”.
9 அவ்வாறே தேமானியனான எலிப்பாசும், சூகாவியனான பில்தாதும், நாமானியனான சோப்பாரும் சென்று ஆண்டவர் அவர்களுக்குக் கட்டளை இட்டவாறே செய்தார்கள். ஆண்டவரும் யோபின் இறைஞ்சுதலை ஏற்றார்.
செல்வச் சிறப்புகளை ஆண்டவர் யோபுக்கு மீண்டும் அளித்தல்
10 யோபு தம் நண்பர்களுக்காக மன்றாடின பிறகு, ஆண்டவர் செல்வங்களையெல்லாம் மீண்டும் நல்கினார். மேலும் அவர் யோபுக்கு இருந்தனவற்றை எல்லாம் இரண்டு மடங்கு ஆக்கினார்.
11 பின்னர் அவருடைய எல்லாச் சகோதரர்களும், சகோதரிகளும், அவரை முன்பு தெரிந்திருந்த அனைவரும் அவரிடம் வந்தனர்; அவரது இல்லத்தில் அவரோடு விருந்துண்டனர்; ஆண்டவர் அவருக்கு வரச்செய்த தீமை அனைத்திற்காகவும் ஆறுதல் கூறி அவரைத் தேற்றினர். ஒவ்வொருவரும் அவருக்கு வெள்ளியும் பொன்மோதிரமும் வழங்கினர்.
12 யோபின் முன்னைய நாள்களில் இருந்ததைவிட, பின்னைய நாள்களில் ஆண்டவர் அதிகமாக ஆசிவழங்கினார். இப்பொழுது பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்மாடுகளும், ஆயிரம் பெட்டைக் கழுதைகளும் அவருக்கு இருந்தன.
13 அவருக்கு ஏழு புதல்வர்களும் மூன்று புதல்வியரும் பிறந்தனர்.
14 மூத்த மகளுக்கு எமிமா என்றும், இரண்டாவது மகளுக்குக் கெட்டிசியா என்றும், மூன்றாவது மகளுக்குக் கெரென் அப்பூக்கு என்றும் பெயரிட்டார்.
15 யோபின் புதல்வியரைப் போல் அழகுவாய்ந்த நங்கையர் நாடெங்கும் இருந்ததில்லை. அவர்களின் தந்தை, அவர்களின் சகோதரர்களோடு அவர்களுக்கும் சொத்தில் உரிமை கொடுத்தார்.
16 அதன்பின் யோபு நூற்று நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தார்; தம் பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் நான்காம் தலைமுறைவரை கண்டுகளித்தார்.
17 இவ்வாறு யோபு முதுமை அடைந்து, பல்லாண்டு வாழ்ந்து இறந்தார்.
42:3 யோபு 38:2.
42:4 யோபு 38:3.
42:10 யோபு 1:1-3. | https://bible.catholicgallery.org/tamil/etb-job-42 |
478 | திருப்பாடல்கள் | திருப்பாடல்கள் அதிகாரம் – 1 – திருவிவிலியம் | முதல் பகுதி
(1-41)
நற்பேறு பெற்றோர்
1 நற்பேறு பெற்றவர் யார்? – அவர்
பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்;
பாவிகளின் தீயவழி நில்லாதவர்;
இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;
2 ஆனால், அவர் ஆண்டவரின்
திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்;
அவரது சட்டத்தைப்பற்றி
இரவும் பகலும் சிந்திப்பவர்;
3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட
மரம் போல் இருப்பார்;
பருவகாலத்தில் கனிதந்து,
என்றும் பசுமையாய் இருக்கும்
அம்மரத்திற்கு ஒப்பாவார்;
தாம் செய்வதனைத்திலும்
வெற்றி பெறுவார்.
4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை;
அவர்கள் காற்று அடித்துச் செல்லும்
பதரைப்போல் ஆவர்.
5 பொல்லார் நீதித் தீர்ப்பின்போது
நிலைநிற்க மாட்டார்;
பாவிகள் நேர்மையாளரின்
மன்றத்தில் இடம் பெறார்.
6 நேர்மையாளரின் நெறியை
ஆண்டவர் கருத்தில் கொள்வார்;
பொல்லாரின் வழியோ அழிவைத் தரும்.
1:3 எரே 17:8. | https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-1 |
479 | திருப்பாடல்கள் | திருப்பாடல்கள் அதிகாரம் – 2 – திருவிவிலியம் | கடவுள் தேர்ந்து கொண்ட அரசர்
1 வேற்றினத்தார் சீறி எழுவதேன்?
மக்களினங்கள் வீணாகச்
சூழ்ச்சி செய்வதேன்?
2 ஆண்டவருக்கும் அவர்தம் அருள் பொழிவு
பெற்றவர்க்கும் எதிராகப்
பூவுலகின் அரசர்கள்
அணிவகுத்து நிற்கின்றார்கள்;
ஆள்வோர் ஒன்றுகூடிச்
சதிசெய்கின்றார்கள்;
3 ‛அவர்கள் பூட்டிய தளைகளைத்
தகர்ப்போம்;
அவர்கள் வைத்த கண்ணிகளை
நம்மிடமிருந்து அறுத்தெறிவோம்’
என்கின்றார்கள்.
4 விண்ணுலகில் வீற்றிருப்பவர்
எள்ளி நகைக்கின்றார்;
என் தலைவர் அவர்களைப் பார்த்து
ஏளனம் செய்கின்றார்.
5 அவர் சினமுற்று
அவர்களை மிரட்டுகின்றார்;
கடுஞ்சினத்தால் அவர்களைக்
கலங்கடிக்கின்றார்;
6 ‛என் திருமலையாகிய சீயோனில்
நானே என் அரசரைத்
திருநிலைப்படுத்தனேன்.’
7 ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை
நான் அறிவிக்கின்றேன்;
‛நீர் என் மைந்தர்; இன்று நான்
உம்மைப் பெற்றெடுத்தேன்.
8 நீர் விரும்புவதை என்னிடம் கேளும்;
பிறநாடுகளை உமக்கு
உரிமைச் சொத்தாக்குவேன்;
பூவுலகை அதன் கடையெல்லைவரை
உமக்கு உடைமையாக்குவேன்.
9 இருப்புக் கோலால்
நீர் அவர்களைத் தாக்குவீர்;
குயவன் கலத்தைப்போல
அவர்களை நொறுக்குவீர்.’
10 ஆகவே, மன்னர்களே,
விவேகமாக நடந்துகொள்ளுங்கள்;
பூவுலகை ஆள்வோரே,
எச்சரிக்கையாயிருங்கள்.
11 அச்சத்தோடு ஆண்டவரை
வழிபடுங்கள்; நடுநடுங்குங்கள்!
அவர்முன் அக மகிழுங்கள்!
12 அவர் சினங்கொள்ளாதபடியும்
நீங்கள் வழியில் அழியாதபடியும்
அவரது காலடியை முத்தமிடுங்கள்;
இல்லையேல், அவரது சினம்
விரைவில் பற்றியெரியும்;
அவரிடம் அடைக்கலம் புகுவோர்
அனைவரும் பேறுபெற்றோர்.
2:1-2 திப 4:25-26.
2:7 திப 13:33; எபி 1:5; 5:5.
2:9 திவெ 2:26-27; 12:5; 19:15. | https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-2 |
480 | திருப்பாடல்கள் | திருப்பாடல்கள் அதிகாரம் – 3 – திருவிவிலியம் | காலை மன்றாட்டு
(தாவீதின் புகழ்ப்பா: தம் மகன் அப்சலோமிடமிருந்து தப்பியோடிய போது அவர் பாடியது)
1 ஆண்டவரே, என் எதிரிகள்
எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்!
என்னை எதிர்த்து எழுவோர்
எத்தனை மிகுந்து விட்டனர்!
2 ‛கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்’
என்று என்னைக் குறித்துச்
சொல்வோர் பலர். (சேலா)
3 ஆயினும், ஆண்டவரே,
நீரே எனைக் காக்கும் கேடயம்;
நீரே என் மாட்சி; என்னைத்
தலைநிமிரச் செய்பவரும் நீரே.
4 நான் உரத்த குரலில்
ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்;
அவர் தமது திருமலையிலிருந்து
எனக்குப் பதிலளிப்பார். (சேலா)
5 நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்;
ஏனெனில்,
ஆண்டவரே எனக்கு ஆதரவு.
6 என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம்
பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன்.
7 ஆண்டவரே, எழுந்தருளும்;
என் கடவுளே, என்னை மீட்டருளும்;
என் எதிரிகள் அனைவரையும்
கன்னத்தில் அறையும்!
பொல்லாரின் பல்லை உடையும்!
8 விடுதலை அளிப்பவர் ஆண்டவர்;
அவர்தம் மக்களுக்கு
ஆசி வழங்குவாராக! (சேலா)
3 தலைப்பு: 2 சாமு 15:13 – 17:22. | https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-3 |
481 | திருப்பாடல்கள் | திருப்பாடல்கள் அதிகாரம் – 4 – திருவிவிலியம் | மாலை மன்றாட்டு
(பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; தாவீதின் புகழ்ப்பா)
1 எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே,
நான் மன்றாடும்போது
எனக்குப் பதிலளித்தருளும்;
நான் நெருக்கடியில் இருந்தபோது,
நீர் எனக்குத் துணைபுரிந்தீர்;
இப்போதும் எனக்கு இரங்கி,
என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்;
2 மானிடரே! எவ்வளவு காலம்
எனக்குரிய மாட்சிக்கு
இழுக்கைக் கொண்டு வருவீர்கள்?
எவ்வளவு காலம் வெறுமையை விரும்பிப்
பொய்யானதை நாடிச் செல்வீர்கள்? (சேலா)
3 ஆண்டவர் என்னைத் தம்
அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்;
நான் மன்றாடும் போது
அவர் எனக்குச் செவி சாய்க்கின்றார்;
– இதை அறிந்துகொள்ளுங்கள்.
4 சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்;
படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி
அமைதியாயிருங்கள். (சேலா)
5 முறையான பலிகளைச் செலுத்துங்கள்;
ஆண்டவரை நம்புங்கள்.
6 ‛நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?’
எனக் கேட்பவர் பலர்.
ஆண்டவரே, எங்கள்மீது உமது
முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும்.
7 தானியமும் திராட்சையும்
நன்கு விளையும் காலத்தில் அடையும்
மகிழ்ச்சியைவிட மேலான மகிழ்ச்சியை
நீர் என் உள்ளத்திற்கு அளித்தீர்.
8 இனி, நான் மன அமைதியுடன்
படுத்துறங்குவேன்; ஏனெனில்,
ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும்
நீரே என்னைப் பாதுகாப்புடன்
வாழச் செய்கின்றீர்.
4:4 எபே 4:26. | https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-4 |
482 | திருப்பாடல்கள் | திருப்பாடல்கள் அதிகாரம் – 5 – திருவிவிலியம் | பாதுகாப்புக்காக மன்றாடல்
(பாடகர் தலைவர்க்கு: குழல்களுடன்; தாவீதின் புகழ்ப்பா)
1 ஆண்டவரே, என் விண்ணப்பத்திற்குச்
செவிசாய்த்தருளும்;
என் பெருமூச்சைக் கவனித்தருளும்.
2 என் அரசரே, என் கடவுளே,
என் கெஞ்சும் குரலை உற்றுக்கேளும்;
ஏனெனில். நான் உம்மை நோக்கியே
மன்றாடுகின்றேன்.
3 ஆண்டவரே, விடியற்காலையில்
என் குரலைக் கேட்டருளும்;
வைகறையில் உமக்காக வழிமேல்
விழிவைத்துக் காத்திருப்பேன்.
4 ஏனெனில், நீர் பொல்லாங்கைப் பார்த்து
மகிழும் இறைவன் இல்லை;
உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை.
5 ஆணவமிக்கோர்
உமது கண்முன் நிற்க மாட்டார்;
தீங்கிழைக்கும் அனைவரையும்
நீர் வெறுக்கின்றீர்.
6 பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்;
கொலை வெறியரையும் வஞ்சகரையும்
அருவருக்கின்றீர்.
7 நானோ உம் பேரருளால்
உமது இல்லம் சென்றிடுவேன்;
உம் திருத்தூயகத்தை நோக்கி
இறையச்சத்துடன்
உம்மைப் பணிந்திடுவேன்;
8 ஆண்டவரே, எனக்குப் பகைவர்
பலர் இருப்பதால்,
உமது நீதியின் பாதையில்
என்னை நடத்தும்;
உமது செம்மையான வழியை
எனக்குக் காட்டியருளும்.
9 ஏனெனில், அவர்கள் வாயில்
உண்மை இல்லை; அவர்கள் உள்ளம்
அழிவை உண்டாக்கும்;
அவர்கள் தொண்டை திறந்த பிணக்குழி;
அவர்கள் நா வஞ்சகம் பேசும்.
10 கடவுளே, அவர்களின் குற்றங்களுக்குரிய
தண்டனையை அவர்களுக்கு அளியும்;
அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளாலேயே
வீழ்ச்சியுறட்டும்;
அவர்களுடைய ஏராளமான
தீச்செயல்களை முன்னிட்டு,
அவர்களைப் புறம்பே தள்ளிவிடும்.
ஏனெனில், அவர்கள்
உம்மை எதிர்த்துள்ளார்கள்.
11 ஆனால், உம்மிடம் அடைக்கலம் புகுவோர்
அனைவரும் மகிழ்வர்;
அவர்கள் எந்நாளும் களித்து ஆர்ப்பரிப்பர்;
நீர் அவர்களைப் பாதுகாப்பீர்;
உமது பெயரில் பற்றுடையோர்
உம்மில் அக்களிப்பர்.
12 ஏனெனில், ஆண்டவரே,
நேர்மையாளர்க்கு நீர் ஆசிவழங்குவீர்;
கருணை என்னும் கேடயத்தால்
அவரை மறைத்துக் காப்பீர்.
5:9 உரோ 3:13. | https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-5 |
483 | திருப்பாடல்கள் | திருப்பாடல்கள் அதிகாரம் – 6 – திருவிவிலியம் | இக்கட்டுக் காலத்தில் உதவுமாறு வேண்டல்
(பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; எட்டாம் கட்டையில்; தாவீதின் புகழ்ப்பா)
1 ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு
என்னைக் கண்டியாதேயும்;
என் மீது கடுஞ்சீற்றங்கொண்டு
என்னைத் தண்டியாதேயும்.
2 ஆண்டவரே, எனக்கு இரங்கும்;
ஏனெனில், நான் தளர்ந்து போனேன்;
ஆண்டவரே, என்னைக் குணமாக்கியருளும்;
ஏனெனில், என் எலும்புகள்
வலுவிழந்து போயின.
3 என் உயிர் ஊசலாடுகின்றது;
ஆண்டவரே, இந்நிலை எத்தனை நாள்?
4 ஆண்டவரே, திரும்பும்;
என் உயிரைக் காப்பாற்றும்.
உமது பேரன்பை முன்னிட்டு
என்னை மீட்டருளும்.
5 இறந்தபின் உம்மை நினைப்பவர்
எவருமில்லை; பாதாளத்தில்
உம்மைப் போற்றுபவர் யார்?
6 பெருமூச்சினால் இளைத்துப் போனேன்;
ஒவ்வோர் இரவும் கண்ணீரில்
என் படுக்கை மிதக்கின்றது.
என் கட்டில் அழுகையால் நனைகின்றது.
7 துயரத்தால் என் கண் வீங்கிப்போயிற்று;
என் பகைவர் அனைவரின் காரணமாக
அது மங்கிப்போயிற்று.
8 தீங்கிழைப்போரே! நீங்கள் அனைவரும்
என்னை விட்டு அகன்றுபோங்கள்;
ஏனெனில், ஆண்டவர் என்
அழுகுரலுக்குச் செவிசாய்த்து விட்டார்.
9 ஆண்டவர் என் விண்ணப்பத்தைக்
கேட்டருளினார்; அவர் என்
வேண்டுதலை ஏற்றுக்கொண்டார்.
10 என் எதிரிகள் யாவரும்
வெட்கிப் பெரிதும் கலங்கட்டும்;
அவர்கள் திடீரென
நாணமுற்றுத் திரும்பிச் செல்லட்டும்.
6:1 திபா 38:1. | https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-6 |
484 | திருப்பாடல்கள் | திருப்பாடல்கள் அதிகாரம் – 7 – திருவிவிலியம் | நீதி வழங்குமாறு வேண்டல்
(தாவீதின் புலம்பல்; பென்யமினியனான கூசின் சொற்களைக் கேட்டுத் தாவீது ஆண்டவரை நோக்கிப் பாடியது)
1 என் கடவுளாகிய ஆண்டவரே,
உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன்;
என்னைத் துரத்துவோர் அனைவரிடமிருந்தும்
என்னைக் காப்பாற்றித் தப்புவியும்.
2 இல்லையெனில், என் எதிரிகள் சிங்கம்போல
என்னைப் பீறிக் கிழித்துப் போடுவார்கள்;
விடுவிப்போர் எவரும் இரார்.
3 என் கடவுளாகிய ஆண்டவரே,
நான் இவற்றைச் செய்திருந்தால் –
என் கை தவறிழைத்திருந்தால்,
4 என்னோடு நல்லுறவு கொண்டிருந்தவனுக்கு
நான் தீங்கிழைத்திருந்தால்,
என் பகைவனைக் காரணமின்றிக்
காட்டிக்கொடுத்திருந்தால் –
5 எதிரி என்னைத் துரத்திப் பிடிக்கட்டும்;
என்னைத் தரையில் தள்ளி
மிதித்து நசுக்கட்டும்;
என் பெருமையைப் புழுதியில்
புதைக்கட்டும். (சேலா)
6 ஆண்டவரே, சினங்கொண்டு
எழுந்தருளும்;
என் பகைவரின் சீற்றத்தை
அடக்க வாரும்;
எனக்காக விழித்தெழும்;
ஏனெனில், நீதியை நிலைநாட்டுபவர்
நீர் ஒருவரே.
7 எல்லா இனத்தாரும் ஒன்றுகூடி
உம்மைச் சூழச் செய்யும்;
அவர்கள்மீது உயரத்தினின்று
ஆட்சி செலுத்தும்.
8 ஆண்டவரே, நீரே மக்களினத்தார்
அனைவருக்கும் நீதி வழங்குபவர்;
ஆண்டவரே, என் நேர்மைக்கும்
வாய்மைக்கும் ஏற்ப
எனக்குத் தீர்ப்பளியும்.
9 பொல்லாரின் தீமையை
முடிவுக்குக் கொண்டுவாரும்;
நல்லாரை நிலைநிறுத்தும்;
நீர் எண்ணங்களையும்
விருப்பங்களையும் கண்டறிபவர்;
நீதி அருளும் கடவுள்.
10 கடவுளே என் கேடயம்;
நேரிய உளத்தோரை
அவர் விடுவிப்பார்.
11 கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி;
நாள்தோறும் அநீதியைப்
பொறுத்துக் கொள்ளாத இறைவன்.
12 பொல்லார் மனமாற்றம் அடையாவிடில்,
அவர் தம் வாளைக் கூர்மையாக்குவார்;
வில்லை நாணேற்றி ஆயத்தம் செய்வார்.
13 கொலைக் கருவிகளை ஆயத்தமாக்குவார்;
அம்புகளை அனல் பறக்கும்படி எய்வார்;
14 ஏனெனில், பொல்லார்
கொடுமையைக் கருக்கொள்கின்றனர்;
அவர்கள் தீவினையைக் கருத்தாங்கி,
பொய்மையைப் பெற்றெடுக்கின்றனர்.
15 அவர்கள் குழியை வெட்டி
ஆழமாகத் தோண்டுகின்றனர்;
அவர்கள் வெட்டிய குழியில்
அவர்களே விழுகின்றனர்;
16 அவர்கள் செய்த கேடு
அவர்கள் தலைக்கே திரும்பும்.
அவர்கள் செய்த கொடுமை
அவர்கள் உச்சந்தலையிலேயே விழும்.
17 ஆண்டவர் வழங்கிய நீதிக்காக
அவருக்கு நன்றி கூறுவேன்;
உன்னதரான ஆண்டவரின் பெயரைப்
போற்றிப் பாடுவேன்.
7:9 திவெ 2:23. | https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-7 |
485 | திருப்பாடல்கள் | திருப்பாடல்கள் அதிகாரம் – 8 – திருவிவிலியம் | இறைவனின் மாட்சியும் மானிடரின் மேன்மையும்
(பாடகர் தலைவர்க்கு: ‘காத்து’ நகர்ப் பண்; தாவீதின் புகழ்ப்பா)
1 ஆண்டவரே! எங்கள் தலைவரே!
உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு
மேன்மையாய் விளங்குகின்றது!
உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும்
உயர்ந்துள்ளது.
2 பாலகரின் மழலையிலும்
குழந்தைகளின் மொழியிலும்
வலிமையை உறுதிப்படுத்தி
உம் பகைவரை ஒடுக்கினீர்;
எதிரியையும் பழிவாங்குவோரையும்
அடக்கினீர்.
3 உமது கைவேலைப்பாடாகிய
வானத்தையும்
அதில் நீர் பொருத்தியுள்ள
நிலாவையும் விண்மீன்களையும்
நான் நோக்கும்போது,
4 மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு
அவர்கள் யார்?
மனிதப் பிறவிகளை
நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு
அவர்கள் எம்மாத்திரம்?
5 ஆயினும், அவர்களைக்
கடவுளாகிய* உமக்குச்
சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்;
மாட்சியையும் மேன்மையையும்
அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.
6 உமது கை படைத்தவற்றை
அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்;
எல்லாவற்றையும்
அவர்கள் பாதங்களுக்குக்
கீழ்ப்படுத்தியுள்ளீர்.
7 ஆடுமாடுகள், எல்லா வகையான
காட்டு விலங்குகள்,
8 வானத்துப் பறவைகள்,
கடல் மீன்கள்,
ஆழ்கடலில் நீந்திச் செல்லும்
உயிரினங்கள் அனைத்தையும்
அவர்களுக்குக் கீழ்படுத்தியுள்ளீர்.
9 ஆண்டவரே, எங்கள் தலைவரே,
உமது பெயர் உலகெங்கும்
எவ்வளவு மேன்மையாய்
விளங்குகின்றது!
8:2 மத் 21:16.
8:4 யோபு 7:17-18; திபா 144:3; எபி 2:6-8.
8:6 1 கொரி 15:27; எபே 1:22; எபி 2:8.
8:5 ‘வானதூதர்க்கு’ என்றும் மொழிபெயர்க்கலாம். | https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-8 |
486 | திருப்பாடல்கள் | திருப்பாடல்கள் அதிகாரம் – 9 – திருவிவிலியம் | நீதியின் கடவுளுக்கு நன்றி செலுத்துதல்
(பாடகர் தலைவர்க்கு: ‛மகனுக்காக உயிரைக்கொடு’ என்ற மெட்டு; தாவீதின் புகழ்ப்பா)
1 ஆண்டவரே, என் முழு இதயத்தாலும்
உம்மைப் புகழ்வேன்; வியத்தகு உம்
செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்.
2 உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களிகூர்வேன்;
உன்னதரே, உமது பெயரைப்
போற்றிப் பாடுவேன்.
3 என் எதிரிகள் பின்னிட்டுத் திரும்புவார்கள்;
உமது முன்னிலையில்
இடறிவிழுந்து அழிவார்கள்.
4 நீர் நீதியுள்ள நடுவராய்
அரியணையில் வீற்றிருக்கின்றீர்;
என் வழக்கில் எனக்கு நீதி வழங்கினீர்.
5 வேற்றினத்தாரைக் கண்டித்தீர்;
பொல்லாரை அழித்தீர்;
அவர்களது பெயர் இனி இராதபடி
அடியோடு ஒழித்துவிட்டீர்.
6 எதிரிகள் ஒழிந்தார்கள்; என்றும்
தலையெடுக்கமுடியாமல் அழிந்தார்கள்.
7 அவர்களின் நகர்களை
நீர் தரைமட்டம் ஆக்கினீர்;
அவர்களைப்பற்றிய நினைவு
அற்றுப் போயிற்று.
ஆண்டவர் அரியணையில்
என்றென்றும் வீற்றிருக்கின்றார்;
நீதி வழங்குவதற்கென்று
அவர் தம் அரியணையை
அமைத்திருக்கின்றார்.
8 உலகிற்கு அவர்
நீதியான தீர்ப்பு வழங்குவார்;
மக்களினத்தார்க்கு
நேர்மையான தீர்ப்புக் கூறுவார்.
9 ஒடுக்கப்படுவோருக்கு
ஆண்டவரே அடைக்கலம்;
நெருக்கடியான வேளைகளில்
புகலிடம் அவரே.
10 உமது பெயரை அறிந்தோர்
உம்மில் நம்பிக்கை கொள்வர்;
ஆண்டவரே, உம்மை நாடி வருவோரை
நீர் கைவிடுவதில்லை.
11 சீயோனில் தங்கியிருக்கும்
ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;
அவருடைய செயல்களை
மக்களினத்தாரிடையே அறிவியுங்கள்;
12 ஏனெனில், இரத்தப்பழி வாங்கும் அவர்
எளியோரை நினைவில் கொள்கின்றார்;
அவர்களின் கதறலை
அவர் கேட்க மறவார்.
13 ஆண்டவரே, என்மீது இரக்கமாயிரும்;
என்னைப் பகைப்போரால்
எனக்கு வரும் துன்பத்தைப் பாரும்;
சாவின் வாயினின்று என்னை விடுவியும்.
14 அப்பொழுது, மகள் சீயோனின் வாயில்களில்
உம் புகழ் அனைத்தையும் பாடுவேன்;
நீர் அளிக்கும் விடுதலைகுறித்து
அகமகிழ்வேன்.
15 வேற்றினத்தார் வெட்டின குழியில்
அவர்களே விழுந்தனர்;
அவர்கள் மறைத்து வைத்திருந்த வலையில்
அவர்கள் கால்களே சிக்கிக்கொண்டன.
16 ஆண்டவர் நீதியை நிலைநாட்டுவதன் மூலம்
தம்மை வெளிப்படுத்தியுள்ளார்;
பொல்லார் செய்த செயலில்
அவர்களே சிக்கிக்கொண்டனர். (இடை இசை: சேலா)
17 பொல்லார் பாதாளத்திற்கே செல்வர்;
கடவுளை மறந்திருக்கும்
வேற்றினத்தார் யாவரும் அங்கே செல்வர்.
18 மாறாக, வறியவர் என்றுமே
மறக்கப்படுவதில்லை;
எளியோரின் நம்பிக்கை
ஒருபோதும் வீண்போகாது.
19 ஆண்டவரே, எழுந்தருளும்;
மனிதரின் கை ஓங்க விடாதேயும்;
வேற்றினத்தார் உமது முன்னிலையில்
தீர்ப்புப் பெறுவார்களாக!
20 ஆண்டவரே, அவர்களைத்
திகிலடையச் செய்யும்;
தாம் வெறும் மனிதரே என்பதை
வேற்றினத்தார் உணர்வார்களாக! (சேலா) | https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-9 |
487 | திருப்பாடல்கள் | திருப்பாடல்கள் அதிகாரம் – 10 – திருவிவிலியம் | நீதிக்காக வேண்டல்
1 ஆண்டவரே, ஏன் தொலைவில்
நிற்கின்றீர்?
தொல்லைமிகு நேரங்களில்
ஏன் மறைந்துகொள்கின்றீர்?
2 பொல்லார் தம் இறுமாப்பினால்
எளியோரைக் கொடுமைப்படுத்துகின்றனர்;
அவர்கள் வகுத்த சதித்திட்டங்களில்
அவர்களே அகப்பட்டுக் கொள்வார்களாக.
3 பொல்லார் தம் தீய நாட்டங்களில்
தற்பெருமை கொள்கின்றனர்;
பேராசையுடையோர் ஆண்டவரைப்
பழித்துப் புறக்கணிக்கின்றனர்.
4 பொல்லார் செருக்கு உள்ளவராதலால்
அவரைத் தேடார்;
அவர்கள் எண்ணமெல்லாம்
‛கடவுள் இல்லை!
5 எம் வழிகள் என்றும் நிலைக்கும்’ என்பதே.
உம் தீர்ப்புகளோ மிக மேலானவை;
அவர்களின் அறிவுக்கு எட்டாதவை.
தம் பகைவர் அனைவரையும் பார்த்து
அவர்கள் நகைக்கின்றனர்.
6 ‛எவராலும் என்னை அசைக்க முடியாது;
எந்தத் தலைமுறையிலும்
எனக்குக் கேடு வராது’ என்று
அவர்கள் தமக்குள் சொல்லிக்கொள்வர்.
7 அவர்களது வாய் சாபமும் கபடும்
கொடுமையும் நிறைந்தது;
அவர்களது நாவினடியில்
கேடும் தீங்கும் இருக்கின்றன.
8 ஊர்களில் அவர்கள் ஒளிந்து
காத்திருக்கின்றனர்;
சூதறியாதவர்களை மறைவான இடங்களில்
கொலை செய்கின்றனர்;
திக்கற்றவர்களைப் பிடிப்பதிலேயே
அவர்கள் கண்ணாயிருக்கின்றனர்.
9 குகையிலிருக்கும் சிங்கம்போல் அவர்கள்
மறைவில் பதுங்கியிருக்கின்றனர்;
எளியோரைப் பிடிப்பதற்காகவே
அவர்கள் பதுங்கியிருக்கின்றனர்;
தம் வலையில் சிக்கவைத்து
இழுத்துச் செல்கின்றனர்.
10 அவர்கள் எளியோரை
நலிவுறச் செய்து நசுக்குகின்றனர்;
அவர்களது கொடிய வலிமையால்
ஏழைகள் வீழ்த்தப்படுகின்றனர்.
11 ‛இறைவன் மறந்துவிட்டார்;
தம் முகத்தை மூடிக்கொண்டார்;
என்றுமே எம்மைப் பார்க்க மாட்டார்’ என்று
பொல்லார் தமக்குள்
சொல்லிக் கொள்கின்றனர்.
12 ஆண்டவரே, எழுந்தருளும்!
இறைவா, எமது ஆற்றலை வெளிப்படுத்தும்!
எளியோரை மறந்துவிடாதேயும்.
13 பொல்லார் கடவுளைப் புறக்கணிப்பது ஏன்?
அவர் தம்மை விசாரணை
செய்யமாட்டாரென்று அவர்கள்
தமக்குள் சொல்லிக்கொள்வது ஏன்?
14 ஆனால், உண்மையில் நீர் கவனிக்கின்றீர்;
கேட்டையும் துயரத்தையும் பார்த்து,
உதவி செய்யக் காத்திருக்கின்றீர்;
திக்கற்றவர் தம்மை
உம்மிடம் ஒப்படைக்கின்றனர்;
அனாதைக்கு நீரே துணை.
15 பொல்லார் மற்றும் தீயோர் கைகளை
முறித்துவிடும்; அவர்களது
பொல்லாங்கைத் தேடிக் கண்டுபிடித்து,
அது அற்றுப்போகச் செய்யும்.
16 ஆண்டவர் என்றுமுள அரசர்;
அவரது நிலத்தினின்று
வேற்றினத்தார் அகன்று விடுவர்.
17 ஆண்டவரே, எளியோரின் விருப்பத்தை
நீர் நிறைவேற்றுகின்றீர்;
அவர்கள் உள்ளத்திற்கு ஊக்கம் அளித்து
அவர்களுக்குச் செவிசாய்க்கின்றீர்.
18 நீர் அனாதைகளுக்கும்
ஒடுக்கப்படுகிறவர்களுக்கும்
நீதி வழங்குகின்றீர்;
மண்ணினின்று தோன்றிய மனிதர்
இனியும் அவர்களைத் துன்புறுத்த மாட்டார்.
10:7 உரோ 3:14. | https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-10 |
488 | திருப்பாடல்கள் | திருப்பாடல்கள் அதிகாரம் – 11 – திருவிவிலியம் | ஆண்டவரிடம் நம்பிக்கை
(பாடகர் தலைவர்க்கு: தாவீதுக்கு உரியது)
1 நான் ஆண்டவரிடம் அடைக்கலம்
புகுந்துள்ளேன்;
நீங்கள் என்னிடம், ‛பறவையைப் போல
மலைக்குப் பறந்தோடிப் போ;
2 ஏனெனில், இதோ பார்!
பொல்லார் வில்லை வளைக்கின்றனர்;
நாணில் அம்பு தொடுக்கின்றனர்;
நேரிய உள்ளத்தார்மீது
இருளில் அம்பு எய்யப் பார்க்கின்றனர்;
3 அடித்தளங்களே தகர்க்கப்படும்பொழுது,
நேர்மையாளரால் என்ன செய்ய முடியும்?’
என்று சொல்வது எப்படி?
4 ஆண்டவர் தம் தூய கோவிலில்
இருக்கின்றார்; அவரது அரியணை
விண்ணுலகில் இருக்கின்றது;
அவர் கண்கள் உற்று நோக்குகின்றன;
அவர் விழிகள்
மானிடரைச் சோதித்தறிகின்றன.
5 ஆண்டவர் நேர்மையாளரையும்
பொல்லாரையும் சோதித்தறிகின்றார்;
வன்முறையில் நாட்டங்கொள்வோரை
அவர் வெறுக்கின்றார்.
6 அவர் பொல்லார்மீது கரிநெருப்பும்
கந்தகமும் சொரியும்படி செய்கின்றார்;
பொசுக்கும் தீக்காற்றே
அவர்கள் குடிக்கும் பானமாகும்.
7 ஏனெனில், நீதியுள்ள ஆண்டவர்
நேரிய செயல்களை விரும்புகின்றார்;
அவர்தம் திருமுகத்தை
நேர்மையாளர் காண்பர். | https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-11 |
489 | திருப்பாடல்கள் | திருப்பாடல்கள் அதிகாரம் – 12 – திருவிவிலியம் | உதவிக்காக மன்றாடல்
(பாடகர் தலைவர்க்கு: எட்டாம் கட்டையில்; தாவீதின் புகழ்ப்பா)
1 ஆண்டவரே, காத்தருளும்;
ஏனெனில் உலகில்
இறையன்பர்கள் அற்றுப் போயினர்;
மானிடருள் மெய்யடியார் மறைந்து போயினர்.
2 ஒருவர் அடுத்திருப்பாரிடம்
பொய் பேசுகின்றனர்;
தேனொழுகும் இதழால்
இருமனத்தோடு பேசுகின்றனர்.
3 தேனொழுகப் பேசும் எல்லா உதடுகளையும்
ஆண்டவரே, துண்டித்துவிடுவீராக!
பெருமையடித்துக் கொள்ளும் நாவை
அறுத்துவிடுவீராக!
4 ‛எங்கள் நாவன்மை எங்கள் வலிமை;
எங்கள் பேச்சுத்திறனே
எங்கள் பக்கத் துணை;
எங்களுக்குத் தலைவர் வேறு யார்?’
என்று சொல்பவரை ஒழித்துவிடுவீராக!
5 ‛எளியோரின் புலம்பலையும்
வறியோரின் பெருமூச்சையும் கேட்டு
இப்பொழுதே எழுந்து வருகின்றேன்;
அவர்கள் ஏங்குகின்றபடி
*அவர்களைப் பாதுகாப்பில் வைப்பேன்*’
என்கின்றார் ஆண்டவர்.
6 ஆண்டவரின் வாக்குறுதிகள்
கலப்பற்ற வாக்குறுதிகள்;
மண் உலையில் தூய்மையாக்கப்பட்ட
வெள்ளி போன்றவை;
ஏழுமுறை புடமிடப்பட்டவை.
7 ஆண்டவரே, நீர் எம்மைக் காத்தருளும்;
இத்தகைய தலைமுறையிடமிருந்து
எம்மை என்றும் காப்பாற்றும்.
8 பொல்லார் எம்மருங்கும்
உலாவருகின்றனர்; மானிடரிடையே
பொல்லாப்பே ஓங்கி நிற்கின்றது.
12:5 *…* ‘அவன் அவர்கள் மீது சீறுகின்றான்’ என்பது எபிரேய பாடம். | https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-12 |
490 | திருப்பாடல்கள் | திருப்பாடல்கள் அதிகாரம் – 13 – திருவிவிலியம் | உதவிக்காக மன்றாடல்
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)
1 ஆண்டவரே, எத்தனை நாள்
என்னை மறந்திருப்பீர்?
இறுதிவரை மறந்துவிடுவீரோ?
இன்னும் எத்தனை நாள்
உமது முகத்தை எனக்கு மறைப்பீர்?
2 எத்தனை நாள் வேதனையுற்று
எனக்குள் போராடுவேன்?
நாள் முழுதும் என் இதயம் துயருறுகின்றது;
எத்தனை நாள் என் எதிரி
எனக்கெதிராய் மேலோங்கி நிற்பான்?
3 என் கடவுளாகிய ஆண்டவரே,
என்னைக் கண்ணோக்கி
எனக்குப் பதில் அளித்தருளும்;
என் விழிகளுக்கு ஒளியூட்டும்.
4 அப்பொழுது, நான் சாவின் உறக்கத்தில்
ஆழ்ந்து விடமாட்டேன்; என் எதிரி,
‛நான் அவனை வீழ்த்திவிட்டேன்’
என்று சொல்லமாட்டான்;
நான் வீழ்ச்சியுற்றேன் என்று
என் பகைவர் அக்களிக்கவுமாட்டார்.
5 நான் உமது பேரன்பில் நம்பிக்கை
வைத்திருக்கின்றேன்;
நீர் அளிக்கும் விடுதலையால்
என் இதயம் களிகூரும்.
6 நான் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்;
ஏனெனில், அவர் எனக்கு
நன்மை பல செய்துள்ளார். | https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-13 |
491 | திருப்பாடல்கள் | திருப்பாடல்கள் அதிகாரம் – 14 – திருவிவிலியம் | இறைப்பற்று இல்லார்
(பாடகர் தலைவர்க்கு: தாவீதுக்கு உரியது)
(திபா 53)
1 ‛கடவுள் இல்லை’ என அறிவிலிகள்
தம் உள்ளத்தில்
சொல்லிக் கொள்கின்றனர்;
அவர்கள் சீர்கெட்டு அருவருப்பான
செயல்களில் ஈடுபடுகின்றனர்.
நல்லது செய்வோர் எவருமே இல்லை.
2 ஆண்டவர் விண்ணகத்தினின்று
மானிடரை உற்றுநோக்குகின்றார்;
மதிநுட்பமுள்ளோர், கடவுளை நாடுவோர்
எவராவது உண்டோ எனப் பார்க்கின்றார்.
3 எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்;
ஒருமிக்கக் கெட்டுப்போயினர்;
நல்லது செய்வார் யாரும் இல்லை;
ஒருவர்கூட இல்லை.
4 தீங்கிழைக்கும் யாவரும்
அறிவை இழந்துவிட்டார்களோ?
உணவை விழுங்குவதுபோல்
என் மக்களை விழுங்கப்பார்க்கிறார்களே!
அவர்கள் ஆண்டவரை நோக்கி
மன்றாடுவதுமில்லை.
5 அவர்கள் அஞ்சி நடுங்குவர்;
ஏனெனில், கடவுள் நேர்மையாளரின்
வழிமரபோடு இருக்கின்றார்.
6 எளியோரின் திட்டத்தை அவர்கள்
தோல்வியுறச் செய்கின்றார்கள்;
ஆனால், ஆண்டவர் எளியோர்க்கு
அடைக்கலமாய் இருக்கின்றார்.
7 சீயோனிலிருந்து இஸ்ரயேலருக்கு
மீட்பு வருவதாக!
ஆண்டவர் தம் மக்களுக்கு
மீண்டும் வளமான வாழ்வை அருளும்போது,
யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக!
இஸ்ரயேல் மக்கள் அகமகிழ்வராக!
14:1-3 உரோ 3:10-12. | https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-14 |
492 | திருப்பாடல்கள் | திருப்பாடல்கள் அதிகாரம் – 15 – திருவிவிலியம் | கடவுள் மனிதரிடம் எதிர்பார்ப்பவை
(தாவீதின் புகழ்ப்பா)
1 ஆண்டவரே, உம் கூடாரத்தில்
தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?
உம் திருமலையில் குடியிருப்பவர் யார்?
2 மாசற்றவராய் நடப்போரே! —
இன்னோர் நேரியவற்றைச் செய்வர்;
உளமார உண்மை பேசுபவர்;
3 தம் நாவினால் புறங்கூறார்;
தம் தோழருக்குத் தீங்கிழையார்;
தம் அடுத்தவரைப் பழித்துரையார்.
4 நெறிதவறி நடப்போரை
இழிவாகக் கருதுவர்;
ஆண்டவருக்கு அஞ்சுவோரை
உயர்வாக மதிப்பர்;
தமக்குத் துன்பம் வந்தாலும்,
கொடுத்த வாக்குறுதியை மீறார்;
5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்;
மாசற்றவருக்கு எதிராகக்
கையூட்டுப் பெறார்; —
இவ்வாறு நடப்போர்
என்றும் நிலைத்திருப்பர். | https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-15 |
493 | திருப்பாடல்கள் | திருப்பாடல்கள் அதிகாரம் – 16 – திருவிவிலியம் | பற்றுறுதியும் நம்பிக்கையும்
(தாவீதின் கழுவாய்ப் பாடல்)
1 இறைவா, என்னைக் காத்தருளும்;
உம்மிடம் நான் அடைக்கலம்
புகுந்துள்ளேன்.
2 நான் ஆண்டவரிடம் ‛நீரே என் தலைவர்;
உம்மையன்றி வேறு செல்வம்
எனக்கு இல்லை’ என்று சொன்னேன்.
3 பூவுலகில் உள்ள தூயோர்
எவ்வளவோ உயர்ந்தோர்!
அவர்களோடு இருப்பதே எனக்குப் பேரின்பம்.
4 வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றுவோர்
தங்கள் துன்பங்களைப்
பெருக்கிக்கொள்வர்;
அவற்றுக்குச் செலுத்தப்படும்
இரத்தப் பலிகளில்
நான் கலந்து கொள்ளேன்;
அவற்றின் பெயரைக்கூட
நாவினால் உச்சரியேன்.
5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து;
அவரே என் கிண்ணம்;
எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே;
6 இனிமையான நிலங்கள்
எனக்குப் பாகமாகக் கிடைத்தன;
உண்மையாகவே என் உரிமைச் சொத்து
வளமானதே.
7 எனக்கு அறிவுரை வழங்கும்
ஆண்டவரைப் போற்றுகின்றேன்;
இரவில்கூட என் மனச்சான்று
என்னை எச்சரிக்கின்றது.
8 ஆண்டவரை எப்போதும்
என் கண்முன் வைத்துள்ளேன்;
அவர் என் வலப்பக்கம் உள்ளார்;
எனவே, நான் அசைவுறேன்.
9 என் இதயம் அக்களிக்கின்றது;
என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது;
என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.
10 ஏனெனில், என்னைப்
பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்;
உம் அன்பனைப் படுகுழியைக்
காண விடமாட்டீர்.
11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்;
உமது முன்னிலையில் எனக்கு
நிறைவான மகிழ்ச்சி உண்டு;
உமது வலப்பக்கத்தில்
எப்போதும் பேரின்பம் உண்டு.
16:8-11 திப 2:25-28.
16:10 திப 13:35. | https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-16 |
494 | திருப்பாடல்கள் | திருப்பாடல்கள் அதிகாரம் – 17 – திருவிவிலியம் | மாசற்றவனின் மன்றாட்டு
(தாவீதின் மன்றாட்டு)
1 ஆண்டவரே, என் வழக்கின்
நியாயத்தைக் கேட்டருளும்;
என் வேண்டுதலை உற்றுக் கேளும்;
வஞ்சகமற்ற உதட்டினின்று எழும்
என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.
2 உம் முன்னிலையினின்று
எனக்கு நீதி கிடைக்கட்டும்;
உம் கண்கள் நேரியன காணட்டும்.
3 என் உள்ளத்தை ஆய்ந்தறியும்;
இரவு நேரத்தில் எனைச் சந்தித்திடும்;
என்னைப் புடமிட்டுப் பார்த்திடும்;
தீமை எதையும் என்னிடம் காணமாட்டீர்;
என் வாய் பிழை செய்யக்கூடாதென
உறுதி கொண்டேன்.
4 பிற மானிடர் செய்வது போல் அல்லாமல்,
நீர் உரைத்த வாக்கிற்கிணங்க,
வன்முறையாளரின் வழிகளை விட்டு
விலகியுள்ளேன்.
5 என் நடத்தை
உம் பாதைகளில் அமைந்துள்ளது;
என் காலடிகள்
உம் வழியினின்று பிறழவில்லை.
6 இறைவா, நான் உம்மை நோக்கிக்
கூப்பிடுகின்றேன்; ஏனெனில்,
நீர் எனக்குப் பதில் அளிப்பீர்.
என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்;
என் விண்ணப்பத்திற்குச்
செவிசாய்த்தருளும்.
7 உமது வியத்தகு பேரன்பைக்
காண்பித்தருளும்;
உம்மிடம் அடைக்கலம் புகுவோரை
அவர்களுடைய எதிரிகளிடமிருந்து
உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே!
8 உமது கண்ணின் மணியென
என்னைக் காத்தருளும்;
உம்முடைய சிறகுகளின் நிழலில்
என்னை மூடிக்கொள்ளும்.
9 என்னை ஒழிக்கத் தேடும்
பொல்லாரிடமிருந்தும்
என்னைச் சூழ்ந்து கொண்ட
எதிரிகளிடமிருந்தும்
என்னை மறைத்துக் கொள்ளும்.
10 அவர்கள் ஈவு இரக்கமற்ற கல்நெஞ்சர்கள்;
தங்கள் வாயினால்
இறுமாப்புடன் பேசுபவர்கள்.
11 அவர்கள் என்னைப் பின் தொடர்கின்றனர்;
இதோ! என்னை
வளைத்துக் கொண்டனர்;
அவர்கள் என்னைத் தரையில் வீழ்த்துவதற்கு,
வைத்த கண் வாங்காது
காத்திருக்கின்றனர்.
12 பீறிப்போடத் துடிக்கும்
சிங்கத்திற்கு அவர்கள் ஒப்பாவர்;
மறைவிடத்தில் பதுங்கியிருக்கும்
இளஞ்சிங்கத்திற்கு நிகராவர்.
13 ஆண்டவரே, எழுந்து வாரும்;
அவர்களை நேருக்குநேர்
எதிர்த்து முறியடையும்;
பொல்லாரிடமிருந்து உமது வாளால்
என்னைக் காத்தருளும்.
14 ஆண்டவரே, மாயும் மனிதரிடமிருந்து –
இவ்வுலகமே தங்கள் கதியென
வாழ்ந்து மாயும் மனிதரிடமிருந்து –
உமது கைவலிமையினால்
என்னைக் காப்பாற்றும். அவர்களுக்கென
நீர் ஒதுக்கி வைத்துள்ளவற்றால்
அவர்கள் வயிற்றை நிரப்பும்;
அவர்களின் மைந்தர்
வேண்டிய மட்டும் நிறைவு பெறட்டும்;
எஞ்சியிருப்பதைத் தங்கள் பிள்ளைகளுக்கு
விட்டுச்செல்லட்டும்;
15 நானோ நேர்மையில் நிலைத்திருந்து
உமது முகம் காண்பேன்;
விழித்தெழும்போது,
உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன். | https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-17 |
495 | திருப்பாடல்கள் | திருப்பாடல்கள் அதிகாரம் – 18 – திருவிவிலியம் | அரசரின் வெற்றிப் பாடல்
(பாடகர் தலைவர்க்கு: ஆண்டவரின் அடியாராகிய தாவீது, தம் எதிரிகள் கையினின்றும் சவுலின் கையினின்றும் அவர் தம்மை விடுவித்த நாளில் அவரை நோக்கிப் பாடியது)
1 அவர் உரைத்தது:
என் ஆற்றலாகிய ஆண்டவரே!
உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.
2 ஆண்டவர் என் கற்பாறை;
என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்;
நான் புகலிடம் தேடும் மலை அவரே;
என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும்
வல்லமை, என் அரண்.
3 போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி
நான் மன்றாடினேன்;
என் எதிரிகளிடமிருந்து நான்
மீட்கப்பட்டேன்.
4 சாவின் கயிறுகள் என்னை இறுக்கின;
அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன.
5 பாதாளக் கயிறுகள் என்னைச்
சுற்றி இறுக்கின;
சாவின் கண்ணிகள் என்னைச்
சிக்க வைத்தன.
6 என் நெருக்கடிவேளையில்
நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்;
என் கடவுளை நோக்கிக் கதறினேன்;
தமது கோவிலினின்று
அவர் என் குரலைக் கேட்டார்;
என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது.
7 அப்பொழுது, மண்ணுலகம்
அசைந்து அதிர்ந்தது;
மலைகளின் அடித்தளங்கள் கிடுகிடுத்தன;
அவர்தம் கடுஞ்சினத்தால்
அவை நடுநடுங்கின.
8 அவரது நாசியினின்று புகை கிளம்பிற்று;
அவரது வாயினின்று
எரித்தழிக்கும் தீ மூண்டது;
அவரிடமிருந்து நெருப்பக்கனல்
வெளிப்பட்டது.
9 வானைத் தாழ்த்தி அவர் கீழிறங்கினார்;
கார் முகில் அவரது காலடியில் இருந்தது.
10 கெருபுமீது அவர் ஏறிப் பறந்து வந்தார்;
காற்றை இறக்கைகளாகக் கொண்டு
விரைந்து வந்தார்.
11 காரிருளைத் தமக்கு அவர்
மூடுதிரை ஆக்கிக்கொண்டார்;
நீர்கொண்ட முகிலைத் தமக்குக்கூடாரம் ஆக்கிக்கொண்டார்.
12 அவர்தம் திருமுன்னின் பேரொளியில்,
மேகங்கள் கல் மழையையும்
நெருப்புக் கனலையும் பொழிந்தன.
13 ஆண்டவர் வானங்களில்
இடியென முழங்கினார்;
உன்னதர்தம் குரலை அதிரச்செய்தார்.
கல் மழையையும் நெருப்புக் கனலையும்
பொழிந்தார்.
14 தம் அம்புகளை எய்து
அவர் அவர்களைச் சிதறடித்தார்;
பெரும் மின்னல்களைத் தெறித்து
அவர்களைக் கலங்கடித்தார்.
15 ஆண்டவரே, உமது கடிந்துரையாலும்
உமது மூச்சுக் காற்றின் வலிமையாலும்
நீர்த்திரளின் அடிப்பரப்பு தென்பட்டது;
நிலவுலகின் அடித்தளம் காணப்பட்டது.
16 உயரத்தினின்று அவர் என்னை
எட்டிப் பிடித்துக் கொண்டார்;
வெள்ளப்பெருக்கினின்று
என்னைக் காப்பாற்றினார்.
17 என் வலிமைமிகு எதிரியிடமிருந்து
அவர் என்னை விடுவிடுத்தார்;
என்னைவிட வலிமைமிகு பகைவரிடமிருந்து
என்னைப் பாதுகாத்தார்;
18 எனக்கு இடுக்கண் வந்த நாளில்
அவர்கள் என்னை எதிர்த்தார்கள்;
ஆண்டவரோ எனக்கு
ஊன்றுகோலாய் இருந்தார்.
19 நெருக்கடியற்ற இடத்திற்கு
அவர் என்னைக் கொணர்ந்தார்;
நான் அவர் மனத்திற்கு
உகந்தவனாய் இருந்ததால்,
அவர் என்னை விடுவித்தார்.
20 ஆண்டவர் எனது நேர்மைக்கு
உரிய பயனை எனக்களித்தார்;
என் மாசற்ற செயலுக்கு ஏற்ப
கைம்மாறு செய்தார்.
21 ஏனெனில், நான் ஆண்டவர் காட்டிய
நெறியைக் கடைப்பிடித்தேன்;
பொல்லாங்கு செய்து
என் கடவுளை விட்டு அகலவில்லை.
22 அவர்தம் நீதிநெறிகளை எல்லாம்
என் கண்முன் வைத்திருந்தேன்;
அவர்தம் விதிமுறைகளை நான்
ஒதுக்கித் தள்ளவில்லை.
23 அவர் முன்னிலையில்
நான் மாசற்றவனாய் இருந்தேன்;
தீங்கு செய்யாவண்ணம்
என்னைக் காத்துக் கொண்டேன்.
24 ஆண்டவர், என் நேர்மைக்கு
உரிய பயனை அளித்தார்;
அவர்தம் பார்வையில்
நான் குற்றம் அற்றவனாய் இருந்தேன்.
25 ஆண்டவரே, மாறா அன்பர்க்கு
மாறா அன்பராகவும்
மாசற்றோர்க்கு மாசற்றவராகவும்
நீர் விளங்குவீர்.
26 தூயோருக்குத் தூயவராகவும்
வஞ்சகர்க்கு விவேகியாகவும்
உம்மை நீர் காட்டுகின்றீர்.
27 எளியோருக்கு நீர் மீட்பளிக்கின்றீர்;
செருக்குற்றோரை ஏளனத்துடன்
நீர் பார்க்கின்றீர்.
28 ஆண்டவரே, நீர் என் விளக்குக்கு
ஒளியேற்றுகின்றீர்.
என் கடவுளே, நீர் என் இருளை
ஒளிமயமாக்குகின்றீர்.
29 உம் துணையுடன் நான்
எப்படையையும் நசுக்குவேன்;
என் கடவுளின் துணையால்
எம்மதிலையும் தாண்டுவேன்.
30 இந்த இறைவனின் வழி நிறைவானது;
ஆண்டவரின் வாக்கு நம்பத்தக்கது;
அவரிடம் அடைக்கலம் புகும் அனைவர்க்கும்
அவரே கேடயமாய் இருக்கின்றார்.
31 ஏனெனில், ஆண்டவரைத் தவிர
வேறு கடவுள் யார்?
நம் கடவுளைத் தவிர நமக்கு
வேறு கற்பாறை ஏது?
32 வலிமையை அரைக்கச்சையாக
அளித்த இறைவன் அவரே;
என் வழியைப் பாதுகாப்பானதாய்ச்
செய்தவரும் அவரே.
33 அவர் என் கால்களை மான்களின்
கால்களைப் போல் ஆக்குகின்றார்;
உயர்ந்த இடத்தில்
என்னை நிலை நிறுத்துகின்றார்.
34 போருக்கு என்னை அவர் பழக்குகின்றார்;
எனவே, வெண்கல வில்லையும்
என் புயங்கள் வளைக்கும்.
35 ஆண்டவரே, பாதுகாக்கும் உம் கேடயத்தை
நீர் எனக்கு வழங்கினீர்;
உமது வலக்கரத்தால்
என்னைத் தாங்கிக் கொண்டீர்;
உமது துணையால்
என்னைப் பெருமைப்படுத்தினீர்.
36 நான் நடக்கும் வழியை அகலமாக்கினீர்;
என்கால்கள் தடுமாறவில்லை.
37 என் எதிரிகளைத் துரத்திச்சென்று
நான் அவர்களைப் பிடித்தேன்;
அவர்களை அழித்தொழிக்கும் வரையில்
திரும்பவில்லை.
38 அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி
அவர்களை நான் வெட்டித்தள்ளினேன்;
அவர்கள் என் காலடியில் வீழ்ந்தார்கள்.
39 போரிடும் ஆற்றலை நீர் எனக்கு
அரைக்கச்சையாக அளித்தீர்;
என்னை எதிர்த்தவர்களை
எனக்கு அடிபணியச் செய்தீர்.
40 என் எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தீர்;
என்னை வெறுத்தோரை
நான் அழித்துவிட்டேன்.
41 உதவி வேண்டி அவர்கள் கதறினார்கள்;
ஆனால், அவர்களுக்கு உதவுவார்
யாருமில்லை. அவர்கள்
ஆண்டவரை நோக்கி மன்றாடினார்கள்;
ஆனால், அவர்களுக்கு
அவர் பதிலளிக்கவில்லை.
42 எனவே, நான் அவர்களை நொறுக்கிக்
காற்றடித்துச் செல்லும் புழுதிபோல்
ஆக்கினேன்; தெருச் சேறென
அவர்களைத் தூர எறிந்து விட்டேன்.
43 என் மக்களின் கலகத்தினின்று
என்னை விடுவித்தீர்;
பிற இனங்களுக்கு
என்னைத் தலைவன் ஆக்கினீர்;
நான் முன்பின் அறியாத மக்கள்
எனக்குப் பணிவிடை செய்தனர்.
44 அவர்கள் என்னைப்பற்றிக்
கேள்விப்பட்டவுடன்
எனக்குப் பணிந்தனர்;
வேற்று நாட்டவர் என்னிடம்
கூனிக் குறுகி வந்தனர்.
45 வேற்று நாட்டவர் உள்ளம் தளர்ந்தனர்;
தம் அரண்களிலிருந்து
நடுங்கிக் கொண்டு வெளியே வந்தனர்.
46 ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்!
என் கற்பாறையாம் அவர்
போற்றப் பெறுவராக!
என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவராக!
47 எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவர்;
மக்களினங்களை எனக்குக்
கீழ்ப்படுத்தியவரும் அவரே!
48 என் பகைவரிடமிருந்து
என்னை விடுவித்தவரும் அவரே!
ஆண்டவரே! என் எதிரிகளுக்கு மேலாக
என்னை உயர்த்தினீர்!
என்னைக் கொடுமைப்படுத்தயவரிடமிருந்து
நீர் என்னைக் காத்தீர்!
49 ஆகவே, பிற இனத்தாரிடையே
உம்மைப் போற்றுவேன்;
உம் பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன்.
50 தாம் ஏற்படுத்திய அரசருக்கு
மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்;
தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும்
அவர்தம் மரபினருக்கும்
என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே.
18:33 அப 3:19.
18:49 உரோ 15:9. | https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-18 |
496 | திருப்பாடல்கள் | திருப்பாடல்கள் அதிகாரம் – 19 – திருவிவிலியம் | படைப்பில் கடவுளின் மாட்சி
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)
1 வானங்கள் இறைவனின்
மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன;
வான்வெளி அவர்தம் கைகளின்
வேலைப்பாட்டை விவரிக்கின்றது.
2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு
அச்செய்தியை அறிவிக்கின்றது;
ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு
அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது.
3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை;
அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.
4 ஆயினும், அவற்றின் அறிக்கை
உலகெங்கும் சென்றடைகின்றது;
அவை கூறும் செய்தி
உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது,
இறைவன் அங்கே கதிரவனுக்கு
ஒரு கூடாரம் அமைத்துள்ளார்.
5 மணவறையிலிருந்து புறப்படும்
மணமகனைப் போல அது வருகின்றது;
பந்தயத்தில் ஓடும் வீரரைப்போல மகிழ்வோடு
அது தன் பாதையில் ஓடுகின்றது.
6 அது வானத்தின் ஒரு முனையிலிருந்து
புறப்படுகின்றது; அதன் பாதை
மறுமுனைவரையிலும் செல்கின்றது;
அதன் வெப்பத்திற்கு
மறைவானது ஒன்றுமில்லை.
ஆண்டவரின் திருச்சட்டம்
7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது;
அது புத்துயிர் அளிக்கின்றது.
ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது;
எளியவருக்கு அது
ஞானம் அளிக்கின்றது.
8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை;
அவை இதயத்தை மகிழ்விக்கின்றன.
ஆண்டவரின் கட்டளைகள்
ஒளிமயமானவை;
அவை கண்களை ஒளிர்விக்கின்றன.
9 ஆண்டரைப் பற்றிய அச்சம் தூயது;
அது எந்நாளும் நிலைத்திருக்கும்.
ஆண்டவரின் நீதிநெறிகள்
உண்மையானவை;
அவை முற்றிலும் நீதியானவை.
10 அவை பொன்னினும்,
பசும் பொன்னினும் மேலாக
விலைமிக்கவை; தேனினும்,
தேனடையினின்று சிந்தும்
தெளி தேனினும் இனிமையானவை.
11 அவற்றால் அடியேன்
எச்சரிக்கப்படுகின்றேன்;
அவற்றைக் கடைப்பிடிப்போர்க்கு
மிகுந்த பரிசுண்டு.
12 தம் தவறுகளை
உணர்ந்து கொள்பவர் யார்தாம்?
என் அறியாப் பிழைக்காக
என்னை மன்னியும்.
13 மேலும், ஆணவமிக்கோரிடமிருந்து
உம் அடியானைக் காத்தருளும்.
அவர்கள் என்னை
ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்;
அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்;
பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன்.
14 என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே!
என் வாயின் சொற்கள்
உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்;
என் உள்ளத்தின் எண்ணங்கள்
உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும்.
19:4 உரோ 10:18. | https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-19 |
497 | திருப்பாடல்கள் | திருப்பாடல்கள் அதிகாரம் – 20 – திருவிவிலியம் | அரசரின் வெற்றிக்காக வேண்டல்
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)
1 நெருக்கடி வேளையில்
உமக்கு ஆண்டவர் பதிலளிப்பாராக!
யாக்கோபின் கடவுளது பெயர்
உம்மைப் பாதுகாப்பதாக!
2 தூயகத்திலிருந்து அவர் உமக்கு
உதவி அனுப்புவாராக!
சீயோனிலிருந்து அவர் உமக்குத்
துணை செய்வாராக!
3 உம் உணவுப் படையலை எல்லாம்
அவர் நினைவில் கொள்வராக!
உமது எரி பலியை
ஏற்றுக்கொள்வாராக! (சேலா)
4 உமது மனம் விரும்புவதை
அவர் உமக்குத் தந்தருள்வாராக!
உம் திட்டங்களை எல்லாம்
நிறைவேற்றுவாராக!
5 உமது வெற்றியைக் குறித்து
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போமாக!
நம் கடவுளின் பெயரால்
வெற்றிக்கொடி நாட்டுவோமாக!
உம் விண்ணப்பங்களையெல்லாம்
ஆண்டவர் நிறைவேற்றுவாராக!
6 ஆண்டவர் தாம் திருப்பொழிவு செய்தவருக்கு
வெற்றி தருகின்றார்.
தமது தூய வானத்திலிருந்து
அவருக்குப் பதிலளிக்கின்றார்.
வெற்றியளிக்கும் தமது வலக்கையின்
ஆற்றலைக் காட்டுகின்றார் என்று
இப்பொழுது நான் அறிந்து கொள்கிறேன்.
7 சிலர் தேர்ப்படையிலும்,
சிலர் குதிரைப் படையிலும்
பெருமை கொள்கின்றனர்;
நாமோ நம் கடவுளாகிய ஆண்டவரின்
பெயரில் பெருமை கொள்கின்றோம்.
8 அவர்கள் தடுமாறி வீழ்ந்தார்கள்;
நாமோ நிமிர்ந்து உறுதியாய் நிற்கின்றோம்.
9 ஆண்டவரே, அரசருக்கு வெற்றியருளும்;
நாங்கள் கூப்பிடும் வேளையில்
எங்களுக்குப் பதிலளியும். | https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-20 |
498 | திருப்பாடல்கள் | திருப்பாடல்கள் அதிகாரம் – 21 – திருவிவிலியம் | அரசரின் வெற்றிக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தல்
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)
1 ஆண்டவரே, உமது வல்லமையில்
அரசர் பூரிப்படைகின்றார்;
நீர் அளித்த வெற்றியில்
எத்துணையோ அவர் அக்களிக்கின்றார்!
2 அவர் உள்ளம் விரும்பியதை
நீர் அவருக்குத் தந்தருளினீர்;
அவர் வாய்விட்டுக் கேட்டதை
நீர் மறுக்கவில்லை. (சேலா)
3 உண்மையில் நலமிகு கொடைகள் ஏந்தி
நீர் அவரை எதிர்கொண்டீர்;
அவர் தலையில்
பசும்பொன்முடி சூட்டினீர்.
4 அவர் உம்மிடம் வாழ்வுவேண்டி நின்றார்;
நீரும் முடிவில்லா நீண்ட ஆயுளை
அவருக்கு அளித்தீர்.
5 நீர் அவருக்கு வெற்றியளித்ததால்
அவரது மாட்சிமை பெரிதாயிற்று;
மேன்மையையும் மாண்பையும்
அவருக்கு அருளினீர்,
6 உண்மையாகவே,
எந்நாளும் நிலைத்திருக்கும்
ஆசிகளை அவர் பெற்றுள்ளார்;
உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன்
கண்டு களிக்கச் செய்தீர்.
7 ஏனெனில், அரசர் ஆண்டவரில்
நம்பிக்கை வைக்கின்றார்;
உன்னதரின் பேரன்பினால்
அவர் அசைவுறாதிருப்பார்.
8 உமது கை உம் எதிரிகளையெல்லாம்
தேடிப்பிடிக்கும்; உமது வலக்கை
உம்மை வெறுப்போரை எட்டிப்பிடிக்கும்.
9 நீர் காட்சியளிக்கும்பொழுது,
அவர்களை நெருப்புச்சூளை ஆக்குவீர்;
ஆண்டவர் சினங்கொண்டு
அவர்களை அழிப்பார்;
நெருப்பு அவர்களை விழுங்கிவிடும்.
10 அவர்கள் தலைமுறையைப்
பூவுலகினின்று ஒழித்துவிடுவீர்;
அவர்கள் வழிமரபை
மனு மக்களிடமிருந்து எடுத்துவிடுவீர்.
11 உமக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும்,
சதித்திட்டம் தீட்டினாலும்,
அவர்களால் வெற்றிபெற இயலாது.
12 நீரோ அம்புகளை நாணேற்றி
அவர்களது முகத்தில் எய்வீர்;
அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்வீர்.
13 ஆண்டவரே, உமது வலிமையோடு
எழுந்து வாரும்;
நாங்கள் உமது வல்லமையைப்
புகழ்ந்து பாடுவோம். | https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-21 |
499 | திருப்பாடல்கள் | திருப்பாடல்கள் அதிகாரம் – 22 – திருவிவிலியம் | துயர்மிகு புலம்பல்
(பாடகர் தலைவர்க்கு: ‘காலைப் பெண்மான்’ என்ற மெட்டு; தாவீதின் புகழ்ப்பா)
1 என் இறைவா, என் இறைவா,
ஏன் என்னைக் கைவிட்டீர்?
என்னைக் காப்பாற்றாமலும்,
நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும்
ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?
2 என் கடவுளே,
நான் பகலில் மன்றாடுகின்றேன்;
நீர் பதில் அளிப்பதில்லை,
இரவிலும் மன்றாடுகின்றேன்;
எனக்கு அமைதி கிடைப்பதில்லை.
3 நீரோ தூயவராய் விளங்குகின்றீர்;
இஸ்ரயேலின் புகழ்ச்சிக்கு உரியவராய்
வீற்றிருக்கின்றீர்;
4 எங்கள் மூதாதையர்
உம்மில் நம்பிக்கை வைத்தனர்;
அவர்கள் நம்பியதால்
நீர் அவர்களை விடுவித்தீர்.
5 உம்மை அவர்கள் வேண்டினார்கள்;
விடுவிக்கப்பட்டார்கள்;
உம்மை அவர்கள் நம்பினார்கள்;
ஏமாற்றமடையவில்லை.
6 நானோ ஒரு புழு, மனிதனில்லை;
மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்;
மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்.
7 என்னைப் பார்ப்போர் எல்லாரும்
ஏளனம் செய்கின்றனர்;
உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து,
8 ‛ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே!
அவர் இவனை மீட்கட்டும்;
தாம் அன்பு கூர்ந்த அவனை
அவர் விடுவிக்கட்டும்’ என்கின்றனர்.
9 என்னைக் கருப்பையினின்று
வெளிக்கொணர்ந்தவர் நீரே;
என் தாயிடம் பால்குடிக்கையிலேயே
என்னைப் பாதுகாத்தவரும் நீரே!
10 கருப்பையிலிருந்தே
உம்மைச் சார்ந்திருந்தேன்;
நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல்
என் இறைவன் நீரே!
11 என்னைவிட்டுத் தொலையில் போய்விடாதேயும்;
ஏனெனில், ஆபத்து நெருங்கிவிட்டது;
மேலும், உதவி செய்வார் யாருமில்லை.
12 காளைகள் பல என்னைச்
சூழ்ந்து கொண்டுள்ளன;
பாசானின் கொழுத்த எருதுகள்
என்னை வளைத்துக் கொண்டன.
13 அவர்கள் என்னை விழுங்கத்
தங்கள் வாயை அகலத் திறக்கின்றார்கள்;
இரைதேடிச் சீறி முழங்கும்
சிங்கம்போல் பாய்கின்றார்கள்.
14 நான் கொட்டப்பட்ட நீர்போல் ஆனேன்;
என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின;
என் இதயம் மெழுகுபோல் ஆயிற்று;
என் உள்ளுறுப்புகளின் நடுவே
உருகிப்போயிற்று.
15 என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது;
என் நாவு மேலண்ணத்தோடு
ஒட்டிக்கொண்டது; என்னைச்
சாவின் புழுதியிலே போட்டுவிட்டீர்.
16 தீமை செய்வோரின் கூட்டம்
என்னை வளைத்துக் கொண்டது;
நாய்கள் என அவர்கள் என்னைச்
சூழ்ந்து கொண்டார்கள்; என் கைகளையும்,
கால்களையும் துளைத்தார்கள்.
17 என் எலும்புகளை எல்லாம்
நான் எண்ணிவிடலாம்; அவர்கள்
என்னை முறைத்துப் பார்க்கின்றார்கள்.
18 என் ஆடைகளைத் தங்களிடையே
பங்கிட்டுக் கொள்கின்றனர்;
என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்.
19 நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத்
தொலைவில் போய்விடாதேயும்;
என் வலிமையே! எனக்குத் துணை செய்ய
விரைந்து வாரும்.
20 வாளுக்கு இரையாகாதபடி
என் உயிரைக் காத்தருளும்;
இந்த நாய்களின் வெறியினின்று
என் ஆருயிரைக் காப்பாற்றும்;
21 இந்தச் சிங்கங்களின் வாயிலிருந்து
என்னைக் காப்பாற்றும்;
காட்டெருமைகளின் கொம்புகளில்
சிக்கியுள்ள என்னைக் காத்தருளும்.
புகழ்ச்சிப் பாடல்
22 உமது பெயரை
என் சகோதரருக்கு அறிவிப்பேன்;
சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
23 ஆண்டவருக்கு அஞ்சுவோரே;
அவரைப் புகழுங்கள்;
யாக்கோபின் மரபினரே,
அனைவரும் அவரை
மாட்சிமைப்படுத்துங்கள்;
இஸ்ரயேல் மரபினரே,
அனைவரும் அவரைப் பணியுங்கள்.
24 ஏனெனில், எளியோரின் சிறுமையை
அவர் அற்பமாக எண்ணவில்லை;
அதைக் கவனியாமல் இருந்துவிடவில்லை;
தமது முகத்தை அவர்களுக்கு
மறைக்கவுமில்லை;
தம்மை நோக்கி அவர்கள் மன்றாடுகையில்
அவர்களுக்குச் செவிசாய்த்தார்.
25 மாபெரும் சபையில் நான் செலுத்தும் புகழ்
உம்மிடமிருந்து எழுவதாக!
உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில்
என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.
26 எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்;
ஆண்டவரை நாடுவோர்
அவரைப் புகழ்வராக!
அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக!
27 பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர்
அனைவரும் இதை உணர்ந்து
ஆண்டவர் பக்கம் திரும்புவர்;
பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும்
அவர் முன்னிலையில் விழுந்து பணிவர்.
28 ஏனெனில் அரசு ஆண்டவருடையது;
பிற இனத்தார்மீதும்
அவர் ஆட்சி புரிகின்றார்.
29 மண்ணின் செல்வர் யாவரும்
அவரைப் பணிவர்;*
புழுதிக்குள் இறங்குவோர் யாவரும்
தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும்
அவரை வணங்குவர்.
30 வருங்காலத் தலைமுறையினர்
அவரைத் தொழுவர்;
இனிவரும் தலைமுறையினருக்கு
ஆண்டவரைப்பற்றி அறிவிக்கப்படும்.
31 அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்;
இனி பிறக்கப்போகும் மக்களுக்கு
‛இதை அவரே செய்தார்’ என்பர்.
22:1 மத் 27:46; மாற் 15:34.
22:18 மத் 27:35; மாற் 15:24; லூக் 23;34; யோவா 19:24.
22:22 எபி 2:12.
22:29 * ‘உணவுண்டு அவரைப் பணிவர்’ என்பது எபிரேய பாடம். | https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-22 |
Subsets and Splits